...பல்சுவை பக்கம்!

.

Thursday, October 29, 2009

முல்லா ஏன் அழுதார்?




முல்லா ஏன் அழுதார்?


முல்லா ஒரு நாள் அழுதுகொண்டிருந்தார்.


அவரது நண்பர் கேட்டார்: "முல்லா, ஏன் அழுகிறாய்?"
முல்லா சொன்னார்: "சென்ற மாதம் எனது பாட்டி ஐந்து இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்."


நண்பர் கேட்டார்: "அட மகிழ்ச்சியான செய்திதானே, ஏன் அழுகிறாய்?"
முல்லா சொன்னார்: " பதினைந்து நாட்களுக்குமுன் எனது பெரியப்பா இருபது இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்."


நண்பர் கேட்டார்: "மகிழ்ச்சியான செய்தி! அதற்காக ஏன் அழுகிறாய்?"
முல்லா சொன்னார்: "சென்ற வாரம் எனக்கு 30 இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவத்துவிட்டு எனது அத்தை இறந்துவிட்டார்."


நண்பர் கேட்டார்: "சந்தோஷப்படுவதைவிட்டு ஏன் அழுகிறாய்?"
முல்லா சொன்னார்: "மூன்று நாட்களுக்குமுன் எனது தாத்தா இறக்கும்முன் 50 இலட்ச ரூபாயை எனக்கு எழுதிவைத்துவிட்டார்."


நண்பர் கேட்டார்: "கொண்டாடாமல் ஏனப்பா அழுகிறாய்?"
முல்லா சொன்னார்: "இனிமேல் சொத்தை எழுதிவைத்துவிட்டு இறந்துபோறதுக்கு  எனக்கு பணக்கார சொந்தக்காரர்கள் இல்லையே, அதனாலதான் அழுதுகிட்டு இருக்கிறேன்"
கேட்ட நண்பர் மயக்கம்போட்டு கீழே விழுந்துவிட்டார்.


-சிரி(ப்புக் கலை)ஞர் மதன்பாபு சிரித்துக்கொண்டே ஆதித்யா ட்டீ.வி.யில் சொல்லிய கதை. (நன்றி)


:- அ.முஹம்மது நிஜாமுத்தீன்.





வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

4 comments:

S.A. நவாஸுதீன் said...

ஹா ஹா ஹா. நல்ல பகிர்வு நிஜாம்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கருத்துக்கிற்கு...
... நன்றி S.A. நவாஸ்தீன்!

Starjan (ஸ்டார்ஜன்) said...

சூப்பர்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நன்றி 'ஸ்டார்'ஜன்!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...