...பல்சுவை பக்கம்!

.

Wednesday, January 1, 2014

அம்மா சொன்ன கதை! #122

புத்தாண்டுப் பதிவு!

ஒரு நாள் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, சோற்றில் கருப்பு நிற அரிசி ஒன்று இருந்தது. அதைக் கையில் எடுத்து சாப்பிடுமுன் சில சிந்தனைகள் தோன்றின.


இக்காலங்களில் நவீன அரிசி ஆலைகளில் இருந்து சாக்கு மற்றும் துணி பைகளில் விற்பனைக்கு வெளிவரும் அரிசி மூட்டையில் மேல் பாகம் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி மட்டும்தான் இருக்கும். முன்பெல்லாம் அரிசியுடனே ஒரு சில நெல்மணிகள், சிறிய கற்கள், சிறு துண்டு களிமண் கட்டிகள், முழுமைபெறாத அரிசி பதர்கள், சில பல வைக்கோல் சக்கைகள் இவற்றோடு கருப்பு நிற அரிசிகளும் இரண்டற கலந்து கட்டி வரும். இந்த கருநிற அரிசி பதர் அல்ல; அரிசியேதான்.

சிறு வயதில் ஒருநாள் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது இதேபோல்தான் சாப்பாட்டில் இருந்த ஒரு கருப்பு சோற்றினை
வெளியில் எடுத்துப் போட எத்தனிக்கும்போது, எங்கள் அம்மா சொன்னார்கள்:

"இந்த கருப்பு சோறு சாப்பிடு; தூக்கி வெளியில் போடக்கூடாது. ஏனென்றால் இந்தக் கருப்பு சோறுக்கு ஒரு கதை இருக்கிறது." என்று சொல்லிவிட்டு கதையையும் சொன்னார்கள்.


ஒரு நாள் ஒரு கருப்பு அரிசி (சோறு) கடவுளிடம் கேட்டதாம், "கடவுளே, மற்ற அரிசியெல்லாம் வெள்ளையாக இருக்கின்றன. என்னைமட்டும் கன்னங்கரேல் என்று கருப்பாகப் படைத்துவிட்டாயே?" என்று.

"கருப்பரசியே! நீ கருப்பாய் இருப்பதற்காக கவலைப்பட்டு, மனம் ஏங்கவேண்டாம். நீ கருப்பாக இருந்தாலும் உன்னை சமைத்துப் பரிமாறும் தட்டில் கருப்பு சோறாக இருக்கும்போது, உன்னைப் பார்ப்பவர்கள் உன்னைத்தான் முதலில் எடுத்துச் சாப்பிடுவார்கள். அதனால் உனக்கு வருத்தத்திற்கு பதில் மகிழ்ச்சிதான் ஏற்படும். சந்தோஷமாகப் போ!" என்று பதில் தந்து அந்த கருப்பு அரிசியை வாழ்த்தி அனுப்பினாராம் கடவுள். அன்றிலிருந்து, சாப்பாட்டில் கருப்பு அரிசி இருந்தால் முதலில் அதையே நாம் சாப்பிட வேண்டும்.

இவ்வாறாக எங்கள் அம்மா சொன்னதும் நான் உடனே அந்த கருப்பு அரிசியைக் கீழே போடாமல் உடனே சாப்பிட்டு விட்டேன்.

இதுதான் அம்மா சொன்ன கதை; எங்கள் அம்மா சொன்ன கதை.



அன்பன்,

அ. முஹம்மது நிஜாமுத்தீன்.

.
படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

கீழை அ. கதிர்வேல் ஜோக்ஸ்! + குடந்தையூரார் புதினம்! #121


நகைச்சுவைப் பேரரசர், எழுத்தாளர் திரு. கீழை அ. கதிர்வேல் அண்ணன் அவர்கள் பல்லாண்டு காலமாக  
பத்திரிகைகளில் எழுதிய ஜோக்குளிலிருந்து 400
ஜோக்குகளைத் தொகுத்து 'நகைச்சுவை நானூறு'
என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். 

இந்த நகைச்சுவைகளைப் படிக்கப் படிக்க மனபாரமெல்லாம் 
குறையும். டென்ஷன் விலகும். மனம் இலேசாகும். 
நோய்கள் ஓடி ஒளி(ழி)யும். மீண்டும் மீண்டும் படிக்கலாம். 
இந் நூலில் அனைத்துத் துறைகளிலும் பொதிந்துள்ள 
நகைச்சுவையை வெளிக் கொண்டு வந்து தருகிறார் 
அண்ணன் கீழையார். 

நூலுக்கு பாக்கியம் ராமசாமி, லேனா தமிழ்வாணன், பிச்சினிக்காடு இளங்கோ ஆகியோர் அணிந்துரை தந்துள்ளார்கள்.

