...பல்சுவை பக்கம்!

.

Thursday, December 30, 2010

நகைச்சுவை; இரசித்தவை 13

நகைச்சுவை; இரசித்தவை 13

கணவன்: "என்னடி சாம்பார்ல ஒரே சில்லறைக்
காசா கிடக்குது?"

மனைவி: "நீங்கதானே சாம்பார்ல கொஞ்சம்
சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க!"
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

திருடன் 1: "ஒரு வீட்டுல திருடும்போது தூங்கிட்டு
இருந்தவர் காலை தெரியாமல் மிதிச்சிட்டேன்"

திருடன் 2: ''திருடன்-னு அலறியிருப்பாரே?''

திருடன் 1: " 'கால் வலிக்கு இதமா இருக்கு; ஒரு
அரை மணி நேரம் மிதிச்சிட்டு அப்புறம் திருடு'ன்னு 
சொல்லிட்டார்"
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஒருவர் : "உங்க மனைவி எடுத்தெறிஞ்சி பேசுவாங்கன்னு
சொல்றீங்களே... அந்த சமயத்தில நீங்க என்ன பண்ணுவீங்க?"

மற்றவர்: "எரிகிற பாத்திரங்களை கேட்ச பிடித்து அவளை
வெறுப்பேத்துவேன்."
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பூக்கும் 2011 புத்தாண்டில் அனைவரும் மகிழ்ச்சியோடு,
வளமோடு, நலமோடு வாழ இறைவன் அருள் புரியட்டும்
என்று பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் இனிய 
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!  

(படத்தில்: பேபி அனௌஸ்கா அஜித்குமார்)

படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Sunday, December 5, 2010

ஜிகினா 3 : குஷ்புவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?

விகடன் வலையோசையில் வந்த இந்தப் பதிவை 
இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.

ஜிகினா 3 : குஷ்புவுக்கும் எனக்கும் என்ன  சம்பந்தம்?

சாவி அவர்களின் 'சாவி' வார இதழை 'அஷோக் 
உமா பப்ளிகேஷன்' வெளியிட்டுவந்தது. இன்னும்
திசைகள் (ஆசிரியர் மாலன்), மோனா (மாத நாவல்),
பூவாளி (மாத டைஜஸ்ட்) மற்றும் 'சுஜாதா' எனும்
மகளிர் இதழ் ஆகியனவற்றையும் இந்த பப்ளிகேஷன் 
வெளியிட்டது. 

பின்னாட்களில் இந்தப் பத்திரிகைகள் நிறுத்தப்பட்டாலும்
'பார்வதி பப்ளிகேஷன்ஸ்' நிறுவனத்தினர் 'சுஜாதா'
என்ற பெயரில் மாத நாவல் பத்திரிகையை ஆரம்பித்தனர்.
('பூந்தளிர்' சிறுவர் இதழை தமிழில் வெளியிட்டவர்களும் 
இவர்களே!)

இந்த சுஜாதா இதழில் கேள்வி பதில் பகுதியும் உண்டு.
சிறப்பான ஒரு கேள்விக்கு பரிசும் உண்டு. 



ஒரு முறை நான் எழுதிய  கேள்வியையும் அதன்
பதிலையும் பிரசுரித்து, சிறந்த கேள்வி என்று எனது
கேள்விக்கு பரிசும் அறிவித்து கேள்வியின்மேலேயே 
எனது பெயர், ஊரை முழு முகவரியுடன் பிரசுரித்திருந்தார்கள்
இந்த மாத நாவல் இதழ் வெளியாகி சுமார் நான்கு
அல்லது ஐந்து நாட்களுக்குப்பின் எனக்கு ஒரு
'இன்லான்ட் லெட்டர்' வந்தது. திருப்பத்தூரிலிருந்து
குணசேகரன் அனுப்பியிருந்தார் என்று ஃபிரம் அட்ரஸ்
பார்த்து தெரிந்துகொண்டேன். அப்படி ஒரு
ந(ண்)பரை எனக்குத் தெரியாதே என்ற யோசனையுடனே 
கடிதத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தேன். 

"அன்புள்ள குஷ்பு அவர்களுக்கு" என்று ஆரம்பமாக
எழுதியிருந்ததும் அதிர்ச்சியாகி மீண்டும் 'டூ அட்ரஸ்' 
பார்த்தேன். சரியாக என் முகவரிதான் எழுதப்பட்டிருந்தது.
'சரிதான்' என்று மேற்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.

அன்புள்ள குஷ்பு  அவர்களுக்கு,
எனது பெயர் பி.குணசேகரன்.
நான் உங்களது ரசிகன். உங்களது எல்லாப் படத்தையும்
பார்த்து விடுவேன். எந்தப் புதுப்படம் நீங்கள் நடித்து
வந்தாலும் பார்த்துவிடுவேன். முதல் நாளே
பார்த்துவிடுவேன். திரும்பத் திரும்பப் பார்ப்பேன். 
நீங்கள் அழகாயிருக்கிறீர்கள்.  நன்றாக நடிக்கிறீர்கள்.
உங்கள் பாட்டு கேசட் வாங்கி அடிக்கடி பாட்டு 
கேட்பேன். 

நான் சிவகங்கை பக்கத்தில் திருப்பத்தூர் என்ற ஊரில்
இருக்கிறேன். எட்டாம் வகுப்பு படிக்கிறேன். என் தம்பி
ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கும் உங்க 
படம்லாம் பிடிக்கும். எங்க அப்பா ரைஸ் மில் 
வச்சிருக்காரு. அவருக்கும் உங்க படம்லாம்
பிடிக்கும். அதனால், உங்க  ஃபோட்டோ ஒன்னு
கண்டிப்பா எனக்கு அனுப்பி வைக்கவும்.
இப்படிக்கு,
பி.குணசேகரன்.

இன்ட்லாந்து லெட்டர் உள்ளே உள்ள செய்தி எல்லாம் 
குஷ்புவுக்கு. மேலே அட்ரஸ் மட்டும் எனது பெயரும்
எனது முகவரியும்.  சிறிது யோசனை செய்த நான்
மறுபடியும் சுஜாதா இதழைத் தேடி எடுத்துப் பார்த்தேன்.

அட, முதல் கேள்வி நடிகை  குஷ்பு பற்றி ஒரு வாசகர்
எழுப்பிய கேள்வியும் அதற்கான பதிலும் முடிந்து 
அதைத் தொடர்ந்து எனது முழு முகவரி மற்றும்
கேள்வியும் பிரசுரமாகியிருந்தது. ஆக, என்
முகவரியைத்தான் குஷ்பு முகவரி என்று நினைத்து,
அந்தப் பையன் லெட்டரை  எனக்கு அனுப்பிவிட்டான்
என்று புரிந்து கொண்டேன். எனவே, அவனுக்கு பதில் எழுதினேன்.

   " தம்பி, அது குஷ்பு முகவரியில்லை;
   என்னுடைய முகவரி.   அதனால், நீ
   வேறு கடிதம் எழுதி குஷ்புவின் முகவரிக்கு
   அனுப்பு. 'நடிகை குஷ்பு, சென்னை ' என்று போட்டு அனுப்பு.
   அல்லது நானே விசாரித்து குஷ்புவின் முகவரி அடுத்த
   கடிதத்தில் எழுதி அனுப்புகிறேன்.  குஷ்பு ஃபோட்டோ
   என்னிடம் இல்லை; வேண்டுமெனில் என்னுடைய 
   ஃபோட்டோவை உனக்கு அனுப்பி  வைக்கிறேன்."
-என்று பதில் எழுதி 'நன்றாகப் படிக்கணும்' என
அறிவுரைகள் எழுதி, (மாட்டினாண்டா  ஓர் அடிமை!)
போஸ்ட் செய்துவிட்டு அதை மறந்தும்விட்டேன்.  

அடுத்த ஐந்தாறு தினங்களில் அந்தப் பையனிடமிருந்து
பதில் கடிதம் வந்தது.
"அன்பிற்கும் பரியாதைக்குமுரிய  அண்ணாவிற்கு,
(நல்ல பாசக்காரப்  பையனாயிருக்கானே!) 
வணக்கம்.  உங்க கடிதம் கிடைத்தது.
நடிகை குஷ்பு என்று நினைத்து உங்க முகவரிக்கு
கடிதம் அனுப்பிவிட்டேன். மன்னிக்கவும்.
(நல்ல பண்புள்ளவனாயிருக்கானே!)
குஷ்புவோட அட்ரஸ் அனுப்புறதா எழுதியிருந்தீங்க.
அப்படி குஷ்பு அட்ரஸ் அனுப்பாட்டியும் பரவாயில்லை. 
உங்க ஃபோட்டோவை தயவு செய்து அனுப்பிடாதீங்க.
இப்படிக்கு,
பி.குணசேகரன்."
(அடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ....!.)

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.




படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Friday, November 26, 2010

ஜிகினா 2: பத்து புரோட்டா பார்சல்!

பத்து  புரோட்டா பார்சல்!

பஸ் ஸ்டாண்ட் புத்தகக் கடையில் புத்தகங்கள்
புரட்டிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒருவர்
வந்தார்.

"ரமேஷு! அரை கிலோ ஆட்டா மாவு பாக்கெட்
ஒன்னு கொடுங்க"  என்று கேட்டார்.

கடைக்காரர் ரமேஷ் (விழித்துவிட்டு) : " ரமேஷு என்
பேருதான். ஆனால், ஆட்டா மாவு, அது அடுத்த மளிகைக் கடை"

அந்த வாடிக்கையாளர் : "ஓ... ஆட்டா மாவு வாங்கினால்
ஒரு குங்குமம் பத்திரிகை ஃப்ரீன்னாங்களே, ரேடியோவிலே! "

ரமேஷ்: "தம்பி! சாருக்கு ஒரு குங்குமமும் ஒரு
ஆட்டா பாக்கெட்டும் குடுப்பா. சார், ஆட்டா மாவு
கேட்டிங்க, கொடுத்திட்டேன். அடுத்த வாரம் வந்து,
'10 புரோட்டா பார்சல்; அப்படியே சட்னி-சாம்பார்'
அப்படினுலாம் ஆர்டர் பண்ணாதீங்க. அப்புறம்,
மளிகைக் கடையை சொன்னமாதிரி காளியாக்குடி,
ஆரியபவன்லாம் என்னாலக் காட்டிக்கிட்டிருக்க முடியாது.
ஆட்டா பாக்கெட்ட எடுத்து , குடுத்து கையெல்லாம்
பிசுபிசுன்னு மாவு. அதுக்கு பதிலா தண்ணி பாக்கெட்டாவது
ஃப்ரியா கொடுத்திருக்கலாம்"

அதே வாடிக்கையாளர்: "அட தண்ணி பாக்கெட் ஃப்ரியா?"

ரமேஷ்: "சார் அது அடுத்த வாரம், இப்ப நீங்க போங்க சார்!"

நண்பர் சின்னஞ்சிறு கோபு சார் வருகிறார்.



சி.சி.கோபு: "என்ன என்னமோ தண்ணி பாக்கெட், அப்படின்னு
பேசினாமாதிரி இருந்ததே?"

நான்: "ஏன் சார், ஆட்டா மாவுலாம் ஃபிரியா
கொடுக்கறாங்களே, புக்கு வாங்கும்போது நோட் கொடுக்கலாமே?"

சி.சி.கோபு: " நோட்? கரன்சி நோட்? அப்படின்னா
புக்கு அசசடிக்கிறவங்களே நோட்டும் அச்சடிச்சா
அந்த மாதிரி பத்து ரூபாய்க்கு புக்கு வாங்கும்போது
இருபது ருபாய் நோட்டு இலவசமாய் கொடுக்கலாம்.
இல்லேன்னா அவிங்க நோட்டு எல்லாம் வேட்டுத்தான்.
அப்புறம் நடு ரோட்டுக்குத்தான் வரணும். நல்ல
ஐடியாக் கொடுக்கறிங்களே,!!!"

நான்: "ரமேஷ்! எனக்கு ஒரு ஆட்டா மாவு பாக்கெட்
குடுங்க!"

