...பல்சுவை பக்கம்!

.

Friday, October 30, 2009

சில சிந்தனைகள் (பகுதி - 2)




16. அதிகமாய்ச் சாப்பிட்டால் உணவும் வெறுத்துப் போய்விடும்.


17. பணக்காரனாய் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியதில்லை; தேவைகளைக்
குறைத்தாலே போதும்.


18. இன்று நாம் செய்த நன்மை, நாளை நமக்குக் கிடைக்கப் போகும் இன்பமாகும்.


19. அதிகம் பேசினால் அதிகத் தவறு செய்ய நேரிடும்.


20. ஒவ்வொரு சாலைக்கும் இரு திசைகள் உண்டு.
கவனம் இருந்தால், வெற்றி தரும்
சாலையில் தொடர்ந்து பயணம் செய்ய முடியும்.


21. உண்மையான உழைப்பில்தான் வாழ்க்கை இருக்கிறது.


22. தானத்தை நிதானமாய் வழங்கிக் கொண்டே இருக்கும் கைக்குச் சலிப்பே இராது.


23. பறவைகளுக்குப் பயந்து விதைக்காமல் இருக்க வேண்டாம்.


24. எப்போதும் சலிப்பில்லாமல் செயல்படுபவன் வெற்றி அடைவான்.


25. கெட்ட பழக்கம் முதலில் வழிப்போக்கனைப் போல வரும்; பிறகு விருந்தாளியாய் மாறி,
முடிவில் முதலாளியாகி விடும்.


26. மறந்து விடாதீர்கள், உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் உங்கள் சரித்திரத்தின் ஒரு பக்கமாகும்.


27. அடகு வைப்பதை விட விற்று விடுவதே மேல்.


28. அதிக நேரம் தூங்கும் சோம்பேறியை எழுப்ப சூரியன் இரு முறை உதிப்பதில்லை.


29. ஓர் ஆற்றைப் படகில் கடப்பதை விட நீந்திக் கடப்பது நல்லது. படகோட்டியைத்
தேட வேண்டியிருக்காது.


30. குதூகலமாக ஒரு வேலையைச் செய்யும் போது, வெற்றி கிடைக்காமல் போவதற்கு
வாய்ப்பே இல்லை.


**நன்றி: 'சத்தான வாழ்வுக்கு முத்தான சிந்தனைகள்' - முனைவர் அ.அய்யூப்.


அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Thursday, October 29, 2009

முல்லா ஏன் அழுதார்?




முல்லா ஏன் அழுதார்?


முல்லா ஒரு நாள் அழுதுகொண்டிருந்தார்.


அவரது நண்பர் கேட்டார்: "முல்லா, ஏன் அழுகிறாய்?"
முல்லா சொன்னார்: "சென்ற மாதம் எனது பாட்டி ஐந்து இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்."


நண்பர் கேட்டார்: "அட மகிழ்ச்சியான செய்திதானே, ஏன் அழுகிறாய்?"
முல்லா சொன்னார்: " பதினைந்து நாட்களுக்குமுன் எனது பெரியப்பா இருபது இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்."


நண்பர் கேட்டார்: "மகிழ்ச்சியான செய்தி! அதற்காக ஏன் அழுகிறாய்?"
முல்லா சொன்னார்: "சென்ற வாரம் எனக்கு 30 இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவத்துவிட்டு எனது அத்தை இறந்துவிட்டார்."


நண்பர் கேட்டார்: "சந்தோஷப்படுவதைவிட்டு ஏன் அழுகிறாய்?"
முல்லா சொன்னார்: "மூன்று நாட்களுக்குமுன் எனது தாத்தா இறக்கும்முன் 50 இலட்ச ரூபாயை எனக்கு எழுதிவைத்துவிட்டார்."


நண்பர் கேட்டார்: "கொண்டாடாமல் ஏனப்பா அழுகிறாய்?"
முல்லா சொன்னார்: "இனிமேல் சொத்தை எழுதிவைத்துவிட்டு இறந்துபோறதுக்கு  எனக்கு பணக்கார சொந்தக்காரர்கள் இல்லையே, அதனாலதான் அழுதுகிட்டு இருக்கிறேன்"
கேட்ட நண்பர் மயக்கம்போட்டு கீழே விழுந்துவிட்டார்.


-சிரி(ப்புக் கலை)ஞர் மதன்பாபு சிரித்துக்கொண்டே ஆதித்யா ட்டீ.வி.யில் சொல்லிய கதை. (நன்றி)


:- அ.முஹம்மது நிஜாமுத்தீன்.





வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Tuesday, October 27, 2009

சில சிந்தனைகள் (பகுதி - 1)







1. கொஞ்சம் பசி இருக்கும்போதே சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள்.


2. பெரும் பலமுடையவன் அதை மெதுவாக உபயோகித்து வெற்றி பெற வேண்டும்.


3. மூட நம்பிக்கை மனதை விஷமாக்குகிறது.


4. சோம்பேறி மூச்சு விடுகிறான்; ஆனால், வாழவில்லை.


5. சிக்கனம் இருந்தால் மற்ற பண்புகள் அனைத்தும் எளிதில் வந்து விடும்.


6. சீக்கிரமாய் கொடுப்பவன் இரட்டிப்பாய் கொடுத்தவனாகிறான்.


7. உறுதியின்மையால் நல்ல வாய்ப்புகள் பல நழுவி விடுகின்றன. எப்போதும் மன உறுதியுடன் இருங்கள்.


8. முயற்சி செய்கிற வரையில் எவருக்கும் தம் திறமை பற்றி ஒன்றும் தெரியாது.


9. நீங்கள் அமைதியாய் வாழ விரும்பினால் கேளுங்கள்; பாருங்கள்; மௌனமாயிருங்கள்.


10. உங்களுக்குத் தேவையானவற்றை எல்லாம் வாங்க
வேண்டாம். எது இல்லாமல் வாழ முடியாதோ,
அதை மட்டும் வாங்கினால் போதும்.


11. பொய் எப்போதும் எச்சரிக்கையாய் ஆயுதங்களுடன் இருந்தாலும், முடிவில் தோல்வி அதற்குத்தான்.


12. எது நன்மை என்பதை அதை இழந்தால்தான் தெரியும்.


13. அறிவுள்ளவன் மூடனுக்கும் காளை மாட்டுக்கும் வழி விட்டு ஒதுங்கிச் செல்வான்.


14. சில நிமிடங்கள் மௌனமாயிருங்கள்; கோபம் தணிந்து விடும்.


15. கண்ணியமானவன் என்றால், அவன் யாருக்கும் துன்பம் ஏற்படுத்தாதவன் என்று பொருள்.


**நன்றி: 'சத்தான வாழ்வுக்கு முத்தான சிந்தனைகள்' - முனைவர் அ.அய்யூப்.


**அன்பன்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Sunday, October 25, 2009

சர்தார்ஜியா? சப்பாத்திஜியா?




சர்தார்ஜியா? சப்பாத்திஜியா?

நமது தமிழ்நாட்டுக்காரர் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்
ஏற வந்தார். கொண்டுவந்த பெட்டியின் கணம் தாங்காமல்
அவைகளை ரயிலில் ஏற்ற சிரமப்பட்டார். அப்போது
அங்கு நின்றுகொண்டிருந்த சர்தார்ஜி, அவைகளை ஒரு
கையால் அனாயாசமாகத் தூக்கி ரயில் கம்பார்ட்மெண்ட்
உள்ளே எடுத்து வைத்தார்.

நன்றி சொன்னார் தமிழர்.

அதற்கு, "சப்பாத்தி சாப்பிடு. உடம்பு பலமாயிருக்கும்;
கை நல்லா வேலைசெய்யும்" என்று சொல்லி, கைகளை
தோளுக்குமேல் தூக்கிக்காட்டி பெருமைப்பட்டுக்
கொண்டார் சர்தார்ஜி. (சர்தார்ஜிக்கு தமிழ் தெரியும்
போலிருக்கிறது.)

உள்ளே சென்று பெட்டிகளை மேலே லக்கேஜ் கேபினில்
வைக்க சிரமத்துடன் முற்பட்டார் தமிழர்.

அப்போதும் சர்தார்ஜியே அவற்றை லக்கேஜ் கேபினில்
வைத்துவிட்டு, கைகளை தோளுக்குமேலாகத் தூக்கி,
"சப்பாத்தி சாப்பிடு. உடம்பு பலமாயிருக்கும்;
கை நல்லா வேலைசெய்யும்" என்று சொன்னார்.

ஜன்னல் ஷட்டர், கன்ணாடியை மேலேதூக்க
சிரமப்பட்டபோதும் சர்தார்ஜியே தூக்கிவிட்டு,
"சப்பாத்தி சாப்பிடு. உடம்பு பலமாயிருக்கும்;
கை நல்லா வேலை செய்யும்" என்று சொன்னார்.

