...பல்சுவை பக்கம்!

.

Monday, December 26, 2011

சில சிந்தனைகள் (பகுதி 9)

சில சிந்தனைகள் (பகுதி 9)

1. தைரியக்குறைவுதான் பயம்; தைரியத்துடன் எதிர்கொண்டால் பயத்திலிருந்து வெளியேறலாம்.

2. மிகைப்படுத்தப்பட்ட நிறைகளே புகழ்ச்சி. மிகைப்படுத்தப்பட்ட குறைகளே இகழ்ச்சி.

3. குதூகலத்தோடிருக்கும் கிழவரும் வாலிபரே! குதூகலமில்லா வாலிபரும் கிழவரே!

4. ஒரு ஜாண் வயிறு இல்லாட்டா, இந்த உலகத்தில் ஏது கலாட்டா? -பாடல்.

5. கத்தி ஒருவனைத்தான் அறுக்கும்; கடன் பரம்பரையையே அறுக்கும்.

6. பெருமை சேர்க்கும் விஷயங்கள் எளிதில் கிடைப்பதில்லை. எளிதில் கிடைக்கும் விஷயங்கள் பெருமை சேர்ப்பதில்லை.

7. பணக்காரர்கள் அனைவரும் சந்தோஷமாய் இருப்பதில்லை. ஆனால், சந்தோஷமாய் இருப்பவர்கள் அனைவரும் பணக்காரர்களே!

8. இந்தியர்கள் வாழ்வதற்காக உழைக்கிறார்கள். ஜப்பானியர்கள் உழைப்பதற்காகவே வாழ்கிறார்கள் -வைரமுத்து, விகடனில்.

9. எல்லா சுகமும் ஒரு சோகத்தில் முடிகிறது. எல்லா சோகமும் ஒரு சுகமாய் கனிகிறது -வைரமுத்து, விகடனில்.

10.மரணம் என்பது துக்கமில்லை. வாழ்வின் நிறைவு; உடல் அடையும் பூரணம் -வைரமுத்து, விகடனில்.

11.தண்ணில நெருப்பைப் போட்டா சாம்பல். நெருப்பு மேல தண்ணிய வைச்சா சமையல் -மாலன், புதிய தலைமுறையில்.

12.பொய் சொல்வதும் மற்றவர் மனம் புண்பட பேசுவதும் பெற்றோரைப் புறக்கணிப்பதும் க்ரைம்தான் -ராஜேஷ்குமார் (கல்கி)

13.சுத்தமாயிரு உனக்கு பெருமை சுத்தமாய் வைத்திரு உன் நாட்டுக்கு பெருமை. லஞ்சம் வாங்காதே உனக்கு பெருமை லஞ்சம் வழங்காதே உன் நாட்டுக்கு பெருமை!

14.குவளையில்தான் சோறு இல்லையே; அதில் நிரம்பும் மழையை இரசி -ஜப்பானிய ஹைக்கூ.

15.தேனைக் கொள்ளையடித்துச் செல்லும் வண்டு, தன்னையறியாமல் மகரந்தச் சேர்க்கைச் செய்துவிட்டுப் போகிறதே! -வைரமுத்து, விகடனில்.

படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!


Saturday, December 24, 2011

சொன்னது சரிதானா?

சொன்னது சரிதானா?

கேள்வி: "தமிழக அரசிடமிருந்து எம்.எல்.ஏ. தொகுதி
மேம்பாட்டு நிதி வரவில்லை. அதனால் தொகுதிக்கு
பணிகள் செய்ய முடியாததால் என்னால் எனது
தொகுதிக்கு செல்ல முடியவில்லை" என்று
எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் கூறியது சரியா?

பதில்: ஒரு எம்.எல்.ஏ., அவரது தொகுதி மக்களின்
பிரதிநிதியாவார். தொகுதியின் வளர்ச்சித்
திட்டங்களுக்கு அரசு வழங்கும் நிதியை அந்தத்
திட்டங்களுக்கு மட்டும் பயன்படச் செய்யுமாறு
பனி மேற்கொள்வது எம் எல் ஏ வின் கடமையாகும்.
தொகுதி நிதியை கேட்டுப் பெற வேண்டியது
உறுப்பினரின் கடமை. எந்தவொரு உள்நோக்கத்தோடும்
செயல்பட்டு நிதியை வழங்க காலம் தாழ்த்துவது
அரசுக்கு அழகல்ல. அரசிடம் விஜயகாந்த் உரிமையுடன்
கேட்டுப் பெற்று, தொகுதி மக்களின் பயன்பாட்டுக்கு
வழங்குவார் என்று நம்புகிறேன்.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

இதையும் படித்துப் பாருங்கள்:
தலைமைச் செயலக திருமண மண்டபம்!








.படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Friday, November 4, 2011

நகைச்சுவை; இரசித்தவை 17



நகைச்சுவை; இரசித்தவை 17
============ ============ ==

1.] "நம்ம மன்னருக்கு சொந்தமா வளைகுடா இருக்காமே?"

"அட, அது மன்னர் வளைகுடா இல்லப்பா... மன்னார் வளைகுடா!"
--------------------------------------------------------------

2.] "நம்ம தலைவர் தேர்தல்ல தோத்தாலும் முதல்வர்
ஆயிட்டாரு"

"எப்படி?"

"ஒரு டுடோரியல் காலேஜ் ஆரம்பிச்சு அதுக்கு
முதல்வர் ஆயிட்டாரு"
------------------------------------------------------ -----------
3.] "நம்ம மன்னர் ராணிக்கும் எதிரி நாட்டு மன்னனுக்கும்
மட்டும்தான் பயப்படுவாரு"

"ஏன் அப்படி?"

"அவஙக ரெண்டு பேருக்கிட்டதானே அடி வாங்குறாரு!!!"
------------------------------------------------------
4.] "உன் கலயாணத்தைப் பத்தி விவசாய ஆராய்ச்சி
மையத்துல போயி விசாரிச்சியாமே, ஏன்டி?"

"கல்யாணம்ங்கிறது ஆயிரம் காலத்துப் பயிர்
இல்லயா, அதனாலதான்டி."
-----------------------------------------------
5.] "என்னங்க இது மணப்பெண்ணுக்கு கை,
கழுத்து, நெற்றியிலலாம் பூவாலேயே
அலங்காரம் பண்ணியிருக்கீங்க?"

"பொன் வைக்கிற இடத்துல பூ வைக்கச்
சொல்லி நீங்கதானே சொன்னீங்க?"
-----------------------------------------
6.] "நம்ம தலைவருக்கு அதுதான் சொந்த ஊரு"

"தலைவரு பிறந்த ஊரா?"

