...பல்சுவை பக்கம்!

.
Showing posts with label தமிழக எழுத்தாளர்கள் குழுமம். Show all posts
Showing posts with label தமிழக எழுத்தாளர்கள் குழுமம். Show all posts

Thursday, July 28, 2022

சிறுகதைப் போட்டி! #165

சிறுகதைப் போட்டி #165

24/07/2022 ஞாயிறன்று 'தமிழக எழுத்தாளர்கள்' குழுமத்தில், ஒரு கதையைப் பதிவிட்டு, அதன் சரியான முடிவை எழுதுங்கள் என்பதாக ஒரு போட்டி வைக்கப்பட்டது.




பரிசு பெற்ற மூன்றில் நான் எழுதிய கதை முடிவும் ஒன்று!

இதோ கதையும் மூன்று முடிவுகளும்!

சிறுகதை:

நேரம்! - திருப்பூர் சாரதி
====== ===============

       " கோபுசாரைப் பார்க்கணும்! "

குரல் கேட்டு நிமிர்ந்தார் அந்தக் கம்பெனியின் செக்யூரிட்டி. எதிரே கல்லூரி மாணவன் ஒருவன் நின்றிருந்தான்.

" அப்பாயின்மென்ட் இருக்கா தம்பி? "

" இல்லேங்க "

செக்யூரிட்டி சிரித்தபடியே, 
" சாரைப் பார்க்க அப்பாயின்மென்ட் வாங்கவே எத்தனை நாளாகும்னு தெரியுமா? சும்மா நினைச்ச நேரத்தில் யாரும் பார்த்திட முடியாது. உங்க பேரையும், போன் நம்பரையும் எழுதிவச்சுட்டுப் போங்க, உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தாக் கூப்பிடுவாங்க. " என்றார் நக்கலாக!

 " ஆனா அவர் எங்க காலேஜ் விழாவுக்கு வந்தப்போ, மாணவர்கள் ஏதாச்சும் உதவி தேவைப்பட்டா எந்த நேரமும் என்னை வந்து பார்க்கலாம்னு சொல்லிட்டு வந்தாரே...! " 

 " அவங்க மேடைக்காக பேசறதை எல்லாம் நம்பி இப்படி வரக்கூடாது தம்பி. வேலை ஆகணும்னா காத்திருந்துதான் ஆகணும். கிளம்புங்க, போன் வரும்! "

ஏமாற்றத்துடன் கிளம்பினான் அந்தக் கல்லூரி மணவன்.

அடுத்தநாள் காலை...
" எனக்காக எத்தனைபேர் மணிக்கணக்கா காத்திருக்காங்க, நீ என்னடான்னா... " என்றபடி ...

கதாசிரியர் எழுதியிருந்த முடிவு:

திரு.திருப்பூர் சாரதி அவர்கள் எழுதிவைத்திருந்த முடிவு:

தன் பங்களாவுக்கு வெளியே, கக்கா போக முரண்டு பிடித்த நாயைப் பிடித்துக்கொண்டு ஒருமணி நேரமாகக் காத்திருந்தார் கோபு!


திருப்பூர் திரு. சாரதி அவர்கள்
...................................
இனி பரிசு பெற்ற 3 முடிவுகள்:

பரிசு பெற்றவை:

அடுத்தநாள் காலை...
" எனக்காக எத்தனைபேர் மணிக்கணக்கா காத்திருக்காங்க, நீ என்னடான்னா... " என்றபடி ...

தொடர்ச்சி:
டாய்லட் வாசலருகே நின்றவர், "ஒன்றறை லிட்டர் காஃபி குடிச்சும் இந்த கக்கா வருவேனாங்குதே!?!" என புலம்பலானார்!

முடிவு எழுதியவர்:
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
...................................
இன்றைய போட்டிக்காக...

"எனக்காக எத்தனைபேர் மணிக்கணக்கா காத்திருக்காங்க, நீ என்னடான்னா நான்தான் கூட்டிட்டு போகணும்னு அடம் பிடிக்குறே..." என்றபடி தனது செல்லநாயை வாக்கிங் அழைத்துச் சென்றார் கோபு.

- அஜித்
...................................
திருப்பூர் சாரதி சாரின் நேரம் கதையின் முடிவை யூகிக்கும் போட்டி!

