...பல்சுவை பக்கம்!

.

Sunday, August 1, 2010

வானொலி குறுக்கெழுத்துப் போட்டி! (நகைச்சுவை)

வானொலி குறுக்கெழுத்துப் போட்டி! (நகைச்சுவை)

அன்புத் தம்பி இப்படிக்கு நிஜாம் தன்னுடைய 'தூர்தர்ஷன்
விளம்பரங்கள்' என்ற இடுகையில் வானொலி பற்றிய எனது
அனுபவங்களை எழுதுமாறு ஆலோ(யோ)சனை
கூறியிருந்தார். வாங்க, என்னுடைய அனுபவங்களுக்கு...

அந்த தூர்தர்ஷன் (டி.டி.) காலத்தில் எங்கள் வீட்டில்
தொலைக்காட்சியே கிடையாது. எங்கள் தாத்தா,
பெரியத்தா, பெரியம்மா போன்றோர்களின் கண்டிப்புதான்
காரணம். (இப்பவும் அந்த மாதிரியே இருந்திருக்கலாம்னு
தோணுதே!)

ஆனால், நான் வானொலி தொடர்ந்து கேட்பேன். சென்னை
வானொலி விவித் பாரதியின் வர்த்தக ஒலிபரப்பில் அனைத்து நிகழ்ச்சிகளையும் கேட்டாலும் நாடகங்கள்
விரும்பிக் கேட்பேன். திங்கள் முதல் வியாழன்
வரை தினமும் இரவு 9 - 15 மணி முதல் 9 - 30 மணி வரை
'வண்ணச்சுடர்' என்ற நிகழ்ச்சியில் நான்கு பகுதிகள் தொடர் நாடகம் ஒலிபரப்பாகும்.

மறு வாரம் திங்கள் முதல் வியாழன் வரை
இரவு 9 -15 முதல் 9 -30 வரை எட்டு பகுதிகள்
மேடை நாடகங்கள் ஒலிபரப்பாகும்.
ஆர். எஸ். மனோகர், ஹெரான் ராமசாமி, டெல்லி கணேஷ்,
ஒய். ஜி. மகேந்திரன் போன்றவர்களின் மேடை நாடங்கள்
ஞாபகம் இருக்கின்றன. மற்ற மூன்று தினங்களில்
கால் மணி நேர சிறு நாடகங்கள் ஒலிபரப்பாகும்.

ஞாயிற்றுக் கிழமைகளில் மதியம் 12 -௦௦ மணிக்கு ஹார்லிக்ஸ்
வழங்கிய'சுசித்ராவின் குடும்பம்' மற்றும் 'கருமமே
கண்ணாயினார்' ஆகிய நாடகங்கள் ஒலிபரப்பாயின.

அப்போது விவித் பாரதியில் வரும் ஒரு விளம்பரம்:
"ஹேய் லல்லி, ஆளே கலர் மாறிட்டியே, எப்படி?"
"ஓ அதுவா, FAIR அண்ட் லவ்லிதான் காரணம். நீயும் தடவு!"
"அப்படியா? பேர் என்ன லல்லி?"
" ம்ஹும், FAIR அண்ட் லவ்லி!"
இந்த விளம்பரத்தையும் நாடகம்போலவே இரசிப்பேன்.

இலங்கை வானொலியில் ஒலிபரப்பானவற்றில் நாடகம்
ரொம்பப்பிடிக்கும். தமிழ்ச் சேவை ஒன்றில் தினமும்
இரவு 8 மணிக்கு ஒலிபரப்பாகும் இஸ்லாமிய நிகழ்ச்சிகளில்
வாரம் ஒரு முறை மட்டும் அரை மணி நேர நாடகம்
நடைபெறும்.

மற்றம் தமிழ்ச் சேவை இரண்டில் ஞாயிற்றுக் கிழமைகளில்
மதியம் 2 மணிக்கு 'இந்தியன் ஓவர்சீஸ் வங்கி' வழங்கிய
கதை, கவிதை, சிறுகதை போன்றவற்றின் தொகுப்பான
பல்சுவை நிகழ்ச்சியை பி. ஹெச். அப்துல் ஹமீது
வழங்குவதைக் கேட்பது உண்டு.

