...பல்சுவை பக்கம்!

.

Wednesday, December 9, 2009

சில சிந்தனைகள் (பகுதி - 6



சில சிந்தனைகள் (பகுதி - 6) நற்பண்புகள்.

ஒழுக்கம் உயர்வைக் கொடுக்கும்.

உழைப்பு செல்வத்தைக் கொடுக்கும்.

பக்தி மன அமைதியைக் கொடுக்கும்.

சிரிப்பு ஆயுளைக் கொடுக்கும்.

உதவி ஆதரவைக் கொடுக்கும்.

அன்பு நட்பைக் கொடுக்கும்.

பண்பு மதிப்பைக் கொடுக்கும்.

சுத்தம் சுகத்தை கொடுக்கும்.

நேர்மை நிதானத்தை கொடுக்கும்.

பணிவு அந்தஸ்தைக் கொடுக்கும்.

துணிவு வளர்ச்சியைக் கொடுக்கும்.

கனிவு அன்பைக் கொடுக்கும்.

ஆர்வம் ஆற்றலைக் கொடுக்கும்.

சாதனை மகிழ்வைக் கொடுக்கும்.

கோபம் வெறுப்பைக் கொடுக்கும்.

ஆத்திரம் அழிவைக் கொடுக்கும்.

ஊக்கம் செயலைக் கொடுக்கும்.

ஏக்கம் ஏழ்மையைக் கொடுக்கும்.

நன்றி:'நிறைந்த வாழ்வு' - அல்ஹாஜ் எம்.ஏ.ப்பி.ரஹமத்துல்லாஹ்.

அன்பன்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Saturday, November 28, 2009

குண்டப்பா & மண்டப்பா (2)


குண்டப்பா & மண்டப்பா (2) நகைச்சுவை

குண்டப்பா & மண்டப்பா (1) இங்கே!

குண்டப்பா, தனது வீட்டின் சுவரில் ஆணி அடிப்பதற்காக ஏணியில் ஏறினார்.
உதவி மண்டப்பா அவர்கள். குண்டப்பா ஏணியில் ஏறியதும், மண்டப்பா
ஆணியையும சுத்தியலையும் எடுத்து குண்டப்பாவிடம் கொடுத்தார்.

மண்டப்பா கொடுத்த ஆணியை வாங்கி அப்படியே சுவரில்
வைத்து அடித்தார் குண்டப்பா. அதாவது தலைப் பக்கத்தை
சுவரில் வைத்து, கூர்முனையை சுத்தியலால் அடித்தார்
குண்டப்பா. அதனால் ஆணி சுவரில் இறங்கவில்லை.

நான்கு தடவைகள் அடித்து பார்த்துவிட்டு, "எ‌ன்ன மண்டப்பா
இ‌‌ந்த ஆணி சுவரில் இறங்க மாட்டேங்குதே" என்றார் குண்டப்பா.

வாங்கிப்பார்த்துவிட்டு, "அட இ‌து தலைகீழ் மாற்றமாக தயா‌ர்
பண்ணி இருக்கான்கள்" எ‌ன்று விளக்கினார் மண்டப்பா.

"அப்படியா! அட அப்படியில்லப்பா.இ‌து எதிர் சுவரில் அடிக்க
வேண்டிய ஆணிப்பா, அப்படித்தான் இருக்கும்" எ‌ன்று
கூறிவிட்டு அப்படியே எதிர் சுவரில் போய் ஆணி அடித்து
காலண்டரை மாட்டினார் குண்டப்பா!

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

குண்டப்பா & மண்டப்பா - 3 இங்கே!



வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Sunday, November 22, 2009

சில சிந்தனைகள் (பகுதி - 5)




சில சிந்தனைகள் (பகுதி - 5)

வாழு; வாழாதே!

சிரித்து வாழ்; பலர் சிரிக்க வாழாதே!

ஏற்றமுடன் வாழ்; சீற்றத்துடன் வாழாதே!

புகழுடன் வாழ்; இகழ்வுடன் வாழாதே!

பாசத்துடன் வாழ்; பரிகாசத்துடன் வாழாதே!

இன்பத்துடன் வாழ்; சிறுமையுடன் வாழாதே!

பண்புடன் வாழ்; பராபரியாய் வாழாதே!

விழிப்புடன் வாழ்; பழிப்புடன் வாழாதே!

உழைத்து வாழ்; எத்தி வாழாதே!

களிப்புடன் வாழ்; கெலிப்புடன் வாழாதே!

பெருக வாழ்; சிறுக வாழாதே!

இணக்கத்துடன் வாழ்; பிணக்கத்துடன் வாழாதே!

மகிழ்வுடன் வாழ்; திகிலுடன் வாழாதே!

கொடுத்து வாழ்; கெடுத்து வாழாதே!

போற்றி வாழ்; தூற்றி வாழாதே!

சிறுகக் கட்டி பெருக வாழ்; பெருகக் கட்டி சிறுக வாழாதே!

கணித்து வாழ்; தனித்து வாழாதே!

மதித்து வாழ்; மிதித்து வாழாதே!

அடக்கத்துடன் வாழ்; ஆர்ப்பரித்து வாழாதே!

அன்புடன் வாழ்; அலங்கோலத்தோடு வாழாதே!

கொள்கையுடன் வாழ்; கோலத்துடன் வாழாதே!

படித்து வாழ்; பிறரை (காக்கா) பிடித்து வாழாதே!

பண்புடன் வாழ்; வம்புடன் வாழாதே!

சீராக வாழ்; சிரிக்க வாழாதே!

**நன்றி: 'நிறைந்த வாழ்வு' - அல்ஹாஜ் எம்.ஏ.ப்பி.ரஹமத்துல்லாஹ்.

**அன்பன்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Friday, November 13, 2009

பாப்பாவின் பண்புகள் (கவிதை)



நவம்பர் 14 - ஆசியாவின் ஜோதி, ரோஜாவின் ராஜா,
நேரு மாமா அவர்களின் பிறந்த நாள்.
குழந்தைகள் தினம். குழந்தைகள் தினத்தை
முன்னிட்டு இந்தக் கவிதை.

இந்தக் கவிதை ஜூலை 1982 ரத்னபாலா
பாலர் வண்ண மாத மலரில்
பிரசுரமான எனது முதல் கவிதை.
சித்திரங்கள் ஓவியர் திரு.செல்லம் அவர்கள்.

பாப்பாவின் பண்புகள் (கவிதை)
==========================

சின்னப் பாப்பா சிரிப்பிலே
சின்ன முத்து உதிருது
அழகுப் பாப்பா அன்பிலே
அன்னை முகம் மலருது!

ஆசைப் பாப்பா அழகிலே
அன்ன நடை தெரியுது
அமுதப் பாப்பா பேச்சிலே
நெஞ்சம் கொள்ளை போகுது!

இனிய பாப்பா பண்பிலே
இதயம் நெகிழ்ச்சி அடையுது
எங்கள் பாப்பா குணத்திலே
ஏக மகிழ்ச்சி துள்ளுது!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

டிஸ்கி: இந்த ரத்னபாலா இதழை
தனது நூலக சேமிப்பிலிருந்து,
தக்க நேரத்தில் தந்துதவிய எனது
அருமை நண்பர் எழுத்தாளர்
திரு.சின்னஞ்சிறு கோபு அவர்களுக்கு
மனங்கனிந்த நன்றிகள்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Wednesday, November 11, 2009

ஹாய் மதன் பதில்


(திரு.மதன் அவர்கள் வரைந்த கார்ட்டூன் படம்)

ஹாய் மதன் பதில்

ஆனந்த விகடன் 11.12.2005 இதழில் ஹாய் மதன்
கேள்வி பதில் பகுதியில் நான் கேட்ட கேள்வியும்
அதற்கு திரு.மதன் அவர்கள் கொடுத்த பதிலும்.

கேள்வி:கைரேகை மூலம் எதிர்காலத்தைக்
கணிக்க முடிவது உண்மை என்றால், ஒருவரின்
நாணயத்தன்மையை முன் கூட்டியே கைரேகை
மூலம் கணித்து, அதையே ஷ்யூரிட்டியாக
எடுத்துக் கொண்டு, வங்கிகள் ஒருவருக்குக்
கடன் வழங்க முன் வருமா?

ஹாய் மதன் பதில்: கைரேகையை யார் பார்த்துக்
கணிப்பது? வங்கி மேனேஜரா? அல்லது,
ஒவ்வொரு வங்கிக் கிளையிலும் 'கைரேகை நிபுணர்'
ஒருவரை மேனேஜர் தன் பக்கத்திலேயே
வைத்துக்கொள்ள வேண்டும். சரி, கடன்
வாங்கியவர் ஓடி விட்டால், கைரேகை
நிபுணர்தான் பணம் கட்ட வேண்டும் என்றால்,
ஓ.கே.வா?

(நன்றி: ஆனந்த விகடன்)

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Sunday, November 8, 2009

சில சிந்தனைகள் (பகுதி - 4)



சில சிந்தனைகள் (பகுதி - 4)

1. ஆணவம் வெற்றி வாய்ப்பைக் கெடுக்கும்.

2. இளமைக் கால உழைப்பு; அந்திமக் கால சுகம்.

3. ஆர்ப்பாட்டம், மறைமுக விரோதிகளை உருவாக்கும்.

4. நன்றியைப் பாராட்டுபவன், ஒருக்காலமும் நசிந்து போக மாட்டான்.

5. மிதமான வேலை, பதமாக முடியும்.

6. தற்பெருமை, உழைப்பைக் கெடுத்து, உயர்வைத் தடுக்கும்.

7. நேரத்தைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், முயற்சியைத் துரிதப் படுத்த முடியும்.

8. தொண்டுள்ளம் கொண்டவன், பன்னெடுங்காலம் வாழ்வான்.

9. நயவஞ்சகனின் சகவாசம், நாசத்தின் தொடக்கம்.

10. உயர்ந்த வாழ்வின் திறவுகோல், உழைப்பாகும்.

11. புழங்காத பணமும் இறைக்காத கிணறும் பாழ்படும்.

12. பிழைப்பதற்கு வழி, உழைப்பில் இருக்கிறது.

13. செல்லம் சீரழிக்கும்; அன்பு பண்பை வளர்க்கும்.

14. தாராளமாய் இருப்பவன், ஏராளமாய் சம்பாதிப்பான், நண்பர்களை.

15. மேகம் திரண்டால் மழை; சோகம் சூழ்ந்தால் கண்ணீர்.

**நன்றி: 'சிந்தனையின் தேன் துளிகள்'-அல்ஹாஜ் எம்.ஏ.ப்பீ.ரஹமத்துல்லாஹ்.

**அன்பன்:அ..முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Thursday, November 5, 2009

காமெடி குடும்பம் (நகைச்சுவை)



காமெடி குடும்பம் (நகைச்சுவை)


ஓர் அம்மாவும் ஒரு மகனும் இருந்தார்கள். அந்த அம்மா தன் மகனுக்கு நல்ல குணவதியாகப் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள்.

ஒரு சில மாதங்களுக்குப் பிறகு... ஒருநாள்.

அந்த மருமகள் சமையல் செய்து வைத்துவிட்டு சில பொருட்கள் வாங்கி வரலாம் என்று கடைவீதி வரைக்கும் சென்றிருந்தாள். அப்போது அந்த அம்மாள் சமையலறைக்குச் சென்று, சிறு தட்டில் சிறிது சோறும் அதற்கேற்ற குழம்பும் அதன்மேல் ஊற்றி எடுத்துக் கொண்டு,
சோறு எடுத்தது தெரியாமலிருக்க, அதை சமமாகப் பரப்பி வைத்துவிட்டு, 'மருமகள் வருவதற்குள் சாப்பிட்டு விடுவோம்' என்று நினைத்துக் கொண்டு ஓர் அலமாரியின் பின்புறமாக மறைவாகச் சென்று சாப்பிட ஆரம்பித்தார்.

சற்று நேரத்தில் கடைத் தெருவிலிருந்து திரும்பி வந்த மருமகள் பொருட்களை வைத்துவிட்டு தன் மாமியார் எங்கே என்று தேடினாள். மாமியாரைக் காணாததால், 'எங்காவது பக்கத்து வீட்டுக்கு வம்பு பேசப் போயிருப்பார்கள்' என்று முடிவு செய்து, அவளும் ஒரு தட்டில் சோறும் குழம்பும் எடுத்துக் கொண்டு, 'மாமியார் வருவதற்குள் அவருக்குக் தெரியாமல் சாப்பிட்டு விடுவோம்' என்ற எண்ணத்தோடு, மாமியார்
மறைந்திருந்த அதே அலமாரியின் பின்புறமாக மறைவைத்தேடிச் சென்றாள்.

சென்றவள் ஏற்கெனவே அங்கே மாமியார் இருப்பதைப் பார்த்து பேயறைந்ததைப்போல் விழிக்க ஆரம்பித்து, பேச்சு வராமல் தடுமாறினாள்.

