...பல்சுவை பக்கம்!

.

Friday, November 4, 2011

நகைச்சுவை; இரசித்தவை 17



நகைச்சுவை; இரசித்தவை 17
============ ============ ==

1.] "நம்ம மன்னருக்கு சொந்தமா வளைகுடா இருக்காமே?"

"அட, அது மன்னர் வளைகுடா இல்லப்பா... மன்னார் வளைகுடா!"
--------------------------------------------------------------

2.] "நம்ம தலைவர் தேர்தல்ல தோத்தாலும் முதல்வர்
ஆயிட்டாரு"

"எப்படி?"

"ஒரு டுடோரியல் காலேஜ் ஆரம்பிச்சு அதுக்கு
முதல்வர் ஆயிட்டாரு"
------------------------------------------------------ -----------
3.] "நம்ம மன்னர் ராணிக்கும் எதிரி நாட்டு மன்னனுக்கும்
மட்டும்தான் பயப்படுவாரு"

"ஏன் அப்படி?"

"அவஙக ரெண்டு பேருக்கிட்டதானே அடி வாங்குறாரு!!!"
------------------------------------------------------
4.] "உன் கலயாணத்தைப் பத்தி விவசாய ஆராய்ச்சி
மையத்துல போயி விசாரிச்சியாமே, ஏன்டி?"

"கல்யாணம்ங்கிறது ஆயிரம் காலத்துப் பயிர்
இல்லயா, அதனாலதான்டி."
-----------------------------------------------
5.] "என்னங்க இது மணப்பெண்ணுக்கு கை,
கழுத்து, நெற்றியிலலாம் பூவாலேயே
அலங்காரம் பண்ணியிருக்கீங்க?"

"பொன் வைக்கிற இடத்துல பூ வைக்கச்
சொல்லி நீங்கதானே சொன்னீங்க?"
-----------------------------------------
6.] "நம்ம தலைவருக்கு அதுதான் சொந்த ஊரு"

"தலைவரு பிறந்த ஊரா?"

"இல்ல... பினாமி பேர்கள்ல அந்த ஊரையே
தலைவர் வாங்கிட்டாரு"
---------------------------------------------
7.] "எங்க கடையில ஏழைகளுக்காக ஒரு திட்டம் வச்சிருக்கோம்"

"என்ன திட்டம்?"

"நகையை தொட்டுப் பார்க்க நூறு ரூபாய் மட்டும்ங்கிறதுதான
அந்தத் திட்டம்"
-----------------------------------------------------------

8.] ஆசிரியை: "உங்க பையனைக் கண்டிச்சு வையுங்க"

தாய்: "என் பையன் என்ன செய்தான்?"

ஆசிரியை: "என்டா ஸ்கூலுக்கு வரலைன்னு கேட்டால்,
'தேர்தல் ஜுரம்'னு பதில் சொல்றான்."
--------------------------------------------------------------------------------

9.] "நம்ம தலைவர் எப்பவும் எளிமையானவரு"

"எப்படி?"

"அவருக்கு 'நாவலர்' பட்டம் தர்றோம்னு சொன்னதுக்கு,
'துணுக்கர்' பட்டம் போதும்கிறாரே!"
---------------------------------------------------------------------------------

10] "நம்ம தலைவரு ஏட்டிக்கு போட்டியா பேசுறதுல வல்லவர்"

"எப்படி?"

"எதிர்கட்சித் தலைவருக்கு 'ஆமை வடை' பிடிக்கும்னு
சொன்னதுக்கு, நம்ம தலைவர் 'எனக்கு முயல் வடை
பிடிக்கும்'ன்னு சொல்றாரு"
----------------------------------------------------------

11] "அந்த டாக்டர் போலி டாக்டர்னு நினைக்கிறேன்"

"எதனாலே?"

"சின்ன ஊசியாப் போடச் சொன்னால் குண்டூசி போதுமாங்கிறார்!"
------------------------------------------------------------------------------

12] "அந்த அரசியல்வாதி ஏன் ஒரே நேரத்தில் ரெண்டு கட்சி
ஆரம்பிச்சாரு?"

"அவரோட ரெண்டு மகன்களுக்கும் எதிர்காலத்தில்
பயன்படும்னுதான்."
--------------------------------------------------------------------------------

அன்பர்களுக்கு ஈத் முபாரக், பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

.படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

33 comments:

rajamelaiyur said...

//"நம்ம மன்னருக்கு சொந்தமா வளைகுடா இருக்காமே?"

"அட, அது மன்னர் வளைகுடா இல்லப்பா... மன்னார் வளைகுடா!"
//

ஹா ...ஹா ...ஹா ...ஹா ...

rajamelaiyur said...

இன்று என் வலையில்

விஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு

rajamelaiyur said...

super comedy

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரசிக்கும்படியான நகைச்சுவை துணுக்குகள்...

Abu Nadeem said...

nice jokes.....

r.v.saravanan said...

ஹா....ஹா....அனைத்தும் ரசிக்கும் படி இருந்தது நிசாமுதீன் சார் உங்களுக்கு பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

Anonymous said...

அருமையான நகைச்சுவைகள்..வாழ்த்துக்கள்.

Anonymous said...

இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள் சகோ!