ரமேஷ்: "  'அதிரடி' பத்திரிகை வாங்கினால்
உருட்டுக்கட்டையால ஒரு அடி ஃப்ரியாம்; வேணுமா சார்?"

நான்: "  அதிரடி' பத்திரிகை மட்டும் கொடுங்க;  ஃப்ரி
நீங்களே வெச்சிக்குங்க..."

வாடிக்கையாளர்: " ரமேஷ், அந்த ஃப்ரி தண்ணி பாட்டிலு..."

ரமேஷ்: "அடுத்த வாரம் நானே எடுத்து வைக்கிறேன் சார்,
நீங்க இன்னும் கிளம்பலையா ?
(எங்களிடம் திரும்பி) சார், அப்பா வர்றாங்க..."

சி.சி.கோபு & நான்: " சரி அப்ப வர்றோம் நாங்க "

அரட்டை தொடர(முடிய)வில்லையே என்று வருத்ததோடு
புறப்பட்டோம் அங்கிருந்து.

டிஸ்கி: பெயர் குறிப்பிடப்பட்ட பத்திரிகை தவிர ,
மற்ற உரையாடல்கள் யாவும் இடுகையின் சுவை
கூட்டலுககான உண்மையற்ற உவமைகள்தான் அன்றி,
யாரையும் சம்பந்தப்படுத்தவில்லை.

ஜிகினா - 3-ல் : குஷ்புவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?



படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Tuesday, November 16, 2010

75. ஜில்ஜில் ஜிகிர்தண்டா!

ஜில்ஜில் ஜிகிர்தண்டா!

இந்த இடுகையில் இரு இனிப்பான சங்கதிகள்!


இனிப்பு 1 :

இதை 75 -ஆவது இடுகையாய் இடுகிறேன். ஆதரவுகரம் நீட்டிவரும் அனைவருக்கும் எனது மனங்கனிந்த நன்றிகள். உங்கள் ஊக்கம், உற்சாகம் இவையே காரணங்கள்!

இனிப்பு 2 :



இன்சுவை குளிர்பானம் 'ஜிகிர்தண்டா'. இதன் செய்முறை இங்கே பதிவிடுகிறேன்.
 
இந்தக் குறிப்பை வெளியிட்ட குங்குமம் (11.01.2010)
இதழுக்கும் வழங்கிய திருமதி ரேவதி சண்முகம்
அவர்களுக்கும் நன்றிகள்.


மதுரையின் புகழ்பெற்ற 'ஜிகிர்தண்டா'வை நமது வீடுகளில்
தயா‌ர் செய்ய முடியும்? அதில் என்ன ஸ்பெஷல்?

பதில் சொல்கிறார் சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்:

நிறைய பொறுமையும் ஆர்வமும் இருந்தால்
ஜிகிர்தண்டாவை வீட்டிலேயே செய்யலாம். அதே
ஒரிஜினல் சுவையுடன் வேண்டுமானால், பாசந்தியும்
குல்ஃபியும் கடல்பாசியும் முக்கியம்.



பாசந்திக்கு:

ஒரு லிட்டர் ஃபுல் க்ரீம் பாலைக் காய்ச்சவும். குறைந்த தணலில் கொதிக்கவிட்டு, மேலே படிகிற ஆடையைத் தனியே ஒரு கிண்ணத்தில் சேகர்க்கவும். பால் நன்கு இறுகியதும், அதில் அரை ஆழாக்கு சர்க்கரை சேர்க்கவும். பால் மீண்டும் நீர்த்துக் கொள்ளும்.

மறுபடி அது கெட்டியாகிற வரை காய்ச்சி, இறுகி வரும்போது, சேகரித்து வைத்துள்ள ஆடையைச் சேர்த்து, ஆற வைக்கவும். சீவிய பாதாம் தூவி, பாசந்தியாக இதை அப்படியேவும் பரிமாறலாம்.

குல் ஃபி ஐஸ்கிரீமுக்கு:

ஒரு லிட்டர் பாலைக் காய்ச்சவும். கெட்டியானதும், முக்கால் ஆழாக்கு சர்க்கரை சேர்த்து மீண்டும் காய்ச்சவும். குழம்பு பதத்திற்கு வரும்போது இறக்கி, ஓரங்கள் நீக்கி, மிக்சியில் உதிர்த்த பிரெட் தூவிக் கலக்கவும். அதன்மேல் ஏலக்காய் தூள், பாதாம் சேர்த்து நன்கு அடித்துக் கலக்கி, ஆற வைக்கவும். குல்ஃபி மோல்டு அல்லது சின்ன கிண்ணத்தில் ஊற்றி, செட் ஆகிற வரை வரை ஃப்ரீசரில் வைக்கவும்.

*25 கிராம் கடல் பாசியை 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு வெந்நீரில் அதைக் கொட்டினால் கரைந்து விடும். அதை ஒரு தட்டில் ஊற்றி ஆற வைத்தால் செட் ஆ‌கி விடும். பிறகு அதை சிறிய துண்டுகளாக வெட்டி தனியே வைக்கவும்.

உயரமான ஒரு டம்ளரில் முதலில் பாசந்தி விடவும்.
அதன் மேல் பொடியாக நறுக்கிய கடல் பாசி போடவும்.
அதன் மேல் குல்ஃபி ஐஸ் கிரீம் போடவும்.
அதன் மேல் நன்னாரி சிரப் சிறிது ஊற்றவும்.

இதே மாதிரி இரண்டு லேயர்கள் ஒவ்வொன்றையும்
சேர்க்கவும்.  கடைசியாக பொடியாக நறுக்கி வறுத்த
பாதாம், முந்திரி சேர்த்து அப்படியே சுவைக்கலாம்.


ரொம்பவும் குளிர்ச்சியான பானம் ஜிகிர்தண்டா. காரணம்
அதில் சேர்க்கிற கடல் பாசி. வயிற்றுப் புண்களை ஆற்றும்
குணமும் அதற்கு உண்டு. வெயில் காலத்தில் சாப்பிட ஏற்றது.
 
படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Monday, November 1, 2010

ஜிகினா 1: விவ(கா)ரமான வியாபாரிகள்!

ஜிகினா 1: விவ(கா)ரமான வியாபாரிகள்!


 குமுதம் விலை 3 ரூபாய்! அடுத்தடுத்து 7 அல்லது 8
கடைகளில் விசாரித்துவிட்டேன். ஆனால் குமுதம்
கிடைக்கவில்லை. "வித்துப்போச்சு", "சரியாப்போச்சு" ,
தீர்ந்துப்போச்சு" என்றுதான் எல்லாக் கடைகளிலும்
சொன்னார்களே அன்றி, புத்தகம் எங்குமே கிடைக்கவில்லை.

அடுத்ததாய் ஒரு கடையில் விசாரித்துவிட்டு, கிடைக்காமல்
யோசனையாய் நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியே
வந்துகொண்டிருந்த நண்பன், "என்ன நிஜாம் இங்கே
யோசனையா நிக்கிறமாதிரி தெரியுதே" என்று கேட்டான்.

அவனிடம் விவரத்தை சொன்னேன். அந்தக் கடையைத்
திரும்பி ஒரு முறை பார்த்துவிட்டு, "கடைக்காரர்கிட்டப்
போயி 'குமுதம் மட்டும் தாங்க' என்று கேள்" என்றான்.
நான் அவனை ஙே என்று விழித்துப் பார்த்தேன்.
"போ! மறுபடியும் போய் நான்  சொன்னமாதிரி கேள்" என்றான்.

நான் தயக்கமாய் கடைக்காரரிடம் சென்று, "குமுதம்
மட்டும் கொடுங்க" என்று கேட்டேன். அலமாரி
உள்ளிருந்து அடுக்கியிருந்த குமுதத்தில் ஒன்று
எடுத்து என்னிடம் கொடுத்தார்.

அட! வாங்கிப் பார்த்தேன். 'இந்த இதழுடன் விக்ஸ்
வேபோரப் ஒன்று இலவசம்' என்று அட்டையில்
போட்டிருந்ததைப் பார்த்து கடைக்காரரிடம், 'அண்ணே..."
என்று ஆரம்பித்தேன். "தம்பி, குமுதம் மட்டும் கேட்டிங்க.
வாங்கிட்டிங்கள்ல? போய்ட்டேயிருங்க!" என்று விரட்டினார்
அவர்.

நண்பன் விளக்கம் சொன்னான்.

"குமுதம் 3 ரூபாய். விக்ஸ் வேபோரப்பும் 3 ரூபாய்! குமுதம்
வித்தா 30 பைசா கிடைக்கும். விக்ஸ் டப்பா ஃப்ரியாக்
கொடுக்கணும். அதனால் குமுதத்தை உள்ள்ள்ளே
எடுத்து ஒளிச்சிட்டு, விக்ஸை எடுத்து ஷோகேஸ்ல
வரிசையா அடுக்கிட்டாங்க. குமுதம்
வித்துப்போயிடுச்சின்னு சொல்லிடுறாங்க. சிலபேரு
குமுதம் மட்டும் கொடுன்னு கேக்குறவங்களுக்கு அதை
மட்டும் கொடுத்திடறாங்க. விக்ஸ் வேபோரப்பை ஸ்டாக்
பண்ணிட்டு, அதை 3 ரூபாய்க்கு வித்திடுவாங்க. 2 ரூபாய்
70 பைசா அடக்கவிலை குமுதத்தவச்சி 6 ரூபாய்
சம்பாதிக்கிறாங்க. இதுதான் விஷயம்." இப்படி நண்பன்
சொன்னதைக் கேட்டு அசந்துபோனேன். (122% இலாபம்.)

அடுத்த முறை இலவசத்தைக் கொடுக்கும்போது,
பொருளைத் தனியாகக் கொடுக்காமல்,
பாலித்தீன் கவரில் குமுததையும் இலவசப்
பொருளையும் போட்டு பேக் செய்து கொடுத்து
விட்டது குமுதம். இப்போது வியாபாரிகள்
பாலித்தீன் கவரிலிருந்து எடுத்து குமுததை
ஒளித்து வைக்கவுமில்லை; இலவசப்
பொருளை ஷோகேசில் அடுக்கவுமில்லை.

காரணங்கள்:

1. குமுதத்தின் விலையோடு ஒப்பிடுகையில்
இலவசப் பொருளின் விலை மிகவும் மலிவு.

2. முன் நடந்த சம்பவத்தின்போதே கடைக்காரர்களை
குமுதம் ஏஜெண்ட் , இனி இதுபோல்
செய்யக்கூடாதென எச்சரிக்கை செய்துவிட்டார்.
பரிதாப வியாபாரிகள்!!!

ஜிகினா 2 -ல் '10 புரோட்டா பார்சல்!'


அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Wednesday, October 20, 2010

நகைச்சுவை; இரசித்தவை 12

நகைச்சுவை; இரசித்தவை 12
========================



"தலைவரோட வெளிநாட்டுக் காருல என்ன எழுதியிருக்கு?"

" 'BE INDIAN; BUY INDIAN'-னு எழுதியிருக்கு!"

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

"டாக்டர்! எனக்கு உடம்பு குண்டாயிட்டே போகுது.
உடம்பு குறையறதுக்கு என்ன செய்யணும்னு
சொல்லுங்க, டாக்டர்!"

"ஒரு மாதத்துக்கு தினமும் காலை, மதியம், இரவு
மூணு வேளையும் மூணு பிரட் ஸ்லைஸ் சாப்பிடுங்க.
ஒரு மாதம் கழித்து மறுபடியும் வாங்க!"

"சரி டாக்டர். மூணு துண்டு பிரட் சாப்பிடச்
சொன்னீங்களே, அது எப்ப சாப்பிடணும்
சாப்பாட்டுக்கு முந்தியா, சாப்பாட்டுக்கு பிந்தியா?"

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

"ராஜு, இந்தக் காலண்டர் எங்க மாட்டலாம் சொல்லு?"


