...பல்சுவை பக்கம்!

.

Wednesday, January 4, 2017

அன்பு சோதரா! என் அன்பு சோதரா!! (பாடல்) #130

அன்பு சோதரா! என் அன்பு சோதரா!! (பாடல்) #130

பல ஆண்டுகளுக்கு முன் கேட்ட பாடல், இது!
திரை : தேன்  நிலவு.
மெட்டு : பாட்டு பாடவா!
இயற்றியவர்: எஸ். ஏ. மன்சூர் அலி.

அன்பு சோதரா!  என் அன்பு சோதரா!!
விரைந்து ஓடி வா!  விரைந்து ஓடி வா!!
வல்ல நாயன் தந்த மார்க்கம் நிலை நிறுத்த வா! - ஒரு
நல்ல மாற்றம் காண்பதற்கு தோள் கொடுக்க வா!!
                                                             (அன்பு சோதரா...)

கொஞ்சமல்ல நஞ்சமல்ல இந்த நாட்டிலே - தீமை
எங்கு நோக்கினும் தலை விரித்து ஆடுதே.
மாற்றம் காண வேடமிட்டு  வந்த கொள்கைகள் - மேலும்
சிக்கலுக்குள் சிக்கலாகி தோற்று  போனதே
தீர்வு சொல்ல வா!  நல்ல தீர்வு சொல்ல வா - எங்கும்
தீமை நீக்கி நீதி காக்கும் தீனை சொல்ல வா!
                                                             (அன்பு சோதரா...)

வல்லவன் தன கட்டளைகள் இந்த நாட்டையே
ஆளும் சட்டமாக ஆக்கிக் காட்டும் ஆட்சி காண வா!
குற்றமற்ற சூழல் தந்து தீமை நீக்க வா! - மக்கள்
அச்சமற்று வாழுகின்ற மாட்சி காண வா!
சாட்சி சொல்ல வா!  நீயும் சாட்சி சொல்ல வா!
மறுமை வாழ்வு நம்மைத் தேடி வந்து, அழைக்கும் ஓடி வா!
                                                               (அன்பு சோதரா...)   



. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!
Related Posts Plugin for WordPress, Blogger...