...பல்சுவை பக்கம்!

.

Saturday, June 22, 2019

என்கதையா? உன்கதையா? #135

என் கதையா? உன் கதையா?

01/02/2017 குமுதம் இதழில் 'பிக்பாக்கெட்' என்ற தலைப்பில் நான் எழுதிய 'ஹலோ வாசகாஸ்' படைப்பு வெளியானது.

 08/05/2019 குமுதம் இதழில் 'அயன்புரம்  த. சத்தியநாராயணன்' எழுதிய,
'குழந்தை' ஒரு பக்கக் கதை வெளிவந்துள்ளது.
...
இரு படைப்புகளிலும் சில அம்சங்கள் ஒத்துப்போகின்றன.
1. அதே பயணம் (பஸ், ரயில்)!
2. அதே குழந்தை!
3. அதே குழந்தை உடம்பில் தங்க நகைகள்!
4. அதே 'நம்மீது சந்தேகப்படுவார்களோ' என்கிற முன்னெச்சரிக்கை!

அதே #குமுதம்

எனது அனுபவக் கதை:


சத்தியநாராயணன் எழுதியது இது:


-அ. முஹம்மது நிஜாமுத்தீன்.




. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

திருமண வாழ்த்து #134

திருமண வாழ்த்து #134

எனது நண்பன் க.சந்தானகிருஷ்ணன்  திருமணத்திற்காக, நான் எழுதிய வாழ்த்துப்பாடலை இங்கே பதிகிறேன்.

இப்பாடலின் மெட்டு: "பறக்கும் பறவைகள் நீயே!"
திரைப்படம்: கவிதா.
இதோ அந்தப் பாடல்:


இதுதான் நான் எழுதிய பாடல்:


அன்புக்கு நண்பன் நீயே !
பண்புக்கு விளக்கம் நீயே !
உண்மைக்கு உதாரணம் நீயே!
நன்மைக்கு நாயகன் நீயே !

சந்தானம் பெயர் கொண்டு விட்டாயே!
சந்தனம் மணம் நீயும் தந்திடுவாயே !
தந்தத்தின் மதிப்பு பெற்று விட்டாயே!
மாந்தரின் மாணிக்கம் போல வந்தாயே !

குணமகள் மணமகள் குண சுந்தரியே !
குன்றினில் விளக்கே ஒளி தருவாயே !
இல்லறம் வாழ்வில் இனித்திட நீயே !
நல்லறம் புரிந்து நனி செய்வாயே !

வளமாற நீவிர் வாழ்ந்திட என்று,
உளமாற நாங்கள் வாழ்த்திட நன்று !
இருவரும் இணைந்து இன்பத்தைப் பெறவே,
இறைவா நீயும் அருள் புரிவாயே !

- அ. முஹம்மது நிஜாமுத்தீன்.


. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!
Related Posts Plugin for WordPress, Blogger...