"இல்ல... பினாமி பேர்கள்ல அந்த ஊரையே
தலைவர் வாங்கிட்டாரு"
---------------------------------------------
7.] "எங்க கடையில ஏழைகளுக்காக ஒரு திட்டம் வச்சிருக்கோம்"

"என்ன திட்டம்?"

"நகையை தொட்டுப் பார்க்க நூறு ரூபாய் மட்டும்ங்கிறதுதான
அந்தத் திட்டம்"
-----------------------------------------------------------

8.] ஆசிரியை: "உங்க பையனைக் கண்டிச்சு வையுங்க"

தாய்: "என் பையன் என்ன செய்தான்?"

ஆசிரியை: "என்டா ஸ்கூலுக்கு வரலைன்னு கேட்டால்,
'தேர்தல் ஜுரம்'னு பதில் சொல்றான்."
--------------------------------------------------------------------------------

9.] "நம்ம தலைவர் எப்பவும் எளிமையானவரு"

"எப்படி?"

"அவருக்கு 'நாவலர்' பட்டம் தர்றோம்னு சொன்னதுக்கு,
'துணுக்கர்' பட்டம் போதும்கிறாரே!"
---------------------------------------------------------------------------------

10] "நம்ம தலைவரு ஏட்டிக்கு போட்டியா பேசுறதுல வல்லவர்"

"எப்படி?"

"எதிர்கட்சித் தலைவருக்கு 'ஆமை வடை' பிடிக்கும்னு
சொன்னதுக்கு, நம்ம தலைவர் 'எனக்கு முயல் வடை
பிடிக்கும்'ன்னு சொல்றாரு"
----------------------------------------------------------

11] "அந்த டாக்டர் போலி டாக்டர்னு நினைக்கிறேன்"

"எதனாலே?"

"சின்ன ஊசியாப் போடச் சொன்னால் குண்டூசி போதுமாங்கிறார்!"
------------------------------------------------------------------------------

12] "அந்த அரசியல்வாதி ஏன் ஒரே நேரத்தில் ரெண்டு கட்சி
ஆரம்பிச்சாரு?"

"அவரோட ரெண்டு மகன்களுக்கும் எதிர்காலத்தில்
பயன்படும்னுதான்."
--------------------------------------------------------------------------------

அன்பர்களுக்கு ஈத் முபாரக், பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

.படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Tuesday, October 11, 2011

விகடனும் நானும்!

விகடனும் நானும்!


அன்பின் சக பதிவர்களே!
நலம்தானே?

பரவலாக ஒரு புதிய திரைப்படம் வெளியானதும்
பதிவர்கள் பலரும் திரை விமரிசனம் எழுதுவார்கள்.
வித்தியாசமாக நான் 'இதழ் விமரிசனம்' எழுதி
இருக்கிறேன். இது விகடனுக்கு நான் எழுதும்
கடிதம்:-

இந்தக் கடிதம் பொதுவான இதழ் பற்றியும் இந்த
வார இதழ் (12 .10 . 2011 ) பற்றியும் எனது கருத்துக்கள்.

விகடன் தீபாவளி மலர் அறிவிப்பு ஏன் இத்தனை
தாமதம்? இப்பத்தான் பிளான் பண்ணினீர்களோ ?
(குறிப்பு: 06.10.2011-ல் இந்தக் கடிதம் எழுதினேன்.
08.10.2011-ல் விகடன் தீபாவளி மலர் வெளிவந்து விட்டது.)

144 +8 (அட்டை ) பக்க விகடனில் 'இன்பாக்ஸ்'
பகுதிக்கு இடம் இல்லையா? இன்பாக்ஸ் பகுதியில்
ஃபோட்டோக்கள் சிறியதாய் போட்டு தகவல்கள்
அதிகமாய் கொடுங்கள்.

என் விகடனை 14 பக்கங்களாக குறைத்து விட்டீர்களே?
'ஸ்மைல் ப்ளீஸ்' பகுதியும் இல்லையே? இனிவரும்
வாரங்களில் 'என் விகடன்' தனி இதழ் கிடையாது;
விகடனின் உள்ளேதான் வரும்; சரியா?

கடிதங்கள் பகுதியும் ட்ரிபிள் ஷாட் பகுதியும் நினைத்தால்
வருகிறது; இல்லாவிடில் வருவதில்லை. அவை தொடர்ந்து
வரவேண்டும்.

'ட்ரிபிள் ஷாட்'டுக்கு குறிப்புக்கள் எதுவும் அனுப்பினால்
உங்கள் ரிப்ளை 'invalid keyword' என்று வருகின்றது.
சுமார் 3 அல்லது 4 தடவைகள் வருகின்றது.
எஸ்.எம்.எஸ். அனுபியவகையிலும் உங்களது ரிப்ளை
வருகின்ற வகையிலும் ரூ. 16 - 20 பணம் காலியாகி
விடுகின்றது. பலன் பூச்சியம்.

சென்ற இதழ்வரை விகடன் மற்றும் என் விகடன்
இரண்டின் பக்கங்களையும் தொடர்ச்சியாய் போட்டு
120 பக்கங்கள் என்று போடுவீர்கள். இந்த வாரம்
இரண்டு இதழ்கள் பக்கங்களையும் தொடர்ச்சியாய்
போடாமல் 84 பக்கங்கள் , 68 பக்கங்கள் என்று
போட்டது ஏன்?

இந்த இதழில் 82 -ஆம் பக்கம் அறிவிப்பு "மிக மிக
அதிக பக்கங்கள்" என்கிறது. ஆக அடுத்த வாரம்
'டபுள் டுமீல்' கிடையாதா? சிங்கிள் டுமீல்தானா?

இந்த வாரம் 22 + 15 = 37 பக்கங்கள் விளம்பரங்கள்.
152 - 37 = 115 பக்கங்கள் விஷயங்கள் உண்டு. அடுத்த
வாரம் மிக மிக அதிக பக்கங்கள் என்று வைத்துக்
கொண்டால் 100 + 100 = 200 பக்கங்கள். எப்படியும்
60 பக்கங்கள் விளம்பரங்கள் இருக்க வாய்ப்புண்டு.
மற்ற பத்திரிகைகள் 'அடுத்த இதழ் மட்டும் 25 ரூபாய்'
என்பதுபோல் அறிவிப்பதில்லை. (அதே விலையில்
3 புத்தகங்கள் கூட தருவது உண்டு.) அதிக
விளம்பரங்கள் வெளியிடுவதற்காக அதிக
பக்கங்கள் தருகின்றீர்கள். விளம்பரதாரர்களிட்மிருந்தே
தொகையை வசூலித்துவிடும் நீங்கள் , எங்களிடம்
அதிக விலை கேட்பது ஏன்?

