...பல்சுவை பக்கம்!

.

Friday, November 26, 2010

ஜிகினா 2: பத்து புரோட்டா பார்சல்!

பத்து  புரோட்டா பார்சல்!

பஸ் ஸ்டாண்ட் புத்தகக் கடையில் புத்தகங்கள்
புரட்டிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒருவர்
வந்தார்.

"ரமேஷு! அரை கிலோ ஆட்டா மாவு பாக்கெட்
ஒன்னு கொடுங்க"  என்று கேட்டார்.

கடைக்காரர் ரமேஷ் (விழித்துவிட்டு) : " ரமேஷு என்
பேருதான். ஆனால், ஆட்டா மாவு, அது அடுத்த மளிகைக் கடை"

அந்த வாடிக்கையாளர் : "ஓ... ஆட்டா மாவு வாங்கினால்
ஒரு குங்குமம் பத்திரிகை ஃப்ரீன்னாங்களே, ரேடியோவிலே! "

ரமேஷ்: "தம்பி! சாருக்கு ஒரு குங்குமமும் ஒரு
ஆட்டா பாக்கெட்டும் குடுப்பா. சார், ஆட்டா மாவு
கேட்டிங்க, கொடுத்திட்டேன். அடுத்த வாரம் வந்து,
'10 புரோட்டா பார்சல்; அப்படியே சட்னி-சாம்பார்'
அப்படினுலாம் ஆர்டர் பண்ணாதீங்க. அப்புறம்,
மளிகைக் கடையை சொன்னமாதிரி காளியாக்குடி,
ஆரியபவன்லாம் என்னாலக் காட்டிக்கிட்டிருக்க முடியாது.
ஆட்டா பாக்கெட்ட எடுத்து , குடுத்து கையெல்லாம்
பிசுபிசுன்னு மாவு. அதுக்கு பதிலா தண்ணி பாக்கெட்டாவது
ஃப்ரியா கொடுத்திருக்கலாம்"

அதே வாடிக்கையாளர்: "அட தண்ணி பாக்கெட் ஃப்ரியா?"

ரமேஷ்: "சார் அது அடுத்த வாரம், இப்ப நீங்க போங்க சார்!"

நண்பர் சின்னஞ்சிறு கோபு சார் வருகிறார்.



சி.சி.கோபு: "என்ன என்னமோ தண்ணி பாக்கெட், அப்படின்னு
பேசினாமாதிரி இருந்ததே?"

நான்: "ஏன் சார், ஆட்டா மாவுலாம் ஃபிரியா
கொடுக்கறாங்களே, புக்கு வாங்கும்போது நோட் கொடுக்கலாமே?"

சி.சி.கோபு: " நோட்? கரன்சி நோட்? அப்படின்னா
புக்கு அசசடிக்கிறவங்களே நோட்டும் அச்சடிச்சா
அந்த மாதிரி பத்து ரூபாய்க்கு புக்கு வாங்கும்போது
இருபது ருபாய் நோட்டு இலவசமாய் கொடுக்கலாம்.
இல்லேன்னா அவிங்க நோட்டு எல்லாம் வேட்டுத்தான்.
அப்புறம் நடு ரோட்டுக்குத்தான் வரணும். நல்ல
ஐடியாக் கொடுக்கறிங்களே,!!!"

நான்: "ரமேஷ்! எனக்கு ஒரு ஆட்டா மாவு பாக்கெட்
குடுங்க!"

ரமேஷ்: "  'அதிரடி' பத்திரிகை வாங்கினால்
உருட்டுக்கட்டையால ஒரு அடி ஃப்ரியாம்; வேணுமா சார்?"

நான்: "  அதிரடி' பத்திரிகை மட்டும் கொடுங்க;  ஃப்ரி
நீங்களே வெச்சிக்குங்க..."

வாடிக்கையாளர்: " ரமேஷ், அந்த ஃப்ரி தண்ணி பாட்டிலு..."

ரமேஷ்: "அடுத்த வாரம் நானே எடுத்து வைக்கிறேன் சார்,
நீங்க இன்னும் கிளம்பலையா ?
(எங்களிடம் திரும்பி) சார், அப்பா வர்றாங்க..."

சி.சி.கோபு & நான்: " சரி அப்ப வர்றோம் நாங்க "

அரட்டை தொடர(முடிய)வில்லையே என்று வருத்ததோடு
புறப்பட்டோம் அங்கிருந்து.

டிஸ்கி: பெயர் குறிப்பிடப்பட்ட பத்திரிகை தவிர ,
மற்ற உரையாடல்கள் யாவும் இடுகையின் சுவை
கூட்டலுககான உண்மையற்ற உவமைகள்தான் அன்றி,
யாரையும் சம்பந்தப்படுத்தவில்லை.

ஜிகினா - 3-ல் : குஷ்புவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?



படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Tuesday, November 16, 2010

75. ஜில்ஜில் ஜிகிர்தண்டா!

ஜில்ஜில் ஜிகிர்தண்டா!

இந்த இடுகையில் இரு இனிப்பான சங்கதிகள்!


இனிப்பு 1 :

இதை 75 -ஆவது இடுகையாய் இடுகிறேன். ஆதரவுகரம் நீட்டிவரும் அனைவருக்கும் எனது மனங்கனிந்த நன்றிகள். உங்கள் ஊக்கம், உற்சாகம் இவையே காரணங்கள்!

இனிப்பு 2 :



இன்சுவை குளிர்பானம் 'ஜிகிர்தண்டா'. இதன் செய்முறை இங்கே பதிவிடுகிறேன்.
 
இந்தக் குறிப்பை வெளியிட்ட குங்குமம் (11.01.2010)
இதழுக்கும் வழங்கிய திருமதி ரேவதி சண்முகம்
அவர்களுக்கும் நன்றிகள்.


மதுரையின் புகழ்பெற்ற 'ஜிகிர்தண்டா'வை நமது வீடுகளில்
தயா‌ர் செய்ய முடியும்? அதில் என்ன ஸ்பெஷல்?

பதில் சொல்கிறார் சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்:

நிறைய பொறுமையும் ஆர்வமும் இருந்தால்
ஜிகிர்தண்டாவை வீட்டிலேயே செய்யலாம். அதே
ஒரிஜினல் சுவையுடன் வேண்டுமானால், பாசந்தியும்
குல்ஃபியும் கடல்பாசியும் முக்கியம்.



பாசந்திக்கு:

ஒரு லிட்டர் ஃபுல் க்ரீம் பாலைக் காய்ச்சவும். குறைந்த தணலில் கொதிக்கவிட்டு, மேலே படிகிற ஆடையைத் தனியே ஒரு கிண்ணத்தில் சேகர்க்கவும். பால் நன்கு இறுகியதும், அதில் அரை ஆழாக்கு சர்க்கரை சேர்க்கவும். பால் மீண்டும் நீர்த்துக் கொள்ளும்.

மறுபடி அது கெட்டியாகிற வரை காய்ச்சி, இறுகி வரும்போது, சேகரித்து வைத்துள்ள ஆடையைச் சேர்த்து, ஆற வைக்கவும். சீவிய பாதாம் தூவி, பாசந்தியாக இதை அப்படியேவும் பரிமாறலாம்.

குல் ஃபி ஐஸ்கிரீமுக்கு:

ஒரு லிட்டர் பாலைக் காய்ச்சவும். கெட்டியானதும், முக்கால் ஆழாக்கு சர்க்கரை சேர்த்து மீண்டும் காய்ச்சவும். குழம்பு பதத்திற்கு வரும்போது இறக்கி, ஓரங்கள் நீக்கி, மிக்சியில் உதிர்த்த பிரெட் தூவிக் கலக்கவும். அதன்மேல் ஏலக்காய் தூள், பாதாம் சேர்த்து நன்கு அடித்துக் கலக்கி, ஆற வைக்கவும். குல்ஃபி மோல்டு அல்லது சின்ன கிண்ணத்தில் ஊற்றி, செட் ஆகிற வரை வரை ஃப்ரீசரில் வைக்கவும்.

*25 கிராம் கடல் பாசியை 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு வெந்நீரில் அதைக் கொட்டினால் கரைந்து விடும். அதை ஒரு தட்டில் ஊற்றி ஆற வைத்தால் செட் ஆ‌கி விடும். பிறகு அதை சிறிய துண்டுகளாக வெட்டி தனியே வைக்கவும்.

உயரமான ஒரு டம்ளரில் முதலில் பாசந்தி விடவும்.
அதன் மேல் பொடியாக நறுக்கிய கடல் பாசி போடவும்.
அதன் மேல் குல்ஃபி ஐஸ் கிரீம் போடவும்.
அதன் மேல் நன்னாரி சிரப் சிறிது ஊற்றவும்.

இதே மாதிரி இரண்டு லேயர்கள் ஒவ்வொன்றையும்
சேர்க்கவும்.  கடைசியாக பொடியாக நறுக்கி வறுத்த
பாதாம், முந்திரி சேர்த்து அப்படியே சுவைக்கலாம்.


ரொம்பவும் குளிர்ச்சியான பானம் ஜிகிர்தண்டா. காரணம்
அதில் சேர்க்கிற கடல் பாசி. வயிற்றுப் புண்களை ஆற்றும்
குணமும் அதற்கு உண்டு. வெயில் காலத்தில் சாப்பிட ஏற்றது.
 
படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Monday, November 1, 2010

ஜிகினா 1: விவ(கா)ரமான வியாபாரிகள்!