தமிழர் எரிச்சலாகிவிட்டாலும் அமைதியாய்
இருந்துவிட்டார். ரயில் புறப்பட்டுவிட்டது.
இருவரும் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரம் சென்றபின்னர் தமிழர் எழுந்து ரயிலில்
உள்ள அபாயச் சங்கிலியை கையால்
பிடித்துக்கொண்டு, கஷ்டப்படுவதுபோல்
முகத்தை வைத்துக்கொண்டு, இழுப்பதுபோல்
பாவனை செய்தார்.

உடனே சர்தார்ஜி அவசரமாக எழுந்து சங்கிலியை
பலமாக இழுத்தார்; ரயில் நின்றுவிட்டது. ரயில்வே
அதிகாரிகள் வந்துவிட்டார்கள். தமிழர் தமக்கு
எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார்.

தேவையின்றி சங்கிலியை இழுத்து ரயிலை
நிறுத்தியதற்காக சர்தார்ஜியிடம் அபராதத்
தொகையை வசூலித்துக்கொண்டு சென்றார்கள்
அதிகாரிகள். அனைத்தையும் அமைதியாகப்
பார்த்துக்கொண்டிருந்துவிட்டு தமிழர் சொன்னார்:

"அரிசிச் சோறு சாப்பிடு. மூளை பலமாகும்; அறிவு நல்லா
வேலைசெய்யும்."

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Friday, October 23, 2009

காமனுக்கு காமன் (பாடல்)



காமனுக்கு காமன் (பாடல்)


இந்தப் பாடல் கமல் இரசிகர்களுக்கு
ரொம்பப் பிடிக்கும். ஏனென்றால் இந்தப்
பாடலுக்கு ஆடியவர் கமல்தான்.
படம்: உருவங்கள் மாறுவதில்லை.

இந்தப் பாடலின் கருத்துக்களை
அனைவரும் அறிந்துகொள்ளவே
இந்த இடுகை.
பாடியவர்: திரு.எஸ்.ப்பீ.பாலசுப்ரமணியன்.

இதோ அந்தப் பாடல்:

காமனுக்குக் காமன் மாமனுக்கு மாமன்
சாத்திரங்கள் சொல்ல வந்து நிற்கும் தேவன்
கனவில் நினைவில் எதிலும் இவன்...
கனவில் நினைவில் எதிலும் இவன்
கவிதை அழகின் இரசிகன் இவன்
காலை மாலை இல்லை நான் கொஞ்ச
காமனுக்குக் காமன்...............

ஆடலோடு பாடலும் மோகம் கொண்ட கண்களும்
காதல் கொண்ட ஜோடிகள் மேடைமீது ஆடவும்
ஆடலோடு பாடலும் மோகம் கொண்ட கண்களும்
காதல் கொண்ட ஜோடிகள் மேடைமீது ஆடவும்
தைதைதை தாளங்கள் தட்டட்டும்
தோம்தோம்தோம் மேளங்கள் கொட்டட்டும்
தைதைதை தாளங்கள் தட்டட்டும்
தோம்தோம்தோம் மேளங்கள் கொட்டட்டும்
தாம்தக தீம்தக தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
தாம்தக தீம்தக தரிகிட தரிகிட தரிகிட தோம்
காமனுக்குக் காமன்....

ஏண்டி பப்படா எந்துக்கடி அவலம்?
ஏண்டி பப்படா எந்துக்கடி அவலம்?
இந்த சாமிகிட்ட கத்துக்கணும் சகலம்.
ஏண்டி பப்படா எந்துக்கடி அவலம்?
இந்த சாமிகிட்ட கத்துக்கணும் சகலம்.
அம்மாடி தாங்காதடி - நீ
தந்தாலும் தீராதடி
அம்மாடி தாங்காதடி - நீ
தந்தாலும் தீராதடி

சவாலங்கடி கிரிகிரி
சைதாப்பேட்டை வடகறி
உட்டாம்பாரு ஜாங்கிரி
சோன்பப்டி நைனா மைனா

சவாலங்காடி கிரிகிரிகிரி
சைதாப்பேட்டை வடகறிகறி
உட்டாம்பாரு ஜாங்கிரிகிரி
சோன்பப்டி நைனா மைனா

ஏ... சவாலங்கிடி,
ஏ... சைதாப்பேட்டை,
ஏ... உட்டாம்பாரு,
ஏ... சோன்பப்டி

தைதைதை தகிட தகிட
தைதைதை தைதோம்
தைதைதை தகிட தகிட
தைதைதை தைதோம்தொம்.

இந்தப் பாடலின் கருத்துக்கள் பற்றிய
உங்கள் அபிப்ராயங்களை எழுதுங்கள்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Wednesday, October 21, 2009

நகைச்சுவை இரசித்தவை - 7





நகைச்சுவை இரசித்தவை - 7




வீட்டு உரிமையாளர்: "உங்களுக்கு
கல்யாணம் ஆயிடுச்சா?"

