குண்டப்பா & மண்டப்பா - 3
குண்டப்பா & மண்டப்பா - 2 இங்கே!
குண்டப்பாவும் மண்டப்பாவும் ஒரு நாள்
இரவு காட்சி திரைப்படம் பார்க்கப் போனார்கள். 5 கி.மீ.
தொலைவிலுள்ள பக்கத்து ஊருக்கு போகும்போது
பஸ்ஸில் போய்விட்டார்கள்.
அது ஒரு பேய் படம். (ஆமாம்... ஒரு பேய்தான்!)
பயந்துகொண்டே பார்த்து இரசித்துவிட்டு, ஊருக்குத்
திரும்பி வருவதற்கு நள்ளிரவு 12 மணியாகிவிட்டதால்
பஸ் இல்லை. ஐந்து கிலோ மீட்டர் தூரத்தையும்
நடந்து போய்விடலாம் என்று நடக்க ஆரம்பித்தார்கள்.
அவர்களின் ஊர் முனைவரையிலும் வந்துவிட்டார்கள்.
அங்கிருந்து சாலை இரண்டுபுறமும் பிரிந்து
குண்டப்பா வீட்டிற்கு வலப்புறம் செல்லவேண்டும்.
மண்டப்பா வீட்டிற்கு இடப்புறம் செல்லவேண்டும்.
அந்த இடம் வந்ததும் குண்டப்பாவிற்கு அதற்குமேல்
தனியாகச் செல்ல பயம் வந்துவிட்டது. மண்டப்பாவை
தனது வீடுவரை வந்து விட்டுச் செல்லுமாறு
கூப்பிட்டான். அதனால், குண்டப்பா வீடுவரை
வந்த மண்டப்பா கிளம்பும்போது அவனுக்கு பயம்
வந்துவிட்டது. "ம்ஹூம் எனக்கு பயமாயிருக்கு.
நீ எங்கள் வீடுவரை வந்து விட்டுட்டுப் போ" என்று
குண்டப்பாவைக் கூப்பிட்டான்.
"நீ முதலிலேயே கூப்பிட்டிருந்தால் நானே வந்து
உன் வீடுவ்ரை கூடவந்து விட்டிருப்பேனே;
நீ என்னைவிட பயந்தாங்கொள்ளியா இருக்கியே!"
என்று திட்டிக்கொண்டே மண்டப்பாவை அவன் வீட்டில்
கொண்டுபோய் விட்டான், குண்டப்பா.
அப்படி கிளம்பும்போது குண்டப்பாவுக்கு பயம்வந்து,
மண்டப்பாவைத் துணைக்குக் கூப்பிட்டான் குண்டப்பா!
இப்படி இருவரில் யாருக்குமே தனியாக துணிச்சலாக
போவதற்கு தைரியம் வரவில்லை.
இந்த மாதிரியே இரண்டு பேரும் மாறி, மாறி
இருவர் வீட்டிற்கும் நடந்துகொண்டே இருந்தார்கள்.
அப்புறம்...
பொழுதும் விடிஞ்சிருச்சி!
கதையும் முடிஞ்சிருச்சி!!
அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
குண்டப்பா & மண்டப்பா - 4 இங்கே!
குண்டப்பா & மண்டப்பா - 2 இங்கே!
குண்டப்பாவும் மண்டப்பாவும் ஒரு நாள்
இரவு காட்சி திரைப்படம் பார்க்கப் போனார்கள். 5 கி.மீ.
தொலைவிலுள்ள பக்கத்து ஊருக்கு போகும்போது
பஸ்ஸில் போய்விட்டார்கள்.
அது ஒரு பேய் படம். (ஆமாம்... ஒரு பேய்தான்!)
பயந்துகொண்டே பார்த்து இரசித்துவிட்டு, ஊருக்குத்
திரும்பி வருவதற்கு நள்ளிரவு 12 மணியாகிவிட்டதால்
பஸ் இல்லை. ஐந்து கிலோ மீட்டர் தூரத்தையும்
நடந்து போய்விடலாம் என்று நடக்க ஆரம்பித்தார்கள்.
அவர்களின் ஊர் முனைவரையிலும் வந்துவிட்டார்கள்.
அங்கிருந்து சாலை இரண்டுபுறமும் பிரிந்து
குண்டப்பா வீட்டிற்கு வலப்புறம் செல்லவேண்டும்.
மண்டப்பா வீட்டிற்கு இடப்புறம் செல்லவேண்டும்.
அந்த இடம் வந்ததும் குண்டப்பாவிற்கு அதற்குமேல்
தனியாகச் செல்ல பயம் வந்துவிட்டது. மண்டப்பாவை
தனது வீடுவரை வந்து விட்டுச் செல்லுமாறு
கூப்பிட்டான். அதனால், குண்டப்பா வீடுவரை
வந்த மண்டப்பா கிளம்பும்போது அவனுக்கு பயம்
வந்துவிட்டது. "ம்ஹூம் எனக்கு பயமாயிருக்கு.
நீ எங்கள் வீடுவரை வந்து விட்டுட்டுப் போ" என்று
குண்டப்பாவைக் கூப்பிட்டான்.
"நீ முதலிலேயே கூப்பிட்டிருந்தால் நானே வந்து
உன் வீடுவ்ரை கூடவந்து விட்டிருப்பேனே;
நீ என்னைவிட பயந்தாங்கொள்ளியா இருக்கியே!"
என்று திட்டிக்கொண்டே மண்டப்பாவை அவன் வீட்டில்
கொண்டுபோய் விட்டான், குண்டப்பா.
அப்படி கிளம்பும்போது குண்டப்பாவுக்கு பயம்வந்து,
மண்டப்பாவைத் துணைக்குக் கூப்பிட்டான் குண்டப்பா!
இப்படி இருவரில் யாருக்குமே தனியாக துணிச்சலாக
போவதற்கு தைரியம் வரவில்லை.
இந்த மாதிரியே இரண்டு பேரும் மாறி, மாறி
இருவர் வீட்டிற்கும் நடந்துகொண்டே இருந்தார்கள்.
அப்புறம்...
பொழுதும் விடிஞ்சிருச்சி!
கதையும் முடிஞ்சிருச்சி!!
அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
குண்டப்பா & மண்டப்பா - 4 இங்கே!