...பல்சுவை பக்கம்!

.

Friday, September 11, 2009

கீழேயா? மேலேயா?

தெருவில் சைக்கிளில் ஒரு வியாபாரி
பெரிய வெங்காயம் விற்றுக் கொண்டு
போய்க்கொண்டிருந்தபோது எங்கள்
பக்கத்து வீட்டருகில் மணலில்
சைக்கிள் சக்கரம் சிக்கி கீழே விழுந்து
விட்டார். பெரிய வெங்காயம் எல்லாம்
மணலில் கொட்டி விட்டது.

இதைப் பார்த்த நானும் பாபுவும்
அவற்றைப் பொறுக்கி எடுத்து
மணலைத் தட்டி விட்டு மீண்டும்
சாக்குப் பையில் போட அவருக்கு
உதவிக் கொண்டிருந்தோம்.

அப்போது தெருவாசலுக்கு வந்த
பக்கத்து வீட்டுப் பாட்டி, பாபுவிடம்,
"ஏண்டா பாபு வெங்காயமெல்லாம்
கீழே கொட்டிடுச்சா?" என்று கரிசனமாகக்
கேட்டார்கள்.

"கொட்டினது கீழே இல்ல பாட்டி;
தரை மேலே" என்று பாட்டியிடம்
பதில் சொன்னான், பாபு.

"இந்த எடக்கு மடக்குக்கு ஒன்னும்
கொறச்சல் இல்ல. நீயும் உன்
வாயும்" என்று பாபுவைத் திட்டி
விட்டு திரும்பவும் வீட்டுக்குள்ளே
போய்விட்டார்கள் அந்தப் பாட்டி.

கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்
அதே புன்சிரிப்புடன் அந்த வியாபாரிக்கு
உதவிக் கொண்டிருக்கிறான் பாபு!


அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

2 comments:

Muruganandan M.K. said...

சுவையான பதிவு

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நல்வரவு டாக்டர் சார்!
தங்கள் மனநிறைவான வாழ்த்துக்கள்!
மிக்க மகிழ்ச்சி!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...