...பல்சுவை பக்கம்!

.
Showing posts with label சந்தானகிருஷ்ணன். திருமண வாழ்த்து. Show all posts
Showing posts with label சந்தானகிருஷ்ணன். திருமண வாழ்த்து. Show all posts

Saturday, June 22, 2019

திருமண வாழ்த்து #134

திருமண வாழ்த்து #134

எனது நண்பன் க.சந்தானகிருஷ்ணன்  திருமணத்திற்காக, நான் எழுதிய வாழ்த்துப்பாடலை இங்கே பதிகிறேன்.

இப்பாடலின் மெட்டு: "பறக்கும் பறவைகள் நீயே!"
திரைப்படம்: கவிதா.
இதோ அந்தப் பாடல்:


இதுதான் நான் எழுதிய பாடல்:


அன்புக்கு நண்பன் நீயே !
பண்புக்கு விளக்கம் நீயே !
உண்மைக்கு உதாரணம் நீயே!
நன்மைக்கு நாயகன் நீயே !

சந்தானம் பெயர் கொண்டு விட்டாயே!
சந்தனம் மணம் நீயும் தந்திடுவாயே !
தந்தத்தின் மதிப்பு பெற்று விட்டாயே!
மாந்தரின் மாணிக்கம் போல வந்தாயே !

குணமகள் மணமகள் குண சுந்தரியே !
குன்றினில் விளக்கே ஒளி தருவாயே !
இல்லறம் வாழ்வில் இனித்திட நீயே !
நல்லறம் புரிந்து நனி செய்வாயே !

வளமாற நீவிர் வாழ்ந்திட என்று,
உளமாற நாங்கள் வாழ்த்திட நன்று !
இருவரும் இணைந்து இன்பத்தைப் பெறவே,
இறைவா நீயும் அருள் புரிவாயே !

- அ. முஹம்மது நிஜாமுத்தீன்.


. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!
Related Posts Plugin for WordPress, Blogger...