நூலிலிருந்து சில ஜோக்குகள்:   



[படத்தின்மேல் கிளிக் செய்து பெரிதாக்கிப் படியுங்கள்.]


நூல் : நகைச்சுவை நானூறு

ஆசிரியர் : கீழை அ. கதிர்வேல்
வெளியீடு: சிரிப்பரங்கம்,
                       அம்பத்தூர்,
                       சென்னை.
நாள்           : 12/01/2014



கீழை அ. கதிர்வேல் அண்ணன் அவர்கள் எனக்கு அனுப்பித் தந்த அவரது புகைப்படம்:



*****     *****     *****     *****     *****     *****     *****     *****
 'இளமை எழுதும் கவிதை நீ' புதினம்!


நண்பர் குடந்தையூர் ஆர். வி. சரவணன் அவர்கள் எழுதிய 'இளமை எழுதும் கவிதை நீ' தொடர்கதையை புத்தகமாக வெளியிடுகிறார்.

நாள் : 05/01/2014

இடம்: டிஸ்கவரி புக் பேலஸ்.



இந்தக் கதை காதல், கல்லூரி, கலாட்டா, கலகலா என்று கலந்து கட்டி இருக்கின்றது.

இந்நூலுக்கு எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களும் பதிவர் முனைவர் எஸ். சங்கர் அவர்களும் பதிவர் அரசன் அவர்களும் மதிப்புரைகள் வழங்கியுள்ளனர்.

இரு நூல்களையும் படித்துப் பாருங்கள் நண்பர்களே!

-அ. முஹம்மது நிஜாமுத்தீன்.
.

படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

நகைச்சுவை; இரசித்தவை (19) #120

1.  "பரிட்சை எழுத வரும்போது கையில என்னடா கட்டு?"

"விழுந்து விழுந்து படிச்சதுல கையில அடிபட்ருச்சி சார்!"

(மாணவர்கள் விழிப்புடன் படிக்கவும்.)


==============================================================
2. மனைவி: "நான் வரும்போது ஏன் கண்ணாடி போட்டுக்கறீங்க?"

கணவன்: "தலைவலி வரும்போது கண்ணாடி போட்டுக்கங்கன்னு டாக்டர்தான் சொன்னார்."


-கீழை அ. கதிர்வேல்.
[ஆனந்த விகடன் 1988 தீபாவளி சிறப்பிதழ்.]
=============================================================
3.
https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn1/46161_584784781547510_332092284_n.jpg
 ஹா... ஹா...

"ஹலோ மன்னா, போர் முடிந்து விட்டதா?"

"நான் ரன்னிங்கில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன் அமைச்சரே!"

-வீ.விஷ்ணுகுமார்
(தினகரன் வசந்தம் 23.12.2012)

============================================================
4.  "சாப்பாடு உனக்கு மட்டும்தானே, பின்ன ஏன் பார்சல் வாங்கிட்டு வீட்ல போயி சாப்பிடுறே?"

"என்னை ஹோட்டல்லயே சாப்பிடக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரே!"

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

5.  ஹா...ஹா...

நீதிபதி: "நீ எதாவது சொல்ல விரும்புகிறாயா?"

குற்றவாளி: "எனக்காக வாதாடின வக்கீல், உண்மையிலேயே

பி.எல். படிச்சிருக்காரான்னு எனக்குத் தெரியணும்!"

-போடி. ப்ரியபாரதி
(1988)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

6.  ஹா...ஹா...

"வரப்போகும் பொதுத் தேர்தலில், உங்கள் கட்சி சார்பாகப்
போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்துவிட்டீர்களா?"

"ம்... ம்..."

"தேர்தலில் எதிர்கட்சிகளுடன் கூட்டு உண்டா?"

"ஊஹூம்."

"தனித்துப் போட்டியிட்டால் தங்களால் மெஜாரிட்டி
பலம் பெறமுடியுமென்று நம்புகிறீர்களா?"

"ம்... ம்..."

"மெஜாரிட்டி கிடைக்காமல் போனால் கூட்டு
மந்திரி சபை அமைக்கச் சம்மதிப்பீர்களா?"

"ம்... ம்..."

உங்கள் கட்சிக்குள் ஏதோ 'கசமுசா'வென்றும்
தேர்தலுக்குள் பிளவுபடும் என்றும் சொல்கிறார்களே?"

"ஊஹூம்..."

"உங்களின் மனம் திறந்த பேட்டிக்கு நன்றி!"

- படுதலம் சுகுமாரன்

(1988)


--------------------------------------------------------------------------------------

7.  ஹா...ஹா...

"எதுக்கு டாக்டர் உங்க கையையே நாடி பிடிச்சுப்
பார்த்திட்டிருக்கீங்க?"

"டச் விட்டுப் போயிடாம இருக்கத்தான்!"

- எம். பூங்கோதை
(1988)


-------------------------------------------------------------------------------------------
8.  ஹா...ஹா...