வாடகை வீடு பார்ப்பவர்: "இன்னும்
இல்ல சார்"

வீ.உரிமையாளர்: இன்னும் ஆகலையா?"

வா.வீ.பார்ப்பவர்: "கலியாணம் ஆயிடுச்சி
சார்"

வீ.உரிமையாளர்: "என்ன சார் மாத்தி, மாத்தி
சொல்றீங்க?"

வா.வீ.பார்ப்பவர்: "சார், எனக்கு ரொம்ப
ஞாபக சக்திங்க. எனக்கு சின்ன வயசில
கலியாணம் ஆகலை இல்லையா, அந்த
ஞாபகத்திலயே சொல்லிட்டேன்"

(நன்றி: எஸ்.வி.சேகர் நாடகம்)
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

முதல் வக்கீல்: நான் ஒரு புனை பெயர்
வச்சிக்கிட்டிருக்கேன்.

மற்ற வக்கீல்: என்னன்னு?

முதல் வக்கீல்: "மியாவ்"

மற்ற வக்கீல்: இது புனை பெயர் மாதிரி
இல்லையே, பூனை பெயர் மாதிரில்ல
இருக்கு?

(நன்றி : எஸ்.வி.சேகர் நாடகம்)
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஒருவர்: எங்க ஊர்ல ரெண்டு கட்சிக்காரங்களுக்கும்
சண்டை, அடிதடி!

மற்றவர்: அப்புறம் என்ன ஆச்சு?

முதலாமவர்: போலீஸ் வந்து எல்லோருக்கும்
தடியடி!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Tuesday, October 20, 2009

பேரைச் சொல்லவா?




பேரைச் சொல்லவா?



அந்தப் பள்ளிக்கு ஓர் ஆசிரியர்
புதிதாய் மாறுதலாகி வந்தார்.
முதல் நாள் மாணவர்களிடம்
பெயர்களை விசாரித்தார்.

முதலில் ஒரு மாணவனிடம்,
"உன் பெயர் என்ன?" என்று
கேட்டார்.

அதற்கு அந்த மாணவன்,
"மாரி" என்றான்.

"உன் அப்பா பெயர் என்ன?" என்று
ஆசிரியர் கேட்டார்.

"மாரியப்பன்" என்றான் மாணவன்.
ஆசிரியருக்கு ஆச்சரியம்.

அடுத்த மாணவனிடம், "உன் பெயர்
என்ன?" என்று கேட்டார்.

"ராஜா" என்றான் மாணவன்.

"உன் அப்பா பெயர் என்ன?" என்று
கேட்டார் ஆசிரியர்.
"ராஜாஃபாதர்" என்றான் மாணவன்.
ஆசிரியருக்கு மிகுந்த அதிர்ச்சியாகி
விட்டது.

மூன்றாவதாக மாணவனிடம் "உன்
அப்பா பெயர் என்ன?" என்று மாற்றிக்
கேட்டார். "அப்பா பெயர் ஜான்"
என்றான் மாணவன்.

"உன் பெயர் என்ன?" என்று கேட்டார்
ஆசிரியர். "ஜான்சன்" என்றான் மாணவன்.

அந்த ஆசிரியர் பிறகு மாணவர்களிடம்
பெயர் கேட்பதையே விட்டு விட்டார்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Friday, October 16, 2009

தீபாவளியும் பாதுகாப்பும்!




தீபாவளியும் பாதுகாப்பும்!

பட்டாசுக்கள் கொளுத்தும்போது காயம்
ஏற்பட்டு அதனால் தீபாவளியின் மகிழ்ச்சியை
இழக்கச் செய்யலாமா?

தீபாவளி அன்று பட்டாசு கொளுத்தும்போது
கடை பிடித்திட வேண்டிய சில பாதுகாப்பு
முறைகள் பற்றி 'நம்ம ஊரு செய்தி'
நவம்பர் 2002 இதழில் சில குறிப்புக்கள்
படித்தேன். இந்தி ஆசிரியர் திரு.ஆர்.
சுவாமிநாதன் தொகுத்தவை. அவை:

*பட்டாசுக்களை ஒரே இடத்தில் அதிகமாக
குவித்து வைக்கக்கூடாது.

*குழந்தைகள் எடுக்கும் வகையில்
பட்டாசுக்களை வைக்ககூடாது.

*உற்பத்தியாளர் பெயர் அச்சிடப்படாத
பட்டாசுக்கள் உள்ள பெட்டியை
வாங்கக்கூடாது.

