...பல்சுவை பக்கம்!

.

Sunday, November 1, 2009

'இன்று - நண்பா' (கவிதை)

Click for Options


இந்தக் கவிதையை நான் எழுதியது 1991-ஆம் ஆண்டில். சுபாவின் 'சூப்பர் நாவல்' இதழ் போட்டியில் பரிசு பெற்று ஜூன் 1991 இதழில் வெளிவந்தது இந்தக் கவிதை.


'இன்று - நண்பா' கவிதை.


நீ நினைக்க வேண்டாம்;

செய்து முடித்து விடு.

ஒரு கொள்கை வை;

ஒரு சபதம் எடு.

தன்னம்பிக்கையுடன் துவங்கு;

உறுதியுடன் உழை.

இலட்சியமே ஓய்வு;

ஊக்கமே உணவு.

செயல்தான் துவக்கம்;

வெற்றியே முடிவு.

உன் பிரகாச முகம் பார்த்து

அந்த சூரியன் கூட

கொஞ்சம் சுருங்கிவிட்டது.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

7 comments:

S.A. நவாஸுதீன் said...

அப்பத்லேர்ந்து அடிச்சி ஆடுறீங்களே நிஜாம். வாழ்த்துக்கள்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

முதல் வாழ்த்து நீங்கதான் S.A. நவாஸ்தீன்.
முதல் நன்றி... உங்களுக்கு!

ஸ்ரீ.கிருஷ்ணா said...

கருத்துள்ள தன்னம்பிக்கை தரும் கவிதை ......

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

பாராட்டும் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீ.கிருஷ்ணா!

அருண் பிரசாத் said...

தன்னம்பிக்கையூட்டும் கவிதை

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//அருண் பிரசாத் said...
தன்னம்பிக்கையூட்டும் கவிதை//

கருத்திற்கு நன்றி அருண் பிரசாத்!
தொடர்ந்து தங்கள் கருத்துக்களைத்
தெரிவியுங்கள்!

KILLERGEE Devakottai said...

கவிதை அருமை நண்பரே...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...