"அப்பாதான் டெய்லி காலண்டர்லருந்து தாள்
கிழிச்சி, கிழிச்சி போடுவாரு. அவருக்கு எட்டாத
உயரத்தில காலண்டர மாட்டும்மா!"

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அன்பன்,

அ.முஹம்மது நிஜாமுத்தீன்.



படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Sunday, October 10, 2010

பதிவுலகில் நிஜாம் பக்கம்!

'குட் பிளாக்ஸ்' பகுதியில் இந்த இடுகையை இணைத்துள்ள 'யூத்ஃபுல் விகடனு'க்கு நன்றி!!


1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

NIZAMUDEEN (அ. முஹம்மது நிஜாமுத்தீன். )

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

ஆமாம், எனது உண்மையான பெயர்தான்.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....

காலடி எடுத்து வைத்ததா...?
முதல்ல 'தமிழ்குடும்பத்'தில் எழுதிக் கொண்டிருந்தேன்.
அப்புறம் வலைப்பூக்களில் பின்னூட்டங்கள். தொடர்ந்து
வலைப்பூ...

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

முதலில் அன்பர்களின் வலைப்பூக்களில் கமெண்ட்
போட்டுக் கொண்டிருந்தேன். அடுத்ததா திரட்டிகளில்
கொண்டு இணைத்தேன். இப்போ நம்மையும் நம்பி ஒரு
நட்புவட்டம் வந்து அன்போடு ஆதரவு தர்றாங்களே...

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

இந்த வலைப்பதிவில் எனது சொந்த அனுபவங்களை,
நிறையவே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அதை
சுவாரஸ்யமாய் படித்து பல பதிவர்கள் 'இப்படியெல்லாம்
நடக்குதா?" என்று வியப்போடு கேட்டுமிருக்கிறார்கள். இதுதான் விளைவு.

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

நண்பர்களை சம்பாதிப்பதற்காகவும் அவர்களுக்கு நன்றாக பொழுது போவதற்காகவும் இந்தப் பதிவுகளை எழுதுகிறேன்.

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒன்னு போதுமே!!!

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

மற்றவர்களின் மனம் வேதனைப்படும்படி எழுதுபவர்களின்மேல் கோபம் ஏற்பட்டதுண்டு. ஆனால், சிலரிடத்தில் பொறாமை ஏற்பட்டதில்லை; வியப்புதான் ஏற்பட்டிருக்கிறது. தினம் பதிவுகள் தரும்
வேலன் சார், 500 ௦௦பதிவுகளுக்குமேலும் அசராமல்
எழுதிக்கொண்டிருக்கும் மாயவரத்தான், பன்முகக்
கலைஞர் சுமஜ்லா -- என்று வியப்புக்கள் ஏற்படுத்தும் பல பதிவர்கள் உண்டு.

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி...

அவுங்கதான் எனக்கு வலைப்பூ ஆரம்பிங்கன்னு ஐடியா
கொடுத்தாங்க; முதலாவது கமெண்ட்டும் போட்டாங்க. அந்தப் பாராட்டு எனக்கு
அடுத்தடுத்து எழுத உதவியாயிருந்தது. நன்றி சகோதரி சுமஜ்லா.

10.கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

என்னைப் பற்றியா...? எனது சிறு வயது முதலே பத்திரிகைகளில் நிறைய எழுதியும்
பரிசுகள் பெற்றும் இருக்கிறேன். இப்போ உங்கள் ஆதரவோடு வலைப்பூ. வேற ஏதாவது கேள்விகள் இருக்கா?

(டிஸ்கி: தொடர் பதிவிற்கு எனக்கு அழைப்பு விடுத்த சகோதரி அன்னுவிற்கு நன்றி!)

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Friday, October 1, 2010

குண்டப்பா & மண்டப்பா (4)

குண்டப்பா & மண்டப்பா (4)




குண்டப்பா & மண்டப்பா (3) இங்கே!

மண்டப்பாவை, குடும்பத்தோடு விருந்துக்கு வருமாறு
அழைத்திருந்தார் குண்டப்பா. சம்மதித்த மண்டப்பா,
விருந்து நாளன்று தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன்
வந்திருந்தார்.

விருந்து கோலாகலமாக ஆரம்பமாகியது. தடபுடலான
சாப்பாடு. மட்டன் பிரியாணி, சிக்கன் ரோஸ்ட், தாளிச்சா,
கறி குழம்பு, பொறியல், வதக்கல், துவையல், பச்சடி,
பாயசம், பழம் என்று அமோகமாயிருந்தது சாப்பாடு.

"நல்லா சாப்பிடு; நல்லா சாப்பிடுங்க!" என்று
மண்டப்பாவையும் அவர் மனைவி, பிள்ளைகளையும்
கவனித்துக் கொண்டிருந்தார் குண்டப்பா.

சாப்பிட்டுக் கொண்டே, "சாப்பாடு எல்லா ஐட்டமும்
வெகு பிரமாதம்; நல்லா டேஸ்ட்டா இருக்கு!
உன் மனைவி சுவையாய் சமைத்திருக்கிறாங்க!" என்று
கூறிக் கொண்டே சாப்பிட்டார், மண்டப்பா.

அப்போது, "என் மனைவி எல்லா சாப்பாடும் ரொம்ப
சுவையாய் சமைப்பாள். அதிலும் ஊறுகாய்
ரொம்ப அருமையாய் செய்வாள். மாவடு ஊறுகாய்
என் மனைவி செய்தது, அஞ்சு வருஷமாய் எங்களிடம்
இருக்கு!" என்று மனைவியைப் பற்றி பெருமையாய்
மண்டப்பாவிடம் சொன்னார் குண்டப்பா.

"அப்படியா, அதை எடுத்துவரச் சொல்லு; சாப்பிட்டுப்
பார்ப்போம்" என்றார் மண்டப்பா.

"என்னது, சாப்பிட்டுப் பார்க்கணுமா!? அப்படி சாப்பிட்டு
பார்த்திருந்தால், இப்படி அஞ்சு வருஷம் வைத்திருக்க
முடியுமா???" என்று பதறினார் குண்டப்பா.

அதைக் கேட்ட மண்டப்பா விருந்து சாப்பிடுவதை
மறந்து திகைத்துவிட்டார். குண்டப்பா யாரு? அறிவுக் கொழுந்து அல்லவா!


அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Friday, September 17, 2010

குண்டப்பா & மண்டப்பா - 3

குண்டப்பா & மண்டப்பா - 3




குண்டப்பா & மண்டப்பா - 2 இங்கே!


குண்டப்பாவும் மண்டப்பாவும் ஒரு நாள்
இரவு காட்சி திரைப்படம் பார்க்கப் போனார்கள். 5 கி.மீ.
தொலைவிலுள்ள பக்கத்து ஊருக்கு போகும்போது
பஸ்ஸில் போய்விட்டார்கள்.

அது ஒரு பேய் படம். (ஆமாம்... ஒரு பேய்தான்!)
பயந்துகொண்டே பார்த்து இரசித்துவிட்டு, ஊருக்குத்
திரும்பி வருவதற்கு நள்ளிரவு 12 மணியாகிவிட்டதால்
பஸ் இல்லை. ஐந்து கிலோ மீட்டர் தூரத்தையும்
நடந்து போய்விடலாம் என்று நடக்க ஆரம்பித்தார்கள்.
அவர்களின் ஊர் முனைவரையிலும் வந்துவிட்டார்கள்.

அங்கிருந்து சாலை இரண்டுபுறமும் பிரிந்து
குண்டப்பா வீட்டிற்கு வலப்புறம் செல்லவேண்டும்.
மண்டப்பா வீட்டிற்கு இடப்புறம் செல்லவேண்டும்.

அந்த இடம் வந்ததும் குண்டப்பாவிற்கு அதற்குமேல்
தனியாகச் செல்ல பயம் வந்துவிட்டது. மண்டப்பாவை
தனது வீடுவரை வந்து விட்டுச் செல்லுமாறு
கூப்பிட்டான். அதனால், குண்டப்பா வீடுவரை
வந்த மண்டப்பா கிளம்பும்போது அவனுக்கு பயம்
வந்துவிட்டது. "ம்ஹூம் எனக்கு பயமாயிருக்கு.
நீ எங்கள் வீடுவரை வந்து விட்டுட்டுப் போ" என்று
குண்டப்பாவைக் கூப்பிட்டான்.

"நீ முதலிலேயே கூப்பிட்டிருந்தால் நானே வந்து
உன் வீடுவ்ரை கூடவந்து விட்டிருப்பேனே;
நீ என்னைவிட பயந்தாங்கொள்ளியா இருக்கியே!"
என்று திட்டிக்கொண்டே மண்டப்பாவை அவன் வீட்டில்
கொண்டுபோய் விட்டான், குண்டப்பா.

அப்படி கிளம்பும்போது குண்டப்பாவுக்கு பயம்வந்து,
மண்டப்பாவைத் துணைக்குக் கூப்பிட்டான் குண்டப்பா!
இப்படி இருவரில் யாருக்குமே தனியாக துணிச்சலாக
போவதற்கு தைரியம் வரவில்லை.

இந்த மாதிரியே இரண்டு பேரும் மாறி, மாறி
இருவர் வீட்டிற்கும் நடந்துகொண்டே இருந்தார்கள்.

அப்புறம்...
பொழுதும் விடிஞ்சிருச்சி!
கதையும் முடிஞ்சிருச்சி!!


அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

குண்டப்பா & மண்டப்பா - 4 இங்கே!


வாக்கு அளித்து, கருத்து தெரிவியுங்கள்! நன்றி!!

Thursday, September 9, 2010

ஈத் முபாரக்!

அன்பர்கள் அனைவருக்கும்
  இனிய ஈத் முபாரக் நல்வாழ்த்துக்கள்!

பெருநாள் வாழ்த்துக் கவிதை கீழே கிளிக் செய்து படியுங்கள்:
இன்பத் திருநாள் ஈகைப் பெருநாள்!




வாக்கு அளித்து, கருத்து தெரிவியுங்கள்! நன்றி!!

Tuesday, August 31, 2010

இ.ஆ. இ.ஆ. = இனிதே ஆரம்பம், இரண்டாம் ஆண்டு!

இ.ஆ. இ.ஆ. = இனிதே ஆரம்பம், இரண்டாம் ஆண்டு!


   அன்பிகினிய அன்பர்கள் அனைவரையும்
மகிழ்வோடு வரவேற்கிறேன்.

   இன்று, இனிய நாள்! அதாவது நமது
'நிஜாம் பக்கம்' இன்று இரண்டாம் ஆண்டில்
உங்கள் உள்ளார்ந்த ஆதரவோடு அடியெடுத்து
வைக்கின்றது.

   சற்றே பின்னோக்கிப் பார்க்கிறேன். இதே
ஆகஸ்ட் 31-ஆம் நாள் சென்ற ஆண்டில்
'தமிழ்குடும்பம் திரு. தமிழ்நேசன் அவர்களின்
நல்வாழ்த்துக்களோடும் எழுத்தாளர் திருமதி.சுமஜ்லா
அவர்களின் உதவியோடும் ஆரம்பமாகியது
நமது வலைப்பூ.

52 வாரங்கள்;
67 இடுகைகள்;
50+ தொடரும் அன்பர்கள்;
பல விருதுகள்;
பற்பல பின்னூட்டங்கள்;
அதிகமான வாக்குகள்
-என்று இந்த ஓர் ஆண்டு மகிழ்வோடு
நிறைவடைந்துள்ளது.
  
   வேலைப் பளு காரணமாக அதிக எண்ணிக்கையில்
பதிவுகள் அளிக்க இயலவில்லை.இருப்பினும்
செப்டம்பர் 2009-ல் அதிகபட்சமாக 25 இடுகைகள்
பதிந்துள்ளேன்.
  
   இந்த ஓராண்டில் என்னிடம் வலைப்பூ ஆரம்பிப்பது
பற்றி சில அன்பர்கள் விவரம் கேட்டார்கள்.
அதில் சிலர் புதிதாய் வலைப்பூவும்
ஆரம்பித்துள்ளார்கள்.

