...பல்சுவை பக்கம்!

.
Showing posts with label பல்சுவை. Show all posts
Showing posts with label பல்சுவை. Show all posts

Friday, April 9, 2010

அது ஒரு கதைக்காலம்!

அது ஒரு கதைக்காலம்!



'கதை கேளு' என்ற தொடர் பதிவிற்கு அழைப்பு

விடுத்துள்ளார் நண்பர் ஸ்டார்ஜன். இதோ கதையுடன்

வந்துவிட்டேன்.



எனது சிறுவயதில் எங்கள் பாட்டியிடம் (அம்மாவின்

அம்மா) நிறைய கதைகள் கேட்டிருக்கிறேன். அதே

சமயம் சிதம்பரத்தில் இருந்த எங்கள் பெரியம்மா

அவர்களும் எனக்கு நிறைய கதைகள் சொல்வார்கள்.

இதனால், அடிக்கடி எங்கள் அம்மாவுடன் சிதம்பரம்

போய்வருவதுண்டு. அடிக்கடி பெரியம்மாவும் எங்கள்

வீட்டிற்கு வருவார்கள். அந்த நேரங்களில் சுமார்

25 அல்லது 30 கதைகள்வரை பெரியம்மா

சொல்வார்கள். அவையெல்லாம் 'அம்புலிமாமா'வில்

படித்ததாகச் சொல்வார்கள். இப்போது அவர்கள்

சொன்ன கதை:


ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம்.



ம்ஹூம், இந்தக் கதை வேணாம்; வேற கதை

சொல்லுங்கள்.


சரி வேற கதை. வேற ஒரு ஊர்ல வேற ஒரு

ராஜா இருந்தானாம்.


ம், சொல்லுங்க, சொல்லுங்க.


இது வேணாம். ஒரு ஊர்ல பெரியண்ணன் அப்படிங்கிற

அண்ணனும் சின்னத்தம்பி அப்படிங்கிற தம்பியும்

இருந்தாங்க.


ஒரு நாள் இரண்டு பேரும் வியாபார சம்பந்தமாக

வெளியூருக்குப் புறப்பட்டுப் போனாங்க. போக்குவரத்து

வசதி இல்லாததால நடந்துதான் போனாங்க. அப்போ

உச்சிவெயில் மதியம் நேரம் வந்துடுச்சி. பசியா

இருந்ததால் சாப்பிடலாம்னு உட்கார்ந்து அவங்கவங்க

மனைவி கொடுத்த சாப்பாட்டுப் பொட்டலத்தைப்

பிரிச்சாங்க.

 
பெரியண்ணன் பொட்டலத்தில மூன்று தோசைகளும்

சின்னத்தம்பி பொட்டலத்தில இரண்டு தோசைகளும்

இருந்திச்சி.


(ஆஹா மறுபடியும் தோசை கதையா!!!?

முதல் தோசைக் கதை இங்கே படிக்கலாம்.

அடுத்து தோசை நகைச்சுவை இங்கு படிக்கலாம்.)



சாப்பிடலாம்னு தோசையில் கையை வைக்கும்போது

ஒரு பிச்சைக்காரர் மாதிரியான வயசானவர் வந்து,

"ஐயாக்களே! ரொம்ப பசியா இருக்கு. சாப்பிட

ஏதாவது கொடுங்கள் ஐயா!" என்று கெஞ்சிக்

கேட்டார்.


பெரியண்ணனும் சின்னத்தம்பியும் என்ன செய்வது

என்று யோசித்தார்கள். பிறகு இருவருடைய

தோசைகள் ஐந்தையும் ஒன்னாச் சேர்த்து அந்த

ஐந்து தோசைகளையும் ஒவ்வொரு தோசையையும்

நான்கு, நான்கு துண்டுகளாகப் பிய்த்தார்கள். இப்போ

மொத்தம் இருபது துண்டுகள் இருந்தன.


அதில், 6 துண்டுகளை அந்தப் பெரியவருக்குக்

கொடுத்துவிட்டு மீதம் இருந்ததில் 7 துண்டுகளை

பெரியண்ணனும் 7 துண்டுகளை சின்னத்தம்பியும்

சாப்பிட்டார்கள்.


மூவரும் சாப்பிட்டு முடித்ததும் அந்தப் பெரியவர்

எழுந்து நன்றி சொல்லிவிட்டுப் புறப்படும்முன்

பெரியண்ணனிடம் 6 பொற்காசுகளை (24 கேரட்)

கொடுத்து, "ஐயா, நீங்கள் இருவரும் பிரித்து

எடுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு

சென்றுவிட்டார்.