இந்த வாரம் மேலாண்மை பொன்னுசாமி சாரின்
சிறுகதையில் வர்ணனைகள் மிக அதிகம்.
உரையாடல்கள் அதிகம் இல்லை. ஒரு
யோசனை: 4 பக்க அளவில் வாராவாரம்
இரு சிறுகதைகள் வெளியிடலாமே?



பல ஆண்டுகளுக்கு முன் விகடன் தீபாவளி
சிறப்பிதழ் இரு புத்தகங்களை பின் (pin) செய்து
ஒரே புத்தகமாக வரும். நடுப்பக்கத்தில் நான்கு
பின்கள் இருக்கும். இரண்டாவது மற்றும்
மூன்றாவது பின்களை நீக்கினால் இரு
புத்தகங்களாய் பிரியும். மறுபடியும் 2 ஆவது
மற்றும் 3 ஆவது பின்களை மடக்கிவிட்டுக்
கொள்ளவேண்டும். அது ஒரு சுவாரஸ்யமான அனுபவம்.

மற்றும் அக்காலங்களில் ஓர் இதழ் முழுவதும்
முழு நவீனம் (full novel) இடம்பெறும். [உதாரணம்:
ஹேமா ஆனந்ததீர்த்தன் எழுதிய 'புதிருக்கு
பெயர் பூமா' ] இப்போதும் அதுபோல ஒரு
ஒரு நவீனம் முழு வண்ணத்தில் தரலாமே?

அன்பர்களே , எனது பழைய நினைவுகளைப் புரட்டிப்
பார்த்தேன். உங்கள் அனுபவங்களையும் தெரிவிக்க
வேண்டுகிறேன்.

நன்றி!
.

படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Monday, September 26, 2011

நகைச்சுவை; இரசித்தவை 16


அன்பிற்கினிய இரத்தத்தின் இரத்தமான உடன்பிறப்புக்களே!
உங்களின் ஆசியோடும் ஆதரவோடும் உங்கள் 'நிஜாம் பக்கம்'
இனிய மூன்றாம் ஆண்டில் நுழைந்துள்ளது. அனைத்து அன்பு
உள்ளங்களுக்கும் நன்றி!

வாங்க இனி சிரிக்கலாம்...


நகைச்சுவை; இரசித்தவை

பிச்சைக்காரர்: "அம்மா தாயே... பிச்சை போடுங்க,
நான் வாய் பேச முடியாத ஊமை."

வீட்டுக்காரம்மா: "
பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா...
எனக்கு காது கேட்காது."
=================================================

"கோர்ட்டுல என்ன டமால்னு சத்தம்?"

"சாட்சி பல்ட்டி அடிச்சிட்டாராம்"
=================================================
ஒருத்தி: "இந்த ஊர்ல போலி டாக்டர் இருக்காரா?"

மற்றவள்: "ஏன் கேட்குறே?"

முதலாமவள்: "என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை,
அவங்களுக்கு காட்டத்தான்"
================================================

"யாரோ எழுதிக் கொடுத்ததை தலைவர் மேடையில்
படிக்கிறார்னு எதிர்கட்சி குற்றம் சொல்லிச்சே,
தலைவர் என்ன பதில் சொன்னார்?"

"எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதுன்னு சமாளிச்சிட்டாரு"
================================================

"அந்த பெயிண்டர் ரொம்ப தொழில் பக்தி கொண்டவர்!"

"எப்படி?"

"அவர் பிள்ளைகளுக்கு வெள்ளையப்பன், கருப்புசாமி,
நீலவேணி, பச்சையம்மாள்னு பேர் வச்சிருக்காரு"
================================================

"அவர் 'நான் சத்தியத்துக்கு கட்டுப்பட்டவர்'னு சொல்றாரே?"

"அவர் மனைவி பெயர் சத்தியம்"
================================================

"போன தீபாவளிக்கு வாங்கின ஸ்வீட் நல்லா இருந்தது அதே
மாதிரியே கொடுங்க"

"அதே ஸ்வீட்டே இருக்கு, இந்தாங்க"
==================================================

"ராத்திரியில் சுடுகாட்டுக்குப் போகனும்கறையே , ஏன்டா?"

"டாக்டர்தான் ஆவி பிடிக்க சொன்னார்"
==================================================

"என் மனைவி மாசத்தில பாதி நாளு ஹீரோயின்; பாதி நாளு
வில்லி"

"எப்படி?"

"பணம் இருக்கும் நாள்வரை ஹீரோயின். பணப் பற்றாக்குறை
சமயத்தில வில்லி"
===================================================

"தலைவருக்கு டாக்டர் பட்டம் கிடைச்ச பிறகு, தொண்டர்கள்
ஏன் சந்திக்க பயப்படுறாங்க?"

"தலைவர் கன்சல்டிங் ஃபீஸ் கேட்குறாராம்"
===================================================

.படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Sunday, July 31, 2011

பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா மற்றும் நான்!

பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா மற்றும் நான்!

பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா மற்றும் நான்!





'உங்கள் ஜூனியர்' மாத இதழ் சார்பாக 'வாசகர் சந்திப்பு'.
எனக்கும் அழைப்பு வந்தது. 26.02.1989 அன்று திருச்சி

அஜந்தா ஹோட்டலில் நடந்த அந்தச் சந்திப்புக்கு

என் நண்பரோடு நான் சென்றிருந்தேன்.


என் அபிமான எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகர்,

சுபா இவர்களோடு வாசகர் சந்திப்பும் கலந்துரையாடலும்

கேள்வி-பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றன.


பட்டுக்கோட்டை பிரபாகரிட்ம் நான் ஒரு கேள்வி
கேட்டேன். "நரேன் - வைஜயந்தி துப்பறியும்
ஒரு
நாவலை நீங்களும், பரத் - சுசீலா
துப்பறியும் ஒரு
நாவலை சுபாவும் எழுதினால்
வித்தியாசமாயிருக்குமே?"

அதற்கு, "பரத் - சுசீலாவை உருவாக்கியவன் நான்.

நான் அவர்களின் பெற்றோர்; அவர்கள் என்
குழந்தைகள்.
சுரேஷும் பாலகிருஷ்ணனும்
நரேன் - வைஜயந்தியின்
தாய், தகப்பன்.
சொந்த தாய்+தகப்பன் இருக்கும்போது
குழந்தைகளை யாராவது மாற்றிக்கொள்வார்களா?

தத்து கொடுப்பார்களா?" என்று பதில் கேள்வி
கேட்டார்.

இந்தப் பதிலை அனைவரும் வெகுவாக இரசித்தோம்.

குறிப்பு: 'கல்கி' 17.07.2011 இதழின்
'ஆஹா ஆல்பம்'
பகுதியில் இது வெளிவந்தது.