    சமீபத்தில் நண்பர் இளம் தூயவன் பின்னூட்டத்தில்,
"என்ன நகைச்சுவைக்கு மாறிட்டீங்க?" என்று
கேட்டார். அதன் பிறகுதான் நானே கவனித்தேன்,
எனது லேபில்களை. அதில்,
பல்சுவை + கதம்பம் =7
செய்திக்குறிப்புக்கள் =6
கவிதைகள் =6
பாடல்கள் =7
சிந்தனைகள் =9
நகைச்சுவை =33
-என்று பட்டியல் இருக்கக் கண்டேன்.
ஆக, எனது இடுகைகளில் கிட்டத்தட்ட
பாதியளவில் நகைச்சுவை இடம்பெற்றிருக்கிறது
என்பதை காணமுடிந்தது.

   இனிவரும் காலங்களில் அடிக்கடி இடுகைகள்
எழுதிட நினைத்துள்ளேன், இறைவன் நாடினால்.

   இந்த மகிழ்வான தருணத்தில், எனது இடுகைளைப்
படித்து, பின்னூட்டமிட்டவர்கள், கருத்துரை
வழங்கியவர்கள், வாக்குகள் அளித்தவர்கள்,
விருதுகள் வழங்கியவர்கள், பின் தொடர்பவர்கள்,
மெயில்மூலமும் தொலைபேசிமூலமும் தொடர்புகொண்டு
கலந்துரையாடியவர்கள், இடுகைகளிற்கான
இணைப்பாகயிருந்து உதவிய அனைத்து
திரட்டிகள், கூகுள் நிறுவனம், தங்களது
வலைப்பூகளில் எனது வலைப்பூவிற்கு
இணைப்புக் கொடுத்துள்ளவர்கள், எனது
வலைப்பூ படித்து கருத்துரைகள் கூறிடும்
எனது அருமை நண்பர் முஹம்மது ஃபயாஸ்
மற்றும், மற்றும், மற்றும், மற்றும்
இரசித்து மகிழ்ந்த அன்பான உள்ளங்கள்
அனைவருக்கும் எனது மனமார்ந்த
நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.

   அடுத்து வரும் இடுகைகளில்
நான் பார்த்த(வை), படித்த(வை), கேட்ட(வை)
சில குறிப்புக்களை பதிவிடலாம் என்று
விருப்பம் கொண்டுள்ளேன்.



   இதுவரை தொடர்ந்து வந்ததைப் போன்றே
இனியும் தொடர்ந்துவர இருக்கும் அனைத்து
நல்லிதயங்களுக்கும் எனது மனங்கனிந்த
நன்றிகள்!



அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வாக்கு அளித்து, கருத்து தெரிவியுங்கள்! நன்றி!!

Sunday, August 1, 2010

வானொலி குறுக்கெழுத்துப் போட்டி! (நகைச்சுவை)

வானொலி குறுக்கெழுத்துப் போட்டி! (நகைச்சுவை)

அன்புத் தம்பி இப்படிக்கு நிஜாம் தன்னுடைய 'தூர்தர்ஷன்
விளம்பரங்கள்' என்ற இடுகையில் வானொலி பற்றிய எனது
அனுபவங்களை எழுதுமாறு ஆலோ(யோ)சனை
கூறியிருந்தார். வாங்க, என்னுடைய அனுபவங்களுக்கு...

அந்த தூர்தர்ஷன் (டி.டி.) காலத்தில் எங்கள் வீட்டில்
தொலைக்காட்சியே கிடையாது. எங்கள் தாத்தா,
பெரியத்தா, பெரியம்மா போன்றோர்களின் கண்டிப்புதான்
காரணம். (இப்பவும் அந்த மாதிரியே இருந்திருக்கலாம்னு
தோணுதே!)

ஆனால், நான் வானொலி தொடர்ந்து கேட்பேன். சென்னை
வானொலி விவித் பாரதியின் வர்த்தக ஒலிபரப்பில் அனைத்து நிகழ்ச்சிகளையும் கேட்டாலும் நாடகங்கள்
விரும்பிக் கேட்பேன். திங்கள் முதல் வியாழன்
வரை தினமும் இரவு 9 - 15 மணி முதல் 9 - 30 மணி வரை
'வண்ணச்சுடர்' என்ற நிகழ்ச்சியில் நான்கு பகுதிகள் தொடர் நாடகம் ஒலிபரப்பாகும்.

மறு வாரம் திங்கள் முதல் வியாழன் வரை
இரவு 9 -15 முதல் 9 -30 வரை எட்டு பகுதிகள்
மேடை நாடகங்கள் ஒலிபரப்பாகும்.
ஆர். எஸ். மனோகர், ஹெரான் ராமசாமி, டெல்லி கணேஷ்,
ஒய். ஜி. மகேந்திரன் போன்றவர்களின் மேடை நாடங்கள்
ஞாபகம் இருக்கின்றன. மற்ற மூன்று தினங்களில்
கால் மணி நேர சிறு நாடகங்கள் ஒலிபரப்பாகும்.

ஞாயிற்றுக் கிழமைகளில் மதியம் 12 -௦௦ மணிக்கு ஹார்லிக்ஸ்
வழங்கிய'சுசித்ராவின் குடும்பம்' மற்றும் 'கருமமே
கண்ணாயினார்' ஆகிய நாடகங்கள் ஒலிபரப்பாயின.

அப்போது விவித் பாரதியில் வரும் ஒரு விளம்பரம்:
"ஹேய் லல்லி, ஆளே கலர் மாறிட்டியே, எப்படி?"
"ஓ அதுவா, FAIR அண்ட் லவ்லிதான் காரணம். நீயும் தடவு!"
"அப்படியா? பேர் என்ன லல்லி?"
" ம்ஹும், FAIR அண்ட் லவ்லி!"
இந்த விளம்பரத்தையும் நாடகம்போலவே இரசிப்பேன்.

இலங்கை வானொலியில் ஒலிபரப்பானவற்றில் நாடகம்
ரொம்பப்பிடிக்கும். தமிழ்ச் சேவை ஒன்றில் தினமும்
இரவு 8 மணிக்கு ஒலிபரப்பாகும் இஸ்லாமிய நிகழ்ச்சிகளில்
வாரம் ஒரு முறை மட்டும் அரை மணி நேர நாடகம்
நடைபெறும்.

மற்றம் தமிழ்ச் சேவை இரண்டில் ஞாயிற்றுக் கிழமைகளில்
மதியம் 2 மணிக்கு 'இந்தியன் ஓவர்சீஸ் வங்கி' வழங்கிய
கதை, கவிதை, சிறுகதை போன்றவற்றின் தொகுப்பான
பல்சுவை நிகழ்ச்சியை பி. ஹெச். அப்துல் ஹமீது
வழங்குவதைக் கேட்பது உண்டு.

அதே தமிழ்ச்சேவை இரண்டில் ஞாயிறு மாலை 4 - 30
மணிக்கு 'மக்கள் வங்கி' வழங்கிய தொடர் நாடகத்தில்
நிறைய பாடல்களும் வரும்.

இலங்கை வானொலியில் கேட்ட அருமையான
பாடலை நீங்கள் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்.


நாடகங்கள் நான் கேட்பது போலவே போட்டிகளில்
பங்கு பெற்று சரியான விடை எழுதி பரிசுகளும்
வாங்குவதுண்டு. தமிழ்ச்சேவை ஒலிபரப்பைத்
தொடர்ந்து 'சர்வதேச ஒலிபரப்பு' சேவை ஆரம்பமானது.
அதில் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை
9-15க்கு 'வீரா ஹெர்பல் சிகைக்காய் வழங்கும்
வானொலி குறுக்கெழுத்துப் போட்டி' என்று ஒரு நிகழ்ச்சி.
இதை அறிவிப்பாளர் பி.ஹெச். அப்துல் ஹமீது அவர்கள்
தொகுத்து வழங்கினார். அந்நிகழ்ச்சியை சென்னையிலுள்ள
நிறுவனம் வழங்கியதால் அதில் கேட்கப்பட்ட
கேள்விகளுக்கான விடைகளை சென்னை முகவரிக்கு
உள்நாட்டுக் கடிதத்திலேயே அனுப்ப வேண்டும்.

அவ்வாறே ஒரு தடவை நானும் பதில்களை
அனுப்பிவிட்டு அடுத்த வாரம் பரிசு பெற்றவர்களில்
எனது பெயரும் வருகிறதா என்று ஆவலோடு
காத்திருந்தேன்.

அடுத்த ஞாயிறும் வந்தது. 9 - 15 க்கு நிகழ்ச்சியும்
ஆரம்பமானது. நிகழ்ச்சி முடிவில் "சென்ற வாரம்
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடை
எழுதியவர்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட
10 நேயர்கள்" என்று சொன்ன அறிவிப்பாளர், அதில்
என் பெயரையும் பரிசு பெற்ற நேயராக அறிவித்தார்.


[குமுதம் குறுக்கெழுத்துப் போட்டியில் பரிசு!]

"இவர்களுக்கான பரிசுப் பொட்டலம் நேரடியாக
அவர்களின் இல்லங்களுக்கு விரைவில் அனுப்பி
வைக்கப்படும்" என்றும் அறிவித்தார்.

'அப்படியெனில் நமக்கும் பரிசு வந்துவிடும்' என்ற
எண்ணத்தோடு காத்திருக்க ஆரம்பித்தேன்.
இவ்வாறு நான்கைந்து தினங்கள் சென்ற
நிலையில், அப்படிக்கா மயிலாடுதுறைக்கு
போய்விட்டு இப்படிக்கா வீட்டிற்கு வந்தேன்.


எங்கள் அம்மா ஒரு பார்சலை என்னிடம் நீட்டி,
"கூரியர்லருந்து வந்து கொடுத்திட்டுப் போனாங்க"
என்றார்கள்.

ஆர்வமோடு பிரித்துப் பார்த்தேன். சுமார்
ஐந்து அங்குல உயரத்தில், சுமார் நான்கு
அங்குல விட்டத்துடன் கூடிய அழகான
இரு பிளாஸ்டிக் டப்பாக்கள். அதன்மேலே
ஒரு டப்பாவில் 'வீரா ஹெர்பல் சிகைகாய்த்
தூள் ஃபார் ஆர்டினரி ஹேர்' என்றும்
மற்றொரு டப்பாவில் 'வீரா ஹெர்பல்
சிகைக்காய்த் தூள் ஃபார் ட்ரை ஹேர்'
என்றும் பல வண்ண பிளாஸ்டிக் தாள்
ஒட்டியிருந்தது.

இப்பவும் ஆசையோடு ஒரு டப்பாவைப் பரித்துப்
பார்த்தேன். உள்ளே அழகிய பிளாஸ்டிக் கிண்ணமும்
பிளாஸ்டிக் கரண்டியும் இருக்க, அதை எடுத்துவிட்டுப்
பார்த்தேன். உள்ளே சிகைக்காய்த் தூள் இருந்தது.
மற்றொரு டப்பாவிலும் அதேதான். ஆனால்,
சிகைக்காய்த் தூள் கலர் மட்டும் சற்று மாறி
இருந்தது.


பிளாஸ்டிக் தாளில் படித்துப் பார்த்தேன்.
300 கிராம் சிகைக்காய்த்தூள் + கிண்ணம்
மற்றும் ஸ்பூன் ஃப்ரீ என்று இருந்தது.
இரண்டு டப்பாவிலும் விலை 8 ரூபாய் என்று
போட்டிருந்தது.

"இதுதான் பரிசுப் பாக்கெட்டா? சரி பரவாயில்லை,
ஃப்ரீயாத்தானே வந்தது?" என்றேன்.

