...பல்சுவை பக்கம்!

.

Sunday, December 1, 2019

தொல்லைப்பேசி -சிறுகதை #139


'தமிழக எழுத்தாளர் குழுமம்' நடத்திய 'படத்திற்கேற்ற கதை போட்டி'-க்காக எழுதப்பட்ட கதை இது!

தொல்லைபேசி!
- ஒரு பக்கக் கதை!
- அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

  பவானி கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் பார்த்து பேச ஆரம்பித்தாள்.

  "அந்தக் காலத்தில வெளியூரில் இருப்பவர்களுக்கு செய்தியை சொல்ல, தபால்தான் இருந்தது. அதற்குப் பின்னால, மொபைல் ஃபோன் அந்த இடத்தை பிடித்தது. இப்ப அந்த ஃபோன், நம்ம வாழ்க்கையிலே, நம்மளுடைய அதிகபட்ச நேரத்தையே
பிடிச்சிக்கிட்டது துரதிர்ஷ்டவசமானது.
 
  "நீண்ட நேரம் ஃபோனிலேயே நாம இருக்கிறதாலே நம்முடைய உழைக்கும் திறன் குறைஞ்சிட்டே வருது. இரவு நேரத்திலும் ஃபோன் பயன்பாட்டினால், தூக்கத்தை தூண்டுற சுரப்பிகள் உற்பத்தி குறையுது.

   "அதனால, பல உடல் நலக் கேடுகள், ஃபோனுக்கு அடிமையாகிற பரிதாபம்லாம் ஏற்படுது.

   "உங்க வீடுகள்ல, சிறு குழந்தைகளுக்கு அழுதால், ஃபோன் கொடுக்காமல், கிளுகிளுப்பை கொடுத்து பழக்கப்படுத்துங்க! ஃபோனை, தூரமா வச்சிட்டு, அவங்களோட தாயம், பல்லாங்கழி, ஆடுபுலி ஆட்டம், பரமபதம்னு நீங்களும் சேர்ந்து விளையாடுங்க! சிறுவர்களுக்கு, கபடி, கிட்டிப் புல், கிரிக்கெட், ஆபியம், கோலி குண்டு, கேரம், சதுரங்கம்னு விளையாட ஊக்கப்படுத்துங்க! ஃபோனில் விளையாடாதீங்க! அரட்டை அடிக்காதீங்க! தேவையானதை பேசுங்க!

   "வாட்ஸ்ஆப்ல இருந்தா, அதையே திரும்ப திரும்ப பார்க்காம, 1 மணி நேரத்துக்கு இல்லனா அரை மணி நேரத்துக்கு ஒரு முறை போய் பார்த்தீங்கனா, எல்லா மெசேஜ்-ஐயும் படிச்சிடலாம்; உடனே அழிச்சிடலாம்!
டேட்டா இலவசமா கிடைக்குதுனு, அதுக்கு பதிலா நம்ம நேரத்தை அதுல செலவழிச்சிடாமல், உபயோகமா பயன்படுத்திக்குங்க! நன்றி!!" என்று பேச்சை முடித்தாள் பவானி.

   மறுநாள், சனிக்கிழமை பவானி அவளுடைய சிறிய பெட்டிக் கடையைத் திறந்து வியாபாரம் செய்யும்போது வந்தான் சிறுவன் தாமரைச்செல்வன்.

   "அக்கா, எங்க அம்மா சென்னாங்க, ஃபோனில் விளையாடாமல், தெருவில விளையாட சொன்னீங்களாம்! அதனால, இந்த நம்பருக்கு நெட் பேக் போட வேண்னாம்; டாக் டைம் மட்டும் டாப்-அப் பண்ணிவிடுங்க!"
என்றான் அவன்.

   அதைக் கேட்ட பவானிக்கு, 'வருமானம்' குறைந்தது; அவளின் 'பெருமனம்' நிறைந்தது!
- அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Saturday, November 23, 2019

'அம்மா சொன்ன கதை', தேன்சிட்டு இதழில்! #138

இம்மாத (நவம்பர் 2019) தீபாவளி சிறப்பிதழ், 'தேன்சிட்டு' இதழில் நான் எழுதிய, "அம்மா சொன்ன கதை" பிரசுரம் ஆகியுள்ளது!

