.
*உள்ளம் கவர்ந்த உயர்ந்தவர்!*
என்னுடன் உடன் பிறப்பு,
சகோதரன் யாரும் இல்லை.
ஆனால், இவரை நான் சந்தித்தது இறைவனின் நாட்டத்தின்படி!
ஊராட்சி மன்ற மூத்த உறுப்பினராக சுமார் 20 ஆண்டுகள்.
அரசியல் இயக்க கிளைத் தலைவராக சுமார் 3 ஆண்டுகள். ஊர் நாட்டாண்மை உறுப்பினராக சுமார் 10 ஆண்டுகள்.
சமூகப் பிரச்னைகளினால் பிரிய இருந்த பல குடும்பங்களை சேர்த்து வைத்தவர். ஊரின் நலம்விரும்பி. துக்க காலங்களில் முதல் ஆளாய் உதவிக்கு நிற்பார்.
கருத்துகளை சீர்தூக்கி சொல்வார்.
எனது பல குழப்பமான நேரங்களில் உடனிருந்து ஆறுதல் மொழிகள் தந்து, எனது மூத்த அண்ணனாக, கைகாட்டியாய் வழி காட்டுபவர்.
என்னைக் கவர்ந்த உயர்ந்தவர்
எம்.எஸ்.எம். என்று அழைக்கப்படும் அன்பு
எம்.எஸ்.எம். ஷபீர் அவர்கள்,
வாழிய பல்லாண்டு!
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
.
