உள்ளம் கவர்ந்த உயர்ந்தவர் - 2.
மயிலாடுதுறை (மா)வட்டம் குத்தாலத்தில் முதல் சந்திப்பு!
மேலும் மயிலாடுதுறையில் சில சந்திப்புகள்.
பிறகு, மங்கைநல்லூருக்கு அவர் வந்ததன்பின் அவ்வப்போது அவர் வீட்டிற்கு சென்று எழுத்து, பத்திரிகை தொடர்பாக உரையாடல்.
அவர்
மயிலாடுதுறை வந்தபின்னே அடிக்கடி அவர் வீட்டிற்கு செல்வதாகவும் பல மணி நேர உரையாடல்களாகவும் வளர்ந்தது! [மேடம் பணி (பள்ளி)க்கு சென்றுவிடுவதால் இடையூறுகளே கிடையா!]
பொழுது போதாமல்
நேரம், காலம் போவது தெரியாமல் பல புதிய, பழைய செய்திகளை சுவாரஸ்யமாகச் சொல்வார்;
நானும் ஆர்வமுடன், ஆச்சரியமாகக் கேட்டுக் கொண்டிருப்பேன்!
பின்னும்,
தஞ்சை ~ நாகை ~ திருவாரூர் மாவட்ட எழுத்தாளர் கூட்டமைப்புத் தலைவராக அவர் பல ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார்.
மாதாந்திரக் கூட்டம் கும்பகோணத்தில் தாஜ்மஹால் ஹோட்டலில் மாதத்தின் முதல் ஞாயிறன்று நடக்கும்.
நானும் வாய்ப்பு கிடைக்கையிலெல்லாம் கலந்து கொள்வதுண்டு!
அன்றிலிருந்து இன்றுவரை என்னிடம் மாறா நட்புடன் என்னை அன்புடன் அரவணைக்கும், எமது பொழுதுபோக்குநர் திலகம்
'சின்னஞ்சிறு கோபு' சார்,
வாழிய பல்லாண்டு!
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.







