...பல்சுவை பக்கம்!

.

Wednesday, February 13, 2013

குண்டப்பா - மண்டப்பா 9

குண்டப்பா - மண்டப்பா 9 #115

மண்டப்பாவைத் தேடி குண்டப்பா போனபோது மண்டப்பா அவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் குளித்துக் கொண்டிருந்தார். மண்டப்பாவின் மனைவி மண்டப்பா குளித்துக் கொண்டிருப்பதாகவும் 'போய் பாருங்கள்' என்றும் சொன்னாள்.

குண்டப்பா போனதும் கேட்டார்: "மண்டப்பா! இப்பத்தான் குளிக்க ஆரம்பிச்சியா?" என்று.

மண்டப்பாவும் பதில் சொன்னார் : "ஆமாம், இப்பத்தான் குளிக்க ஆரம்பிச்சேன்" என்று.

குண்டப்பா நக்கலாக சொன்னார் : " அட, இப்பத்தான் குளிக்கவே ஆரம்பிச்சியா? நான்லாம் பிறந்ததிலிருந்தே குளிக்க ஆரம்பிச்சிட்டேன்"

இதைக் கேட்டு கடுப்பான மண்டப்பா, எப்படியாவது குண்டப்பாவைப் பழி வாங்கணும்னு யோசிச்சிட்டிருக்கார்.

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Wednesday, February 6, 2013

ஜிகினா 8 : "பிக்பாக்கெட்டா? பஸ் பாக்கெட்டா?" 'கல்கி'யில்!

ஜிகினா 8 : "பிக்பாக்கெட்டா? பஸ் பாக்கெட்டா?" 'கல்கி'யில்!

முன் குறிப்பு: கல்கி இதழில் 'ட்டீ.வி., வீடியோ பக்கங்கள்' என்ற போட்டியில் எனது கட்டுரை வெளியானது. அந்த கல்கி 09.07.1989 இதழ் உங்களிடம் இருந்தால் எனக்குத் தெரியப் படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

 நானும் எங்கள் சித்தப்பாவும் பாட்டியும் ஆக 3 பேர்கள், திருவண்ணாமலையிலிருந்து, மயிலாடுதுறைக்கு 'பட்டுக்கோட்டை அழகிரி'
பேருந்தில் வந்தோம். பேருந்து பயணக் கட்டணம் ஒருவருக்கு ரூபாய் 15. மூவருக்கும் டிக்கெட் வாங்கியபோது எங்களிடமிருந்த எவர்சில்வர் பாத்திரங்கள் கொண்ட மூட்டைக்கும் டிக்கெட் வாங்க வேண்டும் என்று கூறினார் கண்டக்டர்.  

நாங்கள் 100 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியபோது, எங்கள் மூவருக்கும் டிக்கெட் கொடுத்துவிட்டு லக்கேஜுக்கான டிக்கெட் கொடுக்காமல் சென்றுவிட்டார். மீதம் அப்புறம் தருவதாகக் கூறினார். 

பிறகு டிக்கெட் கொடுத்துக் கொண்டு வந்தபோதும் கேட்டதற்கு, டிக்கெட் தர்றேன் என்று கூறி சென்று விட்டார். 

கடைசியாக, மயிலாடுதுறைக்கு வந்து இறங்கும்போது, மீதி பணம் 40 ரூபாயைத் தந்துவிட்டு, விரைவாக டைம்கீப்பர் அலுவலகம் நோக்கி சென்று விட்டார்; டிக்கெட் தரவேயில்லை. 

அப்போது கல்கியில் வெளியாகி வந்து கொண்டிருந்த  'வாசகர் குமுறல்' பகுதிக்கு இதை எழுதி அனுப்பியிருந்தேன். அந்தக் கடிதம் பெரிய எழுத்துக்களில், 'பிக் பாக்கெட்டா? பஸ் பாக்கெட்டா?' என்ற தலைப்புடன் பத்திரிகையில் வெளிவந்தது. 

அதைப் பார்த்ததும் மனதிற்கு சிறிது ஆறுதலாக இருந்தது.  இரு தினங்களில், கல்கி இலவசப் பிரதி, தபாலில் வந்தது. 

சுமார் 3 வாரங்கள் சென்றபின், எனது கடிதத்தைப் பிரசுரித்தமைக்கான சன்மானமும் எம்.ஓ. மூலம் வந்தடைந்தது. ஆக, கண்டக்டரிடம் விட்ட பணம் ரூபாய் 15-ஐப் பற்றி மனதினுள் இருந்து வந்த மனக் குமுறல் கல்கியின் வழியாக, அழிந்து மனம் அமைதியானது.

நன்றி கல்கி!

இதோ அந்தக் கடிதம்:

படத்தின்மேல் கிளிக் செய்து பெரிதாக்கிப் படியுங்கள்.

அடுத்த ஜிகினாவில்...

பழக்க தோஷத்தில் டைப்பி விட்டேன். அடுத்த ஜிகினா கூடிய விரைவில் வரும்.

இறைவன் நாடினால்... அடுத்தது... 'குண்டப்பா; மண்டப்பா!'

இதையும் படிக்கலாம்:


ஜிகினா 5: கதைக்கதிரின் கதை!
. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!
Related Posts Plugin for WordPress, Blogger...