நன்றி: கல்கி வார இதழ்.




. படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Thursday, July 21, 2011

நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் (பாடல்)

நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் (பாடல்)


சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் ஒலிநாடாவில்
கேட்டது இந்தப் பாடல்.

தொகையறா:
நானிலத்து முஸ்லிம்களின் தாரக மந்திரம்
நாளெல்லாம் நாவெல்லாம் சங்கை சொல்லும்
தீன் இனத்து தங்கங்களே ஒன்று கூடி
கனிவாய் சொல்வீரே...
நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்...

பல்லவி:
நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் என்றே முழங்குவோம்
நல்ல சீரணி கொண்ட கோமான் தாஹா நபிவழி தாங்குவோம்
நாமம் முழங்குவோம் இறைவன் நாமம் முழங்குவோம்
நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்...

ரணம் 1:
உள்ளமும் உணர்வும் இணைந்து
மேலோன் நல்லோன் புகழில் மிளிர்ந்து...
நல்லோன் புகழில் மிளிர்ந்து...
மெய் சொல்லால் நிதமும் அல்லாஹ் ஒருவனின்
மேன்மையை நீ முழங்கு...
மேன்மையை நீ முழங்கு
துன்பமும் துயரமும் மறந்து
தூய இன்ப நிலையிலே உவந்து...
இன்ப நிலையிலே உவந்து...
அன்பாய் ஈர்க்கும் அறிவின் உயிரோட்டம்
மனக் கண்ணில் தோன்றவே
நிதம் சொல்வாய் இந்த அகிலம் ஆளும் இறையோன் நாமமே
ஒன்றாய் கூடியே எந்நாளும் ஒன்றாய் கூடியே
நாரே தக்பீர்... அல்லாஹு அக்பர்...

சரணம் 2:
ஆதம் முதல் வந்த நபிமா ரெல்லாம்
வல்ல ஏகோனை நினைந்தே மொழிந்தார்களே
வானோரும் தினம் தினம் துதி பாடினார்...
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... அ... ஆ...
வானோரும் தினம் தினம் துதி பாடினார்...
அன்பு தீனோரே தக்பீரை கனிந்தே சொல்வீர்
அன்பு தீனோரே தக்பீரை நிலை நாட்டுவீர்
நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் என்றே முழங்குவோம்
நல்ல சீரணி கொண்ட கோமான் தாஹா நபிவழி தாங்குவோம்
நாமம் முழங்குவோம் இறைவன் நாமம் முழங்குவோம்
நாரே தக்பீர்... அல்லாஹு அக்பர்...

பாடல் எழுதிய பாடலாசிரியர் பெயர் தெரியவில்லை.
பாடியவர் நெல்லை உஸ்மான். (தகவல் தந்த
பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் அண்ணன் அவர்களுக்கு நன்றி!)
இந்தப் பாடல் நீங்கள் கேட்டதுண்டா? பாடலாசிரியர் பெயர்
உங்களுக்குத்தெரியுமா?
.



படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Saturday, July 9, 2011

தலைமைச் செயலக திருமண மண்டபம்!

தலைமைச் செயலக திருமண மண்டபம்!




கேள்வி: கடந்த தி.மு.க. ஆட்சியில்விஜயகாந்தின்


திருமண மண்டபத்தை இடித்தார்கள். அதற்கு


ஆளும் அ.தி.மு.க ஆட்சி என்ன பரிகாரம் செய்யலாம்?





பதில்: தி.மு.க. ஆட்சியில் கட்டி முடித்துச்


செயல்படாமல் கிடப்பில் கிடக்கும் தமிழக தலைமை


செயலகக் கட்டடத்தை விஜயகாந்திடம் கொடுத்து,


திருமண மண்டபமாக நடத்தச் சொல்லலாம்.





ஆனா ஒண்ணு பாஸ், இந்த ஐடியாவை நான்தான்


முதலில்சொல்கிறேன். "சமச்சீர் கல்விபற்றி நான்


அப்பவே சொன்னேன்" என்று ராமதாஸ்


சொல்வதுபோல யாரும் பங்குக்கு வரக்கூடாது, ஆமா!



குறிப்பு: ஆனந்த விகடன் 29.06.2011 இதழில் 'நானே கேள்வி; நானே பதில்' பகுதியில் வெளிவந்தது.



நன்றி: ஆனந்த விகடன்.



.



படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Sunday, July 3, 2011

மயிலாடுதுறையை தலைமையாகக் கொண்டு புதிய மாவட்டம்!

மயிலாடுதுறையை  தலைமையாகக் கொண்டு புதிய மாவட்டம்!




சமீபத்தில் மயிலாடுதுறையின் தனிச் சுற்றிதழ் (ஜூன் 15 - 30) 
'சோழன் டைம்ஸ்' இதழில் மயிலாடுதுறை எம்.எல்.ஏ . 
திரு. அருட்செல்வன் அவர்களின் பேட்டியை படித்தேன்.
அதில் மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கம், 
மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் உட்பட
பல கருத்துக்கள் தெரிவித்திருந்தார். வாசகர்களின் 
கருத்துக்களையும் பத்திரிகை ஆசிரியர் கேட்டிருந்தார்.
அந்த இதழில் பத்திரிகையின் ஆசிரியர், அச்சிடுபவர் 
மற்றும் வெளியிடுபவர் ஆகியோர்களின் பெயரோ,
பத்திரிகை முகவரியோ இடம்பெறவில்லை. 
தொலைபேசி எண்கள் மட்டும் தரப்பட்டுள்ளன . 

இனி பேட்டியின் சில பகுதிகள்:-

மயிலாடுதுறை மாவட்டம் என்பதுபற்றி 
எம்.எல்.ஏ.அவர்களின் கருத்து:

" மயிலாடுதுறைய தலைமையிடமாகக் கொண்டு 
புதிய மாவட்டம் சாத்தியமா? சாத்தியமில்லையா 
என்பது வேறு விஷயம். ஆனால், அது காலத்தின்
கட்டாயம். இரண்டே இரண்டு சட்டமன்ற தொகுதிகள் 
கொண்ட அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் 
நடைமுறையிலிருக்கும்போது இதுவும் சாத்தியமே!

" இத்தொகுதிக்குட்பட்ட ஒருவர் தனது மாவட்டத்
தலைநகருக்குச் செல்ல  வேண்டுமாயின் இன்னொரு 
மாவட்டத்தைக் கடந்தோ அல்லது மற்றொரு
மாநிலத்தைக் கடந்தோ செல்ல வேண்டி
இருக்கின்றது. புவியியல் ரீதியாக இது முரண்பட்ட
பிரிவினை. அருகாமை மாவட்டத் தலைநகருக்குச் 
செல்வதைவிட என் சொந்த மாவட்டத் 
தலைநகருக்குச் செல்வதென்பது கூடுதல் 
நேரமும், செலவினமும் கொண்டதாக இருப்பது
விநோதமானது. மக்களின் உணர்வுகளுக்கு
இந்த புதிய அரசு மதிப்பளிக்கும் என நம்புகிறேன்." 

