...பல்சுவை பக்கம்!

.

Thursday, November 8, 2012

செல்போன் சிந்தனை!!! #106

செல்போன் சிந்தனை!!!

இரவு சுமார் 9 மணி இருக்கும். சிதம்பரத்திலிருந்து
மயிலாடுதுறைக்கு பஸ்ஸில் புறப்பட்டேன். பஸ்
புறப்பட்டு 5 நிமிடங்கள்கூட ஆகவில்லை.
செங்கழுநீர் பிள்ளையார் கோயில் தெருவிலிருந்து
(எஸ்.ப்பீ. கோயில் தெரு) சீர்காழி ரோடில் பஸ்
திரும்பியது.

எனதருகில் அமர்ந்திருந்தவரின் (சுமார் 40 வயதிருக்கலாம்)
செல்போன் இனிய ரிங்டோன் தந்தது. எடுத்து டிஸ்பிளேயில்
அழைப்பவர் பெயர் பார்த்தவர் இடது கையால் செல்லை
காதில் வைத்து, வலது கையை வாயின்மேல் வைத்து
பொத்திக் கொண்டு பயபக்தியுடன் பேச ஆரம்பித்தார்.

"இதோ வந்திட்டிருக்கேன்மா... இன்னும் 15 நிமிஷத்திலே
வந்திருவேன்மா... ஆமாம்மா... இல்லம்மா...
வைத்தீஸ்வரன்கோவில் வந்திட்டேன்மா... 15 நிமிஷத்திலே
வந்திடுவேன்மா... நீ சாப்பிட்டுட்டு தூங்குமா... நான்
வந்திடுறேன், வச்சிறவா?" என்று பேசிவிட்டு செல்லில்
அழைப்பை துண்டித்துவிட்டு என்னைப் பார்த்தார்.

அந்தப் பார்வையில் 'வெற்றிகரமாக மனைவியிடம்
பேசிவிட்ட பெருமிதமா? அல்லது சிதம்பரத்தையே பஸ்
விட்டு முழுமையாக விலகாத நிலையில்,
வைத்தீஸ்வரன்கோவில் வந்துவிட்டதாய் சொன்னோமே
அதை எப்படி சமாளிப்பது என்ற குழப்பத்தினால் தோன்றிய
கலவரமா? அல்லது இரண்டும் கலந்த கலவையா?'
எது என்றே   புரிந்து கொள்ள இயலாத உணர்வைக் கண்டேன்.

ஏன் இப்படி உண்மையை மறைத்து கோக்குமாக்காக
உளறவேண்டும் என்கிற கேள்வி நீண்ட நேரம் என்னைக்
குடைந்து கொண்டிருந்தது.

-அ. முஹம்மது நிஜாமுத்தீன்.   

. படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!
Related Posts Plugin for WordPress, Blogger...