
சில சிந்தனைகள் (பகுதி - 6) நற்பண்புகள்.
ஒழுக்கம் உயர்வைக் கொடுக்கும்.
உழைப்பு செல்வத்தைக் கொடுக்கும்.
பக்தி மன அமைதியைக் கொடுக்கும்.
சிரிப்பு ஆயுளைக் கொடுக்கும்.
உதவி ஆதரவைக் கொடுக்கும்.
அன்பு நட்பைக் கொடுக்கும்.
பண்பு மதிப்பைக் கொடுக்கும்.
சுத்தம் சுகத்தை கொடுக்கும்.
நேர்மை நிதானத்தை கொடுக்கும்.
பணிவு அந்தஸ்தைக் கொடுக்கும்.
துணிவு வளர்ச்சியைக் கொடுக்கும்.
கனிவு அன்பைக் கொடுக்கும்.
ஆர்வம் ஆற்றலைக் கொடுக்கும்.
சாதனை மகிழ்வைக் கொடுக்கும்.
கோபம் வெறுப்பைக் கொடுக்கும்.
ஆத்திரம் அழிவைக் கொடுக்கும்.
ஊக்கம் செயலைக் கொடுக்கும்.
ஏக்கம் ஏழ்மையைக் கொடுக்கும்.
நன்றி:'நிறைந்த வாழ்வு' - அல்ஹாஜ் எம்.ஏ.ப்பி.ரஹமத்துல்லாஹ்.
அன்பன்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.