புதிய பேருந்து நிலையம் பற்றி எம்.எல்.ஏ. அவர்களின் கருத்து:

" எனது முன்னுரிமைத் திட்டங்கள் என்பது புதிய 
பேருந்து நிலையமும் அரசு மருத்துவமனையின்   
மேம்பாடும்தான். நகருக்கு ஒருங்கிணைந்த 
பேருந்து நிலையம் என்பது உடனடித் தேவை.
நகரின் போக்குவரத்து நெருக்கடி உள்ளிட்ட 
பல பிரச்னைகளுக்கும் அதுதான் தீர்வு. 

"கடந்த கால மக்கள் பிரதிநிதிகள் இவ்வளவு முக்கிய 
பிரச்னையில்  கவனக்குறைவாக இருந்துள்ளார்கள்.                      

"எனது முன்னோர்கள் புதிய பேருந்து நிலைய 
விவகாரத்தில் தங்களால் முடிந்த முன்னேற்றத்திற்கு 
வித்திட்டுள்ளார்கள். அதனை முழுமை பெற செய்ய 
நான் முயற்சிக்கிறேன். இதற்கான முழுப்பெருமையும் 
அந்த முன்னோடிகளை சேர்ந்தாலும் பரவாயில்லை.
புதிய பேருந்து நிலையம் மக்களுக்குக் கிடைத்தால்
போதும்."

இவ்வாறு எம்.எல்.ஏ. அருட்செல்வன் கூறியுள்ளார்.
அன்பர்கள் உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க 
வேண்டிய தொலைபேசி எண்கள்:

சோழன் டைம்ஸ் : 
94443 49974,
93606 28289,
04364 221603.

அன்பர்கள்  கருத்துக்களை இந்தப் பதிவிலும் 
கருத்துரையாக இடலாம். அவை எம்.எல்.ஏ.
அவர்களின்  பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.
(அனாமதேய கருத்துரைகளைத் தவிர்க்குமாறு
வேண்டுகிறேன்.)

(நன்றி : சோழன் டைம்ஸ்)    


  படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Thursday, June 23, 2011

குண்டப்பா; மண்டப்பா - 6

குண்டப்பா; மண்டப்பா - 6
(பார்த்திபன்: 'குண்டக்க'ன்னா என்னா? 'மண்டக்க'ன்னா என்னா?

வடிவேலு: 'குண்டக்க'ன்னா குண்டப்பா! 'மண்டக்க'ன்னா மண்டப்பா!)

இதோ மீண்டும் குண்டப்பா & மண்டப்பா!

மண்டப்பா கடை வைத்திருந்தார். குண்டப்பா துணி சோப்
வாங்க வந்தார். அப்போது துணி சோப் 12 கட்டிகள் (கேக்)
கொண்டது ஒரு பார் ஆக கிடைக்கும்.

குண்டப்பா கேட்டார்: துணி சோப் ஒரு பார் எவ்வளவு?

மண்டப்பா பதில்: பதினொரு ரூபாய்.

குண்டப்பா : ஒரு கட்டி எவ்வளவு?

மண்டப்பா : ஒரு ரூபாய்.

குண்டப்பா (மனதிற்குள்) : ஒரு ஒரு கட்டியா வாங்கினால்
பனிரண்டு கட்டி 12 ரூபாய். ஒரே தடவையில் வாங்கினால்
11 ரூபாய்தான். (இப்போது சப்தமாக) இந்தா ஒரு பாருக்கு
உண்டான காசு 11 ரூபாய். ஒரு கட்டியை மட்டும்
இப்போ கொடு; மீதி பதினொரு கட்டியையும்
நீயே கடையில் வச்சிக்க. இந்தக் கட்டி
தீர்ந்துபோனதும் இன்னொரு கட்டி வாங்கிக்கிறேன்.
வீட்டுக்கு எடுத்திட்டுப் போனால், என் பெண்டாட்டி
சோப்பை காலி பண்ணிடுவாள். அதனால நீயே
11 கட்டியை வாசிக்க. ரெண்டு, முனு நாள் கழிச்சி
வரேன். வரட்டுமா?

கூறிய குண்டப்பா போறதையே பார்த்துக்கிட்டுருந்தார்
மண்டப்பா.

-அ. முஹம்மது நிஜாமுத்தீன்.

முந்தைய கதைகள் படிக்க இங்கே சுட்டவும்.
. படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Thursday, May 19, 2011

நகைச்சுவை; இரசித்தவை -15

நகைச்சுவை; இரசித்தவை -15!



அரசியல்வாதி (மேடையில்) : விலைவாசி உயர்வு திரும்பக் 
குறையும் வரை நான் சாகாவிரதம் இருக்கப் போகிறேன் 
என்பதை மக்களே, உங்கள்முன் உறுதியிட்டுக் கூறிக் கொள்கிறேன்!!!
................................................................................................................................................

தொண்டர் 1 : பதவி பெருசா, குடும்பம் பெருசா?

தொண்டர் 2 : பதவியில் இருக்கிற குடும்பம்தான் பெருசு!
...............................................................................................................................................

தளபதி: மன்னா, காளைப் படை ஒன்றை நமது படையில்
சேர்ப்போமா? 

மன்னர்: நான்தான் காலையே படையாக வைத்து
இருக்கிறேனே, காளைப் படை என்று எதற்கு தனியாக?
.............................................................................................................................................

தலைவர் : நாங்கள் போனமுறை 500 கோடி ஊழல் செய்தோம்;
இந்த முறை 300 கோடி ஊழல் செய்தோம்...

தொண்டன் 1: தலைவர் என்னப்பா சொல்றாரு?

தொண்டன் 2:  இது கொள்ளை விளக்க பொதுக் கூட்டமாம்!
...........................................................................................................................................

அரசன்  (செய்தி கொண்டுவந்த புறாவைப் பார்த்து ) : புறாவே,
வா! உன்னை வறுக்க வறுக்க என்று  வரவேற்கிறேன்.
..........................................................................................................................................

விமான நிலைய அதிகாரி:  சார் நீங்க   அளவுக்கு அதிகமாகக் 
குடித்திருக்கிறீர்கள். உங்களை விமானத்தில் அனுமதிக்க முடியாது.

பயணி:  அப்படின்னா   சரக்கு விமானத்திலயாவது ஏத்திக்குங்க சார்!
...........................................................................................................................................
 