அதே தமிழ்ச்சேவை இரண்டில் ஞாயிறு மாலை 4 - 30
மணிக்கு 'மக்கள் வங்கி' வழங்கிய தொடர் நாடகத்தில்
நிறைய பாடல்களும் வரும்.

இலங்கை வானொலியில் கேட்ட அருமையான
பாடலை நீங்கள் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்.


நாடகங்கள் நான் கேட்பது போலவே போட்டிகளில்
பங்கு பெற்று சரியான விடை எழுதி பரிசுகளும்
வாங்குவதுண்டு. தமிழ்ச்சேவை ஒலிபரப்பைத்
தொடர்ந்து 'சர்வதேச ஒலிபரப்பு' சேவை ஆரம்பமானது.
அதில் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை
9-15க்கு 'வீரா ஹெர்பல் சிகைக்காய் வழங்கும்
வானொலி குறுக்கெழுத்துப் போட்டி' என்று ஒரு நிகழ்ச்சி.
இதை அறிவிப்பாளர் பி.ஹெச். அப்துல் ஹமீது அவர்கள்
தொகுத்து வழங்கினார். அந்நிகழ்ச்சியை சென்னையிலுள்ள
நிறுவனம் வழங்கியதால் அதில் கேட்கப்பட்ட
கேள்விகளுக்கான விடைகளை சென்னை முகவரிக்கு
உள்நாட்டுக் கடிதத்திலேயே அனுப்ப வேண்டும்.

அவ்வாறே ஒரு தடவை நானும் பதில்களை
அனுப்பிவிட்டு அடுத்த வாரம் பரிசு பெற்றவர்களில்
எனது பெயரும் வருகிறதா என்று ஆவலோடு
காத்திருந்தேன்.

அடுத்த ஞாயிறும் வந்தது. 9 - 15 க்கு நிகழ்ச்சியும்
ஆரம்பமானது. நிகழ்ச்சி முடிவில் "சென்ற வாரம்
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடை
எழுதியவர்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட
10 நேயர்கள்" என்று சொன்ன அறிவிப்பாளர், அதில்
என் பெயரையும் பரிசு பெற்ற நேயராக அறிவித்தார்.


[குமுதம் குறுக்கெழுத்துப் போட்டியில் பரிசு!]

"இவர்களுக்கான பரிசுப் பொட்டலம் நேரடியாக
அவர்களின் இல்லங்களுக்கு விரைவில் அனுப்பி
வைக்கப்படும்" என்றும் அறிவித்தார்.

'அப்படியெனில் நமக்கும் பரிசு வந்துவிடும்' என்ற
எண்ணத்தோடு காத்திருக்க ஆரம்பித்தேன்.
இவ்வாறு நான்கைந்து தினங்கள் சென்ற
நிலையில், அப்படிக்கா மயிலாடுதுறைக்கு
போய்விட்டு இப்படிக்கா வீட்டிற்கு வந்தேன்.


எங்கள் அம்மா ஒரு பார்சலை என்னிடம் நீட்டி,
"கூரியர்லருந்து வந்து கொடுத்திட்டுப் போனாங்க"
என்றார்கள்.

ஆர்வமோடு பிரித்துப் பார்த்தேன். சுமார்
ஐந்து அங்குல உயரத்தில், சுமார் நான்கு
அங்குல விட்டத்துடன் கூடிய அழகான
இரு பிளாஸ்டிக் டப்பாக்கள். அதன்மேலே
ஒரு டப்பாவில் 'வீரா ஹெர்பல் சிகைகாய்த்
தூள் ஃபார் ஆர்டினரி ஹேர்' என்றும்
மற்றொரு டப்பாவில் 'வீரா ஹெர்பல்
சிகைக்காய்த் தூள் ஃபார் ட்ரை ஹேர்'
என்றும் பல வண்ண பிளாஸ்டிக் தாள்
ஒட்டியிருந்தது.

