...பல்சுவை பக்கம்!

.
Showing posts with label சுபா. Show all posts
Showing posts with label சுபா. Show all posts

Friday, September 2, 2022

பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, வாசகர் சந்திப்பு! #170


பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, வாசகர் சந்திப்பு!

'உங்கள் ஜூனியர்' மாத இதழ் சார்பாக, எழுத்தாளர்கள் சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோருடன் சந்திப்பு!

3 மாவட்ட வாசகர்களில் சிலருக்கு
26/02/1989 அன்று திருச்சி அஜந்தா ஹோட்டலில் மாலை 4 மணிக்கு சந்திக்க வருமாறு அழைப்பு வந்தது!

நானும் நண்பன் குணசேகரனும் கலந்துகொண்டோம்!


அழைப்பிதழ்!


கலந்துகொண்ட நண்பர்கள்!



இடமிருந்து வலமாக... நான், நண்பர் அ.சங்கர்லால், நண்பன் குணசேகரன்



'கல்கி'யில் நான் எழுதிய 'ஆஹா ஆல்பம்' பகுதி!

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

Thursday, December 31, 2015

மூக்குடைப்பு போட்டி - பதிவு #125

மூக்குடைப்பு போட்டி - பதிவு #125

சூப்பர் நாவல் 1986 இதழ் 'மூக்குடைப்பு போட்டி அல்லது கால் வாரல் போட்டி'யில் பரிசு பெற்று பிரசுரமானது.


Click for Options

நயாஸ். எங்க ஊரு நண்பன். [பெயர் மாற்றப்பட்டுள்ளது.]  எனது க்ளாஸ்மேட்கூட. சில விஷயங்களைக் கூறிவிட்டு 
அறிவுஜீவி மாதிரி 'That is Nayas' என்று தன்னை, 
தன் தலையை தட்டிக் கொள்வான். 


ஒருமுறை அப்ளிகேஷன் ஒன்றை அனுப்புகையில் Post Office-ல் என்னிடம்  'அதை அப்படி எழுது, இதை இப்படி வை, இந்த மாதிரி ஒட்டு' என்று சொல்லிக் கொண்டே அவனது application-ஐயும் ஒட்டி முடித்தான். அவன் application form  தவிர மற்றதெல்லாம் உள்ளே வைத்து கவரை ஒட்டிவிட்டான். Application Form  மட்டும் வெளியில். அவனிடம் அதை எடுத்துக் காட்டினேன். 


"ச்சே, நான் ஒரு மடையன்" என்று தலையில் தட்டிக் கொண்டான். நான் உடனே, "அதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஏன்னா, That is Nayas" என்றேன். அவன் முகம் போன போக்கு...

 இதே இதழில் 'சுபா பதில்கள்' பகுதியில் வந்த எனது கேள்வி + சுபா பதில்:

Click for Options

கேள்வி: தமிழ் - மகளா? அன்னையா?

சுபா பதில்: பயிலும்வரை, நிலா சோறூட்டும் அன்னை!
கைவந்த பின், அடங்கி நடக்கும் மகள்!!


இதே இதழில் பிரசுரமான பரிசுபெற்ற எனது கவிதை:

இங்கு சுட்டுங்கள்: "இன்று - நண்பா!"



அந்த இதழ் அட்டைப்படம்:

Click for Options
-அ. முஹம்மது நிஜாமுத்தீன்.
. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Sunday, July 31, 2011

பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா மற்றும் நான்!

பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா மற்றும் நான்!

பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா மற்றும் நான்!





'உங்கள் ஜூனியர்' மாத இதழ் சார்பாக 'வாசகர் சந்திப்பு'.
எனக்கும் அழைப்பு வந்தது. 26.02.1989 அன்று திருச்சி

அஜந்தா ஹோட்டலில் நடந்த அந்தச் சந்திப்புக்கு

என் நண்பரோடு நான் சென்றிருந்தேன்.


என் அபிமான எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகர்,

சுபா இவர்களோடு வாசகர் சந்திப்பும் கலந்துரையாடலும்

கேள்வி-பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றன.


பட்டுக்கோட்டை பிரபாகரிட்ம் நான் ஒரு கேள்வி
கேட்டேன். "நரேன் - வைஜயந்தி துப்பறியும்
ஒரு
நாவலை நீங்களும், பரத் - சுசீலா
துப்பறியும் ஒரு
நாவலை சுபாவும் எழுதினால்
வித்தியாசமாயிருக்குமே?"

அதற்கு, "பரத் - சுசீலாவை உருவாக்கியவன் நான்.

நான் அவர்களின் பெற்றோர்; அவர்கள் என்
குழந்தைகள்.
சுரேஷும் பாலகிருஷ்ணனும்
நரேன் - வைஜயந்தியின்
தாய், தகப்பன்.
சொந்த தாய்+தகப்பன் இருக்கும்போது
குழந்தைகளை யாராவது மாற்றிக்கொள்வார்களா?

தத்து கொடுப்பார்களா?" என்று பதில் கேள்வி
கேட்டார்.

இந்தப் பதிலை அனைவரும் வெகுவாக இரசித்தோம்.

குறிப்பு: 'கல்கி' 17.07.2011 இதழின்
'ஆஹா ஆல்பம்'
பகுதியில் இது வெளிவந்தது.


நன்றி: கல்கி வார இதழ்.




. படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!
Related Posts Plugin for WordPress, Blogger...