செட்டி சாலி கடை!
- அ. முஹம்மது நிஜாமுத்தீன்.
.
.
செட்டி சாலி கடைக்கு சாப்பிடப் போயிருந்தேன்.
கடையின் வாசல் அருகே ஒரு பிளக்ஸ் போர்டு இருந்தது.
"மைதா பரோட்டா சாப்பிடாதீர்கள்; மாரடைப்பு வரும்!" என்று ஊராட்சி மன்றத் தலைவரின் வேண்டுகோள் காணப்பட்டது அந்த போர்டில்.
"மைதா பரோட்டா சாப்பிடாதீர்கள்; மாரடைப்பு வரும்!" என்று ஊராட்சி மன்றத் தலைவரின் வேண்டுகோள் காணப்பட்டது அந்த போர்டில்.
கடை முதலாளியின் மகனிடம் நான் கேட்டேன்: "அந்த போர்டினுள்ள அறிவிப்பு காரணமாக உங்கள் வியாபாரத்திற்கு எதுவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?" என்று.
"பாதிப்பு எதுவுமில்லை; அதனால், நல்ல பலன்தான் கிடைக்கிறது" என்று பதில் சொன்னார் அவர்.
"எப்படி?" என்று நான் கேட்டேன்.
"அந்த போர்டை நின்னு படிக்கிறாங்க! அப்படியே உள்ளே வந்து பரோட்டாவை சாப்பிட்டுட்டு போறாங்க! வியாபாரம் அதிகமாகுதே தவிர, குறையலை!" என்றார் அவர்.
"ஓ... கெட்டதிலேயும் ஒரு நல்லது இருக்கும்பாங்களே, இதுதானா அது?!" என்று சொல்லிவிட்டு, சாப்பிட்ட பரோட்டாவிற்கு பணத்தைக் கொடுத்துவிட்டு புறப்பட்டேன், நான்!
.
.