...பல்சுவை பக்கம்!
.
Saturday, August 19, 2017
பிக் பாக்கெட் - குமுதம் இதழில்! #132
Thursday, February 2, 2017
முல்லை தங்கராசன் #131
முல்லை தங்கராசன்.

.

முல்லை தங்கராசன்.
இந்தப் பெயர் 'முத்து காமிக்ஸ்' மூலமாக அறிமுகம். முத்து காமிக்ஸ் அட்டையிலேயே 'பதிப்பாசிரியர்: முல்லை தங்கராசன்' என்று அச்சிட்டிருக்கும்.
சிறிய கால இடைவெளிக்குப் பின்னால், "ரத்னபாலா" எனும் பாலர் வண்ண மாதமலர் ஆசிரியராகவும், தொடர்ந்து 'மணிப்பாப்பா' ஆசிரியராகவும் தெரியும்.
சுப்ரஜா ஸ்ரீதரன் ஆசிரியராகவும் கீழை அ. கதிர்வேல் உதவி ஆசிரியராகவும் கொண்டு வெளிவந்த 'வாதினி' மாத இதழில் சமீபத்தில் முல்லை தங்கராசன் எழுதிய 'பணம், பெண், பகை' எனும் புதினத்தைப் படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது.
மேலே குறிப்பிட்டிருந்த இடைவெளி காலத்தில் 'மக்கள் குரல்' நாளிதழின் 'நவரத்தினம்' மாத இதழில் முல்லை தங்கராசன் எழுதிய புதினம் வந்திருந்தது. தலைப்பு: "ஊர் சிரித்த கதை".
கதையின் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும், "இப்படியாக அந்த ஊர் சிரித்தது" என்று முடித்திருப்பார்.
இதற்குமுன் இப்படி எந்த எழுத்தாளரும் செய்தார்களா என்பது தெரியாது. ஆனால் சுஜாதா பிறகுதான் "ஆ..." என்ற பாணியில் ஆனந்த விகடனில் தொடர்கதை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறிய கால இடைவெளிக்குப் பின்னால், "ரத்னபாலா" எனும் பாலர் வண்ண மாதமலர் ஆசிரியராகவும், தொடர்ந்து 'மணிப்பாப்பா' ஆசிரியராகவும் தெரியும்.
சுப்ரஜா ஸ்ரீதரன் ஆசிரியராகவும் கீழை அ. கதிர்வேல் உதவி ஆசிரியராகவும் கொண்டு வெளிவந்த 'வாதினி' மாத இதழில் சமீபத்தில் முல்லை தங்கராசன் எழுதிய 'பணம், பெண், பகை' எனும் புதினத்தைப் படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது.
மேலே குறிப்பிட்டிருந்த இடைவெளி காலத்தில் 'மக்கள் குரல்' நாளிதழின் 'நவரத்தினம்' மாத இதழில் முல்லை தங்கராசன் எழுதிய புதினம் வந்திருந்தது. தலைப்பு: "ஊர் சிரித்த கதை".
கதையின் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும், "இப்படியாக அந்த ஊர் சிரித்தது" என்று முடித்திருப்பார்.
இதற்குமுன் இப்படி எந்த எழுத்தாளரும் செய்தார்களா என்பது தெரியாது. ஆனால் சுஜாதா பிறகுதான் "ஆ..." என்ற பாணியில் ஆனந்த விகடனில் தொடர்கதை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
.
Labels:
நவரத்தினம் - மாத இதழ்,
முல்லை தங்கராசன்,
ஜிகினா
Wednesday, January 4, 2017
அன்பு சோதரா! என் அன்பு சோதரா!! (பாடல்) #130
அன்பு சோதரா! என் அன்பு சோதரா!! (பாடல்) #130
பல ஆண்டுகளுக்கு முன் கேட்ட பாடல், இது!
திரை : தேன் நிலவு.
மெட்டு : பாட்டு பாடவா!
இயற்றியவர்: எஸ். ஏ. மன்சூர் அலி.
அன்பு சோதரா! என் அன்பு சோதரா!!
விரைந்து ஓடி வா! விரைந்து ஓடி வா!!
வல்ல நாயன் தந்த மார்க்கம் நிலை நிறுத்த வா! - ஒரு
நல்ல மாற்றம் காண்பதற்கு தோள் கொடுக்க வா!!
(அன்பு சோதரா...)
கொஞ்சமல்ல நஞ்சமல்ல இந்த நாட்டிலே - தீமை
எங்கு நோக்கினும் தலை விரித்து ஆடுதே.
மாற்றம் காண வேடமிட்டு வந்த கொள்கைகள் - மேலும்
சிக்கலுக்குள் சிக்கலாகி தோற்று போனதே
தீர்வு சொல்ல வா! நல்ல தீர்வு சொல்ல வா - எங்கும்
தீமை நீக்கி நீதி காக்கும் தீனை சொல்ல வா!
(அன்பு சோதரா...)
வல்லவன் தன கட்டளைகள் இந்த நாட்டையே
ஆளும் சட்டமாக ஆக்கிக் காட்டும் ஆட்சி காண வா!
குற்றமற்ற சூழல் தந்து தீமை நீக்க வா! - மக்கள்
அச்சமற்று வாழுகின்ற மாட்சி காண வா!
சாட்சி சொல்ல வா! நீயும் சாட்சி சொல்ல வா!
மறுமை வாழ்வு நம்மைத் தேடி வந்து, அழைக்கும் ஓடி வா!
(அன்பு சோதரா...)
.
பல ஆண்டுகளுக்கு முன் கேட்ட பாடல், இது!
திரை : தேன் நிலவு.
மெட்டு : பாட்டு பாடவா!
இயற்றியவர்: எஸ். ஏ. மன்சூர் அலி.
அன்பு சோதரா! என் அன்பு சோதரா!!
விரைந்து ஓடி வா! விரைந்து ஓடி வா!!
வல்ல நாயன் தந்த மார்க்கம் நிலை நிறுத்த வா! - ஒரு
நல்ல மாற்றம் காண்பதற்கு தோள் கொடுக்க வா!!
(அன்பு சோதரா...)
கொஞ்சமல்ல நஞ்சமல்ல இந்த நாட்டிலே - தீமை
எங்கு நோக்கினும் தலை விரித்து ஆடுதே.
மாற்றம் காண வேடமிட்டு வந்த கொள்கைகள் - மேலும்
சிக்கலுக்குள் சிக்கலாகி தோற்று போனதே
தீர்வு சொல்ல வா! நல்ல தீர்வு சொல்ல வா - எங்கும்
தீமை நீக்கி நீதி காக்கும் தீனை சொல்ல வா!
(அன்பு சோதரா...)
வல்லவன் தன கட்டளைகள் இந்த நாட்டையே
ஆளும் சட்டமாக ஆக்கிக் காட்டும் ஆட்சி காண வா!
குற்றமற்ற சூழல் தந்து தீமை நீக்க வா! - மக்கள்
அச்சமற்று வாழுகின்ற மாட்சி காண வா!
சாட்சி சொல்ல வா! நீயும் சாட்சி சொல்ல வா!
மறுமை வாழ்வு நம்மைத் தேடி வந்து, அழைக்கும் ஓடி வா!
(அன்பு சோதரா...)
.
Subscribe to:
Posts (Atom)