அதற்கு, "அது எப்படி ஃப்ரீயாகும்? கூரியர் ஆள்
சர்விஸ் சார்ஜ் என்று 12 ரூபாயும் காஃப்பிக்கு
டிப்ஸ் என்று 3 ரூபாயும் வாங்கிட்டுப் போனானே!"
என்றார்கள் எங்கள் அம்மா. (இந்த சம்பவம்
நடந்த காலத்தில், அதாவது சுமார் 15 ஆண்டுகளுக்கு
முன் நகர எல்லையைத் தாண்டி இருக்கும் ஊர்களுக்கு
கூடுதலாக பஸ் சார்ஜ் வசூலிப்பார்கள். சில
நேரங்களில் அனுப்புவரிடமிருந்தும் அல்லது சில
நேரங்களில் பெறுநரிடமிருந்தும் இதை வசூல்
செய்து கொள்வார்கள்.)

அதோடு விட்டார்களா? 'இதுதான் சுண்டைக்காய்
கால் பணம்; சுமைக்கூலி முக்கால் பணம்'
என்பார்கள். நீயும் உன் பரிசும். 16 ரூபாய்
பொருளுக்கு 15 ரூபாய் தண்டம். அதுக்கு
நம்ம கடைத் தெருவிலயே அந்தக் காசுக்கு
நாமே வாங்கிக்கலாமே, அது எதுக்கு பரிசுன்னு
ஒரு பேரு? இதெல்லாம் நீ பண்ற கூத்து" என்று
சப்தம் போட்டுக் கொண்டே (அதாவது திட்டிக்
கொண்டே) சமையலறைக்குப் போய் விட்டார்கள்.

நானோ நொந்து போனேன். நல்ல வேளை- அந்த
பார்சலை அனுப்புவதற்கு கூரியர் கம்பெனிக்கு
அந்த வீரா சிகைக்காய் நிறுவனம் பணம் செலுத்தி
இருக்குமே, அந்த சேதியும் எங்கள் அம்மாவிற்குத்
தெரிந்திருந்தால், திட்டு இல்லை; எனக்கு
மண்டையில் குட்டுதான்! நல்ல வேளை தப்பிச்சேம்ப்பா!


அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.




வாக்கு அளித்து, கருத்து தெரிவியுங்கள்! நன்றி!!

Saturday, July 24, 2010

நகைச்சுவை; இரசித்தவை - 11

நகைச்சுவை; இரசித்தவை - 11




பள்ளி மாணவர்கள் இருவர்...

ராமு: ஏன்டா ராஜு சோகமா இருக்கே?

ராஜு: இன்னைக்கு என்னோட இராசிபலன்ல
"உங்கள் மனைவி சுகவீனம் அடைவார்"னு
போட்டிருக்குடா. அதான் எங்கே இருக்காளோ,
எப்படி இருக்காளோனு வருத்தமா இருக்கேன்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

நோயாளி: டாக்டர், தினம் காலையில் எழுந்ததும்
அரை மணி நேரம் மயக்கமாவே இருக்கு. என்ன
செய்யலாம் டாக்டர்?

டாக்டர்: அப்படின்னா அரை மணிநேரம் தாமதமா
எழுந்திரிக்கலாம்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

நோயாளி: டாக்டர், நான் தினமும் 12 மணி நேரம்
தூங்கறேன். அலுப்புதானே டாக்டர்?

டாக்டர்: அது அலுப்பு இல்லை; உன்னோட
கொழுப்பு!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வாக்கு அளித்து, கருத்து தெரிவியுங்கள்! நன்றி!!

Monday, July 5, 2010

நகைச்சுவை; இரசித்தவை - 10

நகைச்சுவை; இரசித்தவை - 10



விமலா: "ஏய் கலா, நான் உன் திருமணத்திற்கு

வரமுடியலடி. அந்த ஆண்கள் பக்கத்தில்

உட்கர்ந்திருக்கிறாங்கள்ல அவங்கள்ல

உன் கணவர் யாருன்னு காட்டேன்"

கலா: "அந்த மூனாவது வரிசையில, புளு பேண்ட் போட்டு

வெள்ளை சட்டையை இன் பண்ணிக்கிட்டு..."

விமலா: "ஆமாம்"

கலா: "கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு..."

விமலா: "ஆமாம்"

கலா: "நல்லா முரட்டு மீசை வெச்சிக்கிட்டு..."

விமலா: "ஆமாம்"

கலா: "தலையில் சுருள் முடியோட..."

விமலா: "ஆமாம்"
 
கலா: "கழுத்தில கோல்ட் செயின் போட்டுக்கிட்டு..."

விமலா: "ஆமாம்"

கலா: " ஷூ போட்டுக்கிட்டு, உட்கார்ந்திருக்காரே..."

விமலா: "ஆமாம்"

கலா: "நல்லா நடிகர் அஜீத் கலர்ல..."

விமலா: "ஆமாம்"

கலா: "அவருக்கு வலப்பக்கம் உட்கார்ந்திருக்கிறவருதான்

என் கணவர்!!!"
*********************************************************************
திருமண விருந்தில்...


பந்தி பரிமறுபவர்: "ஏம்ப்பா, நீ போன பந்தியிலயும்

சாப்பிட்டியே! இந்த பந்தியில் மறுபடியும் சாப்பிடறியே?"

சாப்பிடுபவர்: "ஆமாங்க, உங்களுக்கு ஞாபக சக்தி

அதிகம். எனக்கு ஜீரண சக்தி அதிகம்"

**************************************************************

முதலாம் நபர்: "என்ன சார், நேற்று இரவு உங்க

வீட்டிலருந்து அடிதடி சத்தமெல்லாம் கேட்டுச்சே,

எதுவும் சண்டையா சார்?"

இரண்டாம் நபர்: "ஆமாம் சார், எனக்கும் என் மனைவிக்கும்

சண்டை. அவள் என்னை அடிக்க, என்னை அவள் அடிக்க,

அவள் என்னை அடிக்க, என்னை அவள் அடிக்க,

அவள் என்னை அடிக்க, என்னை அவள் அடிக்க...."

**************************************************************

அன்பன்,

அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
ஒரே ஒரு வாக்கு! ஓஹோன்னு வாழ்த்து!!

Saturday, May 29, 2010

சர்வதேச புகையிலை எதிர்ப்பு நாள்!

சர்வதேச புகையிலை எதிர்ப்பு நாள்!







சர்வதேச புகையிலை எதிர்ப்பு நாள் [World No Tobacco

Day], ஓவ்வோர் ஆண்டும் மே 31ஆம் நாள் உலகம்

முழுவதும் கடைபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.



புகையிலையை உள்ளடக்கமாகக் கொண்ட சிகரெட்,

சுருட்டு மற்றும் வெற்றிலைப் பாக்குப் புகையிலை

போன்றவற்றை நுகர்வதால், அதைப் பயன்படுத்துவோர்

மற்றும் சுற்றிலும் உள்ளோர் தாக்குதலுக்குள்ளாகி

அடைகின்ற பாதிப்புக்களை அறிந்தும் நாம் அவற்றில்

நம்மை இழந்து, மீள முடியாமல் தவித்து வருகிறோம்..



நாமும் நமது சக உறவினர்களும் சுற்றத்தார்களும்

சுகமான நலவாழ்வு வாழ, புகையிலையை தவிர்த்து,

புத்துணர்ச்சிப் பெறுவோம்!!!



அன்பன்,

அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
 
 
[படம் நன்றி: தினமலர்]


ஒரே ஒரு வாக்கு! ஓஹோன்னு வாழ்த்து!!

Sunday, May 16, 2010

தினமும் தொழிலாளியைப் போற்றுவோம்!!!

தினமும் தொழிலாளியைப் போற்றுவோம்!!!







கட்டடம் கட்டும் கொத்தனார்
தோட்டம் பயிரிடும் தோட்டக்காரர்

துணிகள் நெய்யும் நெசவாளர்
வீட்டில் உதவும் வேலையாளர்

சமையல் செய்யும் சமையல்காரர்
சலவை செய்யும் சலவைக்காரர்

வாகனம் ஓட்டும் ஓட்டுனர்
சீட்டு கொடுக்கும் நடத்துனர்

தலைமுடி திருத்தும் நிபுணர்
துப்புறவு செய்யும் பணியாளர்

சேவை செய்யும் செவிலியர்
காவல் செய்யும் காவலாளி

கவிதை எழுதும் கவிஞன்
கதைகள் சொல்லும் கதைஞன்

துணிகள் தைக்கும் தையல்காரர்
அஞ்சல் தரும் அஞ்சல்காரர்

பத்திரிகை போடும் சிறுபையன்
பால்தனை ஊற்றும் பால்காரர்

தானியம் தருவான் விவசாயி
பொருட்கள் விற்கும் வியாபாரி

மூட்டை தூக்கும் சுமைகூலி
ஆடுகள் மேய்க்கும் இடையர்

கணக்குப் போடும் கணக்காளர்
கணிணியில் கலக்கும் பொறியாளர்

சட்டம் காக்கும் காவலர்
மருத்துவம் பார்க்கும் மருத்துவர்

நீதியை நா(ட்)டும் வழக்கறிஞர்
மக்களை ஆளுகின்ற அதிகாரி

இவர்கள் அனைவரும் உழைப்பாளி
இப்படியும் அழைக்கலாம் 'தொழிலாளி'

திகட்டாத வளங்கள்பெற வாழ்த்துவோம்!
தினமும் தொழிலாளியைப் போற்றுவோம்!!

உலகத் தொழிலாளர் அனைவருக்கும்
தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்!!!

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

29-04-2009 அன்று தமிழ்குடும்பத்தில் இது வெளியானது.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Tuesday, April 13, 2010

ரயில் வரும் நேரமாச்சு!


ரயில் வரும் நேரமாச்சு!


பயணம் செய்வதற்கு எனக்கு மிகவும் படித்த வாகனம்
எதுவென்றால், அது ரயில்தான். இதை புகைவண்டி,
தொடர்வண்டி என்று தமிழில் குறிப்பிடுகிறார்கள்.

நான் 1990-களின் ஆரம்பத்தில் சிதம்பரத்தில் உள்ள
தி புரபஷனல் கூரியர் நிறுவனத்தில் சுமார் ஆறு மாத
காலம் பணியாற்றினேன். அது கூரியர் சர்வீஸ்களின்
ஆரம்பக் காலம்.

அப்போதெல்லாம் வெளிநாட்டிலிருந்தும்,
வெளிமாநிலத்திலிருந்தும், தமிழ்நாட்டின்
எந்த ஊரிலிருந்தும் வரும் கடிதம் மற்றும்
டாக்குமெண்ட்கள் போன்றவை சென்னைக்குச்
சென்று, பிறகுதான் மற்ற ஊர்களுக்கு செல்லும்.


அதாவது, மயிலாடுதுறையிலிருந்து ஒரு சகோதரர்
இரவு சுமார் 8 மணியளவில் ரயிலில் புறப்பட்டு
திருச்சிக்குச் நள்ளிரவு 12 மணியளவில் சென்றடைவார்.

சிலமணி நேரம் காத்திருந்ததும் அதிகாலையில்
சென்னையிலிருந்து வரும் ரயிலில் வந்தவரிடமிருந்து
கூரியர்களைப் பெற்றுக் கொண்டு, அதிகாலை 6 மணி
அளவில் புறப்படும் சோழன் எக்ஸ்பிரஸில் புறப்பட்டு
சுமார் 10 மணி அல்லது 10.15 மணிக்கு மயிலாடுதுறை
ஜங்ஷனில் இறங்கும்போது சிதம்பரத்திற்கு வந்துள்ள
கடித பார்சலை என்னிடம் கொடுத்து, அவரிடம் உள்ள
நோட்டில் கையெழுத்து வாங்கிக் கொள்ளும் அவர்
மயிலாடுதுறை கூரியர் அலுவலகத்திற்குச் சென்று
விடுவார்.


இடையிலிருக்கும் தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற
மற்ற ஊர்களுக்குரிய பார்சல்களை, அந்தந்த ஊர்
ஊழியர்களே திருச்சிக்குச் சென்று வாங்கி வந்து
விடுவார்கள்.

இப்படியாக மயிலாடுதுறை ஜங்ஷனில் கூரியர்
பார்சலைப் பெற்றுக் கொண்ட நான் அதே சோழன்
எக்ஸ்பிரஸ் ரயிலில் காலை சுமார் 11.15 அளவில்
சிதம்பரம் சென்று, அலுவலகத்தில் பதிவு (?) போட்டு,
உரியவர்களுக்கு அந்த கூரியர்களைக் கொண்டு
சேர்ப்பேன்.