மருமகளைப் பார்த்த மாமியாரும் பேந்த, பேந்த விழித்தாலும் சற்று சுதாரித்துக் கொண்டு, மருமகளிடம், "என்னடியம்மா எடுத்து வந்தாய்?"
என்று கேட்டார்கள்.

மருமகளும் தெளிவு பெற்றவளாய், "உங்களுக்கு மறுசோறு எடுத்து வந்தேன் அத்தை!" என்று பதில் சொன்னாள்.

அதற்கு, "என்னைப்போல மாமியாரும் உன்னைப்போல மருமகளும் இருந்தால் இந்த வீடு நல்லா உருப்பட்டுடும்" என்றாராம்.

காமெடியான குடும்பம்தானே சார்?

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Tuesday, November 3, 2009

சில சிந்தனைகள் (பகுதி - 3)




சில சிந்தனைகள் (பகுதி - 3)
வெற்றிக்கான எளிய வழிகள்!




1. ஒன்றும் இல்லாதவனைக் கூட கோடீஸ்வரன் ஆக்குவது பொருள்தான். எனவே
பணத்தைச் சம்பாதியுங்கள். கஷ்டப்பட்டு முதலில் ஒரு ரூபாய் சம்பாதித்து விட்டால்,
இரண்டாவது ஒரு ரூபாய் தானே வந்து சேரும். பகைவரை வெல்லக் கூடியது,
பொருள்தான். பொருள் இருந்தால், அறம் செய்யலாம்; இன்பம் அனுபவிக்கலாம்.
ஆகவே, எந்தப்பாடு பட்டாவது பொருள் தேட முயற்சி செய்யுங்கள். பொருள்தான்
உங்களைச் செழிக்க வைக்கும் கேணி! பொருள்தான் உங்கள் வாழ்க்கைக்குத் தோணி!
பொருள்தான் உங்களை உச்சிக்கு உயர்த்தும் ஏணி! பொருளைப் போற்றுங்கள்!
போற்றுகிறவரிடம்தான் பொருள் சேரும்.


2. பொருளைச் சேர்க்கத் திட்டமிடுங்கள். திட்டமிட்டு செயலாற்றுவதே வெற்றியின்
அடிப்படை. முடிந்த இடத்தில் எல்லாம் முயற்சி செய்யுங்கள். பல வகைகளிலும்
சிந்தித்துப் பாருங்கள். ஆராய்ந்து தெளிந்து, பின் ஒரு முயற்சியில் இறங்குங்கள்.
'இது சரியான நேரம் அல்ல' என்றால், ஆறப் போடுங்கள். சூடாக செய்வது நல்லது
என்றால், காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுங்கள்.


3. செயல்திறன் என்பது, மன ஊக்கம்தான். மனதில் உறுதியிருந்தால், வெற்றி நிச்சயம்.
துணிவுடனும் விழிப்புடனும் இருந்தால், எந்த இடையூறையும் வென்றுவிட முடியும். ஆனால்,
வீண் தம்பட்டம் அடிப்பது, கேலிக்கு இடமாகிவிடும். இடுக்கண் வந்தாலும், இழிந்த
செயல்களை செய்யக் கூடாது. வஞ்சத்தில் பொருளீட்ட முயற்சிப்பது, பச்சை மண்
பானையில் தண்ணீர் நிரப்புவதைப் போன்றது. பானையும் உடைந்து போகும்;
தண்ணீரும் ஓடிவிடும். எனவே, செய்வதைத் தூய்மையாகச் செய்யுங்கள்.


4. விசயம் தெரிந்தவர்களுடன் கலந்து ஆலோசித்துச் செய்வது, இரட்டை இலாபம்
தரும். ஒரு யானையை வைத்து அடுத்த யானையைப் பிடிப்பார்கள். அதுபோல,
ஒரு வேலையச் செய்யும்போதே, முடிந்தால் அடுத்த வேலையையும் சேர்த்துச்
செய்யுங்கள். செலவு, வரவு, நமக்கு மிச்சப்படுவது என்று கணக்குப் பார்த்து,
எதையும் செய்யுங்கள். வாரி குவித்து விடலாம் என்று ஆசைப்பட்டு, கையில்
இருப்பதையும் இழந்து விடாதீர்கள்.


5. கடுமையாக் முயற்சி செய்தால், விதியைக்கூட வென்றுவிட முடியும். முயற்சிக்கு
முட்டுக்கட்டையாக இருப்பது சோம்பல். சோம்பல் குடியை கெடுத்து விடும். சோம்பேறி
கெட்டு அழிவான். அவனுக்கு முன் அவனது தொழில் கெடும். சோம்பல், மறதி,
தூக்கம், கால தாமதம் இந்த நான்கும் நமது வெற்றியைக் கெடுக்கக் கூடியவை.


6. நமது எண்ணங்கள் எவ்வளவு சிறப்பாக இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு நமது
செயல்களும் சிறப்பாக இருக்கும். எனவே, கோடீசுவரன் ஆகிவிட்டது போலக் கனவு
காணுங்கள்.மாளிகையில் வாழ்வது போல, படகுக் காரில் பவனி செல்வது போல
ஒவ்வொரு இரவும் கனவு காணுங்கள்! அந்தக் கனவு கைகூடக் கடுமையாக
முயற்சி செய்யுங்கள். ஊக்கத்துடன் முயற்சி செய்தால், நிச்சயம் கை கூடும்.


7. காலம் அறிந்து செய்தால், எந்த முயற்சியும் வெற்றி பெறும். குளக்கரையில் நின்று
கொண்டிருக்கும் கொக்கு, மீன் வந்ததும், 'லபக்' என்று கொத்திக் கொள்ளும். அது போல,
காலத்தை எதிர்பார்த்து இருங்கள். காலம் வரும்போது, தவறவிடாமல், வேலையை
முடியுங்கள். காலம் வரும் வரை காத்திருப்பதைத் தோல்வி என்று நினைக்காதீர்கள்.
ஆட்டுச் சண்டை நடக்கும்போது, கிடா பின் வாங்கித் தாக்கும். புலி பதுங்கித் தாக்கும்.


8. நமது திறமை, முதலீடு போன்ற வலிமைகளை உணர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.
ஒரு மரத்தின் கிளைகளில் ஏறி, உச்சிக்குப் போய்விட்டோம். அதற்கு மேல் ஏறினால்
கிளை முறிந்து, நாம் கீழே விழுவோம்! அகலக் கால் வைக்கக் கூடாது! சிறுகக் கட்டிப்
பெருக வாழ்க!


9. தொழில், வியாபாரத்தில் வெற்றி பெறச் சொல்வன்மை மிக முக்கியம். சாமர்த்தியமாகப்
பேசத் தெரிய வேண்டும். அளவோடு பேச வேண்டும். சொல்லின் திறன் தெரிந்து நாம்
பயன்படுத்த வேண்டும். கேட்பவர் விரும்பும்படி பேச வேண்டும். அவருக்குப் பிடிக்காததைப்
பேசக் கூடாது. அவர் சொல்லுவதையும் நாம் காது கொடுத்துக் கேட்க வேண்டும்.வாய்ச்
சொல்லால் கெட்டவர்களும் உண்டு. எனவே, அவசரப்பட்டு வாயைத் திறக்கக் கூடாது.


10. பேச்சில் நாநயம் போல, நாணயமும் முக்கியம். இனிக்க இனிக்கப் பேசி,
ஏமாற்றக் கூடாது. உண்மையாகப் பேசவேண்டும். 'நாம் சொன்னது பொய்' என்று
தெரிந்தால் நாளை யாரும் நம்மை நம்ப மாட்டார்கள். எத்தனை நல்லவனாக, வல்லவனாக
இருந்தாலும் பொய்யன் என்று பெயர் வாங்கி விட்டால், எந்தப் பெருமையும் கிடைக்காது.


நன்றி: 'வெற்றிப்படிகள்' - முனைவர் அ.அய்யூப்


அன்பன்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.




வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Sunday, November 1, 2009

'இன்று - நண்பா' (கவிதை)

Click for Options


இந்தக் கவிதையை நான் எழுதியது 1991-ஆம் ஆண்டில். சுபாவின் 'சூப்பர் நாவல்' இதழ் போட்டியில் பரிசு பெற்று ஜூன் 1991 இதழில் வெளிவந்தது இந்தக் கவிதை.


'இன்று - நண்பா' கவிதை.


நீ நினைக்க வேண்டாம்;

செய்து முடித்து விடு.

ஒரு கொள்கை வை;

ஒரு சபதம் எடு.

தன்னம்பிக்கையுடன் துவங்கு;

உறுதியுடன் உழை.

இலட்சியமே ஓய்வு;

ஊக்கமே உணவு.

செயல்தான் துவக்கம்;

வெற்றியே முடிவு.

உன் பிரகாச முகம் பார்த்து

அந்த சூரியன் கூட

கொஞ்சம் சுருங்கிவிட்டது.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Friday, October 30, 2009

சில சிந்தனைகள் (பகுதி - 2)




16. அதிகமாய்ச் சாப்பிட்டால் உணவும் வெறுத்துப் போய்விடும்.


17. பணக்காரனாய் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியதில்லை; தேவைகளைக்
குறைத்தாலே போதும்.


18. இன்று நாம் செய்த நன்மை, நாளை நமக்குக் கிடைக்கப் போகும் இன்பமாகும்.


19. அதிகம் பேசினால் அதிகத் தவறு செய்ய நேரிடும்.


20. ஒவ்வொரு சாலைக்கும் இரு திசைகள் உண்டு.
கவனம் இருந்தால், வெற்றி தரும்
சாலையில் தொடர்ந்து பயணம் செய்ய முடியும்.


21. உண்மையான உழைப்பில்தான் வாழ்க்கை இருக்கிறது.


22. தானத்தை நிதானமாய் வழங்கிக் கொண்டே இருக்கும் கைக்குச் சலிப்பே இராது.


23. பறவைகளுக்குப் பயந்து விதைக்காமல் இருக்க வேண்டாம்.


24. எப்போதும் சலிப்பில்லாமல் செயல்படுபவன் வெற்றி அடைவான்.


25. கெட்ட பழக்கம் முதலில் வழிப்போக்கனைப் போல வரும்; பிறகு விருந்தாளியாய் மாறி,
முடிவில் முதலாளியாகி விடும்.


26. மறந்து விடாதீர்கள், உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் உங்கள் சரித்திரத்தின் ஒரு பக்கமாகும்.


27. அடகு வைப்பதை விட விற்று விடுவதே மேல்.


28. அதிக நேரம் தூங்கும் சோம்பேறியை எழுப்ப சூரியன் இரு முறை உதிப்பதில்லை.


29. ஓர் ஆற்றைப் படகில் கடப்பதை விட நீந்திக் கடப்பது நல்லது. படகோட்டியைத்
தேட வேண்டியிருக்காது.


30. குதூகலமாக ஒரு வேலையைச் செய்யும் போது, வெற்றி கிடைக்காமல் போவதற்கு
வாய்ப்பே இல்லை.


**நன்றி: 'சத்தான வாழ்வுக்கு முத்தான சிந்தனைகள்' - முனைவர் அ.அய்யூப்.


அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Thursday, October 29, 2009

முல்லா ஏன் அழுதார்?




முல்லா ஏன் அழுதார்?


முல்லா ஒரு நாள் அழுதுகொண்டிருந்தார்.


அவரது நண்பர் கேட்டார்: "முல்லா, ஏன் அழுகிறாய்?"
முல்லா சொன்னார்: "சென்ற மாதம் எனது பாட்டி ஐந்து இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்."


நண்பர் கேட்டார்: "அட மகிழ்ச்சியான செய்திதானே, ஏன் அழுகிறாய்?"
முல்லா சொன்னார்: " பதினைந்து நாட்களுக்குமுன் எனது பெரியப்பா இருபது இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்."


நண்பர் கேட்டார்: "மகிழ்ச்சியான செய்தி! அதற்காக ஏன் அழுகிறாய்?"
முல்லா சொன்னார்: "சென்ற வாரம் எனக்கு 30 இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவத்துவிட்டு எனது அத்தை இறந்துவிட்டார்."


நண்பர் கேட்டார்: "சந்தோஷப்படுவதைவிட்டு ஏன் அழுகிறாய்?"
முல்லா சொன்னார்: "மூன்று நாட்களுக்குமுன் எனது தாத்தா இறக்கும்முன் 50 இலட்ச ரூபாயை எனக்கு எழுதிவைத்துவிட்டார்."


நண்பர் கேட்டார்: "கொண்டாடாமல் ஏனப்பா அழுகிறாய்?"
முல்லா சொன்னார்: "இனிமேல் சொத்தை எழுதிவைத்துவிட்டு இறந்துபோறதுக்கு  எனக்கு பணக்கார சொந்தக்காரர்கள் இல்லையே, அதனாலதான் அழுதுகிட்டு இருக்கிறேன்"
கேட்ட நண்பர் மயக்கம்போட்டு கீழே விழுந்துவிட்டார்.


