...பல்சுவை பக்கம்!

.

Sunday, March 26, 2023

புத்தக விமர்சனம்: 'தாய்ப்பால் உறவு!'#179

புத்தக விமர்சனம்: 'தாய்ப்பால் உறவு!'#179



மயிலாடுதுறை க.ராஜசேகரன் அவர்கள் எழுதிய 'தாய்ப்பால் உறவு' சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 15 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அனைத்து சிறுகதைகளும் பத்திரிகைகளில் பிரசுரமானவை மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவை.

இதில் இடம் பெற்றுள்ள அனைத்து கதைகளுமே வேறு வேறு கதைக்களங்களில் பயணப்பட்டாலும் அடிப்படையாக 'விவசாயம்' என்ற ஒற்றைக் கோட்டில் செல்கின்றன.

ஒவ்வொரு கதையும் ஆரம்பம் முதல் அதன் இறுதிவரை அல்லது அதன் தீர்வு வரை செல்லும் வழியில் பயணப்படும் பாதை முழுவதும் காணப்படும் வர்ணனை நடை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தொய்வின்றி செல்வதால் விறுவிறுப்பை அதிகம் கூட்டுகிறது.

உதாரணமாக 'எல்லாமே இலவசம்' என்கிற கதையில் புத்தம் புதிதாக 'நேர வங்கி' என்ற ஓர் அழகிய கான்செப்ட் கையாளப்பட்டிருக்கிறது. இது பல வெளிநாடுகளில் நடைமுறைகளில் இருந்து வந்தாலும் இந்தியாவுக்கு இது புதிய விஷயம். இதை பலர் ஏற்றுக்கொள்வதில்லை அல்லது நிறைய பேர் வரவேற்கிறார்கள். ஆனால் அதே சமயத்தில் தன் வீட்டிலேயே இதற்கு எதிர்ப்பு இருக்கும்பொழுது தனது மனைவி சாவித்திரியையே அதை சுப்ரமணியன் உணர வைப்பதாக கதை முடிவது அழகிய ஒரு நிறைவைத் தருகிறது.


அதேபோல் குட்ட குட்ட குனியும் ஒரு விவசாயி அவன் முட்டு சந்தில் முட்டும் போது எப்படி உயிர் கொண்டு எழுவான், எப்படி தனி மனிதனாவான், எப்படி தனி ஒரு முதலாளியாக மாறுவான்,
தானே தன் பொருளுக்கு விலை வைப்பான் என்பதை 'வெவசாயி' கதை மூலமாக
அழகான ஐடியா உடன் முடிவை தந்த விதம் விதம்
பாராட்டிற்குரியது.


வெயிலில் வியர்வை வழிய கஷ்டப்பட்டு, பாடுபட்டு, பொருள்களை விற்கும் சிறு வியாபாரிகளிடம் அடாவடியாக அடிமாட்டு விலைக்கு பொருள்களை விலை கேட்கும் அடாவடி அமுதா போன்றவர்களுக்கு ஓர் அழகிய அறிவுரையாகவும் எந்த நேரத்திலும் திடீரென்று ஏற்படக்கூடிய எதிர்பாராத விபத்துகளை எப்படி சாதுரியமாக சமாளிப்பது என்ற கருத்தையும் இணைத்து அழகான கதையாக தந்திருந்தார் கதாசிரியர் தனது 'கத்தி' என்ற கதையின் மூலம்.
 இந்த சிறுகதை 'தினமலர் வாரமலர்' இதழில் 2019 ஆம் ஆண்டில் வெளியான சிறுகதை என்பது சிறப்பு!

வங்கி ஊழியரின் தரக்குறைவான பேச்சினால் ஒருவர் எப்படி வாழ்க்கையின் உயர்ந்த நிலைக்கு செல்கிறார் என்கிற சம்பவத்தைக் கூறும், மூன்று பக்கக் கதையாக  சாவி வார இதழில் வெளிவந்த 'அந்த வார்த்தைகளுக்கு நன்றி' என்கிற கதை இப்பொழுது வந்தால் ஒரு பக்கக் கதையாக பிரசுரம் ஆகிட வாய்ப்புள்ள கதை.