நேரம்!
======

"எனக்காக எத்தனை பேர் மணிக்கணக்கா காத்திருக்காங்க, நீ என்னடானா", என்றபடி                                 

தன்மேல் ஆசையாய் தாவி ஏறிய டாமியை கட்டிக்கொண்டார் கோபு

அ.வேளாங்கண்ணி, திருச்சி.





  .படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Friday, January 28, 2022

கத்தியின்றி ரத்தமின்றி வித்யா -விமர்சனம்!#162

'கத்தியின்றி ரத்தமின்றி... வித்யா!' புதின விமர்சனம்.


வீரன்வயல் வி. உதயகுமாரன் எழுதிய 'கத்தியின்றி ரத்தமின்றி... வித்யா' என்ற புதினத்தின் விமர்சனம் 
.

கதையின் நாயகியாக வரும் வித்யா, மாண்பமை பண்புகளுடன்
சாத்வீக தேவதையாக கதைமுழுவதும் வலம் வருகிறார்.

இங்கே ஒரு செய்தியை குறிப்பிட வேண்டும். ஆனால் அதை நான் விமர்சனத்தில் கடைசியாக தெரியப்படுத்துகிறேன்.

பொதுவாக பெண்களை 'பலவீனமான பாலினம்' என்று குறிப்பிடுவார்கள். ஆனால் இக்கதையின் நாயகி வித்யா, தான் போராட வேண்டிய ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்த்து நின்று போராடி அதை வெற்றிகரமாக மாற்றிவிடுகிறார். அதிலும் குறிப்பாக தன்னுடைய வித்தியாசமான அணுகு முறைகளாலும் வியக்கத்தக்க அறிவுபூர்வமான செயல்பாடுகளினாலும் அதை சாத்தியப் படுத்துகிறார்.

தெருவில் பாலின சீண்டல்கள் செய்யும் கயவர்களையும் திருத்துகிறார். தொழில் நிறுவன மேலாளரின் கயமைத்தனத்தையும் திருத்துகிறார்.
ஊனமான மணமகனை மறுதலிக்கும் ஒரு பெண்ணையும் அவளது தவறை உணர வைக்கிறார்.

இன்னும் தனது மருமகளையும் அவளது வெறுப்பை மாற்றி தன் மீது பாசம் கொள்ள வைக்கிறார். தனது சம்பந்தியையும் மன்னித்து அவரை மனம் திருந்த வைக்கிறார். 

மேலும் அந்த ஊரின் எம்எல்ஏவையும் கூட அவரது மகனின் உயிரை காப்பாற்றியதன் மூலம் மனம் திருந்த வாய்ப்பு அளிக்கிறார்.

இப்போது நான் சொல்வதாக கூறிய அந்த முக்கியமான விஷயத்திற்கு வருகிறேன். இப்படியெல்லாம் செய்து மன்னிக்கும் குணம், தயாள குணம் உள்ளவர்களை இந்த உலகம் என்ன சொல்கிறது? 'பிழைக்கத் தெரியாதவன்', 'வெகுளி' என்றெல்லாம் பட்டம்கட்டி பகடி செய்து பேசி, மறைமுகமாக முதுகுக்குப் பின்னால் கிண்டல் செய்கிறது. 

ஆனால் இப்படியான மனிதநேயப் பண்புகள், மாண்புகள் அமையப் பெற்றால் தான் ஒருவருக்கு ஒருவர் உதவிகரமாக, உற்றார் உறவினர்களை அனுசரித்து, நண்பர்களை பேணி வாழ்ந்து கொண்டால்தான், அவர்களின் வாழ்வு என்றும் சிறக்கும்! அவருக்கே இறைவனின் பாதங்களின் கீழ் அடைக்கலம் கிடைக்கும் என்ற கருத்தை முத்தாய்ப்பாக சொல்லியிருக்கிறார் புதின ஆசிரியர் வீரன்வயல் வீ.உதயகுமாரன் அவர்கள்!

குறிப்பு: நூல் விமர்சனப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது இந்த விமர்சனம்.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


எழுத்தாளர் வீரன்வயல் வீ.உதயகுமாரன்.