இப்போ பெரியண்ணன் 4 பொற்காசுகளை தான்

எடுத்துக் கொண்டு, 2 பொற்காசுகளை தம்பியிடம்

கொடுத்தான்.



தம்பியோ, "அந்தப் பெரியவர் ரெண்டு பேரும்

பிரிச்சிக்குங்க என்றுதான் சொன்னார். அதனால

சமமா நீ 3 பொற்காசுகள் எடுத்துக் கொண்டு

எனக்கும் 3 பொற்காசுகள் கொடுத்தால்தான்

வாங்குவேன்" என்று சண்டை போட்டான்.



பெரியண்ணன் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால்

அடுத்த ஊருக்குப் போனதும் ஆலமரத்தடி (+சொம்பு)

நாட்டாமையிடம் முறையிட்டார்கள்.



நாட்டாமை நல்லா விசாரிச்சிட்டு தீர்ப்புச் சொன்னார்.

(நாட்டாமை, தீர்ப்பை மாத்தமுடியாது.)



நாட்டாமை தம்பிக்காரனைக் கூப்பிட்டார்.


"தம்பி, நீ கொண்டு வந்தது 2 தோசைகள். அதை

8 துண்டுகள் போட்டு, 7 துண்டுகள் நீ சாப்பிட்டாய்.

அந்தப் பெரியவருக்கு நீ ஒரு துண்டுதான் கொடுத்தாய்.

அதனால உனக்கு ஒரு பொற்காசுதான்" என்றார்.



நாட்டாமை அண்ணனைக் கூப்பிட்டார்.


"ஏனப்பா, நீ கொண்டு வந்தது 3 தோசைகள். அதை

12 துண்டுகள் போட்டு, 7 துண்டுகள் நீ சாப்பிட்டாய்.

அந்தப் பெரியவருக்கு நீ 5 துண்டுகள் கொடுத்தாய்.

அதனால் உனக்கு 5 பொற்காசுகள்" என்றார்.



தீர்ப்பைக் கே(கெ)ட்டு தம்பி 'உள்ளதும் போச்சே' என்று

நொந்து நூடுல்ஸ் ஆகிப் போனான். (தோசைக் கதையில்

நூடுல்ஸும் வந்திடுச்சே!)


சரி, இப்ப கதையின் நீதியைச் சொல்லிடலாமா?

அ, கதையைப்  படிச்சீங்கள்ல? நீங்களே சொல்லிடுங்க.



தொடர் பதிவில், இணைந்துகொள்ள இவர்களை

அழைக்கிறேன்.



1.ஸ்ரீகிருஷ்ணா

2.இப்படிக்கு நிஜாம்

3.கவிஞர் மலிக்கா.



அன்பன்,

அ.முஹம்மது நிஜாமுத்தீன்.



வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Monday, March 22, 2010

#58 தண்ணீரும் தங்கம்போலத்தான்!

தண்ணீரும் தங்கம்போலத்தான்!











உலகப் பரப்பளவில் 71 சதவீதம் தண்ணீரால் சூழப்பட்டிருக்க,
மீதமுள்ள 29 சதவீத நிலப்பரப்பில்தான் நமது மனித இனமும்
விலங்கினங்களும் வாழ்ந்துவருகிறோம்.

இந்நிலையில், நாடுகளுக்கிடையில், மாநிலங்களுக்கிடையில், பக்கத்துப் பக்கத்து ஊர்களுக்கிடையில், ஏன் ஒவ்வொரு குழாயடியிலும்
தண்ணீருக்காக நடக்கின்ற சண்டைகள் நாம் அறிந்தவைதான்.

"காசை தண்ணீராய் செலவு செய்கிறான்" என்று சொன்ன
நிலைமாறி, உலக நாடுகளை அச்சுறுத்திக்
கொண்டிருக்கின்ற பொருளாதாரத் வீழ்ச்சியைப்போலவே,
தண்ணீர் பஞ்சமும் நம்மை பயமுறுத்தி கொண்டிருக்கின்றது.
தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றோம்.
இப்படியேபோனால், காசு இருக்கும்; தண்ணீர் இருக்குமா?

இன்று மார்ச் 22 'உலக தண்ணீர் தினம்'
கடைபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இதையொட்டி, நமக்காகவும் பின்வரும்
நமது சந்ததியினருக்காகவும் தண்ணீரை
சிக்கனமாக பயன்படுத்தவும் சேமிக்கவும்
நமது பங்களிப்பைத் தந்து தண்ணீரைப்
பாதுகாத்து அனைவரும் பயன்பெறுவோம்.

(படம் உதவி:தினமலர்)

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.





வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!
Related Posts Plugin for WordPress, Blogger...