பாடலாசிரியரே, பதில் சொல்க!
பாடலாசிரியர் பதில் தருவாரா?
பாடல் காட்சியைப் பார்த்தீர்களா?
பாடல் வரிகளைக் கேட்டீர்களா?
ஆணும் பெண்ணும் கேள்வி பதில் பாணியில் பாடும் பாடல்!
ஆண்களுக்கு பெண்களும் பெண்களுக்கு ஆண்களும் மிக அவசியம் என்பதை, அழகாக விளக்கும் பாடல்.
இப்பாடல் இடம்பெற்ற படத்தின் பெயர்: 'சமுத்திரம்'!
இதில் ஆண் கேட்கும் கேள்விக்கு பெண் பதில் தருகிறாள்!
"பெண்களுக்கென்று தனித்துவம் ஏது?
உங்கள் பெயரை சொல்கிற எதுவும் ஊரில் கிடையாதே?"
"இந்திய நாட்டில் பதினெட்டு நதிகள்!
ஓடுற நதியில் ஆண்களின் பெயரில் ஒன்றும் கிடையாதே?"
'கிருஷ்ணா நதி'-யை விட்டுவிட்டார் கவிஞர்!
'பிரம்மபுத்திரா' என்ற பெயரிலும் நதி இருக்கின்றது!
இப்பாடலை எழுதிய கவிஞர்,
யார் அவர்?
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்
..