...பல்சுவை பக்கம்!

.

Sunday, May 27, 2012

குண்டப்பா: மண்டப்பா - 7#101

குண்டப்பா: மண்டப்பா - 7

குண்டப்பா அதிகாலையில் வாக்கிங் போய்கிட்டிருந்தார்.
அப்ப மண்டப்பா ஆற்றில் நின்று என்னவோ செய்துட்டிருந்தார்.
குண்டப்பா அருகே போய் பார்த்தால், மண்டப்பா ஒரு பூனையை
ஆற்றில் முக்கி, முக்கி எடுத்து குளிப்பாட்டிட்டிருந்தார்.

"அடேய், பூனையை ஆற்றில முக்கி, முக்கி எடுக்கிறயே,
பூனை செத்துப் போய்டும்டா" என்றார் குண்டப்பா.

"எனக்குத் தெரியும்- நீ போய்க்கிட்டேயிரு" என்றார் மண்டப்பா.

http://i1.kym-cdn.com/entries/icons/original/000/007/263/photo_cat2.jpg

குண்டப்பா அமைதியாய் போய்விட்டார். வாக்கிங் போய்விட்டு
திரும்பி வரும்போது மண்டப்பா அழுதுக்கிட்டிருந்தார்.

தரையில் பூனை இறந்துபோய் கிடந்தது.

"பூனையைக் குளிப்பாட்டாதே; செத்துப் போயிடும்னு
சென்னேனே, கேட்டியா? இப்ப பூனை செத்துப்
போச்சி" என்றார் குண்டப்பா.

"குளிப்பாட்டும்போது பூனை சாவலை; குளிப்பாட்டினதுக்கு
அப்புறம் பூனை ஈரமாயிருக்கேன்னு பிழிஞ்சேன். அப்பத்தான்
பூனை செத்துடுச்சி" என்று விவரமாய் பதில் சொன்னார்
மண்டப்பா!

குண்டப்பா திகைத்துவிட்டார்.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

இதையும் படியுங்களேன்:

குண்டப்பா; மண்டப்பா 6

சுஜாதாவிடம் செல கேள்விகள் -100 ஆவது பதிவு!

.படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Saturday, May 19, 2012

சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு!

சுஜாதாவிடம் சில கேள்விகள், 100ஆவது பதிவு!

எழுத்தாளர் சுஜாதாவிடம் நான் கேட்ட சில கேள்விகளும்
அதற்கான பதில்களும் இங்கே தொகுத்துள்ளேன்.

இது எனது 1oo- ஆவது பதிவு.

குங்குமம் 09.08.2007
படத்தின்மேல் சொடுக்கி, பெரிதாக்கிப் படிக்கலாம்.

சிறிய விளக்கம். சுஜாதா எழுதிய 'நைலான் கயிறு'
நாவலை ஒரு காமிக்ஸ் பதிப்பகம் முதன்முதலாக
காமிக்ஸ் புத்தகமாக வெளியிட்டது. ஓவியர் ஜெயராஜ்
படம் வரைந்திருந்தார். தொடர்ந்தும் அந்த இதழ்
சுமார் இரண்டு, மூன்று மாதங்கள் வரை வெளியானது
பின் நின்றுவிட்டது.


குங்குமம் 13.09.2007


குங்குமம் 08.11.2007

குங்குமம் 06.12.2007

குங்குமம் 13.12.2007

குங்குமம் 24.01.2008

நன்றி சுஜாதா சார்!


. படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!
Related Posts Plugin for WordPress, Blogger...