...பல்சுவை பக்கம்!

.

Sunday, October 3, 2021

முற்பகல் செய்யின் (சிறுகதை) #159

முற்பகல் செய்யின்! (சிறுகதை)
 -அ. முஹம்மது நிஜாமுத்தீன். 

 குமணன், அந்தப் பெட்டிக் கடையின் வாசலில் நின்று வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்பொழுது அவ்வழியாக அகிலன் நடந்து வருவதை பார்த்ததும், அவசர அவசரமாக அந்த வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு திடீரென்று அந்த வாழைப்பழ தோலை தெருவில் போட்டான். 

 எதிர்பாராத விதமாக தன் முன்னே வந்து விழுந்த வாழைப்பழத்தை பார்த்து சுதாரிப்பதற்குள் அதன் மேல் காலை வைத்துவிட்ட அகிலன் வழுக்கி தடுமாறி கீழே விழுந்தான். 

 அவன் கீழே விழுந்ததை பார்த்த குமணன், நக்கலாக பெருங்குரலெடுத்து சிரிக்கவும் அவன் பக்கத்தில் இருந்த அவனது நண்பர்களும் இணைந்து சிரித்தார்கள். 

 சுதாரித்து எழுந்த அகிலன் அவர்களைப் பார்த்தும் எதுவும் சொல்லாமல் தன் உடை மேலும் உடல் மேலும் பட்டிருந்த மண்துகள்களை தட்டி விட்டுக் கொண்டு அமைதியாக சென்று விட்டான். 
 * * * * * * * * * * * * * * * * * * * * * * * 
மற்றொரு நாள் அகிலன் சைக்கிளில் சந்தைக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது தனக்கு முன்னே சென்றுகொண்டிருந்த குமணன் கல் தடுக்கி கீழே விழுந்ததை பார்த்தான். 

 ஓடோடி சென்று அவனை தூக்கி அவன் முகத்தில் அடிபட்டு இருந்த காயத்திலிருந்து வழிந்த ரத்தத்தை துடைத்துவிட்டு பக்கத்து தெருவில் இருந்த கிளினிக் சென்று டாக்டரிடம் காட்டினான். 

 ஊசி போட்டு பின் காயங்களுக்கு மருந்து போட்டு விட்டதும் அவனை அழைத்துச் சென்று வீட்டில் விட்டு விட்டு புறப்பட்டான். 

 அகிலனின் கைகளைப் பிடித்துக்கொண்டு குமணன் அழுது மன்னிப்பு கேட்டான்.

 "அன்னைக்கு நான் வாழைப்பழத் தோலை போட்டு உன்னை தடுமாறி விழ வைத்தேன். அதை மனசுல வச்சுக்காமல் என்னை உடனடியாக அழைத்துச் சென்று டாக்டரிடம் காட்டி, வீடு வரைக்கும் கொண்டு வந்து விட்டு போறியேப்பா! உன் நல்ல மனச புரிஞ்சுக்காம உன்னை காயப்படுத்திட்டேன் நான்! மன்னிச்சுக்கோ அகிலா!" என்றான். 

 "குமணா! அன்னைக்கு நீ இல்லாம வேற யாரும் விழுந்திருந்தாலும் நான் இப்படித்தான் செய்யவேன். நீ விழுந்தாலும் இப்படித்தான் செய்வேன். ஏன்னா நாம வாழப்போவது கொஞ்ச(ம்) காலம்! 

 "உனக்கும் எனக்கும் என்ன பகை? இந்தப் பகை நம்ம பிள்ளைகளுக்கும் அவங்க பிள்ளைகளுக்கும் பரம்பரையா தொடரணுமா?

 "குர்ஆன்-ல எனக்கு பிடிச்ச ஒரு வாசகம் 'ஒற்றுமை என்னும் கயிற்றை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்'னு வருது! 

 "நம்ம காந்தியடிகளும் 'அகிம்சை கொள்ளுங்கள்; அன்பு செய்யுங்கள்' என்று தானே சொன்னாரு? 

 "வீடு, மனை இதெல்லாம் என்னப்பா சொத்து? அன்புதானப்பா நமக்கு ஒரு சொத்து! விலை மதிக்க முடியாத சொத்து!" என்று கூறிய அகிலனை நெஞ்சோடு சேர்த்தணைத்துக் கொண்டான் குமணன்.

 (சுபம்.)

நேற்று: அக்டோபர் 2.
காந்தி ஜெயந்தி.

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

10 comments:

KILLERGEE Devakottai said...

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்.

என்ற வள்ளுவரின் வாக்கைப் போல் வாழ்வோம். கதை அருமை நண்பரே...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான நீதிக் கதை

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

அன்பே அனைத்தும்...

Thulasidharan V Thillaiakathu said...

கதை அருமை.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

சகோ கதையை சிறுவர்மலர் அல்லது வாரமலருக்கு அனுப்பினீர்களா? அழகான கருத்துடன் எழுதியிருக்கிறீர்கள்.

கீதா

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@KILLERGEE Devakottai...

கருத்துக்கு நன்றி!!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@கரந்தை ஜெயக்குமார்...

மிக்க நன்றி சார்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@திண்டுக்கல் தனபாலன்...

நன்றி சார்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@Thulasidharan V Thillaiakathu...

நன்றி சார்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@நன்றி கீதா மேடம்!

ஆமாம், திரு. சின்னஞ்சிறுகோபு அவர்களும் சொன்னார்.

விரைவில் அனுப்புவேன், இறை நாட்டம்!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...