தலைவர் ( மேடையில்) : நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
வெறும் வாயை மெல்லுபவர்களுக்காக  இலவச  அவல்
திட்டம்  கொண்டு வரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்து கொள்கிறோம்.
........................................................................................................................................... 

--தூங்கும்போது செல்போன் பேசறாமாதிரி கனவு
கண்டேன்டா..

 --அப்புறம் என்ன ஆச்சு?

--விடிஞ்சதும் போன்ல  பேலன்ஸ் இல்லடா!

.........................................................................................................................................
நண்பன் 1: காலம்பூரா உட்கார்ந்து சாப்பிடுரமாதிரி  
வசதி செஞ்சி  வச்சிட்டுப் போயிருக்காரு எங்க தாத்தா!

நண்பன் 2:  அவ்வளவு சொத்து வசதியா?

நண்பன் 1: இல்லடா, நல்ல ஸ்ட்ராங்கா மர பெஞ்ச் செஞ்சி வச்சிட்டாரு...!
..........................................................................................................................................

சேவகன்: மன்னா,  போர் நிறுத்தம் ஆகிவிட்டது...

மன்னன்:  கண்கள் பனித்தன!  இதயம் இனித்தது!!

               படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Sunday, April 17, 2011

ட்வீட்டரில் நிஜாம்பக்கம்!

ட்விட்டர் என்னும் தளத்தில் நான் ட்வீட் செய்த சில
கருத்துக்களை இங்கே உங்கள் பார்வைக்கு கீழே தருகிறேன்.

1.லீவு ஞாயிறு முடிந்து, வேலைநாள் திங்கள்,
இரவு 12 மணிக்கே பிறந்துவிடுகிறதே, இதை
அறிமுகப்படுத்தியவர் யார்?

2.பிரச்னைகள் உருவாக காரணாமாயிருந்து, அந்த
பிரச்னைகள் தீர்ப்பதற்கு, ஓர் ஆணிற்கு உதவியாய்
இருப்பவள்தான் மனைவி #ஓர் அறிஞர்

3.பிழைக்கத்தெரிந்தவன் என்ற வார்த்தை பிடிக்காதவன்
கண்டுபிடித்த சொல்தான 'துரோகி' #தொலைக்காட்சி
சீரியல் வசனம்

4.நல்லவன் என்ற வார்த்தை பிடிக்காதவன்
கண்டுபிடித்த சொல்தான 'அப்பாவி'
#தொலைக்காட்சி சீரியல் வசனம்

5.'பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது' -பழமொழி!
ஏன் கிடைக்காது? அதுதான் வாராவாரம் வருதே?

6.உப்பு தின்னவன் தண்ணி குடிச்சாகணும் - பழமொழி.
உப்பு தின்னவங்கள் எல்லாம கையைத் தூக்குங்க!

7."சிரித்துக்கொண்டே தவறு செய்யும் யாரும்
அழுதுகொண்டே தண்டனை பெற நேரும்"
-காயல் ஏ.ஆர்.ஷேக்முஹம்மது பாடிய பாடல்.

8.அளவோடிருந்தால் பணம் நம்மைக் காப்பாற்றும்;
மீறினால் பணத்தை நாம் காப்பாற்றவேண்டும்.
'அளவு' என்றால் விளக்கம் ப்ளீஸ்!

9.எல்லா ட்டீ.வி.சேனல்களிலும் 'இந்தியாவின்
நம்பர் ஒன் டீலர்' விளம்பரம் மட்டும் வருது.
"இந்தியாவின் நம்பர் டூ டீலர்" விளம்பரம்
ஏன் வருவதில்லை?

10..ஃபாஸ்ட் ஃபுட் ஈஸ் டேஸ்ட் ஃபுட்.
மெதுவா சாப்ட்டா ஸ்லோ ஃபுட்.
மீந்து போச்சுனா வேஸ்ட் ஃபுட்.
தீர்ந்து போச்சுனா நோ ஃபுட்.

www.twitter.com/nizampakkam


படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Friday, March 25, 2011

குண்டப்பா & மண்டப்பா - 5!

குண்டப்பா & மண்டப்பா - 5!




குண்டப்பா வேலை முடிந்து வீடு திரும்பியவர் இரவு
சாப்பாடு ரெடியானதும் சாப்பிட உட்கார்ந்தார்.
குண்டப்பாவின் மனைவி தட்டு வைத்து சோறு
போட்டு சைட் டிஷ்ஷாக முட்டை ஆம்லேட் வைத்தார்.

குண்டப்பா கடுப்பாகிவிட்டார்.
"ஏன் ஆம்லேட் செய்தாய்? முட்டையை அவித்திருக்கலாமே?"
என்று திட்டிவிட்டு சாப்பிட்டு போய்விட்டார்.

மறுநாள் இரவு சாப்பிடும்போது குண்டப்பாவின் மனைவி
அவித்த முட்டையை வைத்தார்.
கோபமான குண்டப்பா, " ஏன் முட்டையை ஆம்லேட்
போட்டிருக்கலாமே? " என்று சப்தம் போட்டு விட்டு
சாப்பிட்டு எழுந்து போனார்.

மூன்றாம் நாள் மிசஸ் குண்டப்பா முன்னெச்சரிக்கையாக
ஒரு முட்டை அவித்தும் ஒரு முட்டை ஆம்லேட்டாகவும்
செய்து வைத்து மிஸ்டர் குண்டப்பாவை சாப்பிட
அழைத்தார்.

சாப்பிட உட்கார்ந்த குண்டப்பா ஆம்லேட், அவித்த முட்டை
இரண்டும் இருப்பதைப் பார்த்துவிட்டு, திரும்பி
மிசஸ் குண்டப்பாவிடம் அவித்த முட்டையைக் காட்டி,
"இந்த முட்டையை ஆம்லேட் போட்டுருக்கணும்" என்று
சொல்லிவிட்டு ஆம்லேட்டைக் காட்டி, "இதை அவித்திருக்கணும்;
மாத்தி செஞ்சிட்டியே!" என்று கூறிவிட்டு, சமர்த்தாக
சாப்பிட்டு எழுந்து போனார்.

மிசஸ் குண்டப்பா எதுவும் தோன்றாமல் திகைத்து நின்றார்.

டிஸ்கிகள்:

1 . பதிவு போட்டு ஒரு மாதத்திற்கு மேலாவதால் இந்த திடீர் பதிவு.

2 . சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கேட்ட
நகைச்சுவைக் கதையை 'குண்டப்பா மண்டப்பா'வாக உல்ட்டா
செய்துவிட்டேன்.

3 . இந்தக் கதையில் மண்டப்பா கிடையாது. குண்டப்பாவும்
மிசஸ் குண்டப்பாவும்தான்.