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Sunday, November 17, 2019

படக் கவிதைப் போட்டி #137

வெற்றிமகள் - படக் கவிதைப் போட்டி


தமிழக எழுத்தாளர்கள் குழுமம் நடத்திய, படத்திற்கேற்ற கவிதை போட்டியில் எனது கவிதையும் வெற்றி பெற்றது!

படக்கவிதைப் போட்டி! 

*வெற்றிமகள்!*

துள்ளலோடு செல்லும் பாப்பா! துவண்டுவிடாதே!

துன்பம்துயர் வரும்போது மிரண்டுவிடாதே!

எதிர்படும் விஷயமெல்லாம் தீய சக்தி! எதிர்க்கட்டும் அவற்றை உன் எதிர்சக்தி!

சுமைகள் வந்தால் சுட்டுத் தள்ளு! அலட்சியம் செய்தால் விட்டுத் தள்ளு!

நன்மைகள் வரட்டும் நாட்டம் கொள்ளு! நானிலத்தில் நீயே வென்று நில்லு!
   -அ.முஹம்மது நிஜாமுத்தீன், நீடூர் 609203.



. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Sunday, October 6, 2019

கேள்வி பதில் - முஸ்லிம் முரசு & குமுதம் #136

'முஸ்லிம் முரசு' இதழில் வெளிவந்த எனது கேள்வி 'குமுதம்' இதழில் மறுபிரசுரம் ஆனது!

இதுதான் அது!!

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Saturday, June 22, 2019

என்கதையா? உன்கதையா? #135

என் கதையா? உன் கதையா?

01/02/2017 குமுதம் இதழில் 'பிக்பாக்கெட்' என்ற தலைப்பில் நான் எழுதிய 'ஹலோ வாசகாஸ்' படைப்பு வெளியானது.

 08/05/2019 குமுதம் இதழில் 'அயன்புரம்  த. சத்தியநாராயணன்' எழுதிய,
'குழந்தை' ஒரு பக்கக் கதை வெளிவந்துள்ளது.
...
இரு படைப்புகளிலும் சில அம்சங்கள் ஒத்துப்போகின்றன.
1. அதே பயணம் (பஸ், ரயில்)!
2. அதே குழந்தை!
3. அதே குழந்தை உடம்பில் தங்க நகைகள்!
4. அதே 'நம்மீது சந்தேகப்படுவார்களோ' என்கிற முன்னெச்சரிக்கை!

அதே #குமுதம்

எனது அனுபவக் கதை:


சத்தியநாராயணன் எழுதியது இது:


-அ. முஹம்மது நிஜாமுத்தீன்.




. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

திருமண வாழ்த்து #134

திருமண வாழ்த்து #134

எனது நண்பன் க.சந்தானகிருஷ்ணன்  திருமணத்திற்காக, நான் எழுதிய வாழ்த்துப்பாடலை இங்கே பதிகிறேன்.

இப்பாடலின் மெட்டு: "பறக்கும் பறவைகள் நீயே!"
திரைப்படம்: கவிதா.
இதோ அந்தப் பாடல்:


இதுதான் நான் எழுதிய பாடல்:


அன்புக்கு நண்பன் நீயே !
பண்புக்கு விளக்கம் நீயே !
உண்மைக்கு உதாரணம் நீயே!
நன்மைக்கு நாயகன் நீயே !

சந்தானம் பெயர் கொண்டு விட்டாயே!
சந்தனம் மணம் நீயும் தந்திடுவாயே !
தந்தத்தின் மதிப்பு பெற்று விட்டாயே!
மாந்தரின் மாணிக்கம் போல வந்தாயே !

குணமகள் மணமகள் குண சுந்தரியே !
குன்றினில் விளக்கே ஒளி தருவாயே !
இல்லறம் வாழ்வில் இனித்திட நீயே !
நல்லறம் புரிந்து நனி செய்வாயே !

வளமாற நீவிர் வாழ்ந்திட என்று,
உளமாற நாங்கள் வாழ்த்திட நன்று !
இருவரும் இணைந்து இன்பத்தைப் பெறவே,
இறைவா நீயும் அருள் புரிவாயே !

- அ. முஹம்மது நிஜாமுத்தீன்.


. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Friday, March 15, 2019

கணேஷுக்கு கால்கட்டு (சிறுகதை) #133






கணேஷுக்கு கால்கட்டு!
சிறுகதை(?) மாதிரி.
- அ. முஹம்மது நிஜாமுத்தீன்.