-சிரி(ப்புக் கலை)ஞர் மதன்பாபு சிரித்துக்கொண்டே ஆதித்யா ட்டீ.வி.யில் சொல்லிய கதை. (நன்றி)


:- அ.முஹம்மது நிஜாமுத்தீன்.





வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Tuesday, October 27, 2009

சில சிந்தனைகள் (பகுதி - 1)







1. கொஞ்சம் பசி இருக்கும்போதே சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள்.


2. பெரும் பலமுடையவன் அதை மெதுவாக உபயோகித்து வெற்றி பெற வேண்டும்.


3. மூட நம்பிக்கை மனதை விஷமாக்குகிறது.


4. சோம்பேறி மூச்சு விடுகிறான்; ஆனால், வாழவில்லை.


5. சிக்கனம் இருந்தால் மற்ற பண்புகள் அனைத்தும் எளிதில் வந்து விடும்.


6. சீக்கிரமாய் கொடுப்பவன் இரட்டிப்பாய் கொடுத்தவனாகிறான்.


7. உறுதியின்மையால் நல்ல வாய்ப்புகள் பல நழுவி விடுகின்றன. எப்போதும் மன உறுதியுடன் இருங்கள்.


8. முயற்சி செய்கிற வரையில் எவருக்கும் தம் திறமை பற்றி ஒன்றும் தெரியாது.


9. நீங்கள் அமைதியாய் வாழ விரும்பினால் கேளுங்கள்; பாருங்கள்; மௌனமாயிருங்கள்.


10. உங்களுக்குத் தேவையானவற்றை எல்லாம் வாங்க
வேண்டாம். எது இல்லாமல் வாழ முடியாதோ,
அதை மட்டும் வாங்கினால் போதும்.


11. பொய் எப்போதும் எச்சரிக்கையாய் ஆயுதங்களுடன் இருந்தாலும், முடிவில் தோல்வி அதற்குத்தான்.


12. எது நன்மை என்பதை அதை இழந்தால்தான் தெரியும்.


13. அறிவுள்ளவன் மூடனுக்கும் காளை மாட்டுக்கும் வழி விட்டு ஒதுங்கிச் செல்வான்.


14. சில நிமிடங்கள் மௌனமாயிருங்கள்; கோபம் தணிந்து விடும்.


15. கண்ணியமானவன் என்றால், அவன் யாருக்கும் துன்பம் ஏற்படுத்தாதவன் என்று பொருள்.


**நன்றி: 'சத்தான வாழ்வுக்கு முத்தான சிந்தனைகள்' - முனைவர் அ.அய்யூப்.


**அன்பன்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Sunday, October 25, 2009

சர்தார்ஜியா? சப்பாத்திஜியா?




சர்தார்ஜியா? சப்பாத்திஜியா?

நமது தமிழ்நாட்டுக்காரர் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்
ஏற வந்தார். கொண்டுவந்த பெட்டியின் கணம் தாங்காமல்
அவைகளை ரயிலில் ஏற்ற சிரமப்பட்டார். அப்போது
அங்கு நின்றுகொண்டிருந்த சர்தார்ஜி, அவைகளை ஒரு
கையால் அனாயாசமாகத் தூக்கி ரயில் கம்பார்ட்மெண்ட்
உள்ளே எடுத்து வைத்தார்.

நன்றி சொன்னார் தமிழர்.

அதற்கு, "சப்பாத்தி சாப்பிடு. உடம்பு பலமாயிருக்கும்;
கை நல்லா வேலைசெய்யும்" என்று சொல்லி, கைகளை
தோளுக்குமேல் தூக்கிக்காட்டி பெருமைப்பட்டுக்
கொண்டார் சர்தார்ஜி. (சர்தார்ஜிக்கு தமிழ் தெரியும்
போலிருக்கிறது.)

உள்ளே சென்று பெட்டிகளை மேலே லக்கேஜ் கேபினில்
வைக்க சிரமத்துடன் முற்பட்டார் தமிழர்.

அப்போதும் சர்தார்ஜியே அவற்றை லக்கேஜ் கேபினில்
வைத்துவிட்டு, கைகளை தோளுக்குமேலாகத் தூக்கி,
"சப்பாத்தி சாப்பிடு. உடம்பு பலமாயிருக்கும்;
கை நல்லா வேலைசெய்யும்" என்று சொன்னார்.

ஜன்னல் ஷட்டர், கன்ணாடியை மேலேதூக்க
சிரமப்பட்டபோதும் சர்தார்ஜியே தூக்கிவிட்டு,
"சப்பாத்தி சாப்பிடு. உடம்பு பலமாயிருக்கும்;
கை நல்லா வேலை செய்யும்" என்று சொன்னார்.

தமிழர் எரிச்சலாகிவிட்டாலும் அமைதியாய்
இருந்துவிட்டார். ரயில் புறப்பட்டுவிட்டது.
இருவரும் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரம் சென்றபின்னர் தமிழர் எழுந்து ரயிலில்
உள்ள அபாயச் சங்கிலியை கையால்
பிடித்துக்கொண்டு, கஷ்டப்படுவதுபோல்
முகத்தை வைத்துக்கொண்டு, இழுப்பதுபோல்
பாவனை செய்தார்.

உடனே சர்தார்ஜி அவசரமாக எழுந்து சங்கிலியை
பலமாக இழுத்தார்; ரயில் நின்றுவிட்டது. ரயில்வே
அதிகாரிகள் வந்துவிட்டார்கள். தமிழர் தமக்கு
எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார்.

தேவையின்றி சங்கிலியை இழுத்து ரயிலை
நிறுத்தியதற்காக சர்தார்ஜியிடம் அபராதத்
தொகையை வசூலித்துக்கொண்டு சென்றார்கள்
அதிகாரிகள். அனைத்தையும் அமைதியாகப்
பார்த்துக்கொண்டிருந்துவிட்டு தமிழர் சொன்னார்:

"அரிசிச் சோறு சாப்பிடு. மூளை பலமாகும்; அறிவு நல்லா
வேலைசெய்யும்."

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Friday, October 23, 2009

காமனுக்கு காமன் (பாடல்)



காமனுக்கு காமன் (பாடல்)


இந்தப் பாடல் கமல் இரசிகர்களுக்கு
ரொம்பப் பிடிக்கும். ஏனென்றால் இந்தப்
பாடலுக்கு ஆடியவர் கமல்தான்.
படம்: உருவங்கள் மாறுவதில்லை.

இந்தப் பாடலின் கருத்துக்களை
அனைவரும் அறிந்துகொள்ளவே
இந்த இடுகை.
பாடியவர்: திரு.எஸ்.ப்பீ.பாலசுப்ரமணியன்.

இதோ அந்தப் பாடல்:

காமனுக்குக் காமன் மாமனுக்கு மாமன்
சாத்திரங்கள் சொல்ல வந்து நிற்கும் தேவன்
கனவில் நினைவில் எதிலும் இவன்...
கனவில் நினைவில் எதிலும் இவன்
கவிதை அழகின் இரசிகன் இவன்
காலை மாலை இல்லை நான் கொஞ்ச
காமனுக்குக் காமன்...............

ஆடலோடு பாடலும் மோகம் கொண்ட கண்களும்
காதல் கொண்ட ஜோடிகள் மேடைமீது ஆடவும்
ஆடலோடு பாடலும் மோகம் கொண்ட கண்களும்
காதல் கொண்ட ஜோடிகள் மேடைமீது ஆடவும்
தைதைதை தாளங்கள் தட்டட்டும்
தோம்தோம்தோம் மேளங்கள் கொட்டட்டும்
தைதைதை தாளங்கள் தட்டட்டும்
தோம்தோம்தோம் மேளங்கள் கொட்டட்டும்
தாம்தக தீம்தக தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
தாம்தக தீம்தக தரிகிட தரிகிட தரிகிட தோம்
காமனுக்குக் காமன்....

ஏண்டி பப்படா எந்துக்கடி அவலம்?
ஏண்டி பப்படா எந்துக்கடி அவலம்?
இந்த சாமிகிட்ட கத்துக்கணும் சகலம்.
ஏண்டி பப்படா எந்துக்கடி அவலம்?
இந்த சாமிகிட்ட கத்துக்கணும் சகலம்.
அம்மாடி தாங்காதடி - நீ
தந்தாலும் தீராதடி
அம்மாடி தாங்காதடி - நீ
தந்தாலும் தீராதடி

சவாலங்கடி கிரிகிரி
சைதாப்பேட்டை வடகறி
உட்டாம்பாரு ஜாங்கிரி
சோன்பப்டி நைனா மைனா

சவாலங்காடி கிரிகிரிகிரி
சைதாப்பேட்டை வடகறிகறி
உட்டாம்பாரு ஜாங்கிரிகிரி
சோன்பப்டி நைனா மைனா

ஏ... சவாலங்கிடி,
ஏ... சைதாப்பேட்டை,
ஏ... உட்டாம்பாரு,
ஏ... சோன்பப்டி

தைதைதை தகிட தகிட
தைதைதை தைதோம்
தைதைதை தகிட தகிட
தைதைதை தைதோம்தொம்.

இந்தப் பாடலின் கருத்துக்கள் பற்றிய
உங்கள் அபிப்ராயங்களை எழுதுங்கள்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Wednesday, October 21, 2009

நகைச்சுவை இரசித்தவை - 7





நகைச்சுவை இரசித்தவை - 7




வீட்டு உரிமையாளர்: "உங்களுக்கு
கல்யாணம் ஆயிடுச்சா?"

வாடகை வீடு பார்ப்பவர்: "இன்னும்
இல்ல சார்"

வீ.உரிமையாளர்: இன்னும் ஆகலையா?"

வா.வீ.பார்ப்பவர்: "கலியாணம் ஆயிடுச்சி
சார்"

வீ.உரிமையாளர்: "என்ன சார் மாத்தி, மாத்தி
சொல்றீங்க?"

வா.வீ.பார்ப்பவர்: "சார், எனக்கு ரொம்ப
ஞாபக சக்திங்க. எனக்கு சின்ன வயசில
கலியாணம் ஆகலை இல்லையா, அந்த
ஞாபகத்திலயே சொல்லிட்டேன்"

(நன்றி: எஸ்.வி.சேகர் நாடகம்)
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

முதல் வக்கீல்: நான் ஒரு புனை பெயர்
வச்சிக்கிட்டிருக்கேன்.

மற்ற வக்கீல்: என்னன்னு?

முதல் வக்கீல்: "மியாவ்"

மற்ற வக்கீல்: இது புனை பெயர் மாதிரி
இல்லையே, பூனை பெயர் மாதிரில்ல
இருக்கு?

(நன்றி : எஸ்.வி.சேகர் நாடகம்)
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஒருவர்: எங்க ஊர்ல ரெண்டு கட்சிக்காரங்களுக்கும்
சண்டை, அடிதடி!

மற்றவர்: அப்புறம் என்ன ஆச்சு?

முதலாமவர்: போலீஸ் வந்து எல்லோருக்கும்
தடியடி!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Tuesday, October 20, 2009

பேரைச் சொல்லவா?




பேரைச் சொல்லவா?



அந்தப் பள்ளிக்கு ஓர் ஆசிரியர்
புதிதாய் மாறுதலாகி வந்தார்.
முதல் நாள் மாணவர்களிடம்
பெயர்களை விசாரித்தார்.

முதலில் ஒரு மாணவனிடம்,
"உன் பெயர் என்ன?" என்று
கேட்டார்.

அதற்கு அந்த மாணவன்,
"மாரி" என்றான்.

"உன் அப்பா பெயர் என்ன?" என்று
ஆசிரியர் கேட்டார்.

"மாரியப்பன்" என்றான் மாணவன்.
ஆசிரியருக்கு ஆச்சரியம்.

அடுத்த மாணவனிடம், "உன் பெயர்
என்ன?" என்று கேட்டார்.

"ராஜா" என்றான் மாணவன்.

"உன் அப்பா பெயர் என்ன?" என்று
கேட்டார் ஆசிரியர்.
"ராஜாஃபாதர்" என்றான் மாணவன்.
ஆசிரியருக்கு மிகுந்த அதிர்ச்சியாகி
விட்டது.

மூன்றாவதாக மாணவனிடம் "உன்
அப்பா பெயர் என்ன?" என்று மாற்றிக்
கேட்டார். "அப்பா பெயர் ஜான்"
என்றான் மாணவன்.

"உன் பெயர் என்ன?" என்று கேட்டார்
ஆசிரியர். "ஜான்சன்" என்றான் மாணவன்.

அந்த ஆசிரியர் பிறகு மாணவர்களிடம்
பெயர் கேட்பதையே விட்டு விட்டார்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Friday, October 16, 2009

தீபாவளியும் பாதுகாப்பும்!




தீபாவளியும் பாதுகாப்பும்!

பட்டாசுக்கள் கொளுத்தும்போது காயம்
ஏற்பட்டு அதனால் தீபாவளியின் மகிழ்ச்சியை
இழக்கச் செய்யலாமா?

