...பல்சுவை பக்கம்!

.

Sunday, March 28, 2010

நகைச்சுவை; இரசித்தவை 9


நகைச்சுவை; இரசித்தவை - 9





பணிப்பெண்: "மன்னா, அந்தப்புரம் உள்ளே
வராதீர்கள். மகாராணியார் உங்கள்மேல்
ரொம்ப கோபமாக உள்ளார்கள்"

மன்னன்: "ஏன், ஏன், ஏன், எதனால்?"

பணிப்பெண்: "தெரியவில்லை, மன்னா!
ஆனால், மகாராணியார் சமையலறையில்
ஆப்பிளை அரிவாள்மனையில் அரிந்துகொண்டே,
'உன்னைத்தான் நானரிவேன்,
என் மன்னவனை யாரரிவார்?' என்று
பாடிக்கொண்டிருக்கிறார்கள், மன்னா!"
=============================================

மனைவி: "என்னங்க, துவரம் பருப்பு இல்லை.
மல்லி இல்லை. தேங்காய் எண்ணெய் இல்லை.
ஜீனி இல்லை. ஆஃபிஸிலிருந்து வரும்போது
வாங்கிட்டு வாங்க..."

கணவன்: "ஏன்டி, ஆஃபிஸ் போகும்போது,
'இல்லை, இல்லை'ன்னு சொல்லி எரிச்சலைக்
கிளப்புற?"

மனைவி: துவரம் பருப்பு டப்பா காலியா இருக்கு.
மல்லி டப்பா காலியா இருக்கு.
தெங்காய் எண்ணெய் பாட்டில் காலிய இருக்கு.
ஜீனி டப்பா காலியா இருக்கு. இப்ப ஓகேயா?"
=============================================

ஆசிரியர்: நேற்று ஏன்டா ஸ்கூலுக்கு வரலை?
இனிமேல் முதல் நாளே லீவு சொல்லிடணும்"

மாணவன்: "சரி சார். நாளைக்கு எனக்கு
வயிற்று வலி சார். நாளைக்கு எனக்கு லீவு சார்!"
--------------------------------------------------------------

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

26 comments:

Jaleela Kamal said...

நல்ல நகைச்சுவை, நல்ல சிரிச்சாச்சு

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//Jaleela said...
நல்ல நகைச்சுவை, நல்ல சிரிச்சாச்சு//

நல்லா சிரிச்சு,
நல்லா க்மெண்ட் போட்டதற்கு
நல்ல நன்றி!

நாடோடி said...

க‌ல‌க்க‌ல் ந‌கைச்சுவை..சிரிப்பு தாங்க‌லை.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அசத்தல் நகைச்சுவை கலக்குங்கள்..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//நாடோடி said...
க‌ல‌க்க‌ல் ந‌கைச்சுவை..சிரிப்பு தாங்க‌லை.//

தாங்கமுடியாமல் சிரிச்சதற்கு நன்றி, நாடோடி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஸ்ரீ.கிருஷ்ணா said...
அசத்தல் நகைச்சுவை கலக்குங்கள்..//

கலக்கச் சொன்னதற்கு நன்றி, ஸ்ரீகிருஷ்ணா!

GEETHA ACHAL said...

எப்படி இப்படி எல்லாம்...நல்லா சிரிச்சாச்சு...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//Geetha Achal said...
எப்படி இப்படி எல்லாம்...நல்லா சிரிச்சாச்சு...//

அப்படி அப்படித்தான்!
நன்றி, கீதா ஆச்சல்!

ஜெய்லானி said...

ஆரம்பத்திலேயே சிநேகாவை சிரிக்க வச்சுட்டீங்க!! நமக்கு வராதா என்ன ? . :-))

இராகவன் நைஜிரியா said...

ஸ்கூல் பையன் ஜோக் சூப்பரோ சூப்பர்.

ஸாதிகா said...