இப்பவும் ஆசையோடு ஒரு டப்பாவைப் பரித்துப்
பார்த்தேன். உள்ளே அழகிய பிளாஸ்டிக் கிண்ணமும்
பிளாஸ்டிக் கரண்டியும் இருக்க, அதை எடுத்துவிட்டுப்
பார்த்தேன். உள்ளே சிகைக்காய்த் தூள் இருந்தது.
மற்றொரு டப்பாவிலும் அதேதான். ஆனால்,
சிகைக்காய்த் தூள் கலர் மட்டும் சற்று மாறி
இருந்தது.


பிளாஸ்டிக் தாளில் படித்துப் பார்த்தேன்.
300 கிராம் சிகைக்காய்த்தூள் + கிண்ணம்
மற்றும் ஸ்பூன் ஃப்ரீ என்று இருந்தது.
இரண்டு டப்பாவிலும் விலை 8 ரூபாய் என்று
போட்டிருந்தது.

"இதுதான் பரிசுப் பாக்கெட்டா? சரி பரவாயில்லை,
ஃப்ரீயாத்தானே வந்தது?" என்றேன்.

அதற்கு, "அது எப்படி ஃப்ரீயாகும்? கூரியர் ஆள்
சர்விஸ் சார்ஜ் என்று 12 ரூபாயும் காஃப்பிக்கு
டிப்ஸ் என்று 3 ரூபாயும் வாங்கிட்டுப் போனானே!"
என்றார்கள் எங்கள் அம்மா. (இந்த சம்பவம்
நடந்த காலத்தில், அதாவது சுமார் 15 ஆண்டுகளுக்கு
முன் நகர எல்லையைத் தாண்டி இருக்கும் ஊர்களுக்கு
கூடுதலாக பஸ் சார்ஜ் வசூலிப்பார்கள். சில
நேரங்களில் அனுப்புவரிடமிருந்தும் அல்லது சில
நேரங்களில் பெறுநரிடமிருந்தும் இதை வசூல்
செய்து கொள்வார்கள்.)

அதோடு விட்டார்களா? 'இதுதான் சுண்டைக்காய்
கால் பணம்; சுமைக்கூலி முக்கால் பணம்'
என்பார்கள். நீயும் உன் பரிசும். 16 ரூபாய்
பொருளுக்கு 15 ரூபாய் தண்டம். அதுக்கு
நம்ம கடைத் தெருவிலயே அந்தக் காசுக்கு
நாமே வாங்கிக்கலாமே, அது எதுக்கு பரிசுன்னு
ஒரு பேரு? இதெல்லாம் நீ பண்ற கூத்து" என்று
சப்தம் போட்டுக் கொண்டே (அதாவது திட்டிக்
கொண்டே) சமையலறைக்குப் போய் விட்டார்கள்.

நானோ நொந்து போனேன். நல்ல வேளை- அந்த
பார்சலை அனுப்புவதற்கு கூரியர் கம்பெனிக்கு
அந்த வீரா சிகைக்காய் நிறுவனம் பணம் செலுத்தி
இருக்குமே, அந்த சேதியும் எங்கள் அம்மாவிற்குத்
தெரிந்திருந்தால், திட்டு இல்லை; எனக்கு
மண்டையில் குட்டுதான்! நல்ல வேளை தப்பிச்சேம்ப்பா!


அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.




வாக்கு அளித்து, கருத்து தெரிவியுங்கள்! நன்றி!!

32 comments:

ஜெய்லானி said...

ஆஹா.. இதுல இப்பிடி ஒரு டெக்னிக் இருக்கா...!! இனி உஷாரா இருக்கோனும்..!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஜெய்லானி said...
ஆஹா.. இதுல இப்பிடி ஒரு டெக்னிக் இருக்கா...!! இனி உஷாரா இருக்கோனும்..!!//

நல்லது ஜெய்லானி! கருத்திற்கு நன்றி!

'பரிவை' சே.குமார் said...

இதுல இப்பிடி ஒரு டெக்னிக் இருக்கா...!!