நூலினைப் பெற தொடர்புகொள்ளவேண்டிய முகவரி:



. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Sunday, January 16, 2022

பிக் பாக்கெட் (சிறுகதை) # 161

பிக் பாக்கெட் -சிறுகதை
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


பிக் பாக்கெட் (சிறுகதை)
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

மிகுந்த கூட்டமாக இருந்த பேருந்தில் மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தையுடன் ஏறினார் ஒரு தாய். என்னருகே வந்து நின்று கொண்டவரிடமிருந்து அந்த குழந்தையை, உட்கார்ந்திருந்த நான் வாங்கிக் கொண்டேன். 

புன்னகை முகத்துடன் இருந்த குழந்தையின் உடலில் காது, கழுத்து, கை, கால் எங்கும் பொன்னகைகள் அலங்கரித்தன. 

அந்த தாயிடம், "என்னம்மா, குழந்தையின் உடம்பு முழுதும் கவரிங் நகைகளா?" என்று சத்தமாக நான் கேட்டேன். 

"என்னது, கவரிங் நகைகளா? எல்லாம் பவுன் நகைகள்!" என்று உடனடியாக பதில் சொன்னார் அந்த தாய். 

இப்பொழுது பேருந்தில் இருந்தவர்கள் அனைவரின் பார்வைகளும் அந்த குழந்தையின் மேல் தான். 

'அப்பாடா, இனி பிக்பாக்கெட் திருடன் எவனும் குழந்தையை நெருங்க மாட்டான். நகை கீழே விழுந்து விட்டாலும் கூட நமக்கு எந்த கவலையும் இல்லை; ஏனென்றால் பஸ்ஸில் எல்லோருடைய பார்வையும் குழந்தையின் மேலேதான்' என நிம்மதியாக பயணத்தை தொடர்ந்தேன்.
 *


திருவண்ணாமலையில் 26/12/2021 அன்று நடந்த 'தமிழக எழுத்தாளர்கள்' குழுவின் 7-ஆவது சந்திப்பில் வெளியிடப்பட்ட, குழு உறுப்பினர்களின் படைப்புகளின் தொகுப்பு நூலான 'அருணையில் பூத்த மலர்கள்' நூலில் இடம்பெற்ற எனது படைப்பு.
++++++++++++++++++++++++++++++

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Friday, September 18, 2020

மன வலி-மை (சிறுகதை) #150





'மன வலி-மை (சிறுகதை)
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

"அம்மா, கால் வலிக்கு டாக்டர் சொன்ன ஆயின்மென்ட் வாங்கி வந்திருக்கேன்! காலை நீட்டு" என்று சொல்லி, மருந்தைத் தடவிவிட்டான் பாபு!

"அப்பா, பாட்டிக்கு நான் குணமா தடவிவிடுறேன்!" என்று வாங்கி தடவிவிட்டான் பேரன் ராஜா.

"வலி இப்ப பரவாயில்லை கண்ணுகளா! நீங்க ரெண்டு பேரும் தடவிவிட்டதுமே வலி பறந்து போச்சிப்பா" என்றாள் அம்மா.

"டாக்டர்ட்ட போலாமா அம்மா?" 

"இப்ப வேணாம்ப்பா! போன வாரம்தானே போய் காட்டினோம்? 'வயசாயிடுச்சி; அப்படிதான் வலி வரும்'னு சொன்னாறே?"

"வயசாயிடுச்சிங்கறதுக்காக வர்ற வலி இல்லம்மா இது! வயசுங்கறது நம்மளோட வாழ்நாள் அனுபவம். ஏதோ ஒரு வலி எல்லாருக்குமே உண்டுதானேமா?"

"நீ சொல்றது சரிதான் பாபு! அப்பா இறந்து போனதும் எனக்கு மன வலிதானே?"

"மன வலியை,
மனவலிமையா மாத்திக்கணும்மா! அப்பா இறந்தா என்னம்மா? நாங்களாம் இருக்கோம்ல?"

"அப்பா இருந்தா, அது ஒரு தெம்புதானே? அவரும் போயிட்டாரு! எனக்கும் என்ன என்னமோ வியாதி வந்து படுத்துது! வயசும் ஆயிடுச்சு! அப்பா போன மாதிரியே நானும் போக வேண்டியதுதான்!"

