...பல்சுவை பக்கம்!

.

Wednesday, February 6, 2013

ஜிகினா 8 : "பிக்பாக்கெட்டா? பஸ் பாக்கெட்டா?" 'கல்கி'யில்!

ஜிகினா 8 : "பிக்பாக்கெட்டா? பஸ் பாக்கெட்டா?" 'கல்கி'யில்!

முன் குறிப்பு: கல்கி இதழில் 'ட்டீ.வி., வீடியோ பக்கங்கள்' என்ற போட்டியில் எனது கட்டுரை வெளியானது. அந்த கல்கி 09.07.1989 இதழ் உங்களிடம் இருந்தால் எனக்குத் தெரியப் படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

 நானும் எங்கள் சித்தப்பாவும் பாட்டியும் ஆக 3 பேர்கள், திருவண்ணாமலையிலிருந்து, மயிலாடுதுறைக்கு 'பட்டுக்கோட்டை அழகிரி'
பேருந்தில் வந்தோம். பேருந்து பயணக் கட்டணம் ஒருவருக்கு ரூபாய் 15. மூவருக்கும் டிக்கெட் வாங்கியபோது எங்களிடமிருந்த எவர்சில்வர் பாத்திரங்கள் கொண்ட மூட்டைக்கும் டிக்கெட் வாங்க வேண்டும் என்று கூறினார் கண்டக்டர்.  

நாங்கள் 100 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியபோது, எங்கள் மூவருக்கும் டிக்கெட் கொடுத்துவிட்டு லக்கேஜுக்கான டிக்கெட் கொடுக்காமல் சென்றுவிட்டார். மீதம் அப்புறம் தருவதாகக் கூறினார். 

பிறகு டிக்கெட் கொடுத்துக் கொண்டு வந்தபோதும் கேட்டதற்கு, டிக்கெட் தர்றேன் என்று கூறி சென்று விட்டார். 

கடைசியாக, மயிலாடுதுறைக்கு வந்து இறங்கும்போது, மீதி பணம் 40 ரூபாயைத் தந்துவிட்டு, விரைவாக டைம்கீப்பர் அலுவலகம் நோக்கி சென்று விட்டார்; டிக்கெட் தரவேயில்லை. 

அப்போது கல்கியில் வெளியாகி வந்து கொண்டிருந்த  'வாசகர் குமுறல்' பகுதிக்கு இதை எழுதி அனுப்பியிருந்தேன். அந்தக் கடிதம் பெரிய எழுத்துக்களில், 'பிக் பாக்கெட்டா? பஸ் பாக்கெட்டா?' என்ற தலைப்புடன் பத்திரிகையில் வெளிவந்தது. 

அதைப் பார்த்ததும் மனதிற்கு சிறிது ஆறுதலாக இருந்தது.  இரு தினங்களில், கல்கி இலவசப் பிரதி, தபாலில் வந்தது. 

சுமார் 3 வாரங்கள் சென்றபின், எனது கடிதத்தைப் பிரசுரித்தமைக்கான சன்மானமும் எம்.ஓ. மூலம் வந்தடைந்தது. ஆக, கண்டக்டரிடம் விட்ட பணம் ரூபாய் 15-ஐப் பற்றி மனதினுள் இருந்து வந்த மனக் குமுறல் கல்கியின் வழியாக, அழிந்து மனம் அமைதியானது.

நன்றி கல்கி!

இதோ அந்தக் கடிதம்:

படத்தின்மேல் கிளிக் செய்து பெரிதாக்கிப் படியுங்கள்.

அடுத்த ஜிகினாவில்...

பழக்க தோஷத்தில் டைப்பி விட்டேன். அடுத்த ஜிகினா கூடிய விரைவில் வரும்.

இறைவன் நாடினால்... அடுத்தது... 'குண்டப்பா; மண்டப்பா!'

இதையும் படிக்கலாம்:


ஜிகினா 5: கதைக்கதிரின் கதை!
. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

9 comments:

”தளிர் சுரேஷ்” said...

சுவையான பகிர்வு! நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//s suresh said...

சுவையான பகிர்வு! நன்றி!//

வருகை தந்து, கருத்திட்டமைக்கு நன்றி!

E.K.SANTHANAM said...

ஹா... ஹா... ஒரு வழியாக (கண்டக்டரிடம் விட்ட) பணத்தை (கல்கியிடமிருந்து) வசூல் பண்ணிட்டீங்களே!

r.v.saravanan said...

'பிக் பாக்கெட்டா? பஸ் பாக்கெட்டா?'

சூப்பர் டைட்டில் சார்

பேருந்தில் விட்டது கல்கி மூலம் வீடு தேடி வந்து விட்டது என்று சொல்லுங்கள்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//E.K.SANTHANAM said...

ஹா... ஹா... ஒரு வழியாக (கண்டக்டரிடம் விட்ட) பணத்தை (கல்கியிடமிருந்து) வசூல் பண்ணிட்டீங்களே!//

கருத்துரைக்கு நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//r.v.saravanan said...

'பிக் பாக்கெட்டா? பஸ் பாக்கெட்டா?'

சூப்பர் டைட்டில் சார்

பேருந்தில் விட்டது கல்கி மூலம் வீடு தேடி வந்து விட்டது என்று சொல்லுங்கள்//

ஆமாம் சரவணன் சார்! அதோடு,
மனம் சற்றே அமைதியடைந்தது
என்றும் சொல்ல வேண்டும்.

வருகைக்கு நன்றி!

SUMAZLA/சுமஜ்லா said...

எப்படியோ விட்டதை பிடிச்சிட்டீங்க! எவ்ளோ சன்மானம் கிடைத்ததுன்னு சொல்லலையே :)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//SUMAZLA/சுமஜ்லா said...

எப்படியோ விட்டதை பிடிச்சிட்டீங்க! எவ்ளோ சன்மானம் கிடைத்ததுன்னு சொல்லலையே :)//

சன்மானம் கிடைத்தது என்பதைக் குறிப்பிட்டேன்; தொகை முக்கியமில்லை என்பதால் குறிப்பிடவில்லை.

கருத்திற்கு நன்றி!

ஹுஸைனம்மா said...

ஜிகினா வரிசைகள் எல்லாமே படித்தேன். சுவாரஸ்யம். உங்கள் கடிதம்-கேள்விகளால் ஜோசியப் ப்குதியை நிறுத்தியது போன்ற, முடிந்த மாற்றங்கள் ஏற்படுத்திருக்கீங்க. மகிழ்ச்சியாய் இருக்கு. வாழ்த்துகள்.

தற்போதும் பத்திரிகைகளுக்கு எழுதுவது தொடர்கிறதுதானே? :-)))

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...