...பல்சுவை பக்கம்!

.

Saturday, July 30, 2022

திருப்பூர் சாரதி ஜோக்ஸ் (2) #167

திருப்பூர் சாரதி ஜோக்ஸ் (2)


















. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!


திருப்பூர் சாரதி ஜோக்ஸ் (1) #166



திருப்பூர் சாரதி ஜோக்ஸ்
















திருப்பூர் சாரதி 


. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Thursday, July 28, 2022

சிறுகதைப் போட்டி! #165

சிறுகதைப் போட்டி #165

24/07/2022 ஞாயிறன்று 'தமிழக எழுத்தாளர்கள்' குழுமத்தில், ஒரு கதையைப் பதிவிட்டு, அதன் சரியான முடிவை எழுதுங்கள் என்பதாக ஒரு போட்டி வைக்கப்பட்டது.




பரிசு பெற்ற மூன்றில் நான் எழுதிய கதை முடிவும் ஒன்று!

இதோ கதையும் மூன்று முடிவுகளும்!

சிறுகதை:

நேரம்! - திருப்பூர் சாரதி
====== ===============

       " கோபுசாரைப் பார்க்கணும்! "

குரல் கேட்டு நிமிர்ந்தார் அந்தக் கம்பெனியின் செக்யூரிட்டி. எதிரே கல்லூரி மாணவன் ஒருவன் நின்றிருந்தான்.

" அப்பாயின்மென்ட் இருக்கா தம்பி? "

" இல்லேங்க "

செக்யூரிட்டி சிரித்தபடியே, 
" சாரைப் பார்க்க அப்பாயின்மென்ட் வாங்கவே எத்தனை நாளாகும்னு தெரியுமா? சும்மா நினைச்ச நேரத்தில் யாரும் பார்த்திட முடியாது. உங்க பேரையும், போன் நம்பரையும் எழுதிவச்சுட்டுப் போங்க, உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தாக் கூப்பிடுவாங்க. " என்றார் நக்கலாக!

 " ஆனா அவர் எங்க காலேஜ் விழாவுக்கு வந்தப்போ, மாணவர்கள் ஏதாச்சும் உதவி தேவைப்பட்டா எந்த நேரமும் என்னை வந்து பார்க்கலாம்னு சொல்லிட்டு வந்தாரே...! " 

 " அவங்க மேடைக்காக பேசறதை எல்லாம் நம்பி இப்படி வரக்கூடாது தம்பி. வேலை ஆகணும்னா காத்திருந்துதான் ஆகணும். கிளம்புங்க, போன் வரும்! "

ஏமாற்றத்துடன் கிளம்பினான் அந்தக் கல்லூரி மணவன்.

அடுத்தநாள் காலை...
" எனக்காக எத்தனைபேர் மணிக்கணக்கா காத்திருக்காங்க, நீ என்னடான்னா... " என்றபடி ...

கதாசிரியர் எழுதியிருந்த முடிவு:

திரு.திருப்பூர் சாரதி அவர்கள் எழுதிவைத்திருந்த முடிவு:

தன் பங்களாவுக்கு வெளியே, கக்கா போக முரண்டு பிடித்த நாயைப் பிடித்துக்கொண்டு ஒருமணி நேரமாகக் காத்திருந்தார் கோபு!


திருப்பூர் திரு. சாரதி அவர்கள்
...................................
இனி பரிசு பெற்ற 3 முடிவுகள்:

பரிசு பெற்றவை:

அடுத்தநாள் காலை...
" எனக்காக எத்தனைபேர் மணிக்கணக்கா காத்திருக்காங்க, நீ என்னடான்னா... " என்றபடி ...

தொடர்ச்சி:
டாய்லட் வாசலருகே நின்றவர், "ஒன்றறை லிட்டர் காஃபி குடிச்சும் இந்த கக்கா வருவேனாங்குதே!?!" என புலம்பலானார்!

முடிவு எழுதியவர்:
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
...................................
இன்றைய போட்டிக்காக...

"எனக்காக எத்தனைபேர் மணிக்கணக்கா காத்திருக்காங்க, நீ என்னடான்னா நான்தான் கூட்டிட்டு போகணும்னு அடம் பிடிக்குறே..." என்றபடி தனது செல்லநாயை வாக்கிங் அழைத்துச் சென்றார் கோபு.

- அஜித்
...................................
திருப்பூர் சாரதி சாரின் நேரம் கதையின் முடிவை யூகிக்கும் போட்டி!

நேரம்!
======

"எனக்காக எத்தனை பேர் மணிக்கணக்கா காத்திருக்காங்க, நீ என்னடானா", என்றபடி                                 

தன்மேல் ஆசையாய் தாவி ஏறிய டாமியை கட்டிக்கொண்டார் கோபு

அ.வேளாங்கண்ணி, திருச்சி.





  .படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!
Related Posts Plugin for WordPress, Blogger...