*பட்டாசுக்கள் வெடிக்கும்போது தொளதொள
மற்றும் எளிதில் தீப்பற்றும் உடைகள்
அணியக்கூடாது.

*சரவெடியை நெருக்கமான தெருக்களிலோ,
மாடி குடியிருப்புக்களின் மத்தியிலோ
வெடிக்கக்கூடாது.

*கைக்குழந்தைகள், கர்ப்பிணிகள்,
முதியவர்கள், நோயாளிகளுக்கு இடையூறு
செய்யாமல் பட்டாசுக்கள் வெடிக்க
வேண்டும்.

*கொளுத்திய பட்டாசுக்களை ஒருவரை
நோக்கிக் காட்டுவதோ, தெருவில்
எறிவதோ கூடாது.

*தீக்குச்சிகள் மூலம் வெடிகள்
கொளுத்தக் கூடாது.

*பட்டாசு கொளுத்தும்போது கவனத்தை
வேறு விஷயங்களில் செலுத்தாதீர்கள்.
தீக்காயம் ஏற்பட்டால் குளிர்ந்த நீரையோ
அல்லது ஐஸ் கட்டிகளையோ வைத்து
முதல் உதவி செய்யவேண்டும்.

இந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை
கவனத்தில் கொண்டு சிறப்புடன் தீபாவளி
கொண்டாடுங்கள். குழந்தைகள் பட்டாசு
கொளுத்தும்போது பெரியவர்கள்
மேற்பார்வை செய்துகொள்ளுங்கள்.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Monday, October 12, 2009

ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் (நகைச்சுவை)



ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர்
================================
ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர் ஹிட்லர்.
'யூதர்கள்தான் தம் நாட்டைச் சுரண்டியவர்கள்; அவர்களால்தான்
ஜெர்மானியர்கள் வறுமையில் வாடுகின்றனர்' என்ற எண்ணம்
கொண்டிருந்தார் அவர். ஆயிரக்கணக்கான யூத இன
மக்களை விஷவாயு அறைகளில் அடைத்து மிகக்
கோரமாகக் கொன்றவர்.

அவருக்கு ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை உண்டு. ஒரு
சமயம் பெரிய ஜோதிட வல்லுனர் ஒருவரை
அழைத்து வரச் சொன்னார் ஹிட்லர்.
அவரிடம், "என் ஆயுட்காலம் எப்போது முடிகிறது? நான்
எப்போது சாவேன்?" எனக் கேட்டார். ஹிட்லரின்
ஜாதகத்தை மிகத் தீவிரமாக ஆராய்ந்த ஜோதிடர்,
"யூதர்களின் பண்டிகையன்று நீங்கள் இறப்பீர்கள்.."
என்று சொன்னார்.

ஜோதிடரின் பதிலைக் கேட்ட ஹிட்லர்,
"யூதர்களுக்குத்தான் வருடம் முழுதும் பல
பண்டிகைகள் வருகின்றனவே... எந்தப்
பண்டிகையின்போது நான் இறப்பேன் என்பதைச்
சரியாகச் சொல்லுங்கள்" என்றார்.

"நீங்கள் என்றைக்கு இறக்கிறீர்களோ, அந்த நாள்
யூதர்களின் பண்டிகை நாளாக நிச்சயம்
கொண்டாடப்படும்..." என்றார் ஜோதிடர்.

அதன் பிறகு, அந்த ஜோதிடரின் கதி என்னவாயிற்றோ???

நன்றி: திரு.அந்துமணி - வாரமலர்.
மூலம் ஆங்கில நூல்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

'ஆசப்பட்ட எல்லாத்தையும்' (பாடல்)

நாட்டுப்புறப் பாடகர் சின்னப்பொண்ணு அவர்கள் எழுதி
பலகாலமாக மேடைகளில் பாடிவரும் பாடல். பின்னாளில்
திரைப்படத்திலும் இது இடம்பெற்றது. திரையில்
இப்பாடலைப் பாடியவர் பாடகர் திரு.ஹரிஹரன்.

ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்,
அம்மாவ வாங்க முடியமா- நீயும்
அம்மாவ வாங்க முடியுமா?
ஆயிரம் உறவு உன்ன தேடிவந்தே நின்னாலும்
தாய்போல காணமுடியுமா- நீயும்
தாய்போல காணமுடியுமா?
உனக்கும் எனக்கும் அம்மா ஒருத்திதானடா- தெய்வம்
உலகத்திலே இருக்குதுன்னா தாயடா
ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா- நீயும்
அம்மாவ வாங்க முடியுமா?