தீபாவளி அன்று பட்டாசு கொளுத்தும்போது
கடை பிடித்திட வேண்டிய சில பாதுகாப்பு
முறைகள் பற்றி 'நம்ம ஊரு செய்தி'
நவம்பர் 2002 இதழில் சில குறிப்புக்கள்
படித்தேன். இந்தி ஆசிரியர் திரு.ஆர்.
சுவாமிநாதன் தொகுத்தவை. அவை:

*பட்டாசுக்களை ஒரே இடத்தில் அதிகமாக
குவித்து வைக்கக்கூடாது.

*குழந்தைகள் எடுக்கும் வகையில்
பட்டாசுக்களை வைக்ககூடாது.

*உற்பத்தியாளர் பெயர் அச்சிடப்படாத
பட்டாசுக்கள் உள்ள பெட்டியை
வாங்கக்கூடாது.

*பட்டாசுக்கள் வெடிக்கும்போது தொளதொள
மற்றும் எளிதில் தீப்பற்றும் உடைகள்
அணியக்கூடாது.

*சரவெடியை நெருக்கமான தெருக்களிலோ,
மாடி குடியிருப்புக்களின் மத்தியிலோ
வெடிக்கக்கூடாது.

*கைக்குழந்தைகள், கர்ப்பிணிகள்,
முதியவர்கள், நோயாளிகளுக்கு இடையூறு
செய்யாமல் பட்டாசுக்கள் வெடிக்க
வேண்டும்.

*கொளுத்திய பட்டாசுக்களை ஒருவரை
நோக்கிக் காட்டுவதோ, தெருவில்
எறிவதோ கூடாது.

*தீக்குச்சிகள் மூலம் வெடிகள்
கொளுத்தக் கூடாது.

*பட்டாசு கொளுத்தும்போது கவனத்தை
வேறு விஷயங்களில் செலுத்தாதீர்கள்.
தீக்காயம் ஏற்பட்டால் குளிர்ந்த நீரையோ
அல்லது ஐஸ் கட்டிகளையோ வைத்து
முதல் உதவி செய்யவேண்டும்.

இந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை
கவனத்தில் கொண்டு சிறப்புடன் தீபாவளி
கொண்டாடுங்கள். குழந்தைகள் பட்டாசு
கொளுத்தும்போது பெரியவர்கள்
மேற்பார்வை செய்துகொள்ளுங்கள்.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Monday, October 12, 2009

ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் (நகைச்சுவை)



ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர்
================================
ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர் ஹிட்லர்.
'யூதர்கள்தான் தம் நாட்டைச் சுரண்டியவர்கள்; அவர்களால்தான்
ஜெர்மானியர்கள் வறுமையில் வாடுகின்றனர்' என்ற எண்ணம்
கொண்டிருந்தார் அவர். ஆயிரக்கணக்கான யூத இன
மக்களை விஷவாயு அறைகளில் அடைத்து மிகக்
கோரமாகக் கொன்றவர்.

அவருக்கு ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை உண்டு. ஒரு
சமயம் பெரிய ஜோதிட வல்லுனர் ஒருவரை
அழைத்து வரச் சொன்னார் ஹிட்லர்.
அவரிடம், "என் ஆயுட்காலம் எப்போது முடிகிறது? நான்
எப்போது சாவேன்?" எனக் கேட்டார். ஹிட்லரின்
ஜாதகத்தை மிகத் தீவிரமாக ஆராய்ந்த ஜோதிடர்,
"யூதர்களின் பண்டிகையன்று நீங்கள் இறப்பீர்கள்.."
என்று சொன்னார்.

ஜோதிடரின் பதிலைக் கேட்ட ஹிட்லர்,
"யூதர்களுக்குத்தான் வருடம் முழுதும் பல
பண்டிகைகள் வருகின்றனவே... எந்தப்
பண்டிகையின்போது நான் இறப்பேன் என்பதைச்
சரியாகச் சொல்லுங்கள்" என்றார்.

"நீங்கள் என்றைக்கு இறக்கிறீர்களோ, அந்த நாள்
யூதர்களின் பண்டிகை நாளாக நிச்சயம்
கொண்டாடப்படும்..." என்றார் ஜோதிடர்.

அதன் பிறகு, அந்த ஜோதிடரின் கதி என்னவாயிற்றோ???

நன்றி: திரு.அந்துமணி - வாரமலர்.
மூலம் ஆங்கில நூல்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

'ஆசப்பட்ட எல்லாத்தையும்' (பாடல்)

நாட்டுப்புறப் பாடகர் சின்னப்பொண்ணு அவர்கள் எழுதி
பலகாலமாக மேடைகளில் பாடிவரும் பாடல். பின்னாளில்
திரைப்படத்திலும் இது இடம்பெற்றது. திரையில்
இப்பாடலைப் பாடியவர் பாடகர் திரு.ஹரிஹரன்.

ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்,
அம்மாவ வாங்க முடியமா- நீயும்
அம்மாவ வாங்க முடியுமா?
ஆயிரம் உறவு உன்ன தேடிவந்தே நின்னாலும்
தாய்போல காணமுடியுமா- நீயும்
தாய்போல காணமுடியுமா?
உனக்கும் எனக்கும் அம்மா ஒருத்திதானடா- தெய்வம்
உலகத்திலே இருக்குதுன்னா தாயடா
ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா- நீயும்
அம்மாவ வாங்க முடியுமா?

எளவட்டமானாலும் எண்ண தேச்சி குளிக்கவப்பா
எளவட்டமானாலும் எண்ண தேச்சி குளிக்கவப்பா
ஏமாத்து புள்ளய நம்பி இதயத்த பறிகொடுப்பா
ஏமாத்து புள்ளய நம்பி இதயத்த பறிகொடுப்பா
கட்டெறும்பு உன்ன கடிச்சா கத்திக்கிட்டு அவ முழிப்பா
கட்டெறும்பு உன்ன கடிச்சா கத்திக்கிட்டு அவ முழிப்பா
பெத்தவளுக்கே கைமாறுதான் புள்ள என்ன கொடுத்துவப்பான்?
பெத்தவ்ளுக்கே கைமாறுதான் புள்ள என்ன கொடுத்துவப்பான்?
உனக்கும் எனக்கும் அம்மா ஒருத்திதானடா- தெய்வம்
உலகத்திலே இருக்குதுன்னா தாயடா
ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா- நீயும்
அம்மாவ வாங்க முடியுமா?

பட்டினியாக் கிடந்தாலும் பிள்ளக்கி பால் கொடுப்பா
பட்டினியாக் கிடந்தாலும் பிள்ளக்கி பால் கொடுப்பா
பால் குடிக்கும் பிள்ளைமுகம் பாத்து பசி மறப்பா
பால் குடிக்கும் பிள்ளைமுகம் பாத்து பசி மறப்பா
நெஞ்சிலே நடக்க வப்பா நெலாவப் பிடிக்க வப்பா
நெஞ்சிலே நடக்க வப்பா நெலாவப் பிடிக்க வப்பா
பிஞ்சி விரலில் நகம் கடிப்பா பேசச் சொல்லி ரசிச்சிருப்பா
பிஞ்சி விரலில் நகம் கடிப்பா பேசச் சொல்லி ரசிச்சிருப்பா
உனக்கும் எனக்கும் அம்மா ஒருத்திதானடா- தெய்வம்
உலகத்திலே இருக்குதுன்னா தாயடா
ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா- நீயும்
அம்மாவ வாங்க முடியுமா?


அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Wednesday, October 7, 2009

நகைச்சுவை; இரசித்தவை - 6






ஆசிரியர்: கோபால், அஞ்சும் மூனும்
எவ்வளவு?

கோபால்: ம்..ம்.. வந்து.. ஏழு சார்.

ஆசிரியர்: என்ன ஏழா? எப்படி
கூட்டினாலும் வராதேடா?

கோபால்: தப்பாக் கூட்டினால் வரும்
சார்!!!

#######################################

தாத்தா: டேய் கோ..வாலு! என்னோட
கண்ணாடியக் காணோம்; கண்ணு
தெரிய மாட்டேங்குது. நீ கொஞ்சம்
தேடி எடுத்துக் கொடுடா.

கோபால்: போ தாத்தா, எனக்கு
வேலை இருக்கு. நீயே கண்ணாடியப்
போட்டுக்கிட்டு தேடி எடுத்துக்கோ!

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தலைமையாசிரியர்: (பள்ளி ஆண்டு
விழாவில்) : பள்ளிக்கு தினமும்
லேட்டா வந்தாலும், முன் சொன்ன
காரணத்தையே மறுமுறையும் சொல்லாமல்
தினம் புதுப் புது சாக்கு, போக்குகளைச்
சொன்ன வர(ரா)தராஜனுக்கு இந்த
சிறப்புப் பரிசு அளிக்கப்படுகிறது.

!!!!!#####!!!!!#####!!!!!#####!!!!!#####!!!!!#####
அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

முத்துக்கு முத்தாக... சொத்துக்கு சொத்தாக... (பாடல்)





என்னைக் கவர்ந்த பாடல் இது.
உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

பாடல் : முத்துக்கு முத்தாக...
படம் : அன்புச் சகோதரர்கள்
பாடகர் : திரு.கண்டசாலா
பாடலின் mp3 : http://odeo.com/show/7899703/1181981/download/MuththukkuMuththaaka.mp3

பாடலின் வரி வடிவம் இதோ:

முத்துக்கு முத்தாக... சொத்துக்கு சொத்தாக... (பாடல்)
=============================================
முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக
அண்ணன் த்ம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம் ஒன்னுக்குள் ஒன்னாக
(முத்துக்கு...)

தாயாரும் படித்ததில்லை தந்தை முகம் பார்த்ததில்லை
தாலாட்டு கேட்டதன்றி ஓர் பாட்டும் அறிந்ததில்லை
தானாக படித்து வந்தான் தங்கமென வளர்ந்த தம்பி
தள்ளாத வயதினில் நான் வாழுகிறேன் அவனை நம்பி
(முத்துக்கு...)

அண்ணன் சொல்லும் வார்த்தை எல்லாம் வேதமெனும் தம்பி உள்ளம்
அன்னையென வந்த உள்ளம் தெய்வமெனக் காவல் கொள்ளும்
சின்னத்தம்பி கடைசித்தம்பி செல்லமாய் வளர்ந்த பிள்ளை
ஒன்றுபட்ட இதயத்திலே ஒரு நாளும் பிரிவு இல்லை
(முத்துக்கு...)

ராஜாக்கள் மாளிகையும் காணாத இன்பமடா
நாலுகால் மண்டபம்போல் நாங்கள்கொண்ட சொந்தமடா
ரோஜாவின் இதழ்களைப் போல் தீராத வாசமடா
நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா
(முத்துக்கு...)

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

Monday, October 5, 2009

நகைச்சுவை; இரசித்தவை - 5






அம்மா: "ராமு, கண்ணாடி முன்னாடி
நின்னுக்கிட்டு கண்ண மூடி, மூடி
என்னடா பண்ணிக்கிட்டிருக்கே?"

ராமு: "நான் தூங்கும்போது அழகா
இருக்கேனான்னு கண்ணாடியில
பார்த்துக்கிட்டு இருக்கேம்மா!"
************************************************

சேகர்: "நல்ல வேளை, நான் டில்லியில
பிறக்கல!!"

குமார்: "அதனால என்ன?"

சேகர்: "எனக்கு ஹிந்தி தெரியாது,
ரொம்ப கஷ்டமாயிருந்திருக்குமே?"
************************************************

முதல் நண்பர்: "நேற்று கோபால் வீட்டுக்கு
மதியம் ஒரு மணிக்குப் போயிருந்தேன்.
சாப்பிடறயான்னு அவன் கேட்கவேயில்லை"

இரண்டாம் நண்பர்: "அதைச் சொல்ல இப்பவும்
மதியம் ஒரு மணிக்குத்தான் எங்க வீட்டுக்கு
வரணுமா?"
***********************************************

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
***********************************************


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Sunday, October 4, 2009

சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா (பாடல்)




சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா!

இந்த பாடல் திருமதி.ப்பீ.சுசீலா அவர்கள் பாடியது.
இடம் பெற்ற படம்: வண்ணக்கிளி.
என்னைக் கவர்ந்த பாடல் இது.

சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
சொன்ன பேச்சக் கேட்டாத்தான் நல்ல பாப்பா
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா

தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரட்டுமா
சிலுக்குச் சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா
தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரட்டுமா
சிலுக்குச் சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா
கண்ணாமூச்சு ஆட்டம் உனக்கு சொல்லித் தரட்டுமா
கண்ணாமூச்சு ஆட்டம் உனக்கு சொல்லித் தரட்டுமா - இப்ப
கலகலன்னு சிரிச்சிக்கிட்டு என்னப் பாரம்மா
(சின்ன...)

