...பல்சுவை பக்கம்!

.

Thursday, May 19, 2011

நகைச்சுவை; இரசித்தவை -15

நகைச்சுவை; இரசித்தவை -15!



அரசியல்வாதி (மேடையில்) : விலைவாசி உயர்வு திரும்பக் 
குறையும் வரை நான் சாகாவிரதம் இருக்கப் போகிறேன் 
என்பதை மக்களே, உங்கள்முன் உறுதியிட்டுக் கூறிக் கொள்கிறேன்!!!
................................................................................................................................................

தொண்டர் 1 : பதவி பெருசா, குடும்பம் பெருசா?

தொண்டர் 2 : பதவியில் இருக்கிற குடும்பம்தான் பெருசு!
...............................................................................................................................................

தளபதி: மன்னா, காளைப் படை ஒன்றை நமது படையில்
சேர்ப்போமா? 

மன்னர்: நான்தான் காலையே படையாக வைத்து
இருக்கிறேனே, காளைப் படை என்று எதற்கு தனியாக?
.............................................................................................................................................

தலைவர் : நாங்கள் போனமுறை 500 கோடி ஊழல் செய்தோம்;
இந்த முறை 300 கோடி ஊழல் செய்தோம்...

தொண்டன் 1: தலைவர் என்னப்பா சொல்றாரு?

தொண்டன் 2:  இது கொள்ளை விளக்க பொதுக் கூட்டமாம்!
...........................................................................................................................................

அரசன்  (செய்தி கொண்டுவந்த புறாவைப் பார்த்து ) : புறாவே,
வா! உன்னை வறுக்க வறுக்க என்று  வரவேற்கிறேன்.
..........................................................................................................................................

விமான நிலைய அதிகாரி:  சார் நீங்க   அளவுக்கு அதிகமாகக் 
குடித்திருக்கிறீர்கள். உங்களை விமானத்தில் அனுமதிக்க முடியாது.

பயணி:  அப்படின்னா   சரக்கு விமானத்திலயாவது ஏத்திக்குங்க சார்!
...........................................................................................................................................
 
தலைவர் ( மேடையில்) : நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
வெறும் வாயை மெல்லுபவர்களுக்காக  இலவச  அவல்
திட்டம்  கொண்டு வரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்து கொள்கிறோம்.
........................................................................................................................................... 

--தூங்கும்போது செல்போன் பேசறாமாதிரி கனவு
கண்டேன்டா..

 --அப்புறம் என்ன ஆச்சு?

--விடிஞ்சதும் போன்ல  பேலன்ஸ் இல்லடா!

.........................................................................................................................................
நண்பன் 1: காலம்பூரா உட்கார்ந்து சாப்பிடுரமாதிரி  
வசதி செஞ்சி  வச்சிட்டுப் போயிருக்காரு எங்க தாத்தா!

நண்பன் 2:  அவ்வளவு சொத்து வசதியா?

நண்பன் 1: இல்லடா, நல்ல ஸ்ட்ராங்கா மர பெஞ்ச் செஞ்சி வச்சிட்டாரு...!
..........................................................................................................................................

சேவகன்: மன்னா,  போர் நிறுத்தம் ஆகிவிட்டது...

மன்னன்:  கண்கள் பனித்தன!  இதயம் இனித்தது!!

               படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!
Related Posts Plugin for WordPress, Blogger...