மீண்டும் அலுவலகத்திலிருந்து பார்சலுடன்
புறப்பட்டு, சுமார் 7 மணிக்கு சிதம்பரத்திலிருந்து
நெல்லை எக்ஸ்பிரஸ்ஸில் புறப்பட்டு 8 மணிக்கு
மயிலாடுதுறை ஜங்ஷனில் இறங்கும்போது,
அங்கிருந்து புறப்படும் மயிலாடுதுறை அலுவலக
சகோதரரிடம் என்னிடமிருக்கும் பார்சலைக் கொடுத்து
என்னிடமிருக்கும் நோட்டில் கையெழுத்துப்
பெற்றுக் கொள்வேன். அந்தப் பார்சல் இவ்வாறாக,
திருச்சி வழியாக சென்னை சென்றடையும்.


சரக்கு வேன் போன்ற வாகன வசதிகள் அதிகம்
பயன்படுத்தப்பட ஆரம்பிக்காத காலக் கட்டம் அது.
அப்போதெல்லாம், பெரிய பார்சல்கள் கூரியரில்
எப்போதாவதுதான் அனுப்பப்பட்ட காலம்.

இதன் காரணமாக ஞாயிற்றுக் கிழமை தவிர்த்து
மற்ற ஆறு தினங்கள் தினசரி நான் காலையில்
ஒரு மணி நேரமும் மாலையில் ஒரு மணி நேரமும்
ரயில் பயணங்களில்தான் இருப்பேன்.

அந்த நேரங்களில் வார இதழ்கள் வாசிப்பது,
வாசகர் கடிதம் எழுதுவது, பேனா நண்பர்களுக்குக்
கடிதம் எழுதுவது, ரயிலின் ஜன்னல் ஊடே பசுமையான
வயல், மரம், செடிகள் கண்டு களிப்புறுவது,
சக பயணிகளோடு உரையாடுவது, பயணிகளின்
சிறு குழந்தைகளோடு உரையாடி மகிழ்வது,
ரயில் வியாபாரிகளிடம் மாங்காய்,
வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி வாங்கிச்
சாப்பிடுவது, சூடான சுண்டல் என்று கூவி
விற்பதை வாங்கும்போது கையைச் சுடுவதாய்
ஆஆ என்று சொல்லி வாங்கி ஜில்லென்று
வாயில் போட்டு சாப்பிடுவது,
அந்த வியாபாரிகள் ஒரு பெட்டியிலிருந்து
மற்றொரு பெட்டிக்கு கையில் கூடையோடு
தாவி செல்லும் ஆபத்தான செயலை
அனாயாசமாகச் செய்வதை ஆச்சரியமாகப்
பார்ப்பது, இருபுற கம்பங்களில்
எண்களை பார்த்துக் கொண்டே வருவது,
முதல் நாள் ஒரு பெரிய ஆல மரத்தைக்
குறிப்பு வைத்துக் கொண்டு மறுநாள் அந்த இடம்
வரும்போது சரியாகக் கண்டு கொள்வது,
புத்தகத்தில் ஜோக் படித்துவிட்டு எதிராளிகள்
பயந்து விடக்கூடாதென்று படார் என்று சிரிக்காமல்
மொக்கையாய் சிரிப்பது என்றெல்லாம்
அந்த ரயில் பயணங்கள் தந்த மகிழ்வினை
என்றென்றும் மறக்க முடியாது.

மற்றும் அந்தப் பணியில்தான் கூரியரின் உரிமையாளர்
அன்பு அண்ணன் மௌலவி கணியூர் இஸ்மாயில் நாஜி
நீடூரி அவர்களிடமிருந்து பல அறிவுச் செறிவான பொது
அறிவு விஷயங்களைக் கற்றுக் கொண்டேன் என்பதனை
இங்கு குறிப்பிட விழைகிறேன்.

சமீப காலமாக (அதாவது கடந்த நான்காண்டுகளுக்கு
மேலாக) மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம் ஆகிய
ஊர்களுக்கிடையே மீட்டர் கேஜ் இருப்புப் பாதையை
அகற்றிவிட்டு, அகல ரயில் பாதை அமைக்கும் பணி
நடைபெற்று வந்தது. சுமார் ஆறு மாத காலத்தில்
அமைக்கப்பட்டுள்ள இருப்புப் பாதையில் பலமுறைகள்
சோதனை ஓட்டங்கள் பல கட்டங்களில் செய்யப்பட்டன.

இருப்பினும் டிக்கெட் கவுண்ட்டர்கள், பிளாட்ஃபார்ம்,
பயணியர் தங்குமிடம், நீர் வசதி, கழிவறைகள் போன்ற
அனைத்துப் பணிகளும் நிறைவடைந்தபின்னும்,
"ஓடும்... ஓடும்..." என்று பலமுறை சொல்லியும்
சொல்லப்பட்ட மாதங்கள்தான் ஓடினவேயன்றி
ரயில் போக்குவரத்து ஆரம்பித்தபாடில்லை.
சிறு வியாபாரிகள், நடுத்தர வர்க்கத்தினர், தினசரி
வேலைக்குச் செல்லும் பணியாளர்கள் மற்றும்
நோயாளிகளுக்கு ஏற்றது ரயில் பயணமே!

தற்போது 100 ரூபாயில் சென்றிடக்கூடிய
மயிலாடுதுறை - சென்னை பயணத்திற்கு
ஆம்னி சொகுசு ஏசி வராத பேருந்துகளில்
400 ரூபாய் கொடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.
அரசு பேருந்தில் செல்லலாமே... அரசு
பேருந்துகளின் தரம் சொல்லவோ, எழுதவோ,
கேட்கவோ, படிக்கவோ தேவையில்லை.

கடந்த மாதம் 25-ஆம் தேதி ஆய்வுப்பணி மேற்கொண்ட
தென்னக ரயில்வே பொது மேலாளர் தீபக் கிஷன்
அவர்கள் "வருகிற ஏப்ரல் 15 அன்று ரயில் சேவை
தொடங்கப்படும்" என்று பத்திரிகை, தொலைக்காட்சிகளிடம்
தெரிவித்துள்ளார். நம்பலாமா?

சோதனை ஓட்டம் சேவையாக எப்போ மாறும்?
வேதனை வாட்டம் மக்களிடம் எப்போ தீரும்?

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.





வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Friday, April 9, 2010

அது ஒரு கதைக்காலம்!

அது ஒரு கதைக்காலம்!



'கதை கேளு' என்ற தொடர் பதிவிற்கு அழைப்பு

விடுத்துள்ளார் நண்பர் ஸ்டார்ஜன். இதோ கதையுடன்

வந்துவிட்டேன்.



எனது சிறுவயதில் எங்கள் பாட்டியிடம் (அம்மாவின்

அம்மா) நிறைய கதைகள் கேட்டிருக்கிறேன். அதே

சமயம் சிதம்பரத்தில் இருந்த எங்கள் பெரியம்மா

அவர்களும் எனக்கு நிறைய கதைகள் சொல்வார்கள்.

இதனால், அடிக்கடி எங்கள் அம்மாவுடன் சிதம்பரம்

போய்வருவதுண்டு. அடிக்கடி பெரியம்மாவும் எங்கள்

வீட்டிற்கு வருவார்கள். அந்த நேரங்களில் சுமார்

25 அல்லது 30 கதைகள்வரை பெரியம்மா

சொல்வார்கள். அவையெல்லாம் 'அம்புலிமாமா'வில்

படித்ததாகச் சொல்வார்கள். இப்போது அவர்கள்

சொன்ன கதை:


ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம்.



ம்ஹூம், இந்தக் கதை வேணாம்; வேற கதை

சொல்லுங்கள்.


சரி வேற கதை. வேற ஒரு ஊர்ல வேற ஒரு

ராஜா இருந்தானாம்.


ம், சொல்லுங்க, சொல்லுங்க.


இது வேணாம். ஒரு ஊர்ல பெரியண்ணன் அப்படிங்கிற

அண்ணனும் சின்னத்தம்பி அப்படிங்கிற தம்பியும்

இருந்தாங்க.


ஒரு நாள் இரண்டு பேரும் வியாபார சம்பந்தமாக

வெளியூருக்குப் புறப்பட்டுப் போனாங்க. போக்குவரத்து

வசதி இல்லாததால நடந்துதான் போனாங்க. அப்போ

உச்சிவெயில் மதியம் நேரம் வந்துடுச்சி. பசியா

இருந்ததால் சாப்பிடலாம்னு உட்கார்ந்து அவங்கவங்க

மனைவி கொடுத்த சாப்பாட்டுப் பொட்டலத்தைப்

பிரிச்சாங்க.

 
பெரியண்ணன் பொட்டலத்தில மூன்று தோசைகளும்

சின்னத்தம்பி பொட்டலத்தில இரண்டு தோசைகளும்

இருந்திச்சி.


(ஆஹா மறுபடியும் தோசை கதையா!!!?

முதல் தோசைக் கதை இங்கே படிக்கலாம்.

அடுத்து தோசை நகைச்சுவை இங்கு படிக்கலாம்.)



சாப்பிடலாம்னு தோசையில் கையை வைக்கும்போது

ஒரு பிச்சைக்காரர் மாதிரியான வயசானவர் வந்து,

"ஐயாக்களே! ரொம்ப பசியா இருக்கு. சாப்பிட

ஏதாவது கொடுங்கள் ஐயா!" என்று கெஞ்சிக்

கேட்டார்.


பெரியண்ணனும் சின்னத்தம்பியும் என்ன செய்வது

என்று யோசித்தார்கள். பிறகு இருவருடைய

தோசைகள் ஐந்தையும் ஒன்னாச் சேர்த்து அந்த

ஐந்து தோசைகளையும் ஒவ்வொரு தோசையையும்

நான்கு, நான்கு துண்டுகளாகப் பிய்த்தார்கள். இப்போ

மொத்தம் இருபது துண்டுகள் இருந்தன.


அதில், 6 துண்டுகளை அந்தப் பெரியவருக்குக்

கொடுத்துவிட்டு மீதம் இருந்ததில் 7 துண்டுகளை

பெரியண்ணனும் 7 துண்டுகளை சின்னத்தம்பியும்

சாப்பிட்டார்கள்.


மூவரும் சாப்பிட்டு முடித்ததும் அந்தப் பெரியவர்

எழுந்து நன்றி சொல்லிவிட்டுப் புறப்படும்முன்

பெரியண்ணனிடம் 6 பொற்காசுகளை (24 கேரட்)

கொடுத்து, "ஐயா, நீங்கள் இருவரும் பிரித்து

எடுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு

சென்றுவிட்டார்.



இப்போ பெரியண்ணன் 4 பொற்காசுகளை தான்

எடுத்துக் கொண்டு, 2 பொற்காசுகளை தம்பியிடம்

கொடுத்தான்.



தம்பியோ, "அந்தப் பெரியவர் ரெண்டு பேரும்

பிரிச்சிக்குங்க என்றுதான் சொன்னார். அதனால

சமமா நீ 3 பொற்காசுகள் எடுத்துக் கொண்டு

எனக்கும் 3 பொற்காசுகள் கொடுத்தால்தான்

வாங்குவேன்" என்று சண்டை போட்டான்.



பெரியண்ணன் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால்

அடுத்த ஊருக்குப் போனதும் ஆலமரத்தடி (+சொம்பு)

நாட்டாமையிடம் முறையிட்டார்கள்.



நாட்டாமை நல்லா விசாரிச்சிட்டு தீர்ப்புச் சொன்னார்.

(நாட்டாமை, தீர்ப்பை மாத்தமுடியாது.)



நாட்டாமை தம்பிக்காரனைக் கூப்பிட்டார்.


"தம்பி, நீ கொண்டு வந்தது 2 தோசைகள். அதை

8 துண்டுகள் போட்டு, 7 துண்டுகள் நீ சாப்பிட்டாய்.