எளவட்டமானாலும் எண்ண தேச்சி குளிக்கவப்பா
எளவட்டமானாலும் எண்ண தேச்சி குளிக்கவப்பா
ஏமாத்து புள்ளய நம்பி இதயத்த பறிகொடுப்பா
ஏமாத்து புள்ளய நம்பி இதயத்த பறிகொடுப்பா
கட்டெறும்பு உன்ன கடிச்சா கத்திக்கிட்டு அவ முழிப்பா
கட்டெறும்பு உன்ன கடிச்சா கத்திக்கிட்டு அவ முழிப்பா
பெத்தவளுக்கே கைமாறுதான் புள்ள என்ன கொடுத்துவப்பான்?
பெத்தவ்ளுக்கே கைமாறுதான் புள்ள என்ன கொடுத்துவப்பான்?
உனக்கும் எனக்கும் அம்மா ஒருத்திதானடா- தெய்வம்
உலகத்திலே இருக்குதுன்னா தாயடா
ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா- நீயும்
அம்மாவ வாங்க முடியுமா?

பட்டினியாக் கிடந்தாலும் பிள்ளக்கி பால் கொடுப்பா
பட்டினியாக் கிடந்தாலும் பிள்ளக்கி பால் கொடுப்பா
பால் குடிக்கும் பிள்ளைமுகம் பாத்து பசி மறப்பா
பால் குடிக்கும் பிள்ளைமுகம் பாத்து பசி மறப்பா
நெஞ்சிலே நடக்க வப்பா நெலாவப் பிடிக்க வப்பா
நெஞ்சிலே நடக்க வப்பா நெலாவப் பிடிக்க வப்பா
பிஞ்சி விரலில் நகம் கடிப்பா பேசச் சொல்லி ரசிச்சிருப்பா
பிஞ்சி விரலில் நகம் கடிப்பா பேசச் சொல்லி ரசிச்சிருப்பா
உனக்கும் எனக்கும் அம்மா ஒருத்திதானடா- தெய்வம்
உலகத்திலே இருக்குதுன்னா தாயடா
ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா- நீயும்
அம்மாவ வாங்க முடியுமா?


அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Wednesday, October 7, 2009

நகைச்சுவை; இரசித்தவை - 6






ஆசிரியர்: கோபால், அஞ்சும் மூனும்
எவ்வளவு?

கோபால்: ம்..ம்.. வந்து.. ஏழு சார்.

ஆசிரியர்: என்ன ஏழா? எப்படி
கூட்டினாலும் வராதேடா?

கோபால்: தப்பாக் கூட்டினால் வரும்
சார்!!!

#######################################

தாத்தா: டேய் கோ..வாலு! என்னோட
கண்ணாடியக் காணோம்; கண்ணு
தெரிய மாட்டேங்குது. நீ கொஞ்சம்
தேடி எடுத்துக் கொடுடா.

கோபால்: போ தாத்தா, எனக்கு
வேலை இருக்கு. நீயே கண்ணாடியப்
போட்டுக்கிட்டு தேடி எடுத்துக்கோ!

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தலைமையாசிரியர்: (பள்ளி ஆண்டு
விழாவில்) : பள்ளிக்கு தினமும்
லேட்டா வந்தாலும், முன் சொன்ன
காரணத்தையே மறுமுறையும் சொல்லாமல்
தினம் புதுப் புது சாக்கு, போக்குகளைச்
சொன்ன வர(ரா)தராஜனுக்கு இந்த
சிறப்புப் பரிசு அளிக்கப்படுகிறது.

!!!!!#####!!!!!#####!!!!!#####!!!!!#####!!!!!#####
அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

முத்துக்கு முத்தாக... சொத்துக்கு சொத்தாக... (பாடல்)





என்னைக் கவர்ந்த பாடல் இது.
உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

பாடல் : முத்துக்கு முத்தாக...
படம் : அன்புச் சகோதரர்கள்
பாடகர் : திரு.கண்டசாலா
பாடலின் mp3 : http://odeo.com/show/7899703/1181981/download/MuththukkuMuththaaka.mp3

பாடலின் வரி வடிவம் இதோ:

முத்துக்கு முத்தாக... சொத்துக்கு சொத்தாக... (பாடல்)
=============================================
முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக
அண்ணன் த்ம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம் ஒன்னுக்குள் ஒன்னாக
(முத்துக்கு...)

தாயாரும் படித்ததில்லை தந்தை முகம் பார்த்ததில்லை
தாலாட்டு கேட்டதன்றி ஓர் பாட்டும் அறிந்ததில்லை
தானாக படித்து வந்தான் தங்கமென வளர்ந்த தம்பி
தள்ளாத வயதினில் நான் வாழுகிறேன் அவனை நம்பி
(முத்துக்கு...)

