...பல்சுவை பக்கம்!

.

Thursday, September 24, 2009

ஆயிரம் மலர்கள் பனியில்... (பாடல்)


ஆயிரம் மலர்கள் பனியில்... (பாடல்)

தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் திருமதி
ஷோபனா ரவி, திரு ரவி தயாரித்து,
திரு. எஸ்.வி.சேகர் கதாநாயகனாக
நடித்த 'ஸ்பரிசம்' என்ற படத்தில் வரும்
பாடல். திரு.எஸ்.ப்பீ.பாலசுப்ரமணியன்
மற்றும் ஒரு பெண் குரல் [எஸ்.ப்பீ.
ஷைலஜா(?)] பாடியது.

என்னைக் கவர்ந்த பாடல் இது. பாடல்
பற்றிய மற்ற விவரங்கள் தெரிந்தவர்கள்,
பாடலின் ஒலி (ஆடியோ) வைத்துள்ளவர்கள்
தங்கள் கருத்துக்களைப் பின்னூட்டம்
இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து (பாடல்):

ஆண்:
ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து
ஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து
பாவை 'உன்' மனதில் நுழைந்து தவழ்ந்து
மேனியில் மின்னலை வெள்ளமமாய்... ஸ்பரிசம்

ஆண்:
வைரப் படைக்கலாம் நடுவே நாம் கைகள்
... இணைக்கலாம் நடக்கலாம்
தென்றல் திகைக்கலாம் அதற்கு மேல்
தேவர் இருக்கலாம் அவர்க்கெலாம்
பாடல் தொடுக்கலாம்
வைரப் படைக்கலாம் நடுவே நாம் கைகள்
... இணைக்கலாம் நடக்கலாம்
தென்றல் திகைக்கலாம் அதற்கு மேல்
தேவர் இருக்கலாம் அவர்க்கெலாம்
பாடல் தொடுக்கலாம்

பெண்:
இந்திரப் பதவி கிடைக்கலாம்
உடனே நாம் அதையும் மறுக்கலாம்
பறக்கலாம் சிரிக்கலாம் வா... ஸ்பரிசம்
ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து
ஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து
பாவை 'என்' மனதில் நுழைந்து தவழ்ந்து
மேனியில் மின்னலை வெள்ளமமாய்... ஸ்பரிசம்

ஆண்:
மனமோ உடலோ மயக்கங்களின் வடிவோ
கனவில் பவனி வரும் கண்கள்
கார்த்திகை தீபங்களோ... ஓ...ஓ...
மனமோ உடலோ மயக்கங்களின் வடிவோ
கனவில் பவனி வரும் கண்கள்
கார்த்திகை தீபங்களோ... ஓ...ஓ...

பெண்:
காலக் கதவினை மெல்லத் திறந்து
பப்பா... பப்பா... பப்பா...
கடந்த பாதையை மறந்து...
காலக் கதவினை மெல்லத் திறந்து
கடந்த பாதையை மறந்து
இந்த கணக்கில் நாம் பிறந்து
... வளர்ந்து கலந்தோம்... ஸ்பரிசம்
ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து
ஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து
பாவை 'என்' மனதில் நுழைந்து தவழ்ந்து
மேனியில் மின்னலை வெள்ளமமாய்... ஸ்பரிசம்


பாடலின் மெட்டு நன்றாக ஞாபகம் உள்ளது.
சில வார்த்தைகள் மட்டும் பிழையாக
இருக்கலாம்.

[கேட்டவை]

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...