...பல்சுவை பக்கம்!

.

Saturday, July 23, 2016

செட்டி சாலி கடை! #129

செட்டி சாலி கடை!


செட்டி சாலி கடைக்கு சாப்பிடப் போயிருந்தேன்.

கடையின் வாசல் அருகே ஒரு பிளக்ஸ் போர்டு இருந்தது.
"மைதா பரோட்டா சாப்பிடாதீர்கள்; மாரடைப்பு வரும்!" என்று ஊராட்சி மன்றத் தலைவரின் வேண்டுகோள் காணப்பட்டது அந்த போர்டில்.

கடை முதலாளியின் மகனிடம் நான் கேட்டேன்: "அந்த போர்டினுள்ள அறிவிப்பு காரணமாக உங்கள் வியாபாரத்திற்கு எதுவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?" என்று.

"பாதிப்பு எதுவுமில்லை; அதனால், நல்ல பலன்தான் கிடைக்கிறது" என்று பதில் சொன்னார் அவர்.

"எப்படி?" என்று நான் கேட்டேன்.

"அந்த போர்டை நின்னு படிக்கிறாங்க! அப்படியே உள்ளே வந்து பரோட்டாவை சாப்பிட்டுட்டு போறாங்க! வியாபாரம் அதிகமாகுதே தவிர, குறையலை!" என்றார் அவர்.

"ஓ... கெட்டதிலேயும் ஒரு நல்லது இருக்கும்பாங்களே, இதுதானா அது?!" என்று சொல்லிவிட்டு, சாப்பிட்ட பரோட்டாவிற்கு பணத்தைக் கொடுத்துவிட்டு புறப்பட்டேன், நான்!
- அ. முஹம்மது நிஜாமுத்தீன்.
.
.  படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

மறக்க முடியுமா? #128

மறக்க முடியுமா?

- அ. முஹம்மது நிஜாமுத்தீன்,




இறைவனுக்கு நன்றி!
நல்வாய்ப்பாய் இஸ்லாமியர்கள் 
தப்பித்தோம்!!!



நாதுராம் கோட்சே 
கேடுகெட்ட நீ 
மாட்டிக் கொண்டாய்!


கொல்வது எப்படி?
சொல்லித் தந்தாய்!


மார்பில் குத்துவது எப்படி?
அல்ல, அல்ல,
நெஞ்சில் சுடுவது எப்படி?
சொல்லித்  தந்தாய்! 


கும்பிடுவதுபோல் நம்பவைத்து
கொல்வது எப்படி?
நயவஞ்சகம் என்பது என்ன?
சொல்லித் தந்தாய்!


ஒரு தேசத்தின் ஜீவனாய் 
இருந்தவரை எப்படி கொன்றாய்?
சொல்லித் தந்தாய்!


'பாவம் ஓரிடம்;
பழி ஓரிடம்'
என்பார்கள். 
அதை எளிதாய்
புரிய வைத்தாய்!


அதை, ஆர்.எஸ்.எஸ்.காரனாய் 
நீ கொலை செய்து,
இஸ்லாமியர்மேல் 
பழி போடுவது எப்படி? 
சொல்லித் தந்தாய்!


"மாபாதகன்" என்பதன் 
பொருள் என்ன?
சொல்லித் தந்தாய்!


இவற்றிற்கெல்லாம் ஒரு
சரித்திர சான்று
நீ சுட்டுக் கொன்ற
எங்கள் காந்தித் தாத்தா!
தேசத்தின் பிதா!


கேடுகெட்ட நீ 
மாட்டிக் கொண்டாய்!
நல்வாய்ப்பாய் இஸ்லாமியர்கள் 
தப்பித்தோம்!!!
மறக்க முடியுமா?


. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!
Related Posts Plugin for WordPress, Blogger...