"அப்படி சொல்லாதேமா! இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக் குறிச்சி வச்சிருக்கான்! வயசானதுக்காகவெல்லாம் நாம போக முடியாது! 6 வயசுலயும் இறப்பு! 100 வயசுலயும் இறப்பு! இன்னும், 5, 10, 30 வயசு, 
50 வயசுனு எத்தனை பேரு எத்தனை விதமா இறக்குறாங்க? ஏன் எல்லாரும் வயசாகி, வயசாகி இறக்குறதில்லே? இறைவன்தான் இங்கே முதலாளி! அதனால இந்த மாதிரி நினைப்பையெல்லாம் மூட்டை கட்டி வை!
நீ 100 ஆண்டு வாழ்வேமா! நான் இறைவன்ட்ட வேண்டிட்டே இருப்பேன்! ராஜாவுக்கு கல்யாணம், பிறக்குற குழந்தை எல்லாத்தையும் நீ பார்ப்பே!
நிம்மதியா தூங்கு!"

அம்மாவின் முகம் தெளிவானதைப் பார்த்தவாறே, அம்மாவின் மடியிலே படுத்து தூங்கிவிட்ட ராஜாவைத் தூக்கி, பாயில் போட்டுவிட்டு, மனைவி செல்வியைப் பார்த்தான் பாபு!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்

'தமிழக எழுத்தாளர் குழுமம்' நடத்திய போட்டிக்காக எழுதப்பட்டது. 

'எழுத்தாளர் ரிஷிவந்தியா' அவர்கள், இன்ஸ்டாகிராம்-ல் பதிவுசெய்துவரும் 'நறுக்ஸ் நொறுக்ஸ்'-லிருந்து ஒரு கருத்தை வைத்து கதை எழுதும் புதுமையான போட்டி!

நறுக்ஸ் நொறுக்ஸ் இணைய முகவரி:



விடியற் காலை எழுந்தவுடன்
விரல் நடுங்க எடுக்கின்றனர்
மூத்த குடிமக்கள் கைப்பேசிகளை...
எந்த நண்பரின் இரங்கல் செய்தி
வந்திருக்குமோ எனும் நடுக்கத்துடன்...
    - ரிஷிவந்தியா




. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Sunday, August 2, 2020

நறுக்ஸ் நொறுக்ஸ் விமர்சனப் போட்டி #147

நறுக்ஸ் நொறுக்ஸ் விமர்சனப் போட்டி! #147

'தமிழக எழுத்தாளர்கள் குழும'த்தில் ஒரு போட்டி வைக்கப்பட்டது. இன்ஸ்டாகிராம் தளத்தில் 'நறுக்ஸ் நொறுக்ஸ்' எனும் தலைப்பில் படைப்புகள் வழங்கிவரும் எழுத்தாளர் திரு.ரிஷிவந்தியா அவர்கள், அந்தப் படைப்புகளைப் பற்றிய விமர்சனங்களை வரவேற்று வைத்த போட்டிதான் அது.


அதற்கு நான் எழுதிய விமர்சனம் பரிசு பெற்றது. அது இங்கே:

ரிஷிவந்தியா சார் வழங்கும் நறுக்ஸ்-நொறுக்ஸ் ஆச்சரியம் தரும் கருத்துக் குவியல்!

3-4-5 வரிகளில்,
ஒரு தத்துவம், தன்முனைப்பு வாசகம்,
மாத்தி யோசித்த கோணம், அறிவுரைகள், நகைச்சுவைக்க வைக்கும் வசனம் என...
இரசித்த பொழுதினில் எதைப் பாராட்டுவது என வியப்பைத் தருகின்றது.

அதோடு, தகுந்த படத்தை இணைத்து படிக்க சுலபமாய், சுவைக்க கல்கண்டாய்  தரும் பாங்கு சபாஷ் போட வைத்துவிட்டது!

*'தன்னம்பிக்கை உடையோனுக்கு சருகுகளும் சிறகுகளே!*
+சிறு துரும்பும் பல் குத்த உதவும்!
+வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
-என்கிற வகையில் இதையும் இணைக்கலாம்!

இன்ஷா அல்லாஹ்,
இந்த வாசகங்கள் விரைவில் தொகுப்பு நூலாக மலரும் என நம்புகிறேன்!

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

ஐடி:
nizampakkam

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Wednesday, June 17, 2020

எனது கேள்வி! எனது பதில்! #145

எனது கேள்வி; எனது பதில்!

'தமிழக எழுத்தாளர்கள் குழுமத்'தின்
'எனது கேள்வி; எனது பதில்' போட்டியில் வென்ற எனது படைப்பு:

கேள்வி:
ரியல் எஸ்டேட் வியாபாரிகளிடம் உங்களுக்குப் பிடித்தது?

