...பல்சுவை பக்கம்!

.

Saturday, February 8, 2020

அன்பே! தேவதையே! #140

'தமிழக எழுத்தாளர்கள்'
என்கிற வாட்ஸ்ஆப் குழுமத்தில் 12/01/2020-ல் நடந்த போட்டிக்கு நான் எழுதிய கடிதம்!

கடிதம் எழுதும் போட்டி!

கடிதம் எழுதுவதை எல்லோரும் நிறையவே மிஸ் செய்துவிட்டோம். அதை ஊக்குவிக்கும் விதமாக ஒரு போட்டி.

யாருக்கு எழுதவேண்டும்?

நாம் அதிகம் யாருக்கு எழுத ஆசைபடுவோம்?

அதே!

அதேதான்!!

உங்கள் மனம் கவர்ந்த காதலிக்கு எழுதுங்கள்!!"

கடிதம் ஒருபக்கக் கதை அளவு இருக்கலாம்.

கடிதத்தில் 'அட்சதை', 'ஜன்னல் நிலா', 'இளவட்டக்கல்', 'கரும்பு' ,
'ச்சீ போடா...' ஆகிய வார்த்தைகள் எங்காவது கண்டிப்பாக இடம்பெறவேண்டும்.

இந்த விதிமுறைகளுக்குட்பட்டு நான் எழுதிய (கற்பனைக்) கடிதம் இதோ!

***+++***+++***

அன்பே! தேவதையே!

நாம் கூடி கொஞ்சி குலாவும்போது
'கரும்பு' போல் இனித்தாய்!

நான் குறும்புகள் செய்யும்போது,
'ச்சீ போடா' என செல்லக் கோபம் கொப்பளிக்கச் சொல்வாய்!

அப்படி சொல்லும் உன் வாயைப் பிடிக்க நான் முனையும்போது,
எழுந்து ஓடுவாய்!

அப்படி ஒருநாள் ஓடும்போது, கல்லில் காலை இடித்துக் கொண்டாய்!

கோபம் கொண்ட நான், அந்த 'இளவட்டக்கல்'-லை ஓரமாய் தூக்கி எறிந்தபோது மலைப்பாய் பார்த்தாய்!

ஆனால் இறுதியில்,
உறவினர் 'அட்சதை' தூவிட
யாருக்கோ மனைவியானாய்!

இங்கே நான் 'ஜன்னல் நிலா'-வைப் பார்த்துக் கொண்டும்
'எங்கிருந்தாலும் வாழ்க!' எனப் பாடிக் கொண்டும் சோகத்தில் வாடிக் கொண்டும் இருக்கிறேன்
உண்மையான காதலோடு(ம்)!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
.

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!
Related Posts Plugin for WordPress, Blogger...