இனி உஷாரா இருக்கோனும்..!!

Ha... ha... ha...

தூயவனின் அடிமை said...

நிஜாம் சரியாய் சொன்னிங்க, உங்களுக்காவது உள்ளே பொருள் இருந்தது. சில பேருக்கு செங்கல் இருந்தது. நன்றாக ரசிக்கும் வண்ணம் இருந்தது.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//சே.குமார் said...
இதுல இப்பிடி ஒரு டெக்னிக் இருக்கா...!!

இனி உஷாரா இருக்கோனும்..!!

Ha... ha... ha...//

கருத்துரைக்கு நன்றி, சே.குமார்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//இளம் தூயவன் said...
நிஜாம் சரியாய் சொன்னிங்க, உங்களுக்காவது உள்ளே பொருள் இருந்தது. சில பேருக்கு செங்கல் இருந்தது. நன்றாக ரசிக்கும் வண்ணம் இருந்தது.//


சில பேருக்கு செங்கல் இருந்தது!
உங்களுக்கு?
கருத்திற்கு நன்றி இளம்தூயவன்!

Riyas said...

வாசித்தேன் ரசித்தேன்.. நல்லா சொல்லிரிக்கிங்க நிஜாம்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//Riyas said...
வாசித்தேன் ரசித்தேன்.. நல்லா சொல்லிரிக்கிங்க நிஜாம்//

ரசித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி ரியாஸ்!
தொடர்ந்து இணைந்திருங்கள்!

சிநேகிதன் அக்பர் said...

உண்மையிலேயே ஏமாற்றம் கலந்த நகைச்சுவை.

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//அக்பர் said...
உண்மையிலேயே ஏமாற்றம் கலந்த நகைச்சுவை.

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள். //

ஆமாம் அக்பர், ஏமாற்றம்தான்.
கருத்திற்கு நன்றி!
அக்பர், உங்களுக்கும் அன்பர்கள்
அனைவருக்கும் எனது இதயங்கனிந்த
நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!

சீமான்கனி said...

ஆஹா இப்படிலாம் இருக்கா!!???
என்ன நிஜாம் அண்ணே பரிசு நூறு ரூபாய்னு போட்டு இப்படிலாம் டகால்ட்டி வேலை செய்றாங்களா...உஷாராதான் இருக்கணும்......இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள் அண்ணே...

நாடோடி said...

ஆஹா..இப்ப‌டி வேற‌ ந‌ட‌க்குதா?...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//சீமான்கனி said...
ஆஹா இப்படிலாம் இருக்கா!!???
என்ன நிஜாம் அண்ணே பரிசு நூறு ரூபாய்னு போட்டு இப்படிலாம் டகால்ட்டி வேலை செய்றாங்களா...உஷாராதான் இருக்கணும்......இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள் அண்ணே... //

வாங்க... சீமான்கனி!
கருத்துரைக்கு நன்றி!
நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//நாடோடி said...
ஆஹா..இப்ப‌டி வேற‌ ந‌ட‌க்குதா?... //

ஆமாம், ஆமாம்... இப்படியும் நடக்குதுங்க...
கருத்துரைக்கு நன்றி ஸ்டீபன்.
நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!

r.v.saravanan said...

படித்தேன் ரசித்தேன்

நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

// r.v.saravanan said...
படித்தேன் ரசித்தேன்

நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்//

நன்றி...r.v.saravanan!
உங்களுக்கு(ம்)
எனது நல்வாழ்த்துக்கள்!

நிஜாம் கான் said...

நிஜாம் பாய் நாங்க கேள்விப்படாத நிறைய விசயங்கள சொல்லியிருக்கீங்க.

நிஜாம் கான் said...

சீயக்காய் தூள்..தூள் காமெடி

நிஜாம் கான் said...

