நகைச்சுவை; இரசித்தவை - 8
=============================
"என் மனைவி தினமும் அம்பது ரூபாய் கேட்கிறாள்"
"அப்படி என்ன தினமும் செலவு?"
"யாருக்குத் தெரியும்? இன்னும் ஒருநாள்கூட நான்
ரூபாய் தரலியே?"
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
"சாப்பாட்டுப் பந்தியில் ரெண்டு பிரிவு இருக்கே?"
"நூறு ரூபாய்க்குக் குறைவா மொய் எழுதினா
அளவுச் சாப்பாடு. நூறு ரூபாய்க்கு மேலே எழுதினா
முழுச் சாப்பாடாம்!"
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
"என் மாமியாருக்கு வயிற்று வலி வந்தால் எனக்கும்
வயிற்று வலி வந்துடுது."
"ஏன் அப்படி?"
"சிரிச்சி சிரிச்சித்தான்!"
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சிரித்தவர்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
...பல்சுவை பக்கம்!
.
Saturday, February 27, 2010
#55 நகைச்சுவை; இரசித்தவை - 8
Friday, February 26, 2010
#54 சில சிந்தனைகள் (பகுதி - 8)

சில சிந்தனைகள் (பகுதி - 8)
தழுவிக்கொள்ளுங்கள் -1
======================
* உங்களுடைய கோபதாபங்கள் உங்களுடனேயே இருக்கட்டும் -
வினியோகிக்க வெண்டாம்.
* ஆனால் உங்கள் உற்சாகத்தை இலவசமாக வினியோகியுங்கள்.
* நீங்கள் நீங்களாகவே இருங்கள்.
* நட்புடன் இருந்தால் பெரிதும் மதிக்கப்படுவீர்கள்.
* இறைவனின் படைப்பில் எல்லோருக்கும் பங்குண்டு. இந்த
முக்கியத்துவத்தை மற்றவர்கள் உணரச் செய்யுங்கள்.
* கீழேயோ, மேலோயோ அந்த அந்த நிலையில் மக்களை
சந்தியுங்கள்.
* புன்னகை என்ற ஆயுதத்தை சரியாகப் பயன்படுத்துங்கள்.
* நகர்ந்து கொண்டே இருங்கள்; ஓடுகின்ற நதி ஒருநாளும்
அழுக்காகாது.
* முயற்சி செய்து கொண்டிருங்கள். தேயாமல் இருக்க
இதுதான் தலைவாசல்.
* இரும்பானாலும் இதயத்தோடு பாருங்கள்.
* எந்த காரியமானாலும் அதன் ஆரம்பம் விழாவாக இருக்கட்டும்.
* தோல்வி அடைந்தாலும் மன்னித்துக் கொள்ளுங்கள்.
* கருணையில் தாராளமாக இருங்கள்.
* அதிகாரத்தைவிட, அன்பு ஆளட்டும்.
* சொன்னதைச் செய்யுங்கள்.
நன்றி: 'வெற்றியை வெளியே தேடாதீர்கள்' - திரு.வை.நடராஜன்.
அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்
Tuesday, February 16, 2010
#53 சிந்தனைகள் (பகுதி - 7)
முன்னேற சில முத்துக்கள்:
========= === ===========
1. செய்யும் தொழிலை நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
2. எதையும் இலவசமாகப் பெற நினைக்காதீர்கள்.
3. போதும் என்ற மனம் நல்லதுதான். ஆனால், 'போதாது'
என்ற மனம்தான் முன்னேற்றத்திற்கான வழி. மனிதன்
கண்டுபிடிக்காத மர்மதேசங்கள் ஏராளம்.
4. வருத்தமோ அல்லது சுய இரக்கமோ அடையாதீர்கள்.
அவைகள் வாழ்க்கையின் நசுக்கிகள்.
5. உங்கள் பலத்தையும் பலவீனத்தையும் அறிந்துவைத்துக கொள்ளுங்கள்.
தவிர்த்துவிடுங்கள்:
=================
1. பொய் பேசும் நா.
2. கர்வ பார்வை.
3. தீமை செய்யும் கை.
4. தீயதை திட்டமிடும் அறிவு.
5. தீய காரியங்களை செய்ய விரையும் கால்.
6. பொய் சொல்ல எழும் சாட்சி.
7. நண்பர்களிடம் பகைமை வளர்க்கும் மனிதர்.
(நன்றி: 'வெற்றியை வெளியே தேடாதீர்கள்' - திரு.வை.நடராஜன்)
அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
========= === ===========
1. செய்யும் தொழிலை நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
2. எதையும் இலவசமாகப் பெற நினைக்காதீர்கள்.
3. போதும் என்ற மனம் நல்லதுதான். ஆனால், 'போதாது'
என்ற மனம்தான் முன்னேற்றத்திற்கான வழி. மனிதன்
கண்டுபிடிக்காத மர்மதேசங்கள் ஏராளம்.
4. வருத்தமோ அல்லது சுய இரக்கமோ அடையாதீர்கள்.
அவைகள் வாழ்க்கையின் நசுக்கிகள்.
5. உங்கள் பலத்தையும் பலவீனத்தையும் அறிந்துவைத்துக கொள்ளுங்கள்.
தவிர்த்துவிடுங்கள்:
=================
1. பொய் பேசும் நா.
2. கர்வ பார்வை.
3. தீமை செய்யும் கை.
4. தீயதை திட்டமிடும் அறிவு.
5. தீய காரியங்களை செய்ய விரையும் கால்.
6. பொய் சொல்ல எழும் சாட்சி.
7. நண்பர்களிடம் பகைமை வளர்க்கும் மனிதர்.
(நன்றி: 'வெற்றியை வெளியே தேடாதீர்கள்' - திரு.வை.நடராஜன்)
அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
Subscribe to:
Posts (Atom)