"ஆப்பரேஷன் தியேட்டருக்குள் துப்பாக்கி வெடிக்கிற சத்தம் கேக்குதே?"

"மிலிட்டரி டாக்டர் ஆச்சே... ஆப்பரேசன்போது இறந்து போனா
மரியாதை பண்ணுவார்!"

- அம்பை தேவா
(1988)


---------------------------------------------------------------------------------------------
9.  ஹா...ஹா...

"என்ன டாக்டர் இது... பணம் கொடுக்கும்போது கிச்சுகிச்சு செய்றீங்க?"

"சிரிச்ச முகத்தோட பீஸ் கொடுத்தால்தான் நான் வாங்கிப்பேன்!"

- வி. சாரதி டேச்சு
(1988)


------------------------------------------------------------------------------------------
10.  ஹா...ஹா...

"தலைவியோட சுயரூபம் உங்களுக்கு மட்டும்தான் தெரியுமா? யார் நீங்க?"

"அவங்களுக்கு நடிகையா இருந்தபோது, அவங்களுக்கு மேக்கப் மேனாக
இருந்தவன்!"

- ஞா. ஞானமுத்து (1988)


----------------------------------------------------------------------------------------------
 11.  ஹாஹா...!

"நம்ம தலைவர் எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊருல 2 பேரை, பேர் சொல்லி கூப்பிட்டு, தோள்ல கை போட்டு பேசுவாரு!"

"உண்மையாவா?"

"எந்த ஊருலயும் 2 பேருக்கு மேலே நம்ம கட்சியில ஆள் இல்லையே!"

-டி.சேகர், திருத்துறைப்பூண்டி.


------------------------------------------------------------------------------------------------
12.  ஹா... ஹா...

"அஞ்சே ஆயிரம்தான் செலவு பண்ணேன், தரகர் பஞ்சாயத்து, மேட்ரிமோனியல் எந்த செலவும் இல்லாமல் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டேன்"

"எப்படி?"

"பொண்ணுக்கு 'மொபைல் ஃபோன்' வாங்கிக் கொடுத்தேன்!"

-பர்வீன் யூனுஸ்.
(ஆனந்த விகடன், 19.12.2012)

=> இது நகைச்சுவைதான். ஆனால்,எவ்வளவு பெரிய கொடுமை?<=


-----------------------------------------------------------------------------------------------
13.  ஹா... ஹா...!

"ஜாமீன் எடுக்கப் போன எங்களைத் தலைவர் கண்டபடி திட்டிட்டார்!"

"என்னவாம்?"

" '13 வருஷமா எங்கடா போனீங்க?'ன்னுதான்!"

-சி.சாமிநாதன்
(ஆனந்த விகடன், 07.11.2012)


-------------------------------------------------------------------------------------------------
14.  "அந்த சாமியார் சொன்னது உடனே பலிச்சுதா? எப்படி?"

" 'புது வாகனம் வாங்குவே'ன்னு சொன்னார். அவரைப் பார்த்துட்டு வெளியே வந்தா, என் காரைக் காணோம்."

-அ.ரியாஸ், சேலம்.
(குங்குமம், 19.11.2012)


-------------------------------------------------------------------------------------------------
15.  "அடுத்து நம்ம ஆட்சிதான். ஏன் தலைவரே கவலைப்படுறீங்க"

"அதுக்குள்ளே மணல், நிலக்கரி, கிரானைட் எல்லாத்தையுள் காலி பண்ணிடுவாங்க போலிருக்கே!"

-சிக்ஸ் முகம்
(ஆனந்த விகடன் 21.11.2012)


----------------------------------------------------------------------------------------------
 16.  "நம்ம தலைவருக்கு திறமை போதாது."

"ஏன்?"

"பேசி தூங்க வைச்சவருக்கு எழுப்பத் தெரியலை!"


----------------------------------------------------------------------------------------------
17.   "இந்த ஊர்லயே ரொம்ப மோசமான ஹோட்டல் எங்கயிருக்கு?"

"ஏன் கேட்குறீங்க?"

"பக்கத்திலேயே கிளினிக் ஆரம்பிக்கலாம்னுதான்!"


------------------------------------------------------------------------------------------

18.  "நான் 'அழகாயிருக்கேன்'னு பொய்தானே சொன்னீங்க?"

"உண்மைதான் உமா!"


----------------------------------------------------------------------------------------
19.  "இப்போதெல்லாம் பாட்டு பாடி, பரிசு பெற வருவதில்லையே, ஏன் புலவரே?"

"Blog எழுதவே நேரம் போதவில்லை மன்னா!"


------------------------------------------------------------------------------------------
2013-ல் எனது முகநூல் சுவரில் பதிந்ததின் தொகுப்புதான் இது.
.
படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!
Related Posts Plugin for WordPress, Blogger...