ஜிகினா 1: விவ(கா)ரமான வியாபாரிகள்!


 குமுதம் விலை 3 ரூபாய்! அடுத்தடுத்து 7 அல்லது 8
கடைகளில் விசாரித்துவிட்டேன். ஆனால் குமுதம்
கிடைக்கவில்லை. "வித்துப்போச்சு", "சரியாப்போச்சு" ,
தீர்ந்துப்போச்சு" என்றுதான் எல்லாக் கடைகளிலும்
சொன்னார்களே அன்றி, புத்தகம் எங்குமே கிடைக்கவில்லை.

அடுத்ததாய் ஒரு கடையில் விசாரித்துவிட்டு, கிடைக்காமல்
யோசனையாய் நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியே
வந்துகொண்டிருந்த நண்பன், "என்ன நிஜாம் இங்கே
யோசனையா நிக்கிறமாதிரி தெரியுதே" என்று கேட்டான்.

அவனிடம் விவரத்தை சொன்னேன். அந்தக் கடையைத்
திரும்பி ஒரு முறை பார்த்துவிட்டு, "கடைக்காரர்கிட்டப்
போயி 'குமுதம் மட்டும் தாங்க' என்று கேள்" என்றான்.
நான் அவனை ஙே என்று விழித்துப் பார்த்தேன்.
"போ! மறுபடியும் போய் நான்  சொன்னமாதிரி கேள்" என்றான்.

நான் தயக்கமாய் கடைக்காரரிடம் சென்று, "குமுதம்
மட்டும் கொடுங்க" என்று கேட்டேன். அலமாரி
உள்ளிருந்து அடுக்கியிருந்த குமுதத்தில் ஒன்று
எடுத்து என்னிடம் கொடுத்தார்.

அட! வாங்கிப் பார்த்தேன். 'இந்த இதழுடன் விக்ஸ்
வேபோரப் ஒன்று இலவசம்' என்று அட்டையில்
போட்டிருந்ததைப் பார்த்து கடைக்காரரிடம், 'அண்ணே..."
என்று ஆரம்பித்தேன். "தம்பி, குமுதம் மட்டும் கேட்டிங்க.
வாங்கிட்டிங்கள்ல? போய்ட்டேயிருங்க!" என்று விரட்டினார்
அவர்.

நண்பன் விளக்கம் சொன்னான்.

"குமுதம் 3 ரூபாய். விக்ஸ் வேபோரப்பும் 3 ரூபாய்! குமுதம்
வித்தா 30 பைசா கிடைக்கும். விக்ஸ் டப்பா ஃப்ரியாக்
கொடுக்கணும். அதனால் குமுதத்தை உள்ள்ள்ளே
எடுத்து ஒளிச்சிட்டு, விக்ஸை எடுத்து ஷோகேஸ்ல
வரிசையா அடுக்கிட்டாங்க. குமுதம்
வித்துப்போயிடுச்சின்னு சொல்லிடுறாங்க. சிலபேரு
குமுதம் மட்டும் கொடுன்னு கேக்குறவங்களுக்கு அதை
மட்டும் கொடுத்திடறாங்க. விக்ஸ் வேபோரப்பை ஸ்டாக்
பண்ணிட்டு, அதை 3 ரூபாய்க்கு வித்திடுவாங்க. 2 ரூபாய்
70 பைசா அடக்கவிலை குமுதத்தவச்சி 6 ரூபாய்
சம்பாதிக்கிறாங்க. இதுதான் விஷயம்." இப்படி நண்பன்
சொன்னதைக் கேட்டு அசந்துபோனேன். (122% இலாபம்.)

அடுத்த முறை இலவசத்தைக் கொடுக்கும்போது,
பொருளைத் தனியாகக் கொடுக்காமல்,
பாலித்தீன் கவரில் குமுததையும் இலவசப்
பொருளையும் போட்டு பேக் செய்து கொடுத்து
விட்டது குமுதம். இப்போது வியாபாரிகள்
பாலித்தீன் கவரிலிருந்து எடுத்து குமுததை
ஒளித்து வைக்கவுமில்லை; இலவசப்
பொருளை ஷோகேசில் அடுக்கவுமில்லை.

காரணங்கள்:

1. குமுதத்தின் விலையோடு ஒப்பிடுகையில்
இலவசப் பொருளின் விலை மிகவும் மலிவு.

2. முன் நடந்த சம்பவத்தின்போதே கடைக்காரர்களை
குமுதம் ஏஜெண்ட் , இனி இதுபோல்
செய்யக்கூடாதென எச்சரிக்கை செய்துவிட்டார்.
பரிதாப வியாபாரிகள்!!!

ஜிகினா 2 -ல் '10 புரோட்டா பார்சல்!'


அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!
Related Posts Plugin for WordPress, Blogger...