...பல்சுவை பக்கம்!

.

Sunday, June 7, 2020

உள்ளம் கவர்ந்த உயர்ந்தவர் -1 #142


.

*உள்ளம் கவர்ந்த உயர்ந்தவர்!*

என்னுடன் உடன் பிறப்பு,
சகோதரன் யாரும் இல்லை.
ஆனால், இவரை நான் சந்தித்தது இறைவனின் நாட்டத்தின்படி!

ஊராட்சி மன்ற மூத்த உறுப்பினராக சுமார் 20 ஆண்டுகள்.
அரசியல் இயக்க கிளைத் தலைவராக சுமார் 3 ஆண்டுகள். ஊர் நாட்டாண்மை உறுப்பினராக சுமார் 10 ஆண்டுகள்.

சமூகப் பிரச்னைகளினால் பிரிய இருந்த பல குடும்பங்களை சேர்த்து வைத்தவர். ஊரின் நலம்விரும்பி. துக்க காலங்களில் முதல் ஆளாய் உதவிக்கு நிற்பார்.
கருத்துகளை சீர்தூக்கி சொல்வார்.

எனது பல குழப்பமான நேரங்களில் உடனிருந்து ஆறுதல் மொழிகள் தந்து, எனது மூத்த அண்ணனாக, கைகாட்டியாய் வழி காட்டுபவர்.

என்னைக் கவர்ந்த உயர்ந்தவர்
எம்.எஸ்.எம். என்று அழைக்கப்படும் அன்பு
எம்.எஸ்.எம். ஷபீர் அவர்கள்,
வாழிய பல்லாண்டு!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எம்.எஸ்.எம். ஷபீர் அவர்களுக்கு வாழ்த்துகள்...

வெங்கட் நாகராஜ் said...

நல்ல மனம் வாழ்க....

அன்பு சூழ் உலகு - இது தானே எல்லோருடைய தேவையும்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வாழ்த்துகள் தெரிவித்தமைக்கு நன்றிகள் சார்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அழகிய கருத்து சொன்னீர்கள்!
நன்றி சார்!

KILLERGEE Devakottai said...

தங்களது அண்ணனுக்கு எமது வாழ்த்துகளும் கூடி...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வாழ்த்துகள் கூடி அளித்தமைக்கு நன்றிகள்!!!

Thulasidharan V Thillaiakathu said...

எம்.எஸ்.எம். ஷபீர் அவர்கள்,
வாழிய பல்லாண்டு!//

எங்களது வாழ்த்துகளும் தங்கள் அண்ணனுக்கு!

அன்பு தானே இவ்வுலகின் பிரதானம்.

துளசிதரன்

கீதா

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அன்பினால்தான் இவ்வுலகம் கட்(டு)(ட)ப்பட்டுள்ளது!

நன்றி நண்பர் இருவருக்கும்!!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...