ஹாஹா..ஹிஹி..ஹேஹே..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஜெய்லானி said...
ஆரம்பத்திலேயே சிநேகாவை சிரிக்க வச்சுட்டீங்க!! நமக்கு வராதா என்ன ? . :-)) //


ஆரம்பத்திலேயே சினேகா சிரிக்காட்டியும்கூட
உங்களுக்கு சிரிப்பு வராதா என்ன?
சிரிப்பான கருத்துக்கு, அல்ல சிறப்பான
கருத்துக்கு நன்றி ஜெய்லானி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//இராகவன் நைஜிரியா said...
ஸ்கூல் பையன் ஜோக் சூப்பரோ சூப்பர்.//

தங்கள் சூப்பர் கருத்திற்கு...
நன்றியோ நன்றி இராகவன் சார்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஸாதிகா said...
ஹாஹா..ஹிஹி..ஹேஹே..//

ஓஹோ... ஓஹோ...
நன்றி சகோதரி ஸாதிகா!

'பரிவை' சே.குமார் said...

நல்ல நகைச்சுவை, நல்ல சிரிச்சாச்சு

சிநேகிதன் அக்பர் said...

நல்ல நகைச்சுவை. அதிலும் அந்த ரெண்டாவது சூப்பர்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//சே.குமார் said...
நல்ல நகைச்சுவை, நல்ல சிரிச்சாச்சு//

நல்லா இரசிச்சதுக்கும் நல்லா சிரிச்சதுக்கும்
நல்லா கருத்துரையிட்டதுக்கும்
நன்றி சே.குமார்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//அக்பர் said...
நல்ல நகைச்சுவை. அதிலும் அந்த ரெண்டாவது சூப்பர்.//

நகைச்சுவைகளில் இரண்டாவதாக உள்ளதை சூப்பர் என்று கருத்திட்ட அக்பர், நன்றி உங்களுக்கு!

அன்புடன் மலிக்கா said...

ஆசிரியர்: நேற்று ஏன்டா ஸ்கூலுக்கு வரலை?
இனிமேல் முதல் நாளே லீவு சொல்லிடணும்"

மாணவன்: "சரி சார். நாளைக்கு எனக்கு
வயிற்று வலி சார். நாளைக்கு எனக்கு லீவு சார்!"
//
mudiyala முடியலை. நானும் லீவ் எடுக்கும்போது இனி இதைச்சொல்லிறலாமோ ஹ ஹா ஹா

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//அன்புடன் மலிக்கா said...

மாணவன்: "சரி சார். நாளைக்கு எனக்கு
வயிற்று வலி சார். நாளைக்கு எனக்கு லீவு சார்!"
//
mudiyala முடியலை. நானும் லீவ் எடுக்கும்போது இனி இதைச்சொல்லிறலாமோ ஹ ஹா ஹா//

வாங்க மலிக்கா!

நீங்கதான் சகலகலா "வல்(ம)லி"கா அயிற்றே,
உங்களுக்கு எதற்குங்க லீவு?

நன்றி கருத்திற்கு!

Ahamed irshad said...

சிரிப்போ.. சிரிப்பூ....

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//அஹமது இர்ஷாத் said...
சிரிப்போ.. சிரிப்பூ....//

வாங்க அஹமது இர்ஷாத்!
இந்த வலைப்பூ...
படித்து உங்களுக்கு
சிரிப்போ சிரிப்பூ!
இதோ உங்களுக்கு
எனது நன்றிப்பூ!

ஸாதிகா said...

தங்களுக்கு நான் கொடுத்து இருக்கும் கிரீடத்தை பெற்றுக்கொள்ளவும்.

http://shadiqah.blogspot.com/2010/04/blog-post.html

சைவகொத்துப்பரோட்டா said...

நல்லா இருக்கு நகைச்சுவை.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஸாதிகா said...
தங்களுக்கு நான் கொடுத்து இருக்கும் கிரீடத்தை பெற்றுக்கொள்ளவும்.

http://shadiqah.blogspot.com/2010/04/blog-post.html
//

ஆஹா இந்தக் கிரீடம் பார்க்க மட்டும்தான் காஸ்ட்லி.
தலையில வச்சா ரொம்ப லேசு. (தலைக்கணம்
கிடையவே கிடையாது)

நன்றி சகோதரி ஸாதிகா!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//சைவகொத்துப்பரோட்டா said...
நல்லா இருக்கு நகைச்சுவை.//


நல்லா சொன்னீங்க கருத்து!
கருத்திற்கு நன்றி சைவக்கொத்துப்பரோட்டா!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...