அந்தப் பெரியவருக்கு நீ ஒரு துண்டுதான் கொடுத்தாய்.

அதனால உனக்கு ஒரு பொற்காசுதான்" என்றார்.



நாட்டாமை அண்ணனைக் கூப்பிட்டார்.


"ஏனப்பா, நீ கொண்டு வந்தது 3 தோசைகள். அதை

12 துண்டுகள் போட்டு, 7 துண்டுகள் நீ சாப்பிட்டாய்.

அந்தப் பெரியவருக்கு நீ 5 துண்டுகள் கொடுத்தாய்.

அதனால் உனக்கு 5 பொற்காசுகள்" என்றார்.



தீர்ப்பைக் கே(கெ)ட்டு தம்பி 'உள்ளதும் போச்சே' என்று

நொந்து நூடுல்ஸ் ஆகிப் போனான். (தோசைக் கதையில்

நூடுல்ஸும் வந்திடுச்சே!)


சரி, இப்ப கதையின் நீதியைச் சொல்லிடலாமா?

அ, கதையைப்  படிச்சீங்கள்ல? நீங்களே சொல்லிடுங்க.



தொடர் பதிவில், இணைந்துகொள்ள இவர்களை

அழைக்கிறேன்.



1.ஸ்ரீகிருஷ்ணா

2.இப்படிக்கு நிஜாம்

3.கவிஞர் மலிக்கா.



அன்பன்,

அ.முஹம்மது நிஜாமுத்தீன்.



வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Friday, April 2, 2010

நாம் எங்கே போகிறோம்?


எங்கள் கம்பெனியின் எம்.டி. ஒருநாள்

கான்ஃப்ரன்ஸ் மீட்டிங் வைத்தார். கம்பெனியின்

வளர்ச்சி, வியாபார உயர்வு, இலாப அதிகரிப்பு,

வருமானம் கூட்டுதல் போன்ற சப்ஜெக்ட்கள் பற்றி

ஆலோசனைகள் தந்து கொண்டிருந்தார்.





பேசும்போது, "நாம் வருமானம் ஈட்டி வரும்

பணத்தை நாமே வைத்துக் கொண்டு, நமக்காகவும்

நமது குடும்பத்திற்காகவும் மட்டுமே செலவு செய்து

கொண்டிருக்கிறோம்.அப்படியல்லாமல், நமக்கு

கொடையாக இறைவன் கொடுத்த அந்த பணத்திற்கு

நன்றி செய்யும் விதமாக, நம்மைவிட ஏழ்மையான,

உழைக்க முடியாத, செயல்பட முடியாத ஏழைகளுக்கு,

அனாதைகளுக்கு அதிலிருந்து ஒரு பகுதியை,

சிறு பகுதியை தானமாக, தர்மமாக, கொடையாக,

உதவியாக கொடுக்க வேண்டும். அப்படி செய்வது

நமது வியாபரத்தில் அபிவிருத்தியை உண்டாக்கும்."

என்று நல்லதொரு தெளிவான விளக்கம் அளித்தார்.



தொடர்ந்து, " நாம் பணம், பணம் என்று

அலைகிறோமே, போகும்போது பணத்தை எடுத்துக்

கொண்டா போகப் போகிறோம்?" என்று கேட்டார்.



அப்போது சக ஊழியர் ஒருவர், "போகும்போது

நாமளே எப்படி போக முடியும்? நாமே போக

முடியாதே! நம்மையே இன்னும் நாலு பேர்கள்

அல்லவா தூக்கிப் போகிறார்கள்? அப்பறம்

அந்தக் காசு, பணத்தை எப்படி சார் எடுத்து போக

முடியும்? நீங்கள் சொல்வது நல்லதொரு கருத்து

சார்" என்றார்.



அதற்கு, "சரியாகச் சொன்னீர்கள். நாமே

தன்னிச்சையாகப் போக முடியாதபோது,

பணத்தையா எடுத்துப் போக முடியும்? ஆகவே,

மற்றவர்களுக்கு நாம் உதவுவதற்கான வாய்ப்பைப்

பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று சொன்னார்

எம்.டி.



அன்பன்,

அ.முஹம்மது நிஜாமுத்தீன்.



வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Sunday, March 28, 2010

நகைச்சுவை; இரசித்தவை 9


நகைச்சுவை; இரசித்தவை - 9





பணிப்பெண்: "மன்னா, அந்தப்புரம் உள்ளே
வராதீர்கள். மகாராணியார் உங்கள்மேல்
ரொம்ப கோபமாக உள்ளார்கள்"

மன்னன்: "ஏன், ஏன், ஏன், எதனால்?"

பணிப்பெண்: "தெரியவில்லை, மன்னா!
ஆனால், மகாராணியார் சமையலறையில்
ஆப்பிளை அரிவாள்மனையில் அரிந்துகொண்டே,
'உன்னைத்தான் நானரிவேன்,
என் மன்னவனை யாரரிவார்?' என்று
பாடிக்கொண்டிருக்கிறார்கள், மன்னா!"
=============================================

மனைவி: "என்னங்க, துவரம் பருப்பு இல்லை.
மல்லி இல்லை. தேங்காய் எண்ணெய் இல்லை.
ஜீனி இல்லை. ஆஃபிஸிலிருந்து வரும்போது
வாங்கிட்டு வாங்க..."

கணவன்: "ஏன்டி, ஆஃபிஸ் போகும்போது,
'இல்லை, இல்லை'ன்னு சொல்லி எரிச்சலைக்
கிளப்புற?"

மனைவி: துவரம் பருப்பு டப்பா காலியா இருக்கு.
மல்லி டப்பா காலியா இருக்கு.
தெங்காய் எண்ணெய் பாட்டில் காலிய இருக்கு.
ஜீனி டப்பா காலியா இருக்கு. இப்ப ஓகேயா?"
=============================================

ஆசிரியர்: நேற்று ஏன்டா ஸ்கூலுக்கு வரலை?
இனிமேல் முதல் நாளே லீவு சொல்லிடணும்"

மாணவன்: "சரி சார். நாளைக்கு எனக்கு
வயிற்று வலி சார். நாளைக்கு எனக்கு லீவு சார்!"
--------------------------------------------------------------

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Monday, March 22, 2010

#58 தண்ணீரும் தங்கம்போலத்தான்!

தண்ணீரும் தங்கம்போலத்தான்!











உலகப் பரப்பளவில் 71 சதவீதம் தண்ணீரால் சூழப்பட்டிருக்க,
மீதமுள்ள 29 சதவீத நிலப்பரப்பில்தான் நமது மனித இனமும்
விலங்கினங்களும் வாழ்ந்துவருகிறோம்.

இந்நிலையில், நாடுகளுக்கிடையில், மாநிலங்களுக்கிடையில், பக்கத்துப் பக்கத்து ஊர்களுக்கிடையில், ஏன் ஒவ்வொரு குழாயடியிலும்
தண்ணீருக்காக நடக்கின்ற சண்டைகள் நாம் அறிந்தவைதான்.

"காசை தண்ணீராய் செலவு செய்கிறான்" என்று சொன்ன
நிலைமாறி, உலக நாடுகளை அச்சுறுத்திக்
கொண்டிருக்கின்ற பொருளாதாரத் வீழ்ச்சியைப்போலவே,
தண்ணீர் பஞ்சமும் நம்மை பயமுறுத்தி கொண்டிருக்கின்றது.
தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றோம்.
இப்படியேபோனால், காசு இருக்கும்; தண்ணீர் இருக்குமா?

இன்று மார்ச் 22 'உலக தண்ணீர் தினம்'
கடைபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இதையொட்டி, நமக்காகவும் பின்வரும்
நமது சந்ததியினருக்காகவும் தண்ணீரை
சிக்கனமாக பயன்படுத்தவும் சேமிக்கவும்
நமது பங்களிப்பைத் தந்து தண்ணீரைப்
பாதுகாத்து அனைவரும் பயன்பெறுவோம்.

(படம் உதவி:தினமலர்)

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.





வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Monday, March 8, 2010

#57 நித்தியானந்தாவும் பிரேமானந்தாவும்!

நித்தியானந்தாவும் பிரேமானந்தாவும்!

ஒரு சாமியார் இருந்தாரு. அவரு பேரு நித்தியானந்தா
(அப்படின்னு வச்சிக்கலாம்). அவருக்கு ஐந்து சீடர்கள்
இருந்தாங்க. அந்த சாமியாரு எப்பவும் ஒரே ஊர்லயே
இருக்க மாட்டாரு. 3 நாள்களுக்கொரு முறை வேற,
வேற ஊருக்கு தன்னோட சீடர்களோட கால்நடையாவே
முகாம் மாறியபடியே இருப்பாரு. இதனால அவருக்கு
பற்பல் அனுபவங்கள் ஏற்பட்டிருக்கு.அதையெல்லாம்
சந்திச்சபடியே போய்க்கிட்டே இருப்பாரு.

ஒருநாள் இதுபோல ஒரு ஊர்லயிருந்து வேற ஊருக்குப்
போனாங்க எல்லாரும். அங்கே உள்ள கடைவீதியில்
அவங்களுக்கு ஓர் ஆச்சரியமான விஷயம் இருந்தது.
எந்தப் பொருள் வாங்கினாலும் ஒரு ரூபாய்(!)தான்.
அரிசி ஒரு கிலோ ஒரு ரூபாய்தான். (அரிசி படி ஒரு
ரூபாய்னு மாத்திடலாமா?) கத்தரிக்காய் ஒரு
கிலோ ஒரு ரூபாய்தான். சர்க்கரையும் அப்படித்தான்.
தங்கமும் ஒரு ரூபாய்தான். ஆட்டுக்கறியும் அதே
ஒரு ரூபாய்தான்.

அந்த சீடன்கள்ல ஒருத்தன் பேரு பிரேமானந்தா
(அப்படின்னு வச்சிக்கலாம்). அவன் ரொம்ப சாப்பாட்டு
மன்னன். அவன் வாயில எச்சில் ஊறுச்சு.

"குருவே, நாம வேற ஊருக்குப் போக
வேண்டாம். அரிசியும் ஒரு ரூபாய்; ஆட்டுக்
கறியும் ஒரு ரூபாய். சாப்பாட்டுக்கு கவலையே
இல்ல. அதனால, இந்த ஊருலயே தங்கிடலாம்,
குருவே" அப்படின்னான், பிரேமானந்தா.

"வேணாம்டா பிரேமானந்தா! நீயும் முட்டாளு;
இந்த நாட்டை ஆளும் மன்னனும் முட்டாளு.
இதனால், பின்னால வம்பு, விபரீதம்லாம்
வரும்டா. வாடா வேற ஊருக்குப்
போயிடலாம்டா" என்று அவனை பிடிச்சி
இழுத்தாரு நித்தியானந்தா.

ஆனால், பிரேமானந்தா கேட்கவேயில்லை.
அந்த ஊருலயே தங்கிட்டான். குருவும் மற்ற
சீடர்களும் வேற ஊருக்குப் போயிட்டாங்க.

பிரேமானந்தா அந்த ஊர்லயே தங்கி அவனும்
ஐந்து சீடர்களச் சேர்த்துக்கிட்டான்(ர்). மக்கள்
கொடுக்கிற காணிக்கையிலும் சாப்பாட்டிலும்
அவன் காலம் ஓடுச்சு. ஆட்டுக்கறியும் அரிசியும்
சேர்த்து பிரியாணியாகவே சாப்பிட்டு, சாப்பிட்டு
உலக்கை மாதிரி இருந்தவன் நல்ல உரலு
மாதிரி ஆகிப்பிட்டான்.

ஒருநாளு அந்த நாட்டு ராஜா தன்னோட
மாளிகையில நடந்துக்கிட்டு இருக்கும்போது
சாலையில போன ஒரு வில் வண்டியில
சூரிய ஒளி பட்டு, பிரதிபலிச்சதில அவனோட
கண்ணுல ஒளிபட்டு, கால் இடறி மாடியிலயே
தரையில் விழுந்து, காலை உடைச்சிக்கிட்டான்.