கோபம் தீர்ந்து அப்பா உன்னைக் கூப்பிடுவாரு - நீ
கொஞ்சி கொஞ்சி பேசினாத்தான் சாப்பிடுவாரு
கோபம் தீர்ந்து அப்பா உன்னைக் கூப்பிடுவாரு - நீ
கொஞ்சி கொஞ்சி பேசினாத்தான் சாப்பிடுவாரு
கோழி மிதிச்சி குஞ்சு முடம் ஆகிவிடாது - குங்குமம்
கோழி மிதிச்சி குஞ்சு முடம் ஆகிவிடாது - உனக்கு
கொய்யாப்பழம் பறிச்சு தாரேன் அழுகை கூடாது
(சின்ன...)

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்



வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Friday, October 2, 2009

நகைச்சுவை; இரசித்தவை - 4






நகைச்சுவை; இரசித்தவை - 4
============================
சுட்டிப்பயல் பாபு
-----------------------------
சுட்டிப்பயல் பாபு பள்ளிக்குப் போகும்போது பக்கத்துத் தெரு ஆன்ட்டி அவனிடம் பேசுகிறாள்.

ஆன்ட்டி: "பாபு உங்க வீட்டில புது பாப்பா பொறந்திருக்கே, உனக்கு தம்பியா? தங்கையா?"

பாபு : இன்னும் பேரு வைக்கலையே, அதனால தெரியல ஆன்ட்டி!!!"
******************************************************

வெ.சாம்பார்
---------------------
ராமுவும் கோபுவும் ஹோட்டலுக்கு சாப்பிடப் போகிறார்கள்.

ராமு : " மெனு போர்டில 'வெ.சாம்பார்'னு போட்டிருக்கே, வெங்காய சாம்பாரா?"

கோபு : "வெண்டைக்காய் சாம்பாரா இருக்கும்! சர்வர் இங்க வாப்பா. வெ.சாம்பார்னா
என்ன சாம்பார்?"

சர்வர் : "காய் எல்லாம் தீர்ந்து போச்சி. இது வெறும் சாம்பார்!!!"
******************************************************
அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
******************************************************

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Thursday, October 1, 2009

குண்டப்பா & மண்டப்பா! (1)




குண்டப்பா & மண்டப்பா!
=======================
குண்டப்பா தனது கிராமத்திலிருந்து,
டவுனுக்கு ஓர் அரசாங்க அலுவலகத்திற்கு
ஒரு காரியமாக வந்தார்.

வேலை முடிய மதியம் ஒரு மணியாகிவிட்டது.
மதியம் 1.15 பஸ்ஸில் புறப்பட்டால் அவரது
கிராமத்திற்குப் போய் சேர ஒரு மணி நேரமாகும்.
பசி அவரது வயிற்றைக் கிள்ளி, வயிறே புண்ணாகி
விட்டது. ஹோட்டலுக்குப் போய் சாப்பிடலாம்
என்று நினைக்கும்போது, 'சாப்பாடு என்றால்
50 ரூபாய் செலவாகி விடுமே, என்ன செய்யலாம்'
என்று யோசித்தார்.

அப்போதுதான் அதே டவுனில் நான்கு தெருக்கள்
தள்ளிதான் அவரது நண்பர் மண்டப்பாவின்
வீடு இருப்பது நினைவுக்கு வர, 'சாப்பாட்டுச்
செலவை மிச்சம் பண்ணிடுவோம்' என்று
எண்ணியபடி ஐந்து நிமிடங்கள் நடந்து,
மண்டப்பாவின் வீட்டிற்குச் சென்றார்.

குண்டப்பாவைப் பார்த்த அவரது நண்பர்
மண்டப்பா, அவரிடம் பேச ஆரம்பித்தார்.
பேச ஆரம்பித்தவர்தான், பேசிக் கொண்டே
இருந்தாரே அன்றி, சாப்பிடக் கூப்பிடவே
இல்லை. குண்டப்பாவும் ஒரு மணி
நேரமாகப் பொறுத்துப் பார்த்து விட்டார்.
மணியும் இரண்டைத் தாண்டி விட்டது.

குண்டப்பா எழுந்து கொண்டார்.
"அப்ப நான் ஊருக்குப் புறப்படுகிறேன்"
என்றார்.

அதற்கு, "எங்க வீட்டில சாப்பிடச்
சொன்னா சாப்பிடவாப் போறீங்க?"
என்று கேட்டார் மண்டப்பா.

"மாட்டேன்னா நீங்க விடவாப் போறீங்க?"
என்று திருப்பிக் கேட்டுக் கொண்டு
அங்கேயே நின்று கொண்டிருந்தார் குண்டப்பா.

'ஆஹா... இவுரு நம்ம வீட்டுல சாப்பிடாமப்
போக மாட்டாரு போலருக்கே, எப்படி இவர
துரத்தலாம்' என்று யோசித்த மண்டப்பா,
சமாளிப்பாக, "அப்படி நீங்க நம்ம
வீட்டுல சாப்பிட்டாலும் என் ரெண்டு
பிள்ளைங்களுக்கும் ஐம்பது, ஐம்பது
ரூபாய் அன்பளிப்பு கொடுக்காமயா
போயிடப் போறீங்க?" என்று கோர்த்து
வாங்கினார்.

'ஹோட்டல்ல சாப்பிட்டா ஐம்பது ரூபாய்தானே,
இந்த ஆளு நூறு ரூபாய்க்கு அடி போடுறானே'
என்று பயந்தாலும் குண்டப்பா, "என்னங்க
இப்படிச் சொல்லிட்டீங்க? உங்க பிள்ளைங்க
தங்கம்ல? உங்க பிள்ளைங்களும் உங்க மாதிரியில?
நான் பணம் கொடுத்தாலும் அவங்க
வாங்கவாப் போறாங்க? நீங்க
அப்படியா பிள்ளைங்கள வளர்த்திருக்கீங்க?"
என்று மடக்கினார்.

இவ்வளவு பேச்சு நடந்த பிறகும் குண்டப்பா
அந்த வீட்டில் சாப்பிட்டிருப்பாரா, மாட்டாரா?

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

குண்டப்பா & மண்டப்பா (2) இங்கே!

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Tuesday, September 29, 2009

நகைச்சுவை; இரசித்தவை - 3

என்னை யாரென்று...?
=====================
மாணவன்: "என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்?"

ஆசிரியர் : "டேய் யார்ரா அவன் கிளாசிலே பாட்டு பாடுறது?"

மாணவன்: "இது யார் பாடும் பாடலென்று சார் கேட்கிறார்?"

**********************************************************


டீ.வி.யை திட்டுவது என்?
=========================

பேரன் : "ட்டீ.வி! நீ நாசமாப்போக! நீ கட்டையிலப்போக! நீ பாழாப்போக!"

பாட்டி : "டேய் சீனு! ஏண்டா ட்டீ.வி.யை திட்டிக்கிட்டு இருக்கே?"

பேரன் : "நீதானே பாட்டி ட்டீ.வி.யை வையின்னு சொன்னே. அதுதான் ட்டீ.வி.யை வஞ்சிக்கிட்டு இருக்கேன்.


**********************************************************

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Saturday, September 26, 2009

இப்படியும் ஒரு காமெடி மனைவி!!!




இப்படியும் ஒரு காமெடி மனைவி!!!

ஒரு மாலை நேரம். ஆஃபீஸிலிருந்து கணவன் தனது
மனைவிக்கு ஃபோன் செய்து, "நீ செய்கிற மெதுவடை
சாப்பிட டேஸ்ட்டாக இருக்கும். இன்னும் ஒரு மணி
நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடுகிறேன். மெதுவடைகள்
செய்துவை" என்றான். மனைவி "சரி" என்றாள்.

அதுபோலவே ஆஃபீஸ் முடிந்து வீட்டுக்கு வந்த கணவன், மனைவியிடம் "மெதுவடை எல்லாத்தையும் எடுத்து வா" என்றான். மனைவி ஒரு தட்டில் ஒரு மெதுவடையும் சட்னியும் கொண்டுவந்து கணவனிடம் கொடுத்தாள்.

வாங்கிப் பார்த்து அதிர்ச்சியான கணவன், "என்னடி, ஒரு வடைதான் இருக்கு.மற்றதெல்லாம் எங்கே?" என்று கேட்டான்.

அதற்கு மனைவி , "முதலில் ரெண்டு வடை சுட்டேன்.
நல்லாயிருக்கான்ன சாப்பிட்டுப் பார்த்தேன்.
அப்புறம் ரெண்டு வடை சுட்டேன். நல்லாயிருக்கான்னு
சாப்பிட்டுப் பார்த்தேன். அப்புறம் ரெண்டு வடை சுட்டேன்.
அதையும் சாப்பிட்டு விட்டேன். இப்படி எல்லா
வடையையும் சாப்பிட்டுவிட்டு இந்த ஒரு வடையை
மட்டும் உங்களுக்காக ஆசையோட எடுத்து வச்சிருக்கேன்" என்றாள்.

அந்தக் கணவன், "அடப்பாவி! எப்படி எல்லா வடையையும் சாப்பிட்டே!!!"
என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

அதற்கு "சிம்பிள்! முதல்ல ஒரு வடையை எடுத்தேன்.
ரெண்டா பிய்த்தேன்.முதலில் ஒரு துண்டை வாயில
போட்டு மென்னு சாப்பிட்டேன். அப்புறம் ரெண்டாவது
துண்டை எடுத்தேன். வாயில போட்டு மென்னு
சாப்பிட்டேன்.. அவ்வளவுதான்" என்று அந்த தட்டில்
மீதமிருந்த ஒரு வடையையும் சாப்பிட்டுக்
காட்டினாளாம் மனைவி.

இப்படிப்பட்ட மனைவிகள் ஒரு சிலர் (!?) இருக்கிறார்கள்.
கணவன்களே, ஜாக்கிரதை.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Thursday, September 24, 2009

ஆயிரம் மலர்கள் பனியில்... (பாடல்)


ஆயிரம் மலர்கள் பனியில்... (பாடல்)

தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் திருமதி
ஷோபனா ரவி, திரு ரவி தயாரித்து,
திரு. எஸ்.வி.சேகர் கதாநாயகனாக
நடித்த 'ஸ்பரிசம்' என்ற படத்தில் வரும்
பாடல். திரு.எஸ்.ப்பீ.பாலசுப்ரமணியன்
மற்றும் ஒரு பெண் குரல் [எஸ்.ப்பீ.
ஷைலஜா(?)] பாடியது.

என்னைக் கவர்ந்த பாடல் இது. பாடல்
பற்றிய மற்ற விவரங்கள் தெரிந்தவர்கள்,
பாடலின் ஒலி (ஆடியோ) வைத்துள்ளவர்கள்
தங்கள் கருத்துக்களைப் பின்னூட்டம்
இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து (பாடல்):

ஆண்:
ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து
ஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து
பாவை 'உன்' மனதில் நுழைந்து தவழ்ந்து
மேனியில் மின்னலை வெள்ளமமாய்... ஸ்பரிசம்

ஆண்:
வைரப் படைக்கலாம் நடுவே நாம் கைகள்
... இணைக்கலாம் நடக்கலாம்
தென்றல் திகைக்கலாம் அதற்கு மேல்
தேவர் இருக்கலாம் அவர்க்கெலாம்
பாடல் தொடுக்கலாம்
வைரப் படைக்கலாம் நடுவே நாம் கைகள்
... இணைக்கலாம் நடக்கலாம்
தென்றல் திகைக்கலாம் அதற்கு மேல்
தேவர் இருக்கலாம் அவர்க்கெலாம்
பாடல் தொடுக்கலாம்

பெண்:
இந்திரப் பதவி கிடைக்கலாம்
உடனே நாம் அதையும் மறுக்கலாம்
பறக்கலாம் சிரிக்கலாம் வா... ஸ்பரிசம்
ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து
ஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து
பாவை 'என்' மனதில் நுழைந்து தவழ்ந்து
மேனியில் மின்னலை வெள்ளமமாய்... ஸ்பரிசம்

ஆண்:
மனமோ உடலோ மயக்கங்களின் வடிவோ
கனவில் பவனி வரும் கண்கள்
கார்த்திகை தீபங்களோ... ஓ...ஓ...
மனமோ உடலோ மயக்கங்களின் வடிவோ
கனவில் பவனி வரும் கண்கள்
கார்த்திகை தீபங்களோ... ஓ...ஓ...

பெண்:
காலக் கதவினை மெல்லத் திறந்து
பப்பா... பப்பா... பப்பா...
கடந்த பாதையை மறந்து...
காலக் கதவினை மெல்லத் திறந்து
கடந்த பாதையை மறந்து
இந்த கணக்கில் நாம் பிறந்து
... வளர்ந்து கலந்தோம்... ஸ்பரிசம்
ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து
ஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து
பாவை 'என்' மனதில் நுழைந்து தவழ்ந்து
மேனியில் மின்னலை வெள்ளமமாய்... ஸ்பரிசம்


பாடலின் மெட்டு நன்றாக ஞாபகம் உள்ளது.
சில வார்த்தைகள் மட்டும் பிழையாக
இருக்கலாம்.

[கேட்டவை]

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Wednesday, September 23, 2009

பயணங்கள் முடிவதில்லை...





பயணங்கள் முடிவதில்லை!



பஸ்ஸில் காலேஜுக்குச் செல்லும்போது
மாணவர்கள் (சிலர்) செய்யும் லூட்டிகள்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.