பதில்:
எவ்வளவு தூரமாக இருந்தாலும்,
"சென்னைக்கு மிக அருகில்" என்று சொல்லிவிடுவார்கள்! அது தவறுதான்; ஆனால்,
நாம் ஒரு முயற்சியைத் தொடங்கும்போது,
'வெற்றிக்கு மிக அருகில்' என்ற எண்ணத்தோடு தொடங்கினால் வெற்றியை அள்ளலாம்!
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
...   ...   ...   ...   ...   ...   ...   ...   ...   ...

போட்டியில் பங்குபெற்ற இன்னொரு படைப்பு:

கேள்வி:
வெள்ளம், பூகம்பம், ஆழிப்பேரலை என்ற அழிவுகள் மூலம் நல்லவர்களையும் தீயவர்களையும் இறைவன் அழிக்கிறானே, நியாயமா?

பதில்:
நமது காலில் சில எறும்புகள் ஏறி, அதில் ஓர் எறும்பு நம்மைக் கடித்தால், 10, 15 எறும்புகளை கூட்டமாக அழுத்திக் கொல்கிறோமே, நியாயமா?

இறைவன்
தீயவர்களைக் கொல்வது அவர்களைத் தண்டிக்க!
நல்லவர்களை மரணிக்கச் செய்வது அவர்களை அன்பால் அடைக்கலம் கொடுக்க!

இறைவன் அளவிலா விளையாட்டுடையவன்!
-அ. முஹம்மது நிஜாமுத்தீன்

.


. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Saturday, February 8, 2020

அன்பே! தேவதையே! #140

'தமிழக எழுத்தாளர்கள்'
என்கிற வாட்ஸ்ஆப் குழுமத்தில் 12/01/2020-ல் நடந்த போட்டிக்கு நான் எழுதிய கடிதம்!

கடிதம் எழுதும் போட்டி!

கடிதம் எழுதுவதை எல்லோரும் நிறையவே மிஸ் செய்துவிட்டோம். அதை ஊக்குவிக்கும் விதமாக ஒரு போட்டி.

யாருக்கு எழுதவேண்டும்?

நாம் அதிகம் யாருக்கு எழுத ஆசைபடுவோம்?

அதே!

அதேதான்!!

உங்கள் மனம் கவர்ந்த காதலிக்கு எழுதுங்கள்!!"

கடிதம் ஒருபக்கக் கதை அளவு இருக்கலாம்.

கடிதத்தில் 'அட்சதை', 'ஜன்னல் நிலா', 'இளவட்டக்கல்', 'கரும்பு' ,
'ச்சீ போடா...' ஆகிய வார்த்தைகள் எங்காவது கண்டிப்பாக இடம்பெறவேண்டும்.

இந்த விதிமுறைகளுக்குட்பட்டு நான் எழுதிய (கற்பனைக்) கடிதம் இதோ!

***+++***+++***

அன்பே! தேவதையே!

நாம் கூடி கொஞ்சி குலாவும்போது
'கரும்பு' போல் இனித்தாய்!

நான் குறும்புகள் செய்யும்போது,
'ச்சீ போடா' என செல்லக் கோபம் கொப்பளிக்கச் சொல்வாய்!

அப்படி சொல்லும் உன் வாயைப் பிடிக்க நான் முனையும்போது,
எழுந்து ஓடுவாய்!

அப்படி ஒருநாள் ஓடும்போது, கல்லில் காலை இடித்துக் கொண்டாய்!

கோபம் கொண்ட நான், அந்த 'இளவட்டக்கல்'-லை ஓரமாய் தூக்கி எறிந்தபோது மலைப்பாய் பார்த்தாய்!

ஆனால் இறுதியில்,
உறவினர் 'அட்சதை' தூவிட
யாருக்கோ மனைவியானாய்!

இங்கே நான் 'ஜன்னல் நிலா'-வைப் பார்த்துக் கொண்டும்
'எங்கிருந்தாலும் வாழ்க!' எனப் பாடிக் கொண்டும் சோகத்தில் வாடிக் கொண்டும் இருக்கிறேன்
உண்மையான காதலோடு(ம்)!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
.

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!
Related Posts Plugin for WordPress, Blogger...