...பல்சுவை பக்கம்!

.
Showing posts with label ஓவியர் செல்லம். Show all posts
Showing posts with label ஓவியர் செல்லம். Show all posts

Friday, November 13, 2009

பாப்பாவின் பண்புகள் (கவிதை)



நவம்பர் 14 - ஆசியாவின் ஜோதி, ரோஜாவின் ராஜா,
நேரு மாமா அவர்களின் பிறந்த நாள்.
குழந்தைகள் தினம். குழந்தைகள் தினத்தை
முன்னிட்டு இந்தக் கவிதை.

இந்தக் கவிதை ஜூலை 1982 ரத்னபாலா
பாலர் வண்ண மாத மலரில்
பிரசுரமான எனது முதல் கவிதை.
சித்திரங்கள் ஓவியர் திரு.செல்லம் அவர்கள்.

பாப்பாவின் பண்புகள் (கவிதை)
==========================

சின்னப் பாப்பா சிரிப்பிலே
சின்ன முத்து உதிருது
அழகுப் பாப்பா அன்பிலே
அன்னை முகம் மலருது!

ஆசைப் பாப்பா அழகிலே
அன்ன நடை தெரியுது
அமுதப் பாப்பா பேச்சிலே
நெஞ்சம் கொள்ளை போகுது!

இனிய பாப்பா பண்பிலே
இதயம் நெகிழ்ச்சி அடையுது
எங்கள் பாப்பா குணத்திலே
ஏக மகிழ்ச்சி துள்ளுது!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

டிஸ்கி: இந்த ரத்னபாலா இதழை
தனது நூலக சேமிப்பிலிருந்து,
தக்க நேரத்தில் தந்துதவிய எனது
அருமை நண்பர் எழுத்தாளர்
திரு.சின்னஞ்சிறு கோபு அவர்களுக்கு
மனங்கனிந்த நன்றிகள்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!
Related Posts Plugin for WordPress, Blogger...