4 . முந்தைய 'குண்டப்பா & மண்டப்பா' கதைகள் படிக்க இந்த
லிங்கில் கிளிக் செய்யுங்கள்:


.
படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Saturday, February 19, 2011

நகைச்சுவை; இரசித்தவை -14

நகைச்சுவை; இரசித்தவை -14   




ஒருவர்: என்னய்யா இந்த நோட்டீசுல கடைசி வரில
P.T.O.-ன்னு போட்டிருக்கே, என்னய்யா  அர்த்தம்?

மற்றவர்: Phaக்கத்தை Thiருப்பும் Oய் !
================================================

ஒருவர்: எனக்கு கல்யாணப் பத்திரிகை தரீங்க,
நீங்க யாருனே எனக்குத் தெரியாதே? 

மற்றவர்:  நீங்க எல்லா கல்யாணத்திலயும் நல்லா
மொய் வெப்பீங்கன்னு கேள்விப்பட்டேன், அதான்!
================================================

நண்பர் 1 : என் மனைவி பேசியே, என்னை 'வியக்க'
வச்சிடுவாள்!

நண்பர் 2 : என் மனைவி பேசியே, என்னை 'வியர்க்க'
வச்சிடுவாள்! 
================================================

நண்பர் 1 : நீ டூ வீலர் லைசன்ஸ் வச்சிக்கிட்டு, 
த்ரீ வீலர் ஓட்டுனா தப்புதானே, ஏன் டிராஃபிக் 
போலிஸ் ஃபைன் போட்டாருன்னு அவரை
திட்டறே?

நண்பர் 2 : டேய், நான் வச்சிருந்தது ஸ்டெப்னி டயர்.
அத சொல்லி  ஃபைன் போட்டாருடா... 
================================================

தொண்டர் 1 : தலைவர் மகனோட ப்ளஸ் டூ ரிசல்டைப்
பார்த்துட்டு, தலைவர் சந்தோஷமாயிட்டரே , ஏன்?

தொண்டர் 2 : பாஸாயிட்டு, அரசியலுக்கு வராமல்
படிக்கப் போயிடுவானோன்னு பயந்துக்கிட்டே இருந்தாராம்.
=================================================  
. படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Thursday, January 20, 2011

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்...



சென்ற ஆண்டில்  எனக்கு மிகவும் பழக்கமுடைய 
இருவருக்கு நடந்த இரு சம்பவங்களை அறிய 
நேர்ந்தபோது,  எனக்கு சில எண்ண ஓட்டங்கள் தோன்றின.
அவற்றை உங்களோடு பகிர்ந்துகொண்டால்
மற்றவர்களும் எச்சரிக்கையாய் செயல்பட
உதவும் என்று நம்புகிறேன்.


சம்பவம் 1:
அந்த நகரத்தில் அந்த நபருக்கு பெரிய வணிக நிறுவனம்
உண்டு. ஒரு தொழிற்சாலை நடத்தி அதில் சில 
தயாரிப்புக்களும் செய்து வினியோகமும் செய்கின்றார்.
அவரது அண்ணன், அப்பா நிறுவனத்தை கவனித்துக்
கொள்ள அவர் தொழிற்சாலையை நிர்வகித்து வருகின்றார்.
ஒரு நாள் அவரது வீட்டில் தொழிலதிபரது மனைவி மட்டும்
இருக்கும்போது, இரு பெண்கள்  ஒரு சிறு குழந்தையுடன்
வந்து, ஒருவரின் பெயரைச் சொல்லி அவரது
வீட்டுக்குப் போவதாகவும் சொல்லி, சில வார்த்தைகள்
பேசிவிட்டு, குடிக்க தண்ணீர் கேட்டிருக்கிறார்கள்.
அந்தப் பெண்மணியும் தண்ணீர் எடுத்துவந்து 
கொடுத்துள்ளார்.   


தண்ணீர் குடித்தவர்கள் போய் விட்டார்கள். தொழிலதிபரின்
மனைவி வீட்டினுள்ளே போனவர் பார்க்கிறார். 
முதலில் உள்ள அறையில் திறந்திருக்கும் கதவையும்தாண்டி
அமைந்திருக்கும் அலமாரியின் கதவு திறந்து கிடக்கின்றது.
80 பவுன் அளவிற்கு நகையும் சிறிதளவு ரொக்கமும் 
திரு(ட்)டு போய்விட்டது.


அதன்பின், டீ.வி. சேனலிடம் பேட்டி கொடுக்கும்போது,
"நல்லவங்கன்னு நம்பித்தான் வந்தவங்களுக்கு 
தாகத்திற்கு தண்ணீர் கொடுத்து உதவலாம்னு நெனச்சோம்;
இப்ப நஷ்ட்டப்பட்டு நிக்கிறோம். இனிமேல் யாருக்காவது
எப்படி உதவ மனம் வரும்?" என்று ஆதங்கத்தோடும்  
வெறுப்போடும் சொன்னார் அந்த தொழிலதிபர்.


சம்பவம் 2: 
இந்த இளைஞர் சிறு வயதிலேயே திறமையுடன் 
முன்னேறி சுயதொழில் ஆரம்பித்து, சிறப்பாய்
இருந்தார். சில காலங்களுக்குப்பின் வேறு தொழிலில்
ஈடுபட்டார்.  அதாவது ரியல் எஸ்டேட் பிசினஸ்.
சில மாதங்களுக்குமுன் வீட்டின்பேரில் அவர்
அடமானம் வைத்து பெற்றிருந்த தொகையை
வட்டியுடன் சேர்த்து திருப்பிக் கட்டுமாறு
வங்கியிலிருந்து அறிவிப்பு வந்தது அவருக்கு.
அசல் மற்றும் வட்டி சேர்த்து கட்டவேண்டிய
தொகை ரூபாய் நான்கு இலட்சம். அந்த இளைஞரும் 
அவருக்கு தெரிந்தவரிடம் அந்த வீட்டை ரூபாய் பத்து
இலட்சத்துக்கு விலை பேசி, முன் பணமாக 
ரூபாய் நான்கு இலட்சத்தை வாங்கி, அதை 
வங்கியில் கட்டி, வீட்டு பத்திரங்களை வங்கியிலிருந்து
மீட்டார்.  


அடுத்து, பத்திரப் பதிவு அலுவலகம் சென்று முறைப்படி
அந்த வீட்டை வாங்கியவருக்கு பெயர் மாற்றம் செய்து,
மீதம் தொகையான ரூபாய் ஆறு இலட்சத்தையும்
பெற்றுக் கொண்டார்.