அன்புடன் மலிக்கா said...

//"நம்ம மன்னருக்கு சொந்தமா வளைகுடா இருக்காமே?"

"அட, அது மன்னர் வளைகுடா இல்லப்பா... மன்னார் வளைகுடா!"//

நிஜாமண்ணா நலமா?

”காமெடி கடி” கடிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்க தான்..

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா

ஸாதிகா said...

அத்தனையும் முத்தான நகைச்சுவை துணுக்குகள்!

ப.கந்தசாமி said...

//"உன் கலயாணத்தைப் பத்தி விவசாய ஆராய்ச்சி
மையத்துல போயி விசாரிச்சியாமே, ஏன்டி?"//

ஏனுங்க, கடைசில எங்க தலைலயே கையை வச்சுட்டீங்களே.

சி.பி.செந்தில்குமார் said...

அந்த அரசியல்வாதி ஏன் ஒரே நேரத்தில் ரெண்டு கட்சி
ஆரம்பிச்சாரு?"

"அவரோட ரெண்டு மகன்களுக்கும் எதிர்காலத்தில்
பயன்படும்னுதான்."
>>>
நீங்க ”அவரை” சொல்லலையே

ம.தி.சுதா said...

அட முதல் ஜோக்கே நம்மூரு ஜோக்கா ?

அருமைங்க...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution

அம்பாளடியாள் said...

வாழ்த்துக்கள் சகோ .அருமையான நகைச்சுவையைப்
பகிர்ந்துள்ளீர்கள் மிக்க நன்றி மென்மேலும் இதன் தரம்
பெருகட்டும் அதற்கும் என் வாழ்த்துக்கள் மிக்க நன்றி
பகிர்வுக்கு ....

அம்பாளடியாள் said...

தமிழ்மணம் 3

Yaathoramani.blogspot.com said...

புதிய அருமையான நகைச்சுவைத் துணுக்குகள்
குடும்பத்துடன் படித்து ரசித்தோம்
தொடர வாழ்த்துக்கள்
த.ம 4

Yaathoramani.blogspot.com said...

குடும்பத்துடன் ரசித்துச் சிரித்தோம்
புதிய அருமையான நகைச்சுவை துணுக்குகள்
தொடர வாழ்த்துக்கள் த.ம 4

E.K.SANTHANAM said...

குலுங்கி, குலுங்க சிரித்தேன்.

E.K.SANTHANAM said...

இன்னும் நிறைய ஜோக்ஸ் தாருங்கள்.

kanchana said...

GOOD SENSE OF HUMOUR. NEED OF THE HOUR. PL. CONTINUE. KANCHANA

முனைவர் இரா.குணசீலன் said...

ஹா ஹா ஹா ஹா..

ம.தி.சுதா said...

சும்மா ஒரு எட்டு எட்டிப் பார்த்தேன் வீட்டில் சுடு சோறில்லையே.. நேரம் கிடைக்கையில் மீண்டும் வாறன்..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நன்றி சுதா! விரைவில் பதிவுடன் வருகிறேன் [இறை நாட்டம்]

PUTHIYATHENRAL said...

* வெத்து வேட்டு விஜயகாந்து! எத்தனை படத்தில் தேசபக்தி பேசி தீவிரவாதிகளை அடக்கி இந்தியாவை காப்பாற்றினீர்களே! பாவம் சார் நீங்கள்!

* முல்லை பெரியாறு, கூடங்குளம் ஒருங்கிணையும் தமிழர்கள்! தமிழர் எழுச்சி ஓங்கட்டும்!

* மோதல்களை தடுத்து நிறுத்துங்கள் SDPI ! சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கோரிக்கை

* தமிழர்களின் எழுச்சியும், ஹிந்துத்துவாவின் ஆர்ப்பாட்டமும்! கூடங்குளம் அணுமின் நிலயத்தை உடனே திறக்க வேண்டும் இந்து மகாசபா ஆர்ப்பாட்டம்!

mayiladuthurai rajasekar said...

ungaludaiya jokes thodar mihavum arumaiyaga ullathu.adikkadi idugai idavum.

Suresh Subramanian said...

சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது.....அருமை...

நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

சென்னை பித்தன் said...

நல்ல ஜோக்ஸ்!இதற்குப் பிறகு ஏன் எதுவும் எழுதவில்லை!

சென்னை பித்தன் said...

த.ம.5

Unknown said...

நல்ல யோக்ஸ்

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல நகைச்சுவை துணுக்குகள். பகிர்வுக்கு நன்றி

mohamed said...

ஹா ஹா ஹா ஹா ஹா..........
நிஜாம் பாய் ரொம்ப நாள் ஆச்சு உங்க நகைச்சுவையை கேட்டு,இவ்வளவு நாளாக நகைச்சுவை போடாமள் எங்கே போனீங்க? பரவாயில்லை லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துறிக்கீங்க , வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

ரொம்ப சிரிப்பு, 1, 2 , 3 செம்மையா இருந்தது..

வேலை பிஸி காரணமாக அவ்வளவா கருத்து தெரிவிக்க வரமுடியல//



என் 600 வது பதிவுக்கு முதலாக வந்து வாழ்த்தியமைக்கு மிக்க சந்தோஷம் + நன்றி

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...