சில மாணவர்கள் டிக்கெட்டே எடுக்க
மாட்டார்கள். அது அவர்களுக்கு
பெருமை. டிக்கெட் பரிசோதகர் வந்தாலும்
எப்படி அவர்களிடமிருந்தும் தப்பிக்கிறார்கள்
என்பது மிகவும் புரியாத புதிர்.

நான் செல்லும் பஸ்ஸில் டிக்கெட் எடுக்காத
மாணவர்களை, கண்டக்டருக்குத் தெரியும்.
கேட்டால் 'முன்னாடி எடுக்கிறாங்க' என்றோ
'பின்னாடி எடுக்கிறாங்க' என்றோ சொல்வார்கள்;
ஆனால் யாரும் எடுப்பதில்லை.

அதனால், கண்டக்டர் டிக்கெட் எடுக்காத
மாணவனிடமே போய், "பாருங்க தம்பி
இதுங்க பண்ற அநியாயத்தை. அப்பா,
அம்மா நல்லபடியா வளத்தா இப்படிச்
செய்யுங்களா இதுங்க? டிக்கெட்டே எடுக்க
மாட்டேங்குதுங்க இந்த சனியன்கள்.
இதுங்களுக்கு நல்ல சாவே வராது.
சோத்ததான் திங்குதுங்களா இல்லாட்டி
வேற எந்த எழவத்தான் திங்குதுங்களோ,
நாசமா போவப் போவுதுங்க. நம்ம
வேலைக்கில்ல ஒல வச்சிரும் இதுங்க"
என்பார்.

அதற்கு அந்த மாணவனும் "இந்த
சனியனுங்க திருந்த மாட்டானுங்க.
என்னை மாதிரிலாம் யாருங்க ஒழுங்கா
டிக்கெட் எடுக்கிறான்கள்?" என்று
நல்லவனாக வேஷம் போடுவான்.

ஒரு தடவை பஸ்ஸின் பின் படிக்கட்டில் சுமார்
10 அல்லது 15 பேர்கள் தொங்கிக் கொண்டு
வருகிறார்கள். கண்டக்டர் டிக்கெட் வாங்கச்
சொல்லி கத்தியும் பிரயோசனம் இல்லை.

கடைசியில், "படியில எத்தினி டிக்கெட்டுப்பா?"
என்று கேட்டார். "ஒரு ஆளுக்கு ஒன்னுதான்
சார்" என்றான் ஒரு மாணவன். மாணவர்கள்
சிரித்தார்கள்.ஆனால் டிக்கெட் மட்டும்
வாங்கியபாடில்லை. கண்டக்டர்தான் பாவம்
வேற ஆளுக்கு டிக்கெட் போட போய்
விட்டார்.

ஒருநாள்.

பஸ் புறப்பட்டு, மயிலாடுதுறை பஸ்
ஸ்டாண்டை விட்டு வெளியே வந்து
விட்டது. அப்போது மூன்று மாணவர்கள்
ஓடி வந்து ப்ஸ்ஸின் பின் படிக்கட்டு வழியாக
ஏறி மேலே வந்து, உள்ளே வராமல் அங்கேயே
நின்று கொண்டார்கள்.

கண்டக்டர் அருகிலேயே டிக்கெட் போட்டுக்
கொண்டிருந்தாலும் அந்த மூவரும் டிக்கெட்
வாங்கவில்லை.

டிக்கெட் போட்டுக் கொண்டே டிரைவரின்
அருகேவரை சென்று விட்டார் கண்டக்டர்.
அப்போது பொதுவாக எல்லோரையும் பார்த்து,
"சீட்டு வேணுமா, வேற யாருக்காவது சீட்டு
வேணுமா?" என்று கேட்டார்.

அந்த மூன்று மாணவர்களில் ஒருவன்,
"சார், இங்கே வாங்க!" என்று கூப்பிட்டான்.
கண்டக்டர் அருகே சென்றார். "எத்தனை
சீட்டு வேணும்ப்பா?" என்றபடியே பயணச்சீட்டைக்
கிழிக்கப்போனார்.

அதற்கு, "எங்கே சீட்டு? கால் வலிக்கிது,
உட்காரணும். எங்கே சீட்?" (seat) என்று
கேட்டான் அந்த மாணவன்.
கண்டக்டர் வெறுத்துப் போய் தலையில்
அடித்துக் கொண்டார். ஆனால் மாணவர்களுக்கோ
சிரிப்புதான்.

பஸ் வரும்; பஸ் ஸ்டாப் வரும்.
பயணிகள் வருவர்; இறங்குவர்.
ஆனால், அந்த கண்டக்டர்கள், டிரைவர்கள்
மற்றும் பஸ்ஸின் பயணங்கள் முடிவதேயில்லை.
ஆகவே, ஓட்டுனர், நடத்துனரை மதிப்போம்.

குறிப்பு: ஒரு சில மாணவர்களைப் பற்றி
மட்டும்தான் இந்தக் கட்டுரையில்
குறிப்பிட்டுள்ளேன்; அனைவரையும் அல்ல.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Monday, September 21, 2009

நகைச்சுவை; இரசித்தவை - 2

நகைச்சுவை; இரசித்தவை - 2


மறுபடியும் மறுபடியும் தோசையா...?

சாப்பிட வந்தவர்: "என்னப்பா சர்வர், நான் 'தோசை கொண்டுவா'ன்னுதானே சொன்னேன்? ஆனால் நீ தோசை, மறுபடியும் தோசை, மறுபடியும் மறுபடியும் தோசை, மறுபடியும் மறுபடியும் மறுபடியும் தோசைனு கொண்டுவந்து சப்ளை பண்ணிக்கொண்டே இருக்கிறாயே?"

சர்வர்: "நீங்கதானே சார் 'சுட, சுட தோசை கொண்டுவா'ன்னீங்க? அதனால்தான் சரக்கு மாஸ்டர் தோசையை சுட, சுட, நான் கொண்டுவந்து சப்ளை பண்ணிக்கொண்டே இருக்கிறேன்."

சாப்பிட வந்தவர்: "!?!?!?"

**********************************************************



கால் வலி

நோயாளி: "டாக்டர், வலது கால் இரண்டு நாளாக வலிக்கிறது டாக்டர்"

டாக்டர்: "வயசாயிடுச்சில்லையா? அப்படித்தான் வலிக்கும்!"

நோயாளி: "இடது காலுக்கும் அதே வயசுதானே டாக்டர் ஆகுது? ஆனால் இடது கால் வலிக்கலையே டாக்டர்?"

டாக்டர்: "!? !? !?"
=============================================
- அ.முஹம்மது நிஜாமுத்தீன்
************************************************************

தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்=========>>
வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Saturday, September 19, 2009

இன்பப் பெருநாள் ஈகைத் திருநாள்!







இன்பப் பெருநாள் ஈகைத் திருநாள்!
=============================


*உள்ளம் இனித்திடவே உவகைப் பெருநாள் வந்ததுவே!
இல்லம் மகிழ்ந்திடவே ஈகைத் திருநாள் வந்ததுவே!
ரமலான் முழுதும் தினமும் நோன்பினை நோற்றனரே!
எமதிறை அல்லாஹ் பேரருள் ரஹ்மத் பெற்றனரே!

*ஐம்பெரும் கடமை ரமலான் அதில் ஒன்று.
ஐயம் இல்லை நன்மைகள் பற்பலவே உண்டு.
உறுப்புகள் உழைக்குது தினமும் இரவுபகல் நேரம்.
ஓய்வு கொடுப்போம் பகலில் சிலமணி நேரம்.

*புசிப்பவர் அறியார் ஏழைபடும் பசியின் துயரம்.
பசியின் கொடுமை நோன்பாளிகள் உணரவே முடியும்
நோன்பு என்பது பலமுள்ளோர் மீதுதான் கடமை
மாண்பு கண்டு ஏற்பதும் நம்மீது உடமை!

*இல்லாதார்க்கு உள்ளோர் கொடுத்தால் அதுதான் ஈகை
வல்லோன் தருவான் மறுமைதனிலே மாபெரும் வாகை
மகிழ்ச்சியுடன் உவந்திடுவோம்.....
......பெருநாள் இன்றைய தினம்
நெகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறது எனதினிய அன்பு மனம்!

அனைவருக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

Friday, September 18, 2009

திருடர்கள் ஜாக்கிரதை!

திருடர்கள் ஜாக்கிரதை!


தமிழ் வலைப்பூக்களில் தொழில்நுட்பம்
சார்ந்த பதிவுகளை மிக எளிய முறையில்
தரக்கூடியவர் எழுத்தாளர் சுமஜ்லா அவர்கள்.

இவ்வாறே பல விந்தைகளை தனது
வலைப்பூவில் தரும் மற்றொமொருவர்
ஸ்ரீ.கிருஷ்ணா அவர்கள்.

தொழில்நுட்பப் பதிவுகளை தெரியாதவர்களும்
இவற்றின்மூலம் அவற்றை அறிந்து கொள்ளலாம்.

ஆனால், சமீபத்தில் ஸ்ரீ.கிருஷ்ணா ஒரு
மேட்டர் பதிந்திருந்தார். அது, வேறொருவரால்
திருடப் பட்டது. அதில் வரிக்கு வரி
அப்படியே காப்பி செய்து பேஸ்ட்
செய்யப்பட்டதுதான் மிகக் கொடுமை.

சிலர் தெரிந்தே இவ்விதம் திருவதால்
அந்தப் பதிவை முதலில் வெளியிட்ட
பதிவரின் திறமை மறைக்கப்படுகிறது.
இதுகுறித்தும் ஸ்ரீ.கிருஷ்ணா ஒரு பதிவு
தந்திருக்கிறார்.

இனி இவ்வாறு திருட்டுச் செயல்
தொடர்ந்தால் அவர்களுக்கு
விருது வழங்கப்படும் என்றும்
அதை எங்கள் வலைப்பூவில்
வெளியிடுவோம் என்று எச்சரிப்பதோடு
பதிவுத் திருடர்(கள்) அதையும்
திருடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்
என்றும் இதன்மூலம் அறிவிக்கிறோம்.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

Thursday, September 17, 2009

"வாரும், வாரும், உள்ளே வாரும்!"

"வாரும், வாரும், உள்ளே வாரும்!"
=================================
நற்குணன் ஐயா அவர்கள் எங்களது
தமிழாசிரியர்.

வாரத்தில் ஒருநாள் செவ்வாய்க் கிழமை
மட்டும் முதல் பாடவேளை, தமிழ்
வகுப்பு.

ஒரு செவ்வாய்க் கிழமையில் காலை
10 மணிக்கு பள்ளியின் பாட ஆரம்ப
மணியோசை ஒலித்து விட்டது.
ஆசிரியரும் வந்து விட்டார்.
வருகைப் பதிவேடு எடுத்து விட்டார்.
பாடத்தையும் நடத்த ஆரம்பித்து
விட்டார்.

சுமார் 10 நிமிடங்கள் சென்றிருக்கும்.
ஒரு மாணவன் வகுப்பறை வாயிலருகே
வந்து நின்று, "உள்ளே வரலாமா?"
என்று கேட்டான்.

பாடம் நடத்துவதை நிறுத்திவிட்டு
அவனைப் பார்த்தார், தமிழாசிரியர்.

அப்போது வாசல் கதவின் ஓரமாக
குப்பைகள் குமித்து வைக்கப் பட்டிருப்பதைப்
பார்த்தார் அவர். பிறகு அந்த மாணவனைப்
பார்த்தார்.

மறுபடியும் குப்பையை, மறுபடியும்
மாணவனை மாறி, மாறிப் பார்த்து
விட்டு, அந்தக் குப்பையை நோக்கி
கை காட்டிவிட்டு, பின் அந்த மாணவனை
நோக்கி கையைக் காட்டிவிட்டு, இறுதியாக
வகுப்பறையின் உள்ளேயும் கையைக்
காட்டிக் கொண்டே, "வாரும், வாரும்,
அப்படியே வாரும்" என்றார்.

மாணவர்கள் அனைவருமே சிரித்து விட்டோம்.

ஆனால், அந்த மாணவனோ,'ஆசிரியர்
நம்மை உள்ளே வரச் சொல்கிறாரா,
அல்லது குப்பையை வாரச் சொல்கிறாரா'
என்று குழம்பி அங்கேயே நின்று கொண்டே
இருந்தான்.

மாணவர்கள் அனைவரும் சிரித்து ஓய்ந்தபின்
ஒருவழியாய் அவனை 'உள்ளே வாப்பா'
என்று உள் வருவதற்கு அனுமதி அளித்தார்.

இந்த நகைச்சுவை சம்பவம் இன்னும்
மனதில் அடிக்கடி நிழலாடிக் கொண்டே
இருக்கின்றது.

(தமிழாசிரியர் பற்றிய குறிப்பு என்பதால்
முடிந்தவரை தமிழிலேயே எழுதியுள்ளேன்.)

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

Monday, September 14, 2009

குடை வள்ளல் யார்?