அண்ணன் சொல்லும் வார்த்தை எல்லாம் வேதமெனும் தம்பி உள்ளம்
அன்னையென வந்த உள்ளம் தெய்வமெனக் காவல் கொள்ளும்
சின்னத்தம்பி கடைசித்தம்பி செல்லமாய் வளர்ந்த பிள்ளை
ஒன்றுபட்ட இதயத்திலே ஒரு நாளும் பிரிவு இல்லை
(முத்துக்கு...)

ராஜாக்கள் மாளிகையும் காணாத இன்பமடா
நாலுகால் மண்டபம்போல் நாங்கள்கொண்ட சொந்தமடா
ரோஜாவின் இதழ்களைப் போல் தீராத வாசமடா
நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா
(முத்துக்கு...)

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

Monday, October 5, 2009

நகைச்சுவை; இரசித்தவை - 5






அம்மா: "ராமு, கண்ணாடி முன்னாடி
நின்னுக்கிட்டு கண்ண மூடி, மூடி
என்னடா பண்ணிக்கிட்டிருக்கே?"

ராமு: "நான் தூங்கும்போது அழகா
இருக்கேனான்னு கண்ணாடியில
பார்த்துக்கிட்டு இருக்கேம்மா!"
************************************************

சேகர்: "நல்ல வேளை, நான் டில்லியில
பிறக்கல!!"

குமார்: "அதனால என்ன?"

சேகர்: "எனக்கு ஹிந்தி தெரியாது,
ரொம்ப கஷ்டமாயிருந்திருக்குமே?"
************************************************

முதல் நண்பர்: "நேற்று கோபால் வீட்டுக்கு
மதியம் ஒரு மணிக்குப் போயிருந்தேன்.
சாப்பிடறயான்னு அவன் கேட்கவேயில்லை"

இரண்டாம் நண்பர்: "அதைச் சொல்ல இப்பவும்
மதியம் ஒரு மணிக்குத்தான் எங்க வீட்டுக்கு
வரணுமா?"
***********************************************

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
***********************************************


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Sunday, October 4, 2009

சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா (பாடல்)




சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா!

இந்த பாடல் திருமதி.ப்பீ.சுசீலா அவர்கள் பாடியது.
இடம் பெற்ற படம்: வண்ணக்கிளி.
என்னைக் கவர்ந்த பாடல் இது.

சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
சொன்ன பேச்சக் கேட்டாத்தான் நல்ல பாப்பா
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா

தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரட்டுமா
சிலுக்குச் சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா
தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரட்டுமா
சிலுக்குச் சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா
கண்ணாமூச்சு ஆட்டம் உனக்கு சொல்லித் தரட்டுமா
கண்ணாமூச்சு ஆட்டம் உனக்கு சொல்லித் தரட்டுமா - இப்ப
கலகலன்னு சிரிச்சிக்கிட்டு என்னப் பாரம்மா
(சின்ன...)

கோபம் தீர்ந்து அப்பா உன்னைக் கூப்பிடுவாரு - நீ
கொஞ்சி கொஞ்சி பேசினாத்தான் சாப்பிடுவாரு
கோபம் தீர்ந்து அப்பா உன்னைக் கூப்பிடுவாரு - நீ
கொஞ்சி கொஞ்சி பேசினாத்தான் சாப்பிடுவாரு
கோழி மிதிச்சி குஞ்சு முடம் ஆகிவிடாது - குங்குமம்
கோழி மிதிச்சி குஞ்சு முடம் ஆகிவிடாது - உனக்கு
கொய்யாப்பழம் பறிச்சு தாரேன் அழுகை கூடாது
(சின்ன...)

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்



வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Friday, October 2, 2009

நகைச்சுவை; இரசித்தவை - 4






நகைச்சுவை; இரசித்தவை - 4
============================
சுட்டிப்பயல் பாபு
-----------------------------
சுட்டிப்பயல் பாபு பள்ளிக்குப் போகும்போது பக்கத்துத் தெரு ஆன்ட்டி அவனிடம் பேசுகிறாள்.

ஆன்ட்டி: "பாபு உங்க வீட்டில புது பாப்பா பொறந்திருக்கே, உனக்கு தம்பியா? தங்கையா?"

பாபு : இன்னும் பேரு வைக்கலையே, அதனால தெரியல ஆன்ட்டி!!!"
******************************************************

வெ.சாம்பார்
---------------------
ராமுவும் கோபுவும் ஹோட்டலுக்கு சாப்பிடப் போகிறார்கள்.

