...பல்சுவை பக்கம்!

.

Sunday, April 17, 2011

ட்வீட்டரில் நிஜாம்பக்கம்!

ட்விட்டர் என்னும் தளத்தில் நான் ட்வீட் செய்த சில
கருத்துக்களை இங்கே உங்கள் பார்வைக்கு கீழே தருகிறேன்.

1.லீவு ஞாயிறு முடிந்து, வேலைநாள் திங்கள்,
இரவு 12 மணிக்கே பிறந்துவிடுகிறதே, இதை
அறிமுகப்படுத்தியவர் யார்?

2.பிரச்னைகள் உருவாக காரணாமாயிருந்து, அந்த
பிரச்னைகள் தீர்ப்பதற்கு, ஓர் ஆணிற்கு உதவியாய்
இருப்பவள்தான் மனைவி #ஓர் அறிஞர்

3.பிழைக்கத்தெரிந்தவன் என்ற வார்த்தை பிடிக்காதவன்
கண்டுபிடித்த சொல்தான 'துரோகி' #தொலைக்காட்சி
சீரியல் வசனம்

4.நல்லவன் என்ற வார்த்தை பிடிக்காதவன்
கண்டுபிடித்த சொல்தான 'அப்பாவி'
#தொலைக்காட்சி சீரியல் வசனம்

5.'பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது' -பழமொழி!
ஏன் கிடைக்காது? அதுதான் வாராவாரம் வருதே?

6.உப்பு தின்னவன் தண்ணி குடிச்சாகணும் - பழமொழி.
உப்பு தின்னவங்கள் எல்லாம கையைத் தூக்குங்க!

7."சிரித்துக்கொண்டே தவறு செய்யும் யாரும்
அழுதுகொண்டே தண்டனை பெற நேரும்"
-காயல் ஏ.ஆர்.ஷேக்முஹம்மது பாடிய பாடல்.

8.அளவோடிருந்தால் பணம் நம்மைக் காப்பாற்றும்;
மீறினால் பணத்தை நாம் காப்பாற்றவேண்டும்.
'அளவு' என்றால் விளக்கம் ப்ளீஸ்!

9.எல்லா ட்டீ.வி.சேனல்களிலும் 'இந்தியாவின்
நம்பர் ஒன் டீலர்' விளம்பரம் மட்டும் வருது.
"இந்தியாவின் நம்பர் டூ டீலர்" விளம்பரம்
ஏன் வருவதில்லை?

10..ஃபாஸ்ட் ஃபுட் ஈஸ் டேஸ்ட் ஃபுட்.
மெதுவா சாப்ட்டா ஸ்லோ ஃபுட்.
மீந்து போச்சுனா வேஸ்ட் ஃபுட்.
தீர்ந்து போச்சுனா நோ ஃபுட்.

www.twitter.com/nizampakkam


படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!
Related Posts Plugin for WordPress, Blogger...