நீங்களும் இந்த நூலை வாங்கி படிக்க வேண்டும் அல்லவா? ஆகவே இதன் சிறப்புகளை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

நூல் பெயர்: தாய்ப்பால் உறவு
ஆசிரியர்: மயிலாடுதுறை க.ராஜசேகரன்
பதிப்பு: 
சந்தியா பதிப்பகம்
தொலைபேசி:
044-2489-6979
பக்கங்கள்: 162
விலை: ரூபாய் 160

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

nidurnizam.mn@gmail.com




. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Saturday, January 7, 2023

திருப்பூர் சாரதி ஜோக்ஸ்! (6) #178

திருப்பூர் சாரதி ஜோக்ஸ்! (6) #178













நன்றி:
ஆனந்த விகடன்,
காமதேனு,
குமுதம்,
கதிர்'ஸ்
ஆகிய இதழ்கள் மற்றும் 
நண்பர் திரு. திருப்பூர் சாரதி!

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Friday, January 6, 2023

திருப்பூர் சாரதி ஜோக்ஸ்! (5) #177

திருப்பூர் சாரதி ஜோக்ஸ்!














. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Thursday, January 5, 2023

திருப்பூர் சாரதி ஜோக்ஸ்! (4) #176

திருப்பூர் சாரதி ஜோக்ஸ்!















. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Thursday, October 6, 2022

ராஜேஷ்குமார் அவர்கள் எழுதிய கடிதம்! # 175

ராஜேஷ்குமார் அவர்கள் எழுதிய கடிதம்! # 175



புதின ஆசிரியர் திரு.ராஜேஷ்குமார் அவர்களுக்கு 1986-ல் ஒரு கடிதம் எழுதியிருந்தேன்!

"பாக்கெட் நாவல் அல்லது க்ரைம் நாவல் இதழில் உங்களுடைய 100 புதினங்களின் பட்டியல் வந்திருந்தது! ஆனால், சில கதைகளின் பெயர்களை அதில் காணவில்லையே?" எனக் கேட்டு, அந்த புதினங்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருந்தேன்.

அவரிடமிருந்து பதில் (கடிதம்) வந்தது.

"சுமார் 105 கதைகள் வரும்! பட்டியல் தயாரித்த ஈரோடு அருண் அவற்றை தவறுதலாக விட்டுவிட்டார்!" என பதிலில் குறிப்பிட்டிருந்தார்!

இப்போதுவரை 2,000 புதினங்கள் எழுதி சாதனை செய்துள்ளார் திரு. ராஜேஷ்குமார் அவர்கள்!

சாதனைகள் தொடரட்டும்!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.








. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Sunday, October 2, 2022

சின்னஞ்சிறுகோபு அவர்கள் எழுதிய கடிதம் #174

சின்னஞ்சிறுகோபு அவர்கள் எழுதிய கடிதம் #174.

எழுத்தாளர் சின்னஞ்சிறுகோபு சார் எனக்கு எழுதிய உள்நாட்டுக் கடிதம் (ஆண்டு 2005)







. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Monday, September 26, 2022

தாயார் தயாரித்த தம்ரூட்! #173

தாயார் தயாரித்த தம்ரூட்! #173



தாயார் தயாரித்த தம்ரூட்!

காலையில் ரொட்டி (பிரட்) வாங்க அடுமணைக் கடைக்கு (பேக்கரி ஷாப்) சென்றிருந்தேன்.

கடைக்காரர் 'பிரட்'டைக் கொடுக்கும்போதே, "தம்ரூட் இருக்கு வேணுமா? கால் கிலோ 90 ரூபாய்! ஒரு கிலோ 350 ரூபாய்தான்!" என்று ஆசைமூட்டினார். எனக்கு எங்கள் அம்மாவின் ஞாபகம் வந்துவிட்டது.

