...பல்சுவை பக்கம்!

.

Tuesday, October 27, 2020

இயக்குனர் கதிர் அவர்களே! #152

இயக்குனர் கதிர் அவர்களே!


'காதல் தேசம்' -இது, இயக்குனர் கதிர் இயக்கிய படம். கே.ட்டீ.குஞ்சுமோன் இந்தப் படத்தில் இன்ஸ்பெக்டராக நடித்ததுடன் படத்தை தயாரித்தும் இருந்தார்.

அப்பாஸும் (அருண்) வினீத்தும் (ஆனந்த்) நண்பர்கள். இருவருக்கும் தபு (திவ்யா) நண்பர். இருவருமே தபுவைக் காதலிப்பது தபுவுக்குத் தெரியாது.

ஒருமுறை இரவு நேரத்தில்  ரவுடிகளிடமிருந்து தபுவைக் காப்பாற்றிவிடுவார் வினீத்.
அடுத்தது தபுவைக் காப்பாற்றவேண்டியது அப்பாஸின் முறை.

அப்பாஸும் தபுவும் பேசிக்கொண்டே ரயில்வே ட்ராக்கில் வரும்போது தபுவின் (ஒரு) கால் மட்டும் அருகருகே இருக்கும் இரு தண்டவாளங்களுக்கு இடையே மாட்டிக்கொள்ளும்! எவ்வளவு முயன்றாலும் காலை எடுக்கமுடியாது. கரெக்ட்டாக அப்பொழுது ஒரு ரயிலும் வரும்! இந்த நேரத்தில் தபுவை அப்பாஸ் காப்பாற்றணுமே?!!!

ரயில் அருகே வந்துகொண்டே இருக்கும். திடீரென்று அப்பாஸ் ஓடிச்சென்று சற்று தூரத்தில் இருக்கும் ஒரு லிவரைப் பிடித்து இழுத்துவிடுவார். ரயில் இவர்களை மோதாமல் உடனே அடுத்த ட்ராக்குக்கு மாறி, சென்றுவிடும்! (அடேங்கப்பா!!!)

பாவம் அந்த ரயில்; பாம்பே போகவேண்டிய ரயிலை இவர் திருப்பிவிட்டதால் பூனேவுக்கு போயிட்டிருக்கும்!!! (ஹாஹாஹா...!)




அடுத்ததாக, சுதாரிப்பதற்குள்ளாகவே, இவர்கள் இருக்கும் தண்டவாளத்தில் எதிர்புறத்திலிருந்து வேறு ஒரு ரயில் இவர்களை நோக்கி வந்துகொண்டிருக்கும்! (அடடா, அப்புறம் என்ன ஆச்சு?)




அப்பாஸுஸூஸூஸூ பார்ப்பார், அங்கே ஒரு பெரிய இரும்பு சங்கிலி கிடக்கும்! அதை தூதூதூதூக்கி முன்பு போன ரயிலை நோக்கி வீசுவார். கரெக்ட்டா ரயிலின் அடிப்பாகத்தில் மாட்டிக் கொள்ளும். அப்பாஸும் அந்த சங்கிலியை இழுப்பார்; ரயிலும் இழுக்கும்! தபுவின் காலை பிடித்துவைத்திருக்கும் இரு தண்டவாளங்களும் பிரிந்துவிடும்! தபுவின் கால் விடுவிக்கப்பட்டதும் இருவரும் தண்டவாளத்திற்கு வெளியில் புரண்டுவிடுவார்கள்! ரயில் இவர்களை பார்க்காதமாதிரி போய்விடும்!!!

இயக்குநர் கதிர் அவர்களே!
யார் வேணும்னாலும் லிவரை இயக்கி, ரயிலை வேறு பாதையில் செல்லுமாறு அமைப்பை எந்த ஊர்ல வச்சிருக்காங்க, சொல்லுங்க? அப்படி செய்தால் ரயில் போகவேண்டிய ஊருக்குப் போகாமல் வேறு ஊருக்கு அல்லவா போகும்? அப்படியே யாரும் லிவரை திருப்பினால் எதிரில் சற்று தூ(நே)ரத்தில் அதே ட்ராக்கில் வரும் வேறு ஒரு ரயிலில் அல்லவா மோதும்? அது உங்களுக்குப் புரியாதா?

சரி, அப்பாஸ் லிவரை மாற்றிவிட்டாரு, ரயில் வேறு ட்ராக்கில் சென்றுவிட்டது!
ஆனால், முதலாவது ட்ராக்கில் எதிர்பக்கத்திலிருந்து வேறு ஒரு ரயில் வருகிறதே எப்படி?
அப்பாஸ், டராக் மாற்றிவிடாவிட்டால் இரு ரயில்களும் எதிர் எதிர் வந்து மோதிக் கொண்டிருக்குமே, அதுவும் உங்களுக்குப் புரியாதா?

என்ன ஒரு திறமை(?)யான கதை, காட்சி அமைப்பு?

தயாரிப்பாளர் இதை எப்படி ஏற்றுக் கொண்டார்?
உதவி இயக்குனர் யாருமே இதை உங்களுக்கு சுட்டிக் காட்டவில்லையா?

என்னமோ போங்க!

இப்படிக்கு,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

இதோ இந்த இணைப்பில் சென்று பார்க்கலாம்!
(பிரேம தேசம் -தெலுங்கு)
நேரம்:  01:36:30-யிலிருந்து!

https://youtu.be/1M2g-Fktxcw






. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Saturday, October 17, 2020

பாடலாசிரியரே, பதில் சொல்க! #151

பாடலாசிரியரே, பதில் சொல்க!



பாடலாசிரியர் பதில் தருவாரா?

பாடல் காட்சியைப் பார்த்தீர்களா?
பாடல் வரிகளைக் கேட்டீர்களா?

ஆணும் பெண்ணும் கேள்வி பதில் பாணியில் பாடும் பாடல்!  

ஆண்களுக்கு பெண்களும் பெண்களுக்கு ஆண்களும் மிக அவசியம் என்பதை, அழகாக விளக்கும் பாடல்.

இப்பாடல் இடம்பெற்ற படத்தின் பெயர்: 'சமுத்திரம்'!

இதில் ஆண் கேட்கும் கேள்விக்கு பெண் பதில் தருகிறாள்!

"பெண்களுக்கென்று தனித்துவம் ஏது?
உங்கள் பெயரை சொல்கிற எதுவும் ஊரில் கிடையாதே?"

"இந்திய நாட்டில் பதினெட்டு நதிகள்!
ஓடுற நதியில் ஆண்களின் பெயரில் ஒன்றும் கிடையாதே?"

'கிருஷ்ணா நதி'-யை விட்டுவிட்டார் கவிஞர்!

'பிரம்மபுத்திரா' என்ற பெயரிலும் நதி இருக்கின்றது!

இப்பாடலை எழுதிய கவிஞர்,
யார் அவர்?

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்
..




. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!
Related Posts Plugin for WordPress, Blogger...