...பல்சுவை பக்கம்!

.

Friday, February 3, 2012

சில சிந்தனைகள் (பகுதி 11)


சில சிந்தனைகள் (பகுதி 10)
========================

1.உழைப்பு உடலை வலிமையாக்கும். கஷ்டம்
மனதை வலிமையாக்கும் -செனகா.

2.கடினமான உழைப்பே சிறந்த அதிர்ஷ்டமாகும் -டெம்பஸ்

3.நம்பிக்கை இல்லாத இடத்தில் அன்பு இருக்காது.

4.திறமைதான் ஏழையின் மூலதனம் -எமர்சன்

5.பசியுடையவனின் புன்னகை, செயற்கையாயிருக்கும்.

6.பெரிய பெரிய சாதனைகளனைத்தும் செய்து
முடிக்கப்படுவது ஆழ்ந்த மௌனத்தினால்தான் -மேலை நாட்டறிஞர்

7.மன அமைதியோடு இருப்பவனுக்கு என்றும் ஆபத்து இல்லை -லாவோட் ஸே

8.அறிவாளி, ஒருபோதும் சோம்பேறிகளுடன் நேரத்தை வீணடிக்க மாட்டான்.

9.
அரிய செயலைச் செய்து முடிப்பது வலிமையால்
அல்ல; விடாமுயற்சியால்தான் -ஜேம்ஸ் ஆலன்

10.
கீழ்த்தரமான தந்திரத்தால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்து விட முடியாது -விவேகானந்தர்

11.நேரப்படி வேலையைச் செய்கிறவர்கள் முறையான சிந்தனை வளத்தைப் பெற்றவர்கள் - பிட்டின்

12.துணிவுமிக்கவர்களின் அருகிலேயே எப்போதும் அதிர்ஷ்டம் நிற்கிறது. - வெர்ஜில்

13.கண்ணைக் குருடாக்கி, காதைச் செவிடாக்கி, மூளையை மழுங்கச் செய்கிறது ஆசை!

14.எழுத்துப் பயிற்சி மூலம் கையெழுத்தைத் திருத்துவது போல, உண்மை பேசும் பழக்கமும் பயிற்சியினால்தான் வரும் -ஜான் ரஸ்கின்

15.அளவுக்கு மீறிய சுதந்திரம் ஆபத்தானது.

16.ஒவ்வொரு நிமிடமும் நிமிடமும் நல்ல பண்புடன்
வாழ்வதில் அக்கறையுடன் இருந்தாலே,
இவ்வுலகில் எந்நேரமும் மகிழ்ச்சியுடன் வாழலாம் - பிராங்கிளின்


17.எப்போதும் மனம் தூய்மையாக இருந்தால், முகம் புத்துணர்ச்சியுடன் பிரகாசிக்கும் - எமர்சன்

18.நாளை நான் வாழ்வேன் என்கிறான் மூடன். இன்று என்பதும் காலம் கடந்ததே. அறிவாளிகள் நேற்றே வாழ்ந்து விட்டனர். -மார்ஷியல்

19.அறிவு தலைக்கு கிரீடம்! அடக்கம் காலுக்கு செருப்பு!

20.அடக்கம் என்பது ஓர் அணிகலன் மட்டுமல்ல; அது ஒழுக்கத்தின் பாதுகாப்பும் ஆகும் -அடிசன்


.படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

21 comments:

ரஹீம் கஸ்ஸாலி said...

எல்லாமே அருமையான சிந்தனைகள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ ரஹீம் கஸாலி

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கஸ்ஸாலி!

E.K.SANTHANAM said...

அறிஞர் கருத்து அத்தனையும் முத்து.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ E.K.SANTHANAM

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

சி.பி.செந்தில்குமார் said...

திறமைதான் ஏழையின் மூலதனம் -எமர்சன்

உண்மையான வரிகள்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ சி.பி.செந்தில்குமார்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Riyas said...

நல்லாயிருக்கு..

Abu Nadeem said...

அனைத்தும் முத்தான பொன்மொழிகள் !!!

மயிலாடுதுறை ராஜசேகர் said...

.திறமைதான் ஏழையின் மூலதனம் -எமர்சனின் இந்த கருத்து தான் எவ்வளவு உண்மையானது. எத்தனை எத்தனையோ ஏழைகள் திறமையின் மூலம் உன்னத நிலையை எட்டியுள்ளனர்.நல்ல நல்ல கருத்துக்களை தொகுத்து கொடுத்துள்ளீர்கள் நிஜாம்.மிகவும் நன்றி.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ Riyas

வருகைக்கு, கருத்துக்கு நன்றி.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ Abu Nadeem

வருகைக்கு, கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

சீரிய கருத்துக்கள் நிறைந்த சிந்தனைப்பகுதி அருமை.

Jaleela Kamal said...

அனைத்தும் அருமை

http://samaiyalattakaasam.blogspot.com/2012/02/blog-post_17.html

இந்த விருதை பெற்று கொள்ளுங்கள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ மயிலாடுதுறை ராஜசேகர்

விரிவான கருத்திற்கு நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ ஸாதிகா

வருகைக்கு, கருத்துக்கு நன்றி.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//Jaleela Kamal said...

அனைத்தும் அருமை

http://samaiyalattakaasam.blogspot.com/2012/02/blog-post_17.html

இந்த விருதை பெற்று கொள்ளுங்கள்.//

நன்றி! நன்றி.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

http://4.bp.blogspot.com/-JyBcXMAVmi8/TzyxAQqR2SI/AAAAAAAAFFg/Re9vxOwZYHs/s1600/Liebester+Blog+Award.jpg

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

[im]http://4.bp.blogspot.com/-JyBcXMAVmi8/TzyxAQqR2SI/AAAAAAAAFFg/Re9vxOwZYHs/s1600/Liebester+Blog+Award.jpg[/im]

Seeni said...

ada daa nalla sinthanaikal!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//Seeni said...

ada daa nalla sinthanaikal! //

Mikka Nandri Seeni Sir!

thangaraj said...

அறிவு தலைக்கு கிரீடம்! அடக்கம் காலுக்கு செருப்பு!
சிந்தனைப்பகுதி அருமை.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...