எனது சிறுவயதில் எங்கள் அம்மா 'ரவ்வாடை' எனும் 'தம்ரூட்' செய்வார்கள்.




ர(வ்)வா, முட்டை, பால், ஜீனி, நெய், முந்திரி அனைத்தையும் கலந்து பாத்திரத்தில்  வைத்து அடுப்பில் ஏற்றி தீமூட்டுவார்கள்!

அந்தநேரம் நான் கையை நீட்டி பணியார மாவை கேட்பேன்! மாவை சிறிது எடுத்து உள்ளங்கையில் ஊற்றுவார்கள்!
அதை நான் (நக்கி) சாப்பிட்டுவிட்டு மறுபடியும் கேட்பேன்; மறுபடியும் சிறிது ஊற்றுவார்கள்.
"உனக்கு மாவுக்கும் ஆசை; பணியாரத்திற்கும் ஆசை!" என்று செல்லமாக திட்டுவார்கள்!

சாப்பிட்டுவிட்டு மறுபடியும் கேட்பேன்!
"இனிமேல் தரமாட்டேன்! அப்படி கேட்டால் ரவ்வாடை ஒரு துண்டு மட்டும்தான் தருவேன்!" என்று வி(மி)ரட்டுவார்கள்!

ஆனால், ரவ்வாடை சுட்டு முடித்ததும் என் அக்கா, தங்கை அனைவர்களுக்கும் கொடுக்கும்போது எனக்கு சிறிதளவு கூடுதலாகத் தருவார்கள்!

துண்டுகள் போட்டு எடுத்து வேறு பாத்திரத்தில் போட்டுவைத்ததும் ரவ்வாடை தயாரித்த  பாத்திரத்தின் அடியில் ஒட்டியிருக்கும் பணியாரத் துகள்களை கரண்டி எடுத்து சுரண்டி  சாப்பிட, எங்களுக்குள் 'சிறிய' போராட்டமே நடக்கும்! அம்மா, அதைத் தடுத்து சமாதானம் செய்வார்கள்!

அதன்பிறகான ரவ்வாடை சுடும் காலம் எல்லாம் முன்னதாகவே
ஒரு கிண்ணத்தில் எனக்காக தனியே எடுத்து வைத்து என்னிடம் கொடுப்பார்கள்!

எங்களின் பாசத்திற்குரிய அம்மா அவர்கள் கடந்த 02/07/2022 அன்று எங்களிடமிருந்து விடைபெற்று, இறைவனின் அழைப்பை ஏற்று மௌத் (இறப்பு) ஆனார்கள்.




எங்கள் அம்மாவின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு நல் சுவனம் கிடைக்கப் பெற அன்பு நண்பர்கள் அனைவரும் துஆ (பிரார்த்தனை) செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.





. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Saturday, September 10, 2022

இனிய உதயம் இதழில் எனது புகைப்படம்! #172




இனிய உதயம் இதழில் எனது புகைப்படம்! #172

அட்டையில் மருதநாயகம் கமல்ஹாசன் புகைப்படம்.

'இனிய உதயம்'
(தீபாவளி சிறப்பிதழ்) 
மாத இதழில் நவம்பர் 1997-ல் முதன்முறையாக எனது புகைப்படம் ஒரு பத்திரிகையில் வெளியான மாதம்.

இதை நகல் எடுத்து எனக்கு பேங்காக்குக்கு அனுப்பியவர் எழுத்தாளர் திரு. 'மின்னொளி சீனிவாசன்' அவர்கள்.

அப்போது அவர் எனக்கு எழுதிய கடிதமும் இத்துடன் இணைத்துள்ளேன்!

நன்றி சீனீவாசன் சார்!
நலமாய் இருக்கிறீர்களா?

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!
Related Posts Plugin for WordPress, Blogger...