சேகர்: "ராஜு, நீ என்னிடம் இரவல்
வாங்கிப் போனாயே, அந்தக் குடையை
திருப்பிக் கொடுப்பா."

ராஜு: "அந்தக் குடையை நம்ம தாஸுவிடம்
இரவல் கொடுத்தேன். ஏன், உடனே வேண்டுமா?"

சேகர்: "ஆமாம்ப்பா. என்னிடம் இரவல் கொடுத்த
மோகன் உடனே திருப்பிக் கேட்கிறார்!!!"

-இதில் யார் குடை வள்ளல்?

[பல ஆண்டுகளுக்கு முன்னால் படித்த ஜோக்!]

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

Sunday, September 13, 2009

கப்பலுக்குப் போன மச்சான்!



'கப்பலுக்குப் போன மச்சான்!'
சுமார் 20 அல்லது 25 ஆண்டுகளுக்கு
முன் தமிழ் நாடெங்கும் பிரபலமான
பாடல்.மேலும் அரபு நாடுகளில் வாழ்ந்த
தமிழர்களிடையவும் மனங்கவர்ந்த
பாடல்.

தொலைபேசி பிரபலமாகாத, அலைபேசி
அறிமுகமாகாத அக்காலத்தில் இப்பாடலில்
வரும் ஆண் குரலிலும் பெண் குரலிலும்
தங்களையே கண்டனர் பல இளம்தம்பதிகள்.

(இப்பாடலைப் பாடிய காயல் ஏ.ஆர்.ஷேக்
முஹம்மது அவர்கள் கடந்த ஜூன் 9ஆம்
நாளன்று காலமானார்.)

இப்பாடலின் வரி வடிவம் இதோ:

பெண்:
கப்பலுக்குப் போன மச்சான் கண்ணெறஞ்ச ஆச மச்சான்
கப்பலுக்குப் போன மச்சான் கண்ணெறஞ்ச ஆச மச்சான்
எப்பத்தான் வருவீங்க எதிர்பார்க்கிறேன் - நான்
இரவும் பகலும் தொழுது தொழுது கேட்கிறேன்

ஆண்:
கண்ணுக்குள்ளே வாழ்பவளே கல்புக்குள்ளே ஆள்பவளே
கண்ணுக்குள்ளே வாழ்பவளே கல்புக்குள்ளே ஆள்பவளே
இன்ஷா அல்லாஹ் விரைவில் வருவேன் - உன்
இஷ்டம்போல நெனச்சதெல்லாம் தருவேன்

பெண்:
அக்கரைக்குப் போனதுமே அக்கறையும் போயிடுச்சோ
அன்று சொன்ன வார்த்தைகளின் அர்த்தங்களும் மாறிடுச்சோ
சர்க்கரைமேல் கோபப்பட்டு கட்டெறும்பும் ஓடிடுச்சோ
சங்கதி தெரியலையே மன்னன் மனம் வாடிடுச்சோ
(கப்பலுக்குப் போன...)

ஆண்:
அன்னமே அடிக்கரும்பே ஆவல் என்னை மீறுதடி (2)
எண்ணெய்க் கிணறுபோலே எண்ணமாய் ஊறுதடி
உன்னை அங்கு விட்டுவந்து உள்மனசு வாடுதடி
உள்ளபடி சொன்னாக்கா உயிர் அங்கே வாழுதடி (2)
(கண்ணுக்குள்ளே வாழ்பவளே...)

பெண்:
துபாய்க்கு பயணம்போயி வருஷம் ஆறாச்சு
துள்ளிவரும் காவிரிபோல் கண்ணு ரெண்டும் ஆறாச்சு
ஏக்கத்திலே நானிங்கே தூங்கி ரொம்ப நாளாச்சு
தாயகம் வந்திடுங்க தக்கதுணை நானாச்சு

ஆண்:
பாலைநிலமெல்லாமே சோலைவனமாகுதடி
பாயிறது நீராக மச்சானின் வேர்வையடி
பாடுபட்டு சேர்க்குறது பைங்கிளியே ஏதுக்கடி
பாவை உனக்கல்லாமே பாரிலே யாருக்கடி
(கண்ணுக்குள்ளே வாழ்பவளே...)

பெண்:
துல்ஹஜ்ஜு மாசத்திலே கடிதம் ஒன்னு போட்டீங்க
நலமா சுகமான்னு பாசம்வச்சி கேட்டீங்க
இங்கெனக்கு என்ன குறை மாடிமனை பஞ்சமில்ல
இருக்குறேன் நாயகனே இன்னும் நான் சாகவில்ல


ஆண்:
ஈச்சமரத் தோப்புக்குள்ளே எழுந்தாச்சு கட்டிடமே
ஈரைந்து மாசத்திலே தீர்ந்துவிடும் ஒப்பந்தமே
ஆச்சுது ஒருவாறு அன்புநகைப் பெட்டகமே
ஆக்கப்பொறுத்தவளே ஆறப்பொறு ரத்தினமே (2)

கண்ணுக்குள்ளே வாழ்பவளே கல்புக்குள்ளே ஆள்பவளே
இன்ஷா அல்லாஹ் விரைவில் வருவேன் - உன்
இஷ்டம்போல நெனச்சதெல்லாம் தருவேன்
நான் தருவேன் நான் தருவேன் நான் தருவேன்
நான் தருவேன் நான் தருவேன்....

பாடியவர்கள்: காயல் ஏ.ஆர்.ஷேக் முஹம்மது & ஜெயபாரதி.
பாடலாசிரியர்: கவிஞர் நாகூர் சலீம்.

இந்தப் பாடலை யூடியூபில் கேட்க:
https://www.youtube.com/watch?v=7vTI_YyRjHc

இந்தப் பாடலை யூடியூபில் பார்க்க:
https://www.youtube.com/watch?v=_aqcRXO-FXE

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

Saturday, September 12, 2009

கொக்குக்கு எத்தனை கால்கள்?

ஒரு வீட்டில் வீட்டு உரிமையாளரும் அவருக்குத்
துணையாக ஒரு சமையல் காரரும் இருந்தனர்.

ஒரு நாள் வீட்டுக்காரர் பஜாரிலிருந்து
வரும்போது கொக்கு ஒன்றை
வாங்கிவந்து, சமையல்காரரிடம் கொடுத்து,
"கொக்கு குழம்பு சமைத்து வை; குளித்துவிட்டு
வருகிறேன்" என்று சொல்லிவிட்டு குளிக்கப் போனார்.
சமையல்காரர் குழம்பு சமைத்து வைத்துவிட்டு,
குழம்பையும் சிறு அளவு கறியையும் டேஸ்ட்
பார்க்கலாம் என்று டெஸ்ட் பண்ணியவர் கொக்கு
கறி ருசியாய் இருக்கவே, கால் துண்டு ஒன்றை
முழுவதும் சாப்பிட்டுவிட்டார்.

குளித்து வந்ததும் சாப்பிட அமர்ந்தார் வீட்டுக்காரர்.
சோறு பரிமாறப்பட்டதும் சாப்பிட ஆரம்பித்தார் அவர்.
முதலில் சமையல்காரர் முதலாளிக்குப் பிடித்த
கொக்கின் கால் ஒரு துண்டை எடுத்துவைத்தார்.

"இன்னொரு கால் துண்டையும் வையப்பா" என்றார் முதலாளி.

"கொக்கிற்கு ஒரு கால்தானுங்க முதலாளி" என்றார் சமையல்காரர்.

"என்னது? கொக்கிற்கு இரு கால்கள் இருக்குமே?" என்றார் முதலாளி.

"இல்லீங்க ஒரு கால்தானுங்க" என்றார் சமையல்காரர்.

முதலாளி எவ்வளவோ சொல்லிப் பார்த்தும்
சமையல்காரர் ஒப்புக்கொள்ளவில்லை.

முதலாளி சாப்பிட்டு முடித்ததும் சமையல்காரரை
வயல்வெளிக்கு கொக்கு காட்ட அழைத்துச் சென்றார்.
வயலில் ஒரு கொக்கு ஒரு காலை மடக்கிக் கொண்டு
ஒற்றைக் காலுடன் நின்றுகொண்டிருப்பதை பார்த்த
சமையல்காரர், "பாருங்க முதலாளி, கொக்குக்கு ஒற்றைக்
கால்தான்" என்று முதலாளியிடம் காட்டினார்.

உடனே முதலாளி தன்னுடைய இரு கைகளையும்
தட்டினார். சப்தம் கேட்டதும் கொக்கு
தனது இரு காலகளையும் மடக்கி கொண்டு பறக்க
ஆரம்பித்தது. "பார், கொக்கிற்கு இரு கால்கள்"
என்று சமையல்காரரிடம் காட்டினார் முதலாளி.

"நீங்க இப்ப கை தட்டியதற்கு பதிலாக, சாப்பிட
ஆரம்பிக்கும்போதே கை தட்டியிருந்தால்
கொக்கிற்கு இரு கால்கள் வந்திருக்குமே"
என்றாராம் சமையல்காரர்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

தங்களின் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

அரிய நீல நிற வைரம்!



அரிய நீலநிற வைரம்

உறுதிக்கு வைரத்தை உதாரணமாகச் சொல்வார்கள்.
'வைர நெஞ்சம்',
'வைரம் பாஞ்ச கட்டை'
என்றெல்லாம் சொல்வார்கள்.
'வைரத்தை
வைரத்தால்தான் அறுக்க வேண்டும்' என்றொரு சொலவடையும் உண்டு.

வைரம் கருப்பு, மஞ்சள், வெள்ளை என
பல நிறங்களில் கிடைத்தாலும்
சிவப்பு மற்றும் நீல நிறங்களில் கிடைப்பது
மிக அரிது. அப்படி இந்த இரு நிறங்களில்
கிடைக்கும் வைரங்கள் மிக, மிக விலை
மதிப்பு மிக்கவை.

கடந்த 12.05.2009 அன்று ஜெனீவாவில் தொலைபேசிவழி நடந்த ஒரு ஏல
நிகழ்ச்சியில் நீல நிற வைரம் ஒன்று விற்பனையாகியது. இது 7.03 கேரட் எடை கொண்ட சதுர வடிவிலானதாகும். இந்த வைரம் 9.49 மில்லியன் அமெரிக்கன் டாலர்
தொகைக்கு விற்கப்பட்டுள்ளது. (இந்திய ரூபாய் மதிப்பு ரூபாய் 46 கோடியே 50 லட்சம்.) ஒரு கேரட் விலையாக அதிகபட்சத் தொகைக்கு விற்கப்பட்டது என்று
இது புதிய உலக சாதனையாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த வைரத்தை ஏலம் மூலமாக விற்றுக்
கொடுத்த ஏல நிறுவனம்
இதன்மூலம் தங்களுக்குக் கிடைத்த
தரகுத் தொகை (கமிஷன்) எவ்வளவு
என்பதையும் வாங்கியவர் பெயரையும் வெளியிடவில்லை.

இதற்கு முன்னர் 6.04 கேரட் எடை கொண்ட
வைரம் அக்டோபர் 2007-ல்
ஹாங்காங்கில் 7.9 மில்லியன் அமெரிக்கன்
டாலருக்கு அதிகபட்சமாக
விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வைரம் மற்றும் நவமணிகளை கேரட் என்ற
அளவால் குறிப்பிடுவர். 5 கேரட் கொண்டது
ஒரு கிராம் ஆகும். அதாவது
0.20 கிராம் என்பது ஒரு கேரட் எடையாகும்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

Friday, September 11, 2009

கீழேயா? மேலேயா?

தெருவில் சைக்கிளில் ஒரு வியாபாரி
பெரிய வெங்காயம் விற்றுக் கொண்டு
போய்க்கொண்டிருந்தபோது எங்கள்
பக்கத்து வீட்டருகில் மணலில்
சைக்கிள் சக்கரம் சிக்கி கீழே விழுந்து
விட்டார். பெரிய வெங்காயம் எல்லாம்
மணலில் கொட்டி விட்டது.

இதைப் பார்த்த நானும் பாபுவும்
அவற்றைப் பொறுக்கி எடுத்து
மணலைத் தட்டி விட்டு மீண்டும்
சாக்குப் பையில் போட அவருக்கு
உதவிக் கொண்டிருந்தோம்.

அப்போது தெருவாசலுக்கு வந்த
பக்கத்து வீட்டுப் பாட்டி, பாபுவிடம்,
"ஏண்டா பாபு வெங்காயமெல்லாம்
கீழே கொட்டிடுச்சா?" என்று கரிசனமாகக்
கேட்டார்கள்.

"கொட்டினது கீழே இல்ல பாட்டி;
தரை மேலே" என்று பாட்டியிடம்
பதில் சொன்னான், பாபு.

"இந்த எடக்கு மடக்குக்கு ஒன்னும்
கொறச்சல் இல்ல. நீயும் உன்
வாயும்" என்று பாபுவைத் திட்டி
விட்டு திரும்பவும் வீட்டுக்குள்ளே
போய்விட்டார்கள் அந்தப் பாட்டி.

கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்
அதே புன்சிரிப்புடன் அந்த வியாபாரிக்கு
உதவிக் கொண்டிருக்கிறான் பாபு!


அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

நல்லா ஒழுகுமா?

மயிலாடுதுறை காந்திஜி சாலையில்
(இரண்டாம் இலக்கச் சாலை என்றும்
மற்றொரு பெயர் உண்டு.) வடநாட்டு
சேட்டுகள் நிறைய கடை வைத்துள்ளார்கள்.

அந்தக் கடைகளில் கடை முதலாளி
சேட்டுகள் தனது ஊரிலிருந்து சிறு வயது
பையன்களை வரவழைத்து சேல்ஸ்மேனாக
வைத்துக் கொண்டிருப்பார்கள். அந்தப்
பையன்கள் தமிழை புதுமாதிரியாகப்
பேசி, வியாபாரம் செய்வார்கள்.

"இந்தப் பிஸ்கட் நல்லாயிருக்குமா"
என்று கேட்டால் "நல்லாயிருக்கும்"
என்பார்கள்.

"இந்த வாஷிங் பவுடர் நல்லா வெளுக்குமா"
என்று கேட்டால் "நல்லா வெளுக்கும்"
என்பார்கள்.

அதில் ஒரு பொது வணிகக் கடையில்
(ஜெனரல் ஷாப்) நான் அடிக்கடி பொருள்கள்
வாங்குவதுண்டு.

அப்படி ஒரு நாள் நான் பொருள் வாங்கிக்
கொண்டிருக்கும்போது, பக்கத்தில் மற்றொரு
வயதான பெரியம்மா 5 லிட்டர் கொள்ளளவு
கொண்ட வாட்டர் கேன்(அல்லது ஆயில் கேன்)
ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பிளாஸ்டிக்காலான அந்தக் கேனை கையில்
வைத்து, அடிப்புறம் பார்த்துக் கொண்டே,
"இந்தக் கேன் ஒழுகுமா?" என்று அந்தக்
கடைப் பையனைக் கேட்டார்கள்.

உடனே அந்தப் பையனும் "நல்லா ஒழுகும்"
என்றான்.

அந்தப் பெரியம்மா சேட்டிடம், "என்னா சேட்டு,
'ஒழுகுமா'ன்னுக் கேட்டா 'நல்லா
ஒழுகும்'ங்குறான்?" என்று கேட்டார்கள்.

சேட்டும் அந்தப் பையனை ஹிந்தியில்
திட்டிவிட்டு, "இல்ல பெரியம்மா,
நல்லா ஒழுகும்னு அவன் சொல்லல.
'நல்லா ஒழைக்கும்'ங்குறான்" என்று
திருத்தம் சொன்னார் பெரியம்மாவிடம்.

"சேட்டு நல்லா சமாளிக்கிற சேட்டு!
பொழச்சிக்குவே!!"என்று பெரியம்மா
சேட்டைப் பாராட்டி விட்டு சிரித்தவாறு
பணத்தைக் கொடுத்து கேனை வாங்கிச்
சென்றார்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

Thursday, September 10, 2009

அன்பாக... ஆதரவாக...

அன்பாக... ஆதரவாக...

அன்பருக்கு நலமில்லை ஆஸ்பத்திரிக்குப் போனார்.
டாக்டர் பார்த்தார் செக் பண்ணார்.

இரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை,
ஸ்கேன், எக்ஸ்ரே, ஈசிஜி எடுத்தார்.

"ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் தங்குங்கள்,
மாத்திரை, மருந்துகள் சாப்பிடுங்கள்"

சொன்ன மருத்துவர் கொழிக்கின்றார்;
நோயாளி பணத்தை செலவழிக்கின்றார்.

"இந்த சாப்பாடாடெல்லாம் மருந்துங்க;
மத்த எல்லாத்தையும் மறந்துடுங்க;

தினமும் கொஞ்ச தூரம் நடந்திடுங்க;
உடல் பழையநிலை அடைந்திடுங்க"

சொன்னார் டாக்டரும் நன்றே!
அன்பரும் தங்கினார் அன்றே!

நண்பர்கள், உறவினர்கள் வந்தனரே!
நன்றாய் அறிவுரை தந்தனரே!

'மதுவும் சிகரெட்டும் வேண்டாமே!
மாதுவால் எய்ட்ஸ் வந்திடுமே!'

வந்தவர்கள் சும்மாவா இருந்தார்கள்?
சூழ்நிலை தன்னை மறந்தார்கள்.

"மனோகர் அப்படித்தான் நலமில்லை;
மறுநாள் அந்த ஆளே இல்லை"

"பொன்னுசாமி மாமாவுக்கு வயித்துப்போக்கு;
போயிட்டாரு மறுநாளு சுடுகாட்டுக்கு"

"ஆறுமுகம் அத்தானுக்கு ஹார்ட் அட்டாக்கு;
அய்யய்யோ அப்பவே அங்கேயே போயிட்டாரு"

மற்றும் பற்பல உரைத்தார்கள்.
வயிற்றில் புளியைக் கரைத்தார்கள்.

நோயாளிக்கு கிலியைக் கிண்டலாமா?
இருக்கின்ற பயத்தைத் தூண்டலாமா?

யாருக்குமே உள்ளபடி சாதகமா?
நோயாளிக்குமே உள்ளத்திற்கு பாதகமே!

நல்லதை ஆறுதல் சொல்லலாமே?
உள்ளத்தை தேறுதல் செய்யலாமே?

நோயாளிக்கு ஊட்டணும் தெம்பு!
நமக்கேனுங்க ஊர்வழக்கு வம்பு?

வந்தாலும் வாய்ப்பேச்சு, வெட்டிப்பேச்சு.
வராங்காட்டி ரொம்பவே நல்லதாச்சு.

உறவையும் நட்பையும் மறந்திடுங்கள்.
ஊட்டுக்குள்ளே கம்முனு இருந்திடுங்க.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

இந்த நாள் இனிய நாள்!

இன்று (07.08.2009) இனிய நாளாய் அமைந்திடும்
அனைவருக்கும்.


அதோடு இன்றைய நாளில் ஒரு சுவாரஸ்யமான
நேரமும் உண்டு. பிற்பகல் 12 மணி 34 நொடி
56 வினாடிதான் அது. இதன்படி நேரத்தையும்
தேதியையும் வரிசையாக எழுதினால்
பின்வருமாறு எழுதலாம்:

12:34:56 - 7/8/9.


எல்லா இலக்கங்களும் வரிசையாக அமைந்துள்ளன,
0-ஐத் தவிர.


அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

[பின் குறிப்பு: இந்தக் குறிப்பு 2009 ஆகஸ்ட்
7-ஆம் நாளன்று எழுதப்பட்டது.]

Wednesday, September 9, 2009

பஸ்ஸை ஓட்டிப் பார்க்கலாமா?

சோழன் போக்குவரத்துக் கழகத்தின் டிரைவர்
சீனு எனக்கு நண்பர். நான் எங்களூரில்
எப்போதாவது பஜாரில் நண்பர்களோடு
நின்று பேசிக் கொண்டிருந்தால், என்னை
பார்த்து கையாட்டிவிட்டுச் செல்வார்.

அதுபோல் ஒரு நாள் காலையில் சீனு
பஸ்ஸை ஓட்டிக் கொண்டே என்னைக்
கடைத்தெருவில் பார்த்து கையாட்டிவிட்டுச்
சென்றார்.

பஸ்ஸுக்கள் மதியம் சுமார் 12-லிருந்து
1 மணிக்குள் பணிமனை சென்று டூட்டி
மாற்றி வருவார்கள்.

ஆனால், அன்று மாலையே நான் மயிலாடுதுறை
செல்ல வேண்டியிருந்ததால், கடைத்தெருவில்
பஸ்ஸுக்காகக் காத்திருந்தால், வந்த பஸ்ஸை
காலையில் ஓட்டிய ஓட்டுனர் சீனுவே ஓட்டிக்
கொண்டிருந்தார்.

பஸ்ஸில் ஏறியதும் நான் அவர் அருகில் சென்று,
"என்ன சீனு, காலையிலும் ஓட்டினீங்க; இப்பவும்
ஓட்டிக்கிட்டு இருக்கீங்களே,ஏன்?" என்று கேட்டேன்.

அதற்கு, "அதுவா நிஜாம்? ஓட்டிப் பார்த்துக்கிட்டு
இருக்கேன்" என்றார் சீனு.

நான் பதறிப் போய், "என்ன ஓட்டிப் பார்த்துக்கிட்டு
இருக்கீங்களா? லைசென்ஸ் எப்ப எடுப்பீங்க? நாங்க
50, 60 பேர் உங்களை நம்பி, உங்கப் பின்னால
இருக்கோம்,நீங்கதான் பொறுப்பு" என்றேன்.

"அட நீ வேற பீதியக் கிளப்பாதப்பா. நான் சொன்னது
'ஓட்டி' இல்ல! அதாவது 'ஓ.ட்டீ'. ஓவர் டைம்
டூட்டி பார்க்கிறேன்னு சொன்னேன்" என்று நண்பர்
சீனு சொன்னதும் பஸ்ஸில் அருகிலிருந்த
சக பயணிகளிடையே கல... கல... கல...

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

Tuesday, September 8, 2009

அ(ங்கே) ஆ(ரம்பித்து) இ(ங்கே)...

அன்பு : அம்மா + அப்பா

ஆர்வம் : நூல்கள் படிப்பதில்

இன்பம் : இறைவனது அற்புதங்களை இரசிப்பதில்

ஈகை : தேவையுடையோருக்குத் தகுந்த
சமயத்தில் உதவுதல்

உயர்வு : முயற்சியுள்ளவரையில் உயர்வு உண்டு

ஊக்கம் : அரிய செயல்களைப் புரிய
மற்றவர்களுக்கு நாம் கொடுப்பது

எண்ணம் : அனைவரும் இன்புற வேண்டும்

ஏன் இந்தப்
பதிவு? : சுட்டீஸ் லாஃபிரா அழைத்ததால்

ஐயம் : நம்பியபின் ஐயம் ஏன்?

ஒற்றுமை : சண்டைகள், பிரிவுகள், வேறுபாடுகள்
களைந்தால் வருவது

ஓட்டம் : எதிலும் 'ஓட்டம்' நன்றாயிருந்தால்
எதுவும் நன்றாய் 'நடக்கும்'

ஔடதம் : மனதார சிரித்து மகிழ்வது

அஃது : என் பேனா: நண்பன்

இதில் கை கோர்க்க அழைக்கிறேன்; அபி அப்பா, கிருஷ்ணா.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

Monday, September 7, 2009

கலாட்டா காலேஜி; கலாட்டா பாலாஜி!

நானும் நண்பன் பாலாஜியும் பஸ்ஸில்
காலேஜுக்குச் சென்று கொண்டிருந்தோம்.
காலேஜ், மயிலாடுதுறையிலிருந்து 22 கி.மீ.
தூரத்தில், பூம்புகாருக்கு 3 கி.மீ. முன்பாக
உள்ள மேலையூரில் அமைந்துள்ள
'பூம்புகார் பேரவைக் கல்லூரி'. சுருக்கமாக ப்பீ.ப்பீ.கே.
(இப்போது அதன் பெயர் 'இந்து சமய அறநிலை ஆட்சித்
துறையின் பூம்புகார் கல்லூரி')

அன்று திங்கள் காலை நேரம்.

பஸ்ஸில் நிறைவான கூட்டம். மாணவர்கள் அனைவரும்
அரட்டைப் பேச்சுடன் சென்று கொண்டிருக்கிறோம்.
எங்கள் இருவருக்கும் உட்கார இருக்கைகள் கிடைத்து விட்டன.

நான் பேசிக் கொண்டேயிருக்க, 'உம்' போட்டு, கேட்டு
வந்த பாலாஜி இடையிடையே கண் சொக்கி தூங்க ஆரம்பித்தான்.

நான் அவனிடம், "என்னப்பா தூங்கி விழறயே, ஏன்?" என்று
கேட்டேன்.

"சென்னை போய்விட்டு நேற்று நைட்தான் பஸ்ஸில ஊர் வந்தேன்"
என்றான் பாலாஜி.

"அட அப்படின்னா வீட்டிலயே தூங்கி ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே?"
என்று நான் கேட்டேன்.

"அதுக்குத்தானே காலேஜுக்கு வரேன்" என்று பட்டென்று பதில் சொன்னான் பாலாஜி.

'தூங்கினாலும் காலேஜ் போகணும் என்று காலேஜ் வருகிறானே என்று
பாராட்டுவதா; காலேஜுக்கு வந்தும் தூங்கப் போறானே என்று
திட்டுவதா' என்று நான் திகைத்து விட்டேன்.

வேடிக்கையை வாடிக்கையாய் கொண்ட கலகல நண்பன் பாலாஜி
இப்போது நம்மிடையே இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக
நோய் தாக்கி அகால மரணமடைந்தா(ன்)ர்.

அவருக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்!

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
Related Posts Plugin for WordPress, Blogger...