"யாரங்கே, அந்த வண்டிக்காரனை இழுத்து
வாருங்கள்" என்று கட்டளையிட்டான் மன்னன்.
சேவகர்கள் போய் இழுத்து வந்தார்கள்.

அந்த வண்டிக்காரனைப் பார்த்து, "உன்
வண்டியிலிருந்து ஒளி என்மேல் பட்டது.
எனவே உன் மீது குற்றம். உனக்கு
தூக்குத் தண்டணை" என்றான் மன்னன்.

"இல்லை மன்னா, அந்த வண்டியை
ஒரு தச்சர்தான் எனக்கு செய்து கொடுத்தார்.
எனவே என் மீது தவறில்லை" என்றான்
வண்டிக்காரன்.

"அந்த தச்சரைப் போய் இழுத்து வாருங்கள்"
என்றான் மன்னன். அவன் வந்ததும், "நீ
செய்து கொடுத்த வண்டியால்தான் எனக்கு
விபத்து ஏற்பட்டது. எனவே உனக்கு
தூக்குத் தண்டனை" என்றான் மன்னன்.

"இல்லை மன்னா, அந்த தகரத்தை நான்
இரும்புக்கடை வியாபாரியிடமிருந்துதான்
வாங்கினேன். என் மீது தவறில்லை"
என்றான் அந்த தச்சன்.

"அந்த தகர வியாபாரியை இழுத்து வாருங்கள்"
என்றான் மன்னன். அவன் வந்ததும் "உனக்கு
தூக்குத் தண்டனை" என்றான் மன்னன்.

"இல்லை மன்னா. அந்த தகரத்தை நான்
தகரப் பட்டறையிலிருந்துதான் வாங்கினேன்.
என்மீது தவறில்லை" என்றான் தகர வியாபாரி.
உடனே தகர பட்டறைக்காரனை இழுத்து வந்து
அவனை தூக்கில் போட்டார்கள்.

அவனோ மிக ஒல்லியாயிருந்தான்.
அதனால் தூக்கின் முடிச்சு அவனது
கழுத்தை சுருக்கிட முடியல.

மன்னன் உடனே ஆணையிட்டான்.
"இந்த ஊருலயே யாருக்கு கழுத்து
பெருசாயிருக்கோ அவனை இழுத்து
வந்து, அவனை தூக்கில் போடுங்கள்"
என்றான் மன்னன். இப்ப மாட்டிகிட்டான்
நம்ம பிரேமானந்தா. ஏன்னா, அவனுக்குத்தான்
அந்த ஊருலயே பெரிய கழுத்து இருந்தது.
அந்த அளவுக்கு தின்னு, தின்னு உப்பி
போயி கிடந்தான்.

அரண்டு போயிட்டான் பிரேமானந்தா.
மன்னனிடம் எவ்வளவோ சொல்லி,
கெஞ்சிப் பார்த்துட்டான். அந்த முட்டாள்
மன்னன், "நாளை மதியம் 12 மணிக்கு
உனக்கு தூக்குத் தண்டனை" என்று
தீர்ப்பு சொல்லிட்டான்.

கடைசியா, மன்னனிடம், "நான் எனது
குருவைப் பார்த்துவர அனுமதி வேண்டும்"
என்று கேட்டான் பிரேமானந்தா. மன்னனும்
3 காவலர்களோட அனுப்பி வைச்சான்.

நித்தியானந்தாவைத் தேடிப் போய்
பேசினான் பிரேமானந்தா. விவரம் கேட்டுக்கிட்ட
நித்தியானந்தா, "நான் வந்து உன்னைக்
காப்பாத்த்றேன், போ"ன்னு அனுப்பி வச்சாரு.

மறுநாளு நண்பகல் 12 மணிக்கு
நடு ரோட்டுல, தூக்குல போட,
பிரேமானந்தாவை மேடையில
ஏத்திட்டாங்க. மன்னன் ஓகே சொல்ல
கையத் தூக்கினான். நித்தியானந்தா,
"ஒரு நிமிஷம்"னு சொல்லிக்கிட்டே ஓடி
வந்தவரு அந்த தூக்கு மேடையிலருந்து
பிரேமானந்தாவைத் தள்ளிவிட்டுட்டு,
தூக்குக் கயிறுல தன்னோட தலையை
நுழைச்சிக்கிட்டாரு.

உடனே, பிரேமானந்தா அவரை தள்ளிவிட,
உடனே மன்னனுக்கு கோபம் வந்து,
"என்ன செய்யறீங்க இரண்டு பேர்களும்?"
அப்படின்னு கேட்டான்.

"மன்னா இன்று நண்பகல் 12 மணிக்கு
செத்துப் போறவங்க, நேராக சொர்க்கத்துக்குப்
போகலாம்னு வேதத்தில படிச்சேன்.
அதனால நான் தான் தூக்குல சாகப்
போறேன்"னு ரெண்டு பேரும் அடிச்சிக்கிட்டாங்க.

"தள்ளுங்கடா, நான் தான் சொர்க்கத்துக்குப்
போவேன்" அப்படின்னு சொல்லிக்கிட்டே
தூக்குல தொங்கிட்டான், அந்த முட்டாள்
மன்னன்.

நித்தியானந்தாவும் பிரேமானந்தாவும் தப்பிச்சோம்,
பிழைச்சோம்னு ஓட்டம் எடுத்தாங்க.

(குறிப்பு: இந்தக் கதையில் வரும் பெயர்கள்,
இடங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே!
யாரையும் எந்த இடத்தையும் எந்த சம்பவத்தையும்
இது குறிப்பிடவில்லை. இது முழுக்க, முழுக்க
நான் கேள்விப்பட்ட கற்பனையே!)

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Friday, March 5, 2010

#56 'எத்தனை நாள் பிரிந்து' பாடல்




'எத்தனை நாள் பிரிந்து' பாடல்
============================

இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் (சுருக்கமாக சிலோன் ரேடியோ). தமிழ்ச் சேவை 1, தமிழ்ச் சேவை 2, வர்த்தகச் சேவை என்பதெல்லாம் 1980-களில் மிகப் பிரபலம். அப்போது அடிக்கடி தமிழ்ச் சேவையில் ஒலித்த பாடல் இ‌து. கணீரென்ற குரலில் எம்.குணசீலநாதன் பாடிய இந்தப் பாடலை நீங்கள் கேட்டு இருக்கீங்களா?


எத்தனை நாள் பிரிந்து இங்கிருப்பேன் என்னுயிரே?
நித்தமுன் நினைவால் நீரலைதான் விழிகளிலே!
சத்தமின்றி என்னுயிரில் சங்கமித்த வான்மயிலே
சித்தமென்னும் சிறகெடுத்து சேர்ந்திடாய் என்னருகே!
(எத்தனை நாள் பிரிந்து...)

ஆனந்த வெள்ளம் அள்ளி நீ தந்தாய்
நானந்த வெள்ளத்தில் நாளெல்லாம் மூழ்கி
மோனத்தில் இருக்கும் முனிவனைப் போலே
ஞானத்தில் இருப்பேன் நீந்தி நீ வாராய்
(எத்தனை நாள் பிரிந்து...)

வண்ண மணிப்புறா துணையின்றி வாழாது
எண்ண இனித்திடும் நீயின்றி நானா?
இன்னமும் நானும் ஏங்குதல்தானா?
இனியொருபோதும் இருந்திடேன் வாராய்
(எத்தனை நாள் பிரிந்து...)


நீங்கள் இந்தப் பாடலைக் கேட்டு இருக்கிறீர்களா?
பாடல் எழுதியவர் பெயர் தெரியுமா?
தங்கள் பதில்கள் எதிர்பார்க்கிறேன்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Saturday, February 27, 2010

#55 நகைச்சுவை; இரசித்தவை - 8

நகைச்சுவை; இரசித்தவை - 8
=============================

"என் மனைவி தினமும் அம்பது ரூபாய் கேட்கிறாள்"

"அப்படி என்ன தினமும் செலவு?"

"யாருக்குத் தெரியும்? இன்னும் ஒருநாள்கூட நான்
ரூபாய் தரலியே?"
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

"சாப்பாட்டுப் பந்தியில் ரெண்டு பிரிவு இருக்கே?"

"நூறு ரூபாய்க்குக் குறைவா மொய் எழுதினா
அளவுச் சாப்பாடு. நூறு ரூபாய்க்கு மேலே எழுதினா
முழுச் சாப்பாடாம்!"
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

"என் மாமியாருக்கு வயிற்று வலி வந்தால் எனக்கும்
வயிற்று வலி வந்துடுது."

"ஏன் அப்படி?"

"சிரிச்சி சிரிச்சித்தான்!"
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சிரித்தவர்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Friday, February 26, 2010

#54 சில சிந்தனைகள் (பகுதி - 8)




சில சிந்தனைகள் (பகுதி - 8)

தழுவிக்கொள்ளுங்கள் -1
======================

* உங்களுடைய கோபதாபங்கள் உங்களுடனேயே இருக்கட்டும் -
வினியோகிக்க வெண்டாம்.

* ஆனால் உங்கள் உற்சாகத்தை இலவசமாக வினியோகியுங்கள்.

* நீங்கள் நீங்களாகவே இருங்கள்.

* நட்புடன் இருந்தால் பெரிதும் மதிக்கப்படுவீர்கள்.

* இறைவனின் படைப்பில் எல்லோருக்கும் பங்குண்டு. இந்த
முக்கியத்துவத்தை மற்றவர்கள் உணரச் செய்யுங்கள்.

* கீழேயோ, மேலோயோ அந்த அந்த நிலையில் மக்களை
சந்தியுங்கள்.

* புன்னகை என்ற ஆயுதத்தை சரியாகப் பயன்படுத்துங்கள்.

* நகர்ந்து கொண்டே இருங்கள்; ஓடுகின்ற நதி ஒருநாளும்
அழுக்காகாது.

* முயற்சி செய்து கொண்டிருங்கள். தேயாமல் இருக்க
இதுதான் தலைவாசல்.

* இரும்பானாலும் இதயத்தோடு பாருங்கள்.

* எந்த காரியமானாலும் அதன் ஆரம்பம் விழாவாக இருக்கட்டும்.

* தோல்வி அடைந்தாலும் மன்னித்துக் கொள்ளுங்கள்.

* கருணையில் தாராளமாக இருங்கள்.

* அதிகாரத்தைவிட, அன்பு ஆளட்டும்.

* சொன்னதைச் செய்யுங்கள்.

நன்றி: 'வெற்றியை வெளியே தேடாதீர்கள்' - திரு.வை.நடராஜன்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Tuesday, February 16, 2010

#53 சிந்தனைகள் (பகுதி - 7)

முன்னேற சில முத்துக்கள்:
========= === ===========
1. செய்யும் தொழிலை நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

2. எதையும் இலவசமாகப் பெற நினைக்காதீர்கள்.

3. போதும் என்ற மனம் நல்லதுதான். ஆனால், 'போதாது'
என்ற மனம்தான் முன்னேற்றத்திற்கான வழி. மனிதன்
கண்டுபிடிக்காத மர்மதேசங்கள் ஏராளம்.

4. வருத்தமோ அல்லது சுய இரக்கமோ அடையாதீர்கள்.
அவைகள் வாழ்க்கையின் நசுக்கிகள்.

5. உங்கள் பலத்தையும் பலவீனத்தையும் அறிந்துவைத்துக கொள்ளுங்கள்.

தவிர்த்துவிடுங்கள்:
=================
1. பொய் பேசும் நா.

2. கர்வ பார்வை.

3. தீமை செய்யும் கை.

4. தீயதை திட்டமிடும் அறிவு.

5. தீய காரியங்களை செய்ய விரையும் கால்.

6. பொய் சொல்ல எழும் சாட்சி.

7. நண்பர்களிடம் பகைமை வளர்க்கும் மனிதர்.

(நன்றி: 'வெற்றியை வெளியே தேடாதீர்கள்' - திரு.வை.நடராஜன்)

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.



வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!
Related Posts Plugin for WordPress, Blogger...