ராஜேஷ்குமார் அவர்கள் எழுதிய கடிதம்! # 175
புதின ஆசிரியர் திரு.ராஜேஷ்குமார் அவர்களுக்கு 1986-ல் ஒரு கடிதம் எழுதியிருந்தேன்!
"பாக்கெட் நாவல் அல்லது க்ரைம் நாவல் இதழில் உங்களுடைய 100 புதினங்களின் பட்டியல் வந்திருந்தது! ஆனால், சில கதைகளின் பெயர்களை அதில் காணவில்லையே?" எனக் கேட்டு, அந்த புதினங்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருந்தேன்.
அவரிடமிருந்து பதில் (கடிதம்) வந்தது.
"சுமார் 105 கதைகள் வரும்! பட்டியல் தயாரித்த ஈரோடு அருண் அவற்றை தவறுதலாக விட்டுவிட்டார்!" என பதிலில் குறிப்பிட்டிருந்தார்!
இப்போதுவரை 2,000 புதினங்கள் எழுதி சாதனை செய்துள்ளார் திரு. ராஜேஷ்குமார் அவர்கள்!
சாதனைகள் தொடரட்டும்!
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.