...பல்சுவை பக்கம்!

.

Wednesday, January 1, 2014

நகைச்சுவை; இரசித்தவை (19) #120

1.  "பரிட்சை எழுத வரும்போது கையில என்னடா கட்டு?"

"விழுந்து விழுந்து படிச்சதுல கையில அடிபட்ருச்சி சார்!"

(மாணவர்கள் விழிப்புடன் படிக்கவும்.)


==============================================================
2. மனைவி: "நான் வரும்போது ஏன் கண்ணாடி போட்டுக்கறீங்க?"

கணவன்: "தலைவலி வரும்போது கண்ணாடி போட்டுக்கங்கன்னு டாக்டர்தான் சொன்னார்."


-கீழை அ. கதிர்வேல்.
[ஆனந்த விகடன் 1988 தீபாவளி சிறப்பிதழ்.]
=============================================================
3.
https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn1/46161_584784781547510_332092284_n.jpg
 ஹா... ஹா...

"ஹலோ மன்னா, போர் முடிந்து விட்டதா?"

"நான் ரன்னிங்கில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன் அமைச்சரே!"

-வீ.விஷ்ணுகுமார்
(தினகரன் வசந்தம் 23.12.2012)

============================================================
4.  "சாப்பாடு உனக்கு மட்டும்தானே, பின்ன ஏன் பார்சல் வாங்கிட்டு வீட்ல போயி சாப்பிடுறே?"

"என்னை ஹோட்டல்லயே சாப்பிடக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரே!"

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

5.  ஹா...ஹா...

நீதிபதி: "நீ எதாவது சொல்ல விரும்புகிறாயா?"

குற்றவாளி: "எனக்காக வாதாடின வக்கீல், உண்மையிலேயே

பி.எல். படிச்சிருக்காரான்னு எனக்குத் தெரியணும்!"

-போடி. ப்ரியபாரதி
(1988)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

6.  ஹா...ஹா...

"வரப்போகும் பொதுத் தேர்தலில், உங்கள் கட்சி சார்பாகப்
போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்துவிட்டீர்களா?"

"ம்... ம்..."

"தேர்தலில் எதிர்கட்சிகளுடன் கூட்டு உண்டா?"

"ஊஹூம்."

"தனித்துப் போட்டியிட்டால் தங்களால் மெஜாரிட்டி
பலம் பெறமுடியுமென்று நம்புகிறீர்களா?"

"ம்... ம்..."

"மெஜாரிட்டி கிடைக்காமல் போனால் கூட்டு
மந்திரி சபை அமைக்கச் சம்மதிப்பீர்களா?"

"ம்... ம்..."

உங்கள் கட்சிக்குள் ஏதோ 'கசமுசா'வென்றும்
தேர்தலுக்குள் பிளவுபடும் என்றும் சொல்கிறார்களே?"

"ஊஹூம்..."

"உங்களின் மனம் திறந்த பேட்டிக்கு நன்றி!"

- படுதலம் சுகுமாரன்

(1988)


--------------------------------------------------------------------------------------

7.  ஹா...ஹா...

"எதுக்கு டாக்டர் உங்க கையையே நாடி பிடிச்சுப்
பார்த்திட்டிருக்கீங்க?"

"டச் விட்டுப் போயிடாம இருக்கத்தான்!"

- எம். பூங்கோதை
(1988)


-------------------------------------------------------------------------------------------
8.  ஹா...ஹா...

"ஆப்பரேஷன் தியேட்டருக்குள் துப்பாக்கி வெடிக்கிற சத்தம் கேக்குதே?"

"மிலிட்டரி டாக்டர் ஆச்சே... ஆப்பரேசன்போது இறந்து போனா
மரியாதை பண்ணுவார்!"

- அம்பை தேவா
(1988)


---------------------------------------------------------------------------------------------
9.  ஹா...ஹா...

"என்ன டாக்டர் இது... பணம் கொடுக்கும்போது கிச்சுகிச்சு செய்றீங்க?"

"சிரிச்ச முகத்தோட பீஸ் கொடுத்தால்தான் நான் வாங்கிப்பேன்!"

- வி. சாரதி டேச்சு
(1988)


------------------------------------------------------------------------------------------
10.  ஹா...ஹா...