ராமு : " மெனு போர்டில 'வெ.சாம்பார்'னு போட்டிருக்கே, வெங்காய சாம்பாரா?"

கோபு : "வெண்டைக்காய் சாம்பாரா இருக்கும்! சர்வர் இங்க வாப்பா. வெ.சாம்பார்னா
என்ன சாம்பார்?"

சர்வர் : "காய் எல்லாம் தீர்ந்து போச்சி. இது வெறும் சாம்பார்!!!"
******************************************************
அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
******************************************************

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Thursday, October 1, 2009

குண்டப்பா & மண்டப்பா! (1)




குண்டப்பா & மண்டப்பா!
=======================
குண்டப்பா தனது கிராமத்திலிருந்து,
டவுனுக்கு ஓர் அரசாங்க அலுவலகத்திற்கு
ஒரு காரியமாக வந்தார்.

வேலை முடிய மதியம் ஒரு மணியாகிவிட்டது.
மதியம் 1.15 பஸ்ஸில் புறப்பட்டால் அவரது
கிராமத்திற்குப் போய் சேர ஒரு மணி நேரமாகும்.
பசி அவரது வயிற்றைக் கிள்ளி, வயிறே புண்ணாகி
விட்டது. ஹோட்டலுக்குப் போய் சாப்பிடலாம்
என்று நினைக்கும்போது, 'சாப்பாடு என்றால்
50 ரூபாய் செலவாகி விடுமே, என்ன செய்யலாம்'
என்று யோசித்தார்.

அப்போதுதான் அதே டவுனில் நான்கு தெருக்கள்
தள்ளிதான் அவரது நண்பர் மண்டப்பாவின்
வீடு இருப்பது நினைவுக்கு வர, 'சாப்பாட்டுச்
செலவை மிச்சம் பண்ணிடுவோம்' என்று
எண்ணியபடி ஐந்து நிமிடங்கள் நடந்து,
மண்டப்பாவின் வீட்டிற்குச் சென்றார்.

குண்டப்பாவைப் பார்த்த அவரது நண்பர்
மண்டப்பா, அவரிடம் பேச ஆரம்பித்தார்.
பேச ஆரம்பித்தவர்தான், பேசிக் கொண்டே
இருந்தாரே அன்றி, சாப்பிடக் கூப்பிடவே
இல்லை. குண்டப்பாவும் ஒரு மணி
நேரமாகப் பொறுத்துப் பார்த்து விட்டார்.
மணியும் இரண்டைத் தாண்டி விட்டது.

குண்டப்பா எழுந்து கொண்டார்.
"அப்ப நான் ஊருக்குப் புறப்படுகிறேன்"
என்றார்.

அதற்கு, "எங்க வீட்டில சாப்பிடச்
சொன்னா சாப்பிடவாப் போறீங்க?"
என்று கேட்டார் மண்டப்பா.

"மாட்டேன்னா நீங்க விடவாப் போறீங்க?"
என்று திருப்பிக் கேட்டுக் கொண்டு
அங்கேயே நின்று கொண்டிருந்தார் குண்டப்பா.

'ஆஹா... இவுரு நம்ம வீட்டுல சாப்பிடாமப்
போக மாட்டாரு போலருக்கே, எப்படி இவர
துரத்தலாம்' என்று யோசித்த மண்டப்பா,
சமாளிப்பாக, "அப்படி நீங்க நம்ம
வீட்டுல சாப்பிட்டாலும் என் ரெண்டு
பிள்ளைங்களுக்கும் ஐம்பது, ஐம்பது
ரூபாய் அன்பளிப்பு கொடுக்காமயா
போயிடப் போறீங்க?" என்று கோர்த்து
வாங்கினார்.

'ஹோட்டல்ல சாப்பிட்டா ஐம்பது ரூபாய்தானே,
இந்த ஆளு நூறு ரூபாய்க்கு அடி போடுறானே'
என்று பயந்தாலும் குண்டப்பா, "என்னங்க
இப்படிச் சொல்லிட்டீங்க? உங்க பிள்ளைங்க
தங்கம்ல? உங்க பிள்ளைங்களும் உங்க மாதிரியில?
நான் பணம் கொடுத்தாலும் அவங்க
வாங்கவாப் போறாங்க? நீங்க
அப்படியா பிள்ளைங்கள வளர்த்திருக்கீங்க?"
என்று மடக்கினார்.

இவ்வளவு பேச்சு நடந்த பிறகும் குண்டப்பா
அந்த வீட்டில் சாப்பிட்டிருப்பாரா, மாட்டாரா?

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

குண்டப்பா & மண்டப்பா (2) இங்கே!

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!
Related Posts Plugin for WordPress, Blogger...