நண்பர் பாலகணேஷ் ஓர் ஓவியத்தைக் கொடுத்து அதற்கு சிறுகதை கேட்டார். (பாவம் அவர்!)
(நன்றி: ஓவியர் தமிழ்.)

கணேஷ் கத்தினான்: "தப்பு உங்கமேலேதான்!"

பாலா கத்தினாள்: "தப்பு உங்கமேலேதான்!"

"ஏங்க, நான் பாட்டுக்கு நேரா போய்க்கிட்டிருக்கேன்!
நீங்க சாமான்கள எடுத்திட்டு வந்து என்மேல இடிச்சிட்டு இப்படி கத்துறீங்களே?" என்றான் கணேஷ்.

"நான்தான் சாமான்லாம் வச்சிருந்தேன். நீங்க பார்த்து வரமாட்டீங்களா?" திருப்பிக் கேட்டாள் பாலா.

"நான் நேரா வந்தேன். நீங்கதான் குறுக்கே வந்திட்டீங்க! சரி, நகருங்க நான் ஆஃபிஸ் போகணும்" அவசரப்பட்டான் கணேஷ்.

"அதெல்லாம் முடியாது. நீங்க தட்டிவிட்டுட்டீங்க;
நீங்கதான் என் கார்ல எடுத்துவைக்கணும்"
தடுத்தாள் பாலா.

"ஐய்யய்யே! நான் கம்பெனில அசிஸ்டன்ட் மேனேஜர். ரெண்டு தெரு தள்ளி ஒரு கஸ்டமரப் பார்க்க, நடந்துபோய்ட்டு வறேன். எங்க எம்.டி.வேற திடீர்னு ஆஃபிஸ்-க்கு வந்துட்டதா மேனேஜர் ஃபோன் பண்றாரு.
நீ வேற இப்படி படுத்தறியேமா!!!?" கடுப்படித்தான் கணேஷ்.

ஆனால் பாலா விடவில்லை. சாமான்கள் அனைத்தையும் காரில் வைத்தபின்புதான் அவனை விட்டாள்.

கணேஷ் பதட்டப்பட்டான்.
"லேட் ஆயிடுச்சி; நடந்து போனால் இன்னும் லேட் ஆகிடும்.  கார்லயே என்னை ட்ராப் பண்ணிட்டுப் போ!" என்று அவளை மடக்கினான் கணேஷ்.

"சார், கார் உள்ளே இடமில்லை. கேரியர்ல உட்கார்ந்துக்கிறீங்களா?" ஏளனமாகக் கேட்டாள் பாலா.

"ஓகே" என்றான் கணேஷ்.

அவன் கார் மேலே ஏறியதும் விழுந்துவிடாமல் இருப்பதற்காக அவனை கேரியருடன் சேர்த்து கட்டிவிட்டாள் பாலா.

அப்படி இருவரும் ஹாயாக காரில் போகும்போதுதான் பாலாவின் தோழி கலா, அதை தனது ஃபோனில் படம் எடுத்து, பாலாவிடம் கேட்காமலே ஃபேஸ்புக்கில் பதிவிட்டுவிட்டாள்.

அதைப்பார்த்த கலாவின் நண்பன் கண்ணன் அதில் தனது நண்பன் கணேஷை டேக் பண்ணிவிட்டான்.

உடனே இந்த செய்தி இணையம் முழுவதும் வைரல் ஆகிவிட்டது.
ட்டீ.வி. மற்ற மீடியாக்களும் கதை, கதையாய் இதை தமிழகம் எங்கும் கொண்டு சேர்த்தன.

பாலாவின் பெற்றோர் அவளிடம், "யாருடி அவன்? அவனுக்கும் உனக்கும் என்ன தொடர்பு?" என்று குறுக்கு விசாரணை ஆரம்பித்துவிட்டார்கள்.

கணேஷின் பெற்றோரும் கணேஷிடம் கேள்விமேல் கேள்வி கேட்டு திணறடித்தார்கள்.

இதைத் தொடர்த்து கணேஷின் நண்பர்களும் பாலாவின் தோழிகளும் இரு வீட்டாரிடமும் பேசி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தனர்.
திருமணமும் சு(ல)பமாய் முடிந்தது.

கணேஷின் நண்பர்களும் பாலாவின் தோழிகளும் 'இதுபோல நமக்கு ஒரு துணை கிடைக்குமா!?' என்று தேட ஆரம்பித்து விட்டார்கள்.

(முற்றியது.)

.

படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!
Related Posts Plugin for WordPress, Blogger...