பரவாயில்லயே! குமுதத்தில் கூட பரிசு வாங்கியாச்சா? இருந்தாலும் இது 2007 கதை. நான் இன்னமும் உங்களிடமிருந்து பழைய விசயங்களை (சன் டிவி தொடங்குவதற்கு முன்வரை) தொடராக எதிர்பார்க்கிறேன். நிச்சயம் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்

நிஜாம் கான் said...

இன்றுவரை நீங்காத இடம்பிடித்து விட்டார் உங்கள் அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீது

Sweatha Sanjana said...

பேசி தீராத பிரச்சனையும் இல்லை!. எழுத்து தராத தீர்வுகளும் இல்லை !.
உங்கள் வெற்றியின் திறவுகோல் உங்களிடமே இருக்கிறது - மடை திறவுங்கள் !!
www.jeejix.com இல் இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் பரிணாமங்களை
எழுதுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் !!!

mohamed said...

நிஜாம் பாய், நல்ல அனுபவம் தான், இனியும் பரிசாக பொருள் தரும் போட்டியில் கலந்துக்கொள்ளாமல், பணம் தரும் போட்டியில் கலந்துக்கொள்ள வாழ்த்துக்கள்,

mahaBangkok said...

"இப்படி எல்லாம் யோசிகிரின்களா"

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//இப்படிக்கு நிஜாம் ..., said...
நிஜாம் பாய் நாங்க கேள்விப்படாத நிறைய விசயங்கள சொல்லியிருக்கீங்க. //

//சீயக்காய் தூள்..தூள் காமெடி//

//பரவாயில்லயே! குமுதத்தில் கூட பரிசு வாங்கியாச்சா? இருந்தாலும் இது 2007 கதை. நான் இன்னமும் உங்களிடமிருந்து பழைய விசயங்களை (சன் டிவி தொடங்குவதற்கு முன்வரை) தொடராக எதிர்பார்க்கிறேன். நிச்சயம் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் //

//இன்றுவரை நீங்காத இடம்பிடித்து விட்டார் உங்கள் அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீது //

அனைத்துக் கருத்துக்களுக்கும் நன்றி, நிஜாம்!
ரொம்ப ஆர்வமாய் இருக்கிறீர்களே!
'முடியாது'ன்னா விடவாப் போறீங்க?
முயற்சிக்கிறேன்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

// Sweatha Sanjana said... //

தகவலுக்கு நன்றி, Sweatha Sanjana!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//mohamed said...
நிஜாம் பாய், நல்ல அனுபவம் தான், இனியும் பரிசாக பொருள் தரும் போட்டியில் கலந்துக்கொள்ளாமல், பணம் தரும் போட்டியில் கலந்துக்கொள்ள வாழ்த்துக்கள்,//

ஹா... ஹா... ரொம்ப காமெடியா
இருக்கு உங்க கமெண்ட். பணம்
தரும் போடியில் மட்டும் கலந்து
கொள்ளணுமா? சரிங்க!

கருத்திற்கு நன்றி முஹம்மது!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//mahaBangkok said...
"இப்படி எல்லாம் யோசிகிரின்களா" //

வாங்க, மஹா!
கருத்திற்கு நன்றி!

புல்லாங்குழல் said...

நல்ல நகைச்சுவை. படிப்பினையும் கூட.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஒ.நூருல் அமீன் said...
நல்ல நகைச்சுவை. படிப்பினையும் கூட.//

படித்து, கருத்து சொன்னமைக்கு
நன்றி ஒ.நூருல் அமீன் அவர்களே!
தொடர்ந்து வாங்க!

Admin said...

இப்படியெல்லாமா பரிசு தாறவங்க...
//16 ரூபாய்
பொருளுக்கு 15 ரூபாய் தண்டம். //

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//Farhath said...
இப்படியெல்லாமா பரிசு தாறவங்க...
//16 ரூபாய்
பொருளுக்கு 15 ரூபாய் தண்டம். // //

தங்கள் வருகைக்கும் கருத்திற்கு நன்றி Farhath!
தொடர்ந்து வாங்க!!

Karthik Somalinga said...

:) :) அந்த டப்பாவை இன்னும் வச்சுட்டு இருக்கீங்களா?

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...