"தலைவியோட சுயரூபம் உங்களுக்கு மட்டும்தான் தெரியுமா? யார் நீங்க?"

"அவங்களுக்கு நடிகையா இருந்தபோது, அவங்களுக்கு மேக்கப் மேனாக
இருந்தவன்!"

- ஞா. ஞானமுத்து (1988)


----------------------------------------------------------------------------------------------
 11.  ஹாஹா...!

"நம்ம தலைவர் எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊருல 2 பேரை, பேர் சொல்லி கூப்பிட்டு, தோள்ல கை போட்டு பேசுவாரு!"

"உண்மையாவா?"

"எந்த ஊருலயும் 2 பேருக்கு மேலே நம்ம கட்சியில ஆள் இல்லையே!"

-டி.சேகர், திருத்துறைப்பூண்டி.


------------------------------------------------------------------------------------------------
12.  ஹா... ஹா...

"அஞ்சே ஆயிரம்தான் செலவு பண்ணேன், தரகர் பஞ்சாயத்து, மேட்ரிமோனியல் எந்த செலவும் இல்லாமல் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டேன்"

"எப்படி?"

"பொண்ணுக்கு 'மொபைல் ஃபோன்' வாங்கிக் கொடுத்தேன்!"

-பர்வீன் யூனுஸ்.
(ஆனந்த விகடன், 19.12.2012)

=> இது நகைச்சுவைதான். ஆனால்,எவ்வளவு பெரிய கொடுமை?<=


-----------------------------------------------------------------------------------------------
13.  ஹா... ஹா...!

"ஜாமீன் எடுக்கப் போன எங்களைத் தலைவர் கண்டபடி திட்டிட்டார்!"

"என்னவாம்?"

" '13 வருஷமா எங்கடா போனீங்க?'ன்னுதான்!"

-சி.சாமிநாதன்
(ஆனந்த விகடன், 07.11.2012)


-------------------------------------------------------------------------------------------------
14.  "அந்த சாமியார் சொன்னது உடனே பலிச்சுதா? எப்படி?"

" 'புது வாகனம் வாங்குவே'ன்னு சொன்னார். அவரைப் பார்த்துட்டு வெளியே வந்தா, என் காரைக் காணோம்."

-அ.ரியாஸ், சேலம்.
(குங்குமம், 19.11.2012)


-------------------------------------------------------------------------------------------------
15.  "அடுத்து நம்ம ஆட்சிதான். ஏன் தலைவரே கவலைப்படுறீங்க"

"அதுக்குள்ளே மணல், நிலக்கரி, கிரானைட் எல்லாத்தையுள் காலி பண்ணிடுவாங்க போலிருக்கே!"

-சிக்ஸ் முகம்
(ஆனந்த விகடன் 21.11.2012)


----------------------------------------------------------------------------------------------
 16.  "நம்ம தலைவருக்கு திறமை போதாது."

"ஏன்?"

"பேசி தூங்க வைச்சவருக்கு எழுப்பத் தெரியலை!"


----------------------------------------------------------------------------------------------
17.   "இந்த ஊர்லயே ரொம்ப மோசமான ஹோட்டல் எங்கயிருக்கு?"

"ஏன் கேட்குறீங்க?"

"பக்கத்திலேயே கிளினிக் ஆரம்பிக்கலாம்னுதான்!"


------------------------------------------------------------------------------------------

18.  "நான் 'அழகாயிருக்கேன்'னு பொய்தானே சொன்னீங்க?"

"உண்மைதான் உமா!"


----------------------------------------------------------------------------------------
19.  "இப்போதெல்லாம் பாட்டு பாடி, பரிசு பெற வருவதில்லையே, ஏன் புலவரே?"

"Blog எழுதவே நேரம் போதவில்லை மன்னா!"


------------------------------------------------------------------------------------------
2013-ல் எனது முகநூல் சுவரில் பதிந்ததின் தொகுப்புதான் இது.
.
படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

2 comments:

Jaleela Kamal said...

haa hhaa

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//Jaleela Kamal said...
haa hhaa //

வருகைக்கும் இரசித்தமைக்கும் நன்றி!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...