அதன்பின், அவரது தொழிலுக்குத் தேவையான, 
பைக் ஒன்றை வாங்கும்பொருட்டு, அவரிடமிருந்த 
பழைய பைக்கை விற்றார். புதிய பைக்கும் வாங்கினார்.
அத்தியாவசியக் குடும்ப செலவுகள் மற்றும் குடியிருக்கும்
வீட்டை சற்று பராமரிப்பு செய்தல் ஆகியனவற்றிற்காக
ரூபாய் இரண்டு இலட்சம் செலவு செய்ததுபோக, கையில்
மீதமிருப்பது ரூபாய் நான்கு இலட்சம். அந்தப் பணத்தை
என்ன செய்யலாம்? நண்பர்களிடத்தில் ஆலோசனை 
கேட்டார்.


பலரும் பல யோசனைகளை சொன்னார்கள். 'நிதி 
நிறுவனத்தில் முதலீடு செய்யுங்கள்' என்று சொன்னார்
ஒரு நண்பர். ''நான் ஐம்பதினாயிரம் ரூபாய் முதலீடு 
செய்திருக்கிறேன். எனக்கு கடந்த மூன்று மாத
காலமாக, ஒவ்வொரு மாதமும் ரூபாய் 7,500 
வருமானம் வந்து கொண்டிருக்கிறது. ஓராண்டு
முடிந்ததும் நான் முதலீடு செய்த தொகை ரூபாய்
75,000-ஆக திரும்பி வந்துவிடும். இதுபோல் நீயும் 
செய்'' என்று ஐடியா(?) கொடுத்தார் அவர்.


மாதா மாதம் ஒரு இலட்ச ரூபாய்க்கு ரூ.15,000
பணம் வட்டியாக வரும். அப்படியானால், ரூ.4,00,000
தொகைக்கும் மாதம் ரூ.60,000 வீதம் கிடைக்கும். 
ஓராண்டு முடிந்ததும் நாம் முதலீடு செய்த தொகை
ரூ.6,00,000-ஆக திரும்பக் கிடைக்கும் என்று முடிவு
செய்த அவர் அவ்விதமே நிதி நிறுவனத்தில் முதலீடு
செய்தார் அந்த ரூ.4,00,000 தொகையை. (இது என்ன 
வகை கணக்கீடு என்று எனக்கு புரியவேயில்லை.)


ஒவ்வொரு மாத குறிப்பிட்ட தேதியிலும் ரூ.60,000-க்கு
பின்  தேதியிட்டு 12 செக்குகள் பெற்றுக் கொண்டார் அவர்.
முதலாவது செக்கை அவரது வங்கிக் கணக்கில் டெபாசிட்
செய்யும் முதல் நாளன்று, அந்த நிதி நிறுவன அதிபர்
இறந்துவிட்டார். அட, தற்கொலைங்க...!


கிளியரிங் அனுப்பிய செக் பெளன்ஸ் ஆகிவிட்டது.
(எனக்கே ஷாக்!)


பிறகு விசாரித்தால், நிதி நிறுவன அதிபர் மனைவியும் 
மகனும், அந்த நிறுவனத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தம்
எதுவுமில்லை என்று கூறிவிட்டனர். அந்த நிறுவனத்தில்
தான் சம்பளத்திற்குத்தான் வேலை பார்த்ததாக மகன்
சொன்னான். தாங்கள் நிறுவனத்தில் பார்ட்னர் கிடையாது;
அதிபர் மட்டுமே எம்.டி. என்றும் தாங்கள் இருப்பதும் 
வாடகை வீடுதான் என்றும் கூறிவிட்டனர். ஆக,
நிதி நிறுவனம் திரட்டிய முதலீடு தொகை எங்கே போனது,
என்ன ஆனது என்பது யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.


இந்த இரு சம்பவங்களும் நான் கேள்விப்பட்டபோது,
'திட்டம்போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டேஇருக்குது;
அதை சட்டம்போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொன்டிருக்குது.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது'
என்ற பாடல் நினைவுக்கு வந்தது.


ஆனால், திருட-ன்-கள் திருந்துவான்கள் என்பது நடவாத
காரியம்.  நாம்தான் முன்னெச்சரிக்கையாயிருக்கவேண்டும்.


1. புதியவர்கள் வந்தால், நம்மோடு பேச்சு கொடுத்தால், 
     பேசிவிட்டு இதுபோல தண்ணீர் கேட்டால், அவசியம்
     தெருக்கதவினை தாழ்போட்டுவிட்டு உள்ளே செல்ல
     வேண்டும். 
2. தனிமையில் இருக்கும்போது அனைத்து அறைகளையும் 
     திறந்து வைத்திருக்கக்கூடாது.
3. பணம், நகை, மற்ற சாவிக்கொத்து, முக்கிய பத்திரங்கள்
     மற்றும் ஆவணங்கள் தெருக்கதவிற்கு அருகிலிருக்கும்
     அறையின் அலமாரியில் வைக்கவேண்டாம்.
4. அலமாரி சாவியினை அலமாரியிலேயே வைக்கவேண்டாம்.
5. அதிகமான நகைகளை, தேவையில்லாத காலங்களில்
     வங்கிப் பெட்டகத்தில் வைக்கவும்.
6.அதிக ரொக்கப் பணம் வீட்டில் வைத்திருக்க வேண்டாம்.
7. அதிக பணத்திற்கு (அதாவது வட்டிக்கு) ஆசைப்பட்டு,
     தொகைகளை (அ)நீதி நிறுவனங்களில் முதலீடு
     செய்ய வேண்டாம். அஞ்சல் சேமிப்பிலோ வங்கியிலோ
     முதலீடு செய்யவும்.
8.வீட்டில் வேலையாட்கள் வைத்திருப்பவர்கள் விலையுயர்ந்த
     தங்கள் பொருட்களை, தாங்களே பாதுகாப்பான இடத்தில்
     வைத்துக்கொள்ளவும். காணாமல் போனபின் வேலையாட்களிடம்
     குறை காண்பதைவிட நாமே கருத்துடன் செயல்பட்டு வரும்முன்
     காத்துக்கொள்ளலாம்.


பணத்தை சம்பாதிப்பது திறமையாகாது. அதனை தக்க வழியில்
பாதுகாப்பது, சேமிப்பது அறிவான செயல் ஆகும். 
நமது வருமானத்தில் ஒரு பகுதியை ஏழை, எளியோருக்கும்
அனாதைகளுக்கும் படிக்கவிரும்பும் வறியவர்களுக்கும் 
நாம் உதவிகள் செய்து, நாமும் மகிழ்ந்திருந்து, நம்மை 
சுற்றியுள்ளவர்களையும் மகிழ்வித்து, இறைவனை
மகிழ்வித்திடுவோம். 


-அ.முஹம்மது நிஜாமுத்தீன். 
  